LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீகுமர குருபரர் நூல்கள்

மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை

 

மதுரை மீனாட்சியம்மையின் புகழ் பாடும் பொருட்டு ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை ஆகும். 
நூல்
நேரிசை வெண்பா
கார்பூத்த கண்டத்தெங் கண்ணுதலார்க் கீரேழு
பார்பூத்த பச்சைப் பசும்கொம்பே - சீர்கொள்
கடம்பவனத் தாயேநின் கண்ணருள்பெற் றாரே
இடம்பவனத் தாயே யிரார். 1
கட்டளைக் கலித்துறை
இராநின் றதுஞ்சொக்க ரெண்டோள் குழைய விருகுவட்டாற்
பொராநின் றதுஞ்சில பூசலிட் டோடிப் புலவிநலம்
தராநின் றதுமம்மை யம்மண வாளர் தயவுக்குள்ளாய்
வராநின் றதுமென்று வாய்க்குமென் னெஞ்ச மணவறையே. 2
நேரிசை வெண்பா
மதம்பரவு முக்கண் மழகளிற்றைப் பெற்றுக்
கதம்பவனத் தேயிருந்த கள்வி - மதங்கன்
அடியார்க் குடம்பிருகூ றாக்கினாள் பார்க்கிற் 
கொடியார்க் குளகொல் குணம். 3
கட்டளைக் கலித்துறை
குணங்கொண்டு நின்னைக் குறையிரந் தாகங் குழையப்புல்லி
மணங்கொண் டவரொரு வாமங்கொண் டாய்மது ரேசரவர்
பணங்கொண் டிருப்ப தறிந்துங்கொள் ளாயம்மை பைந்தொடியார்
கணங்கொண் டிறைஞ்சு நினைக்குமுண் டாற்பொற் கனதனமே. 4
நேரிசை வெண்பா
கனமிருக்குங் கந்தரரர்க்குன் கன்னிநா டீந்தென்
தினமிரப்ப தோவொழியார் தேனே - பனவனுக்காப்
பாமாறி யார்க்குனைப்போற் பாரத் தனமிருந்தாற்
றாமாறி யாடுவரோ தான். 5
கட்டளைக் கலித்துறை
தானின் றுலகு தழையத் தழைந்த தமிழ்மதுரைக்
கானின்ற பூங்குழற் கர்ப்பூர வல்லி கருங்கட்செய்ய
மீனின் றுலாவி விளையா டுவதுவிண் ணாறலைய
வானின்ற தோர்வெள்ளி மன்றாடு மானந்த மாக்கடலே. 6
நேரிசை வெண்பா
கடம்பவன வல்லிசெல்வக் கர்ப்பூர வல்லி
மடந்தை யபிடேக வல்லி - நெடுந்தகையை
ஆட்டுவிப்பா ளாடலிவட் காடல்வே றில்லையெமைப்
பாட்டுவிப்ப துங்கேட் பதும். 7
கட்டளைக் கலித்துறை
பதுமத் திருவல்லி கர்ப்பூர வல்லிநின் பாதபத்ம
மதுமத் தொடுந்தம் முடிவைத்த வாமது ரேசரவ
ரிதுமத்தப் பித்துமன் றேழைமை முன்ன ரிமையவர்கைப்
புதுமத் தினைப்பொற் சிலையென் றெடுத்த புராந்தகர்க்கே. 8
நேரிசை வெண்பா
தகுமே கடம்பவனத் தாயேநின் சிற்றி
லகமேயென் னெஞ்சகம தானான் - மகிழ்நரொடும்
வாழாநின் றாயிம் மனையிருண்மூ டிக்கிடப்ப
தேழாய் விளக்கிட் டிரு. 9
கட்டளைக் கலித்துறை
இரைக்கு நதிவைகை பொய்கைபொற் றாமரை யீர்ந்தண்டமிழ்
வரைக்கு மலைதென் மலயம தேசொக்கர் வஞ்சநெஞ்சைக்
கரைக்குங் கனகள்வி கர்ப்பூர வல்லிக்குக் கற்பகத்தால்
