LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

குறுந்தொகை பகுதி -13

 

301. குறிஞ்சி - தலைவி கூற்று
முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக்
கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர் 5
வாரா தாயினும் வருவது போலச்
செவிமுத லிசைக்கு மரவமொடு
துயில்துறந் தனவால் தோழியென் கண்ணே.  
- குன்றியனார்.  
302. குறிஞ்சி - தலைவி கூற்று
உரைத்திசின் தோழியது புரைத்தோ அன்றே
அருந்துயர் உழத்தலும் ஆற்றாம் இதன்றலைப்
பெரும்பிறி தாகல் அதனினும் அஞ்சுதும்
அன்னோ இன்னும் நன்மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும் 5
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன்
துஞ்சூர் யாமத் தானுமென்
நெஞ்சத் தல்லது வரவறி யானே.  
- மாங்குடிகிழார்.  
303. நெய்தல் - தோழி கூற்று
கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குரு
கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்
உடைதிரை ஒலியில் துஞ்சுந் துறைவ
தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப்
பசந்தனள் மன்னென் தோழி யென்னொடும் 5
இன்னிணர்ப் புன்னையம் புகர்நிழற்
பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே.  
- அம்மூவனார்.  
304. நெய்தல் - தலைவி கூற்று
கொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளி
முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்
தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக்
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீ னெறிய
நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து 5
வெண்டோ டிரியும் வீததை கானற்
கைதையந் தண்புனற் சேர்ப்பனொடு
செய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே.  
- கணக்காயர் தத்தனார்.  
305. மருதம் - தலைவி கூற்று
கண்தர வந்த காம ஒள்ளெரி
என்புற நலியினும் அவரொடு பேணிச்
சென்றுநாம் முயங்கற் கருங்காட் சியமே
வந்தஞர் களைதலை அவராற் றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார் 5
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியி னல்லது
களைவோர் இலையா முற்ற நோயே.  
- குப்பைக்கோழியார்.  
306. நெய்தல் - தலைவி கூற்று
மெல்லிய இனிய மேவரு தகுந
இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ
மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன்
காமர் மாஅத்துத் தாதமர் பூவின்
வண்டுவீழ் பயருங் கானல் 5
தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே.  
- அம்மூவனார்.  
307. பாலை - தலைவி கூற்று
வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்
உயங்குநடை மடப்பிடி வருத்த நோனாது 5
நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி
வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந்
தழுங்க னெஞ்சமொடு முழங்கும்
அத்த நீளிடை அழப்பிரிந் தோரே.  
- கடம்பனூர்ச் சாண்டிலியனார்.  
308. குறிஞ்சி - தோழி கூற்று
சோலை வாழைச் சுரிநுகும் பினைய
அணங்குடை அருந்தலை நீவலின் மதனழிந்து
மயங்குதுயர் உற்ற மையல் வேழம்
உயங்குயிர் மடப்பிடி யுலைபுறந் தைவர
ஆமிழி சிலம்பின் அரிதுகண் படுக்கும் 5
மாமலை நாடன் கேண்மை
காமந் தருவதோர் கைதாழ்ந் தன்றே.  
- பெருந்தோட் குறுஞ்சாத்தனார்.  
309. மருதம் - தோழி கூற்று
கைவினை மாக்கடம் செய்வினை முடிமார்
சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட
நீடின வரம்பின் வாடிய விடினும்
கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது
பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் 5
நின்னூர் நெய்த லனையேம் பெரும
நீயெமக், கின்னா தனபல செய்யினும்
நின்னின் றமைதல் வல்லா மாறே.  
- உறையூர்ச் சல்லியன் குமாரனார்.  
310. நெய்தல் - தலைவி கூற்று
புள்ளும் புலம்பின பூவிங் கூம்பின
கானலும் புலம்புநனி யுடைத்தே வானமும்
நம்மே போலும் மம்மர்த் தாகி
எல்லைகழியப் புல்லென் றன்றே
இன்னும் உளெனே தோழி இந்நிலை 5
தண்ணிய கமழுஞாழல்
தண்ணந் துறைவர்க் குரைக்குநர்ப் பெறினே.  
- பெருங்கண்ணனார். 
 
