LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம்

 

உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி 
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன் 
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம் 
முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. 378 
முன்னின் றாண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப் 
பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே 
என்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில் அடியார் 
உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே. 379 
உகந்தானே அன்புடை அடிமைக் குருகாவுள்ளத் துணிர்விலியேன் 
சகந்தான் அறிய முறையிட்டால் தக்கவாறன் றென்னாரோ 
மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன் 
முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 380 
முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும் 
வழிமுதலேநின் பழவடி யார் திரள்வான் குழுமிக் 
கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்குங்கொல்லோ என்று 
அழுமதுவேயன் றிமந்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே. 381 
அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி 
இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன் 
கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால் 
பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ. 382 
ஏசா நிற்பர் என்னைஉனக் கடியா னென்று பிறரெல்லாம் 
பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே 
தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க 
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே. 383 
இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந்திருப்பேனை 
அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ 
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும் 
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென்றருளுவாயே. 384 
அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர்இங்குப் 
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா 
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை வாவென்றுன் 
தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ. 385 
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டுதிரண்டுன் திருவார்த்தை 
விரப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம் 
தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே 
தரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே. 386 
நல்கா தொழியான் நமக்கென்றும் நாமம் பிதற்றி நயனனீர் 
மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப் 
பல்காலுன்னப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே 
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே. 387 

 

உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி 

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன் 

அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம் 

முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. 378 

 

முன்னின் றாண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப் 

பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே 

என்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில் அடியார் 

உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே. 379 

 

உகந்தானே அன்புடை அடிமைக் குருகாவுள்ளத் துணிர்விலியேன் 

சகந்தான் அறிய முறையிட்டால் தக்கவாறன் றென்னாரோ 

மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன் 

முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 380 

 

முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும் 

வழிமுதலேநின் பழவடி யார் திரள்வான் குழுமிக் 

கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்குங்கொல்லோ என்று 

அழுமதுவேயன் றிமந்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே. 381 

 

அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி 

இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன் 

கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால் 

பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ. 382 

 

ஏசா நிற்பர் என்னைஉனக் கடியா னென்று பிறரெல்லாம் 

பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே 

தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க 

ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே. 383 

 

இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந்திருப்பேனை 

அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ 

நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும் 

மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென்றருளுவாயே. 384 

 

அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர்இங்குப் 

பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா 

மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை வாவென்றுன் 

தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ. 385 

 

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டுதிரண்டுன் திருவார்த்தை 

விரப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம் 

தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே 

தரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே. 386 

 

நல்கா தொழியான் நமக்கென்றும் நாமம் பிதற்றி நயனனீர் 

மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப் 

பல்காலுன்னப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே 

ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே. 387 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.