நிரைக்கும்பொற் கோயி றிருவால வாயுமென் னெஞ்சமுமே. 10
நேரிசை வெண்பா
நெஞ்சே திருக்கோயி னீலுண் டிருண்டகுழல்
மஞ்சேந் தபிடேக வல்லிக்கு - விஞ்சி
வருமந் தகாவென் வழிவருதி யாலிக்
கருமந் தகாவென் கருத்து. 11
கட்டளைக் கலித்துறை
கருவால வாய்நொந் தறமெலிந் தேற்கிரு கான்மலரைந்
தருவால வாய்நின்ற தொன்றுத வாய்வன் றடக்கைக்குநேர்
பொருவால வாயெட்டுப் போர்க்களி றேந்துபொற் கோயில்கொண்ட
திருவால வாய்மருந் தேதென்னர் கோன்பெற்ற தெள்ளமுதே 12
நேரிசை வெண்பா
தென்மலையுங் கன்னித் திருநாடும் வெள்ளிமலைப்
பொன்மலைக்கே தந்த பொலங்கொம்பே - நின்மா
முலைக்குவடு பாய்சுவடு முன்காய மாலம்
மலைக்குவடு வன்றே மணம். 13
கட்டளைக் கலித்துறை
மணியே யொருபச்சை மாணிக்க மேமருந் தேயென்றுன்னைப்
பணியேன் பணிந்தவர் பாலுஞ்செல் லேனவர் பாற்செலவும்
துணியேன் றுணிந்ததை யென்னுரைக் கேன்மது ரைத்திருநாட்
டணியே யனைத்துயிர்க் கும்மனை நீயென் றறிந்துகொண்டே. 14
நேரிசை வெண்பா
கொண்டைச் செருக்குங் குருநகையு நெட்டயிற்கட்
கெண்டைப் பிறக்கமும்வாய்க் கிஞ்சுகமுங் - கொண்டம்மை
கற்பூர வல்லி கருத்திற் புகப்புகுந்தாள்
நற்பூர வல்லியுமென் னா 15
கட்டளைக் கலித்துறை
நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமி ழுண்டு நயந்தசில
பாவுண் டினங்கள் பலவுமுண் டேபங்கிற் கொண்டிருந்தோர்
தேவுண் டுவக்குங் கடம்பா டவிப்பசுந் தேனின்பைந்தாட்
பூவுண்டு நாரொன் றிலையாந் தொடுத்துப் புனைவதற்கே. 16
நேரிசை வெண்பா
புனைந்தாள் கடம்பவனப் பூவைசில பாவை
வனைந்தாளெம் வாயும் மனமும் - தினந்தினமும்
பொற்பதமே நாறுமவள் பூம்பதமென் றேநமது
சொற்பதமே நாறுஞ் சுவை. 17
கட்டளைக் கலித்துறை
சுவையுண் டெனக்கொண்டு சூடுதி யான்மற்றென் சொற்றழிழ்க்கோர்
நவையுண் டெனவற நாணுதி போலு நகைத்தெயின்மூன்
றவையுண் டவரொ டருட்கூடல் வைகுமம் மேசொற்பொருட்
கெவையுண்டு குற்ற மவையுண்டு நீவி ரிருவிர்க்குமே. 18
நேரிசை வெண்பா
விண்டிருந்த பொற்கமல மீதிருந்த பொன்னினையும்
கொண்டிருந்து குற்றேவல் கொள்ளுமாற்- றொண்டரண்டர்
தேங்காவில் வீற்றிருப்பத் தென்மதுரைக் கேகடப்பம்
பூங்காவில் வீற்றிருந்த பொன். 19
கட்டளைக் கலித்துறை
பொற்பூர வல்லி கமலத்த ளேகொல் புகுந்தகமும்
வெற்பூர வல்லி பிறந்தக மும்மது மீட்டுமென்னே
அற்பூர வல்லியென் வன்னெஞ்சக் கஞ்சத்தெம் மையனொடும்
கற்பூர வல்லி குடிபுகுந் தேநின்ற காரணமே. 20
மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை முற்றிற்று.