 
311. நெய்தல் - தலைவி கூற்று
அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற்
புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும்
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்
யான்கண் டனனோ இலனோ பானாள்
ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத் 5
தாதுசேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன்கண் டன்றே.  
- சேந்தன் கீரனார்.  
312. குறிஞ்சி - தலைவன் கூற்று
இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் 5
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே.  
- கபிலர்.  
313. நெய்தல் - தலைவி கூற்று
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந் துண்டு
பூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொடு
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே. 5
- ......  
314. முல்லை - தலைவி கூற்று
சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப்
பெயர்தாழ் பிருளிய புலம்புகொள் மாலையும்
வாரார் வாழி தோழி வரூஉம்
இன்னுறழ் இளமுலை ஞெமுங்க 5
இன்னா வைப்பின் சுரனிறந் தோரே.  
- பேரிசாத்தனார்.  
315. குறிஞ்சி - தலைவி கூற்று
எழுதரு மதியங் கடற்கண் டாஅங்
கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன்
ஞாயி றனையன் தோழி
நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே.  
- மதுரை வேள்ஆதத்தனார்.  
316. நெய்தல் - தலைவி கூற்று
ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்
நோய்மலி வருத்தம் அன்னை யறியின்
உளெனோ வாழி தோழி விளியா
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை
ஓரை மகளி ரோராங் காட்ட 5
வாய்ந்த லவன் துன்புறு துனைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் கொல்லோ பிறவா யினவே.  
- தும்பிசேர் கீரனார்.  
317. குறிஞ்சி - தோழி கூற்று
புரிமட மரையான் கருநரை நல்லேறு
தீம்புளி நெல்லி மாந்தி யயலது
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த்
தோங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன்
நம்மைவிட் டமையுமோ மற்றே கைம்மிக 5
வடபுல வாடைக் கழிமழை
தென்புலம் படருந் தண்பனி நாளே.  
- மதுரைக் கண்டரதத்தனார்.  
318. நெய்தல் - தலைவி கூற்று
எறிசுறாக் கலித்த இலங்குநீர்ப் பரப்பின்
நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய்
வெறியயர் களத்தினில் தோன்றுந் துறைவன்
குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன்
றறியாற் குரைப்பலோ யானே யெய்த்தவிப் 5
பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட்
பிழையா வஞ்சினஞ் செய்த
கள்வனும் கடவனும் புனைவனுந் தானே.  
- அம்மூவனார்.  
319. முல்லை - தலைவி கூற்று
மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்
கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும்
மாலைவந் தன்று மாரி மாமழை 5
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்
என்னாந் தோழிநம் இன்னுயிர் நிலையே.  
- தாயங் கண்ணனார்.  
320. நெய்தல் - தலைவி கூற்று
பெருங்கடற் பரதவர் கொண்மீன் உணங்கல்
அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு
நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்
எக்கர்தொறும் பரக்குந் துறைவனொ டொருநாள்
நக்கதோர் பழியு மிலமே போதவிழ் 5
பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப்
புன்னையஞ் சேரி யிவ்வூர்
கொன்னலர் தூற்றந்தன் கொடுமை யானே.  
- தும்பிசேர் கீரனார்.  
321. குறிஞ்சி - தோழி கூற்று
மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன்
சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன்
நடுநாள் வந்து நம்மனைப் பெயரும்
மடவர லரிவைநின் மார்பமர் இன்றுணை
மன்ற மரையா இரிய ஏறட்டுச் 5
செங்கண் இரும்புலி குழுமும் அதனால்
மறைத்தற் காலையோ அன்றே
திறப்பல் வாழிவேண் டன்னைநம் கதவே.  
- ......  
322. குறிஞ்சி - தலைவி கூற்று
அமர்க்க ணாமான் அஞ்செவிக் குழவி
கானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்து
கான நண்ணிய சிறுகுடிப் பட்டென
இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து
மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு 5
மருவின் இனியவு முளவோ
செல்வாந் தோழி யொல்வாங்கு நடந்தே.  
- ஐயூர் முடவனார்.  
323. முல்லை - தலைவன் கூற்று
எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசுமுகைத் தாது நாறும் நறுநுதல் 5
அரிவை தோளிணைத் துஞ்சிக்
கழிந்த நாளிவண் வாழு நாளே.  
- பதடி வைகலார்.  
324. நெய்தல் - தோழி கூற்று
கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றை
வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீந்தி நீநின்
நயனுடை மையின் வருதி யிவடன்
மடனுடை மையின் உயங்கும் யானது 5
கவைமக நஞ்சுண் டாஅங்
கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே.  
- கவை மகனார்.  
325. நெய்தல் - தலைவி கூற்று
சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன்
மாயச் செலவாச் செத்து மருங்கற்று
மன்னிக் கழிகென் றேனே அன்னோ
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
கருங்கால் வெண்குருகு மேயும் 5
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே.  
- நன்னாகையார்.  

301. குறிஞ்சி - தலைவி கூற்று

முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக்கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக்கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல்வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்மன்றம் போழும் இனமணி நெடுந்தேர் 5வாரா தாயினும் வருவது போலச்செவிமுத லிசைக்கு மரவமொடுதுயில்துறந் தனவால் தோழியென் கண்ணே.  - குன்றியனார்.  


