LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF
- செய்திகள்

தொலைதூரக் கிரகத்தில் உயிரினங்கள் - இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு

 

கே2-18பி என்ற தொலைதூரக் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி முனைவர் நிக்கு மதுசூதன் தலைமையிலான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானி முனைவர் மது சூதன் கடந்த 1980-ம் ஆண்டில் இந்தியாவில் பிறந்தவர். வாராணசி ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்றார். முதுநிலைப் பட்டம் மற்றும்முனைவர் பட்ட  ஆய்வுகளை மாசசூசட்ஸ் தொழில்நுட்ப மையத்தில் (எம்ஐடி) முடித்தார். சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களில் இவர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2013-ம் ஆண்டு இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வான் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
55 கான்கிரி -இ என்ற தொலைதூரக் கிரகம் பூமியைவிடப் பெரியது. அதில் கார்பன் அதிகளவில் இருக்கலாம் என இவரது ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. வாஸ்ப்-19பி என்ற கிரகத்தில் டைட்டானியம் ஆக்ஸைடு உள்ளதையும் இவரது தலைமையிலான குழு கண்டுபிடித்தது. கடந்த 2020-ம் ஆண்டு கே2-18பி என்ற கிரகத்தை ஆய்வு செய்து அதன் மேற்பரப்பில் தண்ணீர் இருக்கலாம் எனக் கூறினர்.
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் இவர் தனது குழுவினருடன் கே2-18பி கிரகத்தை ஆய்வு செய்ததில், அதில் டைமெத்தில் சல்பைடு மற்றும் டைமெத்தில் டை சல்பைடு வாயுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இவை கடலில் இருக்கும் பாசிகள் வெளியிடும் வாயுக்கள். இதன் மூலம் இந்தக் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக முனைவர் மது சூதன் தலைமையிலான குழுவினர் கூறியுள்ளனர்.

கே2-18பி என்ற தொலைதூரக் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி முனைவர் நிக்கு மதுசூதன் தலைமையிலான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


விஞ்ஞானி முனைவர் மது சூதன் கடந்த 1980-ம் ஆண்டில் இந்தியாவில் பிறந்தவர். வாராணசி ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்றார். முதுநிலைப் பட்டம் மற்றும்முனைவர் பட்ட  ஆய்வுகளை மாசசூசட்ஸ் தொழில்நுட்ப மையத்தில் (எம்ஐடி) முடித்தார். சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களில் இவர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2013-ம் ஆண்டு இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வான் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.


55 கான்கிரி -இ என்ற தொலைதூரக் கிரகம் பூமியைவிடப் பெரியது. அதில் கார்பன் அதிகளவில் இருக்கலாம் என இவரது ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. வாஸ்ப்-19பி என்ற கிரகத்தில் டைட்டானியம் ஆக்ஸைடு உள்ளதையும் இவரது தலைமையிலான குழு கண்டுபிடித்தது. கடந்த 2020-ம் ஆண்டு கே2-18பி என்ற கிரகத்தை ஆய்வு செய்து அதன் மேற்பரப்பில் தண்ணீர் இருக்கலாம் எனக் கூறினர்.


நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் இவர் தனது குழுவினருடன் கே2-18பி கிரகத்தை ஆய்வு செய்ததில், அதில் டைமெத்தில் சல்பைடு மற்றும் டைமெத்தில் டை சல்பைடு வாயுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இவை கடலில் இருக்கும் பாசிகள் வெளியிடும் வாயுக்கள். இதன் மூலம் இந்தக் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக முனைவர் மது சூதன் தலைமையிலான குழுவினர் கூறியுள்ளனர்.

 

by hemavathi   on 21 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
“விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா அழகாகத் தெரிகிறது” -விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா “விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா அழகாகத் தெரிகிறது” -விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா
பெங்களூரு பொறியாளர் உருவாக்கிய தோசை சுடும் எந்திர மனிதன் பெங்களூரு பொறியாளர் உருவாக்கிய தோசை சுடும் எந்திர மனிதன்
குழந்தை பெற்றெடுக்கும் தானியங்கிகளை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி குழந்தை பெற்றெடுக்கும் தானியங்கிகளை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி
புதுச்சேரி கடற்கரையில் காவல்துறைக்கு உதவியாகக் காவல்பணியில் எந்திர மனிதன் புதுச்சேரி கடற்கரையில் காவல்துறைக்கு உதவியாகக் காவல்பணியில் எந்திர மனிதன்
சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்ஷூ சுக்லா குழுவினருக்குப் பாராட்டு விழா சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்ஷூ சுக்லா குழுவினருக்குப் பாராட்டு விழா
விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்தைக் கடந்த ஷுபன்ஷு சுக்லா விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்தைக் கடந்த ஷுபன்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லா குழு வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் சுபான்ஷு சுக்லா குழு வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம்
செயற்கை இரத்தத்தை உருவாக்கி ஜப்பானிய விஞ்ஞானிகள் சாதனை செயற்கை இரத்தத்தை உருவாக்கி ஜப்பானிய விஞ்ஞானிகள் சாதனை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.