மதுரை மீனாட்சியம்மையின் புகழ் பாடும் பொருட்டு ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை ஆகும். 
நூல்

நேரிசை வெண்பா
கார்பூத்த கண்டத்தெங் கண்ணுதலார்க் கீரேழுபார்பூத்த பச்சைப் பசும்கொம்பே - சீர்கொள்கடம்பவனத் தாயேநின் கண்ணருள்பெற் றாரேஇடம்பவனத் தாயே யிரார். 1

கட்டளைக் கலித்துறை
இராநின் றதுஞ்சொக்க ரெண்டோள் குழைய விருகுவட்டாற்பொராநின் றதுஞ்சில பூசலிட் டோடிப் புலவிநலம்தராநின் றதுமம்மை யம்மண வாளர் தயவுக்குள்ளாய்வராநின் றதுமென்று வாய்க்குமென் னெஞ்ச மணவறையே. 2

நேரிசை வெண்பா
மதம்பரவு முக்கண் மழகளிற்றைப் பெற்றுக்கதம்பவனத் தேயிருந்த கள்வி - மதங்கன்அடியார்க் குடம்பிருகூ றாக்கினாள் பார்க்கிற் கொடியார்க் குளகொல் குணம். 3

கட்டளைக் கலித்துறை
குணங்கொண்டு நின்னைக் குறையிரந் தாகங் குழையப்புல்லிமணங்கொண் டவரொரு வாமங்கொண் டாய்மது ரேசரவர்பணங்கொண் டிருப்ப தறிந்துங்கொள் ளாயம்மை பைந்தொடியார்கணங்கொண் டிறைஞ்சு நினைக்குமுண் டாற்பொற் கனதனமே. 4

நேரிசை வெண்பா
கனமிருக்குங் கந்தரரர்க்குன் கன்னிநா டீந்தென்தினமிரப்ப தோவொழியார் தேனே - பனவனுக்காப்பாமாறி யார்க்குனைப்போற் பாரத் தனமிருந்தாற்றாமாறி யாடுவரோ தான். 5

கட்டளைக் கலித்துறை
தானின் றுலகு தழையத் தழைந்த தமிழ்மதுரைக்கானின்ற பூங்குழற் கர்ப்பூர வல்லி கருங்கட்செய்யமீனின் றுலாவி விளையா டுவதுவிண் ணாறலையவானின்ற தோர்வெள்ளி மன்றாடு மானந்த மாக்கடலே. 6

நேரிசை வெண்பா
கடம்பவன வல்லிசெல்வக் கர்ப்பூர வல்லிமடந்தை யபிடேக வல்லி - நெடுந்தகையைஆட்டுவிப்பா ளாடலிவட் காடல்வே றில்லையெமைப்பாட்டுவிப்ப துங்கேட் பதும். 7

கட்டளைக் கலித்துறை
பதுமத் திருவல்லி கர்ப்பூர வல்லிநின் பாதபத்மமதுமத் தொடுந்தம் முடிவைத்த வாமது ரேசரவரிதுமத்தப் பித்துமன் றேழைமை முன்ன ரிமையவர்கைப்புதுமத் தினைப்பொற் சிலையென் றெடுத்த புராந்தகர்க்கே. 8

நேரிசை வெண்பா
தகுமே கடம்பவனத் தாயேநின் சிற்றிலகமேயென் னெஞ்சகம தானான் - மகிழ்நரொடும்வாழாநின் றாயிம் மனையிருண்மூ டிக்கிடப்பதேழாய் விளக்கிட் டிரு. 9

கட்டளைக் கலித்துறை
இரைக்கு நதிவைகை பொய்கைபொற் றாமரை யீர்ந்தண்டமிழ்வரைக்கு மலைதென் மலயம தேசொக்கர் வஞ்சநெஞ்சைக்கரைக்குங் கனகள்வி கர்ப்பூர வல்லிக்குக் கற்பகத்தால்நிரைக்கும்பொற் கோயி றிருவால வாயுமென் னெஞ்சமுமே. 10