302. குறிஞ்சி - தலைவி கூற்று
உரைத்திசின் தோழியது புரைத்தோ அன்றேஅருந்துயர் உழத்தலும் ஆற்றாம் இதன்றலைப்பெரும்பிறி தாகல் அதனினும் அஞ்சுதும்அன்னோ இன்னும் நன்மலை நாடன்பிரியா நண்பினர் இருவரும் என்னும் 5அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன்துஞ்சூர் யாமத் தானுமென்நெஞ்சத் தல்லது வரவறி யானே.  - மாங்குடிகிழார்.  


303. நெய்தல் - தோழி கூற்று
கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குருகடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்உடைதிரை ஒலியில் துஞ்சுந் துறைவதொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப்பசந்தனள் மன்னென் தோழி யென்னொடும் 5இன்னிணர்ப் புன்னையம் புகர்நிழற்பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே.  - அம்மூவனார்.  


304. நெய்தல் - தலைவி கூற்று
கொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளிமுகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக்கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீ னெறியநெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து 5வெண்டோ டிரியும் வீததை கானற்கைதையந் தண்புனற் சேர்ப்பனொடுசெய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே.  - கணக்காயர் தத்தனார்.  


305. மருதம் - தலைவி கூற்று
கண்தர வந்த காம ஒள்ளெரிஎன்புற நலியினும் அவரொடு பேணிச்சென்றுநாம் முயங்கற் கருங்காட் சியமேவந்தஞர் களைதலை அவராற் றலரேஉய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார் 5குப்பைக் கோழித் தனிப்போர் போலவிளிவாங்கு விளியி னல்லதுகளைவோர் இலையா முற்ற நோயே.  - குப்பைக்கோழியார்.  


306. நெய்தல் - தலைவி கூற்று
மெல்லிய இனிய மேவரு தகுநஇவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீமறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன்காமர் மாஅத்துத் தாதமர் பூவின்வண்டுவீழ் பயருங் கானல் 5தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே.  - அம்மூவனார்.  


307. பாலை - தலைவி கூற்று
வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்செவ்வாய் வானத் தையெனத் தோன்றிஇன்னம் பிறந்தன்று பிறையே அன்னோமறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்உயங்குநடை மடப்பிடி வருத்த நோனாது 5நிலையுயர் யாஅந் தொலையக் குத்திவெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந்தழுங்க னெஞ்சமொடு முழங்கும்அத்த நீளிடை அழப்பிரிந் தோரே.  - கடம்பனூர்ச் சாண்டிலியனார்.  


308. குறிஞ்சி - தோழி கூற்று
சோலை வாழைச் சுரிநுகும் பினையஅணங்குடை அருந்தலை நீவலின் மதனழிந்துமயங்குதுயர் உற்ற மையல் வேழம்உயங்குயிர் மடப்பிடி யுலைபுறந் தைவரஆமிழி சிலம்பின் அரிதுகண் படுக்கும் 5மாமலை நாடன் கேண்மைகாமந் தருவதோர் கைதாழ்ந் தன்றே.  - பெருந்தோட் குறுஞ்சாத்தனார்.  


309. மருதம் - தோழி கூற்று
கைவினை மாக்கடம் செய்வினை முடிமார்சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்படநீடின வரம்பின் வாடிய விடினும்கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாதுபெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் 5நின்னூர் நெய்த லனையேம் பெருமநீயெமக், கின்னா தனபல செய்யினும்நின்னின் றமைதல் வல்லா மாறே.  - உறையூர்ச் சல்லியன் குமாரனார்.  


310. நெய்தல் - தலைவி கூற்று
புள்ளும் புலம்பின பூவிங் கூம்பினகானலும் புலம்புநனி யுடைத்தே வானமும்நம்மே போலும் மம்மர்த் தாகிஎல்லைகழியப் புல்லென் றன்றேஇன்னும் உளெனே தோழி இந்நிலை 5தண்ணிய கமழுஞாழல்தண்ணந் துறைவர்க் குரைக்குநர்ப் பெறினே.  - பெருங்கண்ணனார்.  
 311. நெய்தல் - தலைவி கூற்று
அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற்புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும்நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்யான்கண் டனனோ இலனோ பானாள்ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத் 5தாதுசேர் நிகர்மலர் கொய்யும்ஆயம் எல்லாம் உடன்கண் டன்றே.  - சேந்தன் கீரனார்.  
312. குறிஞ்சி - தலைவன் கூற்று
இரண்டறி கள்விநங் காத லோளேமுரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன்முள்ளூர்க் கான நாற வந்துநள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் 5சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவிஅமரா முகத்த ளாகித்தமரோ ரன்னள் வைகறை யானே.  - கபிலர்.  
313. நெய்தல் - தலைவி கூற்று
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைநீத்துநீர் இருங்கழி இரைதேர்ந் துண்டுபூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொடுயாத்தேம் யாத்தன்று நட்பேஅவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே. 5- ......  

314. முல்லை - தலைவி கூற்று
சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூல்தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப்பெயர்தாழ் பிருளிய புலம்புகொள் மாலையும்வாரார் வாழி தோழி வரூஉம்இன்னுறழ் இளமுலை ஞெமுங்க 5இன்னா வைப்பின் சுரனிறந் தோரே.  - பேரிசாத்தனார்.  

315. குறிஞ்சி - தலைவி கூற்று
எழுதரு மதியங் கடற்கண் டாஅங்கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன்ஞாயி றனையன் தோழிநெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே.  - மதுரை வேள்ஆதத்தனார்.  

316. நெய்தல் - தலைவி கூற்று
ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்நோய்மலி வருத்தம் அன்னை யறியின்உளெனோ வாழி தோழி விளியாதுரவுக்கடல் பொருத விரவுமண லடைகரைஓரை மகளி ரோராங் காட்ட 5வாய்ந்த லவன் துன்புறு துனைபரிஓங்குவரல் விரிதிரை களையும்துறைவன் கொல்லோ பிறவா யினவே.  - தும்பிசேர் கீரனார்.  


317. குறிஞ்சி - தோழி கூற்று
புரிமட மரையான் கருநரை நல்லேறுதீம்புளி நெல்லி மாந்தி யயலதுதேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த்தோங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன்நம்மைவிட் டமையுமோ மற்றே கைம்மிக 5வடபுல வாடைக் கழிமழைதென்புலம் படருந் தண்பனி நாளே.  - மதுரைக் கண்டரதத்தனார்.  


318. நெய்தல் - தலைவி கூற்று
எறிசுறாக் கலித்த இலங்குநீர்ப் பரப்பின்நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய்வெறியயர் களத்தினில் தோன்றுந் துறைவன்குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன்றறியாற் குரைப்பலோ யானே யெய்த்தவிப் 5பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட்பிழையா வஞ்சினஞ் செய்தகள்வனும் கடவனும் புனைவனுந் தானே.  - அம்மூவனார்.  


319. முல்லை - தலைவி கூற்று
மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்துகான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்கையுடை நன்மாப் பிடியொடு பொருந்திமையணி மருங்கின் மலையகஞ் சேரவும்மாலைவந் தன்று மாரி மாமழை 5பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்இன்னும் வாரார் ஆயின்என்னாந் தோழிநம் இன்னுயிர் நிலையே.  - தாயங் கண்ணனார்.  


320. நெய்தல் - தலைவி கூற்று
பெருங்கடற் பரதவர் கொண்மீன் உணங்கல்அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடுநிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்எக்கர்தொறும் பரக்குந் துறைவனொ டொருநாள்நக்கதோர் பழியு மிலமே போதவிழ் 5பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப்புன்னையஞ் சேரி யிவ்வூர்கொன்னலர் தூற்றந்தன் கொடுமை யானே.  - தும்பிசேர் கீரனார்.  


321. குறிஞ்சி - தோழி கூற்று
மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன்சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன்நடுநாள் வந்து நம்மனைப் பெயரும்மடவர லரிவைநின் மார்பமர் இன்றுணைமன்ற மரையா இரிய ஏறட்டுச் 5செங்கண் இரும்புலி குழுமும் அதனால்மறைத்தற் காலையோ அன்றேதிறப்பல் வாழிவேண் டன்னைநம் கதவே.  - ......  


322. குறிஞ்சி - தலைவி கூற்று
அமர்க்க ணாமான் அஞ்செவிக் குழவிகானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்துகான நண்ணிய சிறுகுடிப் பட்டெனஇளைய ரோம்ப மரீஇயவ ணயந்துமனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு 5மருவின் இனியவு முளவோசெல்வாந் தோழி யொல்வாங்கு நடந்தே.  - ஐயூர் முடவனார்.  


323. முல்லை - தலைவன் கூற்று
எல்லாம் எவனோ பதடி வைகல்பாணர் படுமலை பண்ணிய எழாலின்வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப்பெய்த புலத்துப் பூத்த முல்லைப்பசுமுகைத் தாது நாறும் நறுநுதல் 5அரிவை தோளிணைத் துஞ்சிக்கழிந்த நாளிவண் வாழு நாளே.  - பதடி வைகலார்.  


324. நெய்தல் - தோழி கூற்று
கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றைவழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறைஇனமீன் இருங்கழி நீந்தி நீநின்நயனுடை மையின் வருதி யிவடன்மடனுடை மையின் உயங்கும் யானது 5கவைமக நஞ்சுண் டாஅங்கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே.  - கவை மகனார்.  


325. நெய்தல் - தலைவி கூற்று
சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன்மாயச் செலவாச் செத்து மருங்கற்றுமன்னிக் கழிகென் றேனே அன்னோஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோகருங்கால் வெண்குருகு மேயும் 5பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே.  - நன்னாகையார்.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.