நேரிசை வெண்பா
நெஞ்சே திருக்கோயி னீலுண் டிருண்டகுழல்மஞ்சேந் தபிடேக வல்லிக்கு - விஞ்சிவருமந் தகாவென் வழிவருதி யாலிக்கருமந் தகாவென் கருத்து. 11

கட்டளைக் கலித்துறை
கருவால வாய்நொந் தறமெலிந் தேற்கிரு கான்மலரைந்தருவால வாய்நின்ற தொன்றுத வாய்வன் றடக்கைக்குநேர்பொருவால வாயெட்டுப் போர்க்களி றேந்துபொற் கோயில்கொண்டதிருவால வாய்மருந் தேதென்னர் கோன்பெற்ற தெள்ளமுதே 12

நேரிசை வெண்பா
தென்மலையுங் கன்னித் திருநாடும் வெள்ளிமலைப்பொன்மலைக்கே தந்த பொலங்கொம்பே - நின்மாமுலைக்குவடு பாய்சுவடு முன்காய மாலம்மலைக்குவடு வன்றே மணம். 13

கட்டளைக் கலித்துறை
மணியே யொருபச்சை மாணிக்க மேமருந் தேயென்றுன்னைப்பணியேன் பணிந்தவர் பாலுஞ்செல் லேனவர் பாற்செலவும்துணியேன் றுணிந்ததை யென்னுரைக் கேன்மது ரைத்திருநாட்டணியே யனைத்துயிர்க் கும்மனை நீயென் றறிந்துகொண்டே. 14

நேரிசை வெண்பா
கொண்டைச் செருக்குங் குருநகையு நெட்டயிற்கட்கெண்டைப் பிறக்கமும்வாய்க் கிஞ்சுகமுங் - கொண்டம்மைகற்பூர வல்லி கருத்திற் புகப்புகுந்தாள்நற்பூர வல்லியுமென் னா 15

கட்டளைக் கலித்துறை
நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமி ழுண்டு நயந்தசிலபாவுண் டினங்கள் பலவுமுண் டேபங்கிற் கொண்டிருந்தோர்தேவுண் டுவக்குங் கடம்பா டவிப்பசுந் தேனின்பைந்தாட்பூவுண்டு நாரொன் றிலையாந் தொடுத்துப் புனைவதற்கே. 16

நேரிசை வெண்பா
புனைந்தாள் கடம்பவனப் பூவைசில பாவைவனைந்தாளெம் வாயும் மனமும் - தினந்தினமும்பொற்பதமே நாறுமவள் பூம்பதமென் றேநமதுசொற்பதமே நாறுஞ் சுவை. 17

கட்டளைக் கலித்துறை
சுவையுண் டெனக்கொண்டு சூடுதி யான்மற்றென் சொற்றழிழ்க்கோர்நவையுண் டெனவற நாணுதி போலு நகைத்தெயின்மூன்றவையுண் டவரொ டருட்கூடல் வைகுமம் மேசொற்பொருட்கெவையுண்டு குற்ற மவையுண்டு நீவி ரிருவிர்க்குமே. 18

நேரிசை வெண்பா
விண்டிருந்த பொற்கமல மீதிருந்த பொன்னினையும்கொண்டிருந்து குற்றேவல் கொள்ளுமாற்- றொண்டரண்டர்தேங்காவில் வீற்றிருப்பத் தென்மதுரைக் கேகடப்பம்பூங்காவில் வீற்றிருந்த பொன். 19

கட்டளைக் கலித்துறை
பொற்பூர வல்லி கமலத்த ளேகொல் புகுந்தகமும்வெற்பூர வல்லி பிறந்தக மும்மது மீட்டுமென்னேஅற்பூர வல்லியென் வன்னெஞ்சக் கஞ்சத்தெம் மையனொடும்கற்பூர வல்லி குடிபுகுந் தேநின்ற காரணமே. 20



மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை முற்றிற்று.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.