LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

மகாத்மாவே மீண்டும் வா

தேச பிதாவே ! நீ
உண்ணாவிரதமிருந்து
உடல் வருத்தி கண்ணீர் விட்டு
வாங்கித் தந்த சுதந்திரம்
இன்னும் இந்திய மண்ணில்
மனிதநேயம் வேர்விடவில்லை!

அப்பாவி மக்களின்
அன்றாட வாழ்க்கையே
வன்முறை வெறியாட்டத்துடன்
குண்டு முழக்கத்தின் நடுவே
குருதியில் மிதக்கிறது !

துப்பாக்கிக் குண்டில்
தேச பிதாவே
நீ மட்டும் மடியவில்லை
மனிதநேயம் அன்பும்
மடிந்து கொண்டு வருகிறது !

அன்று
சுதந்திர இந்தியாவில்
பட்டாம் பூச்சிகள் போல்
சுதந்திரமாய்
பறக்கலாம் நினைத்தாய் !

இன்று
பறக்கும் பட்டாம் பூச்சிகளின்
சிறகுகளைப் பிய்த்து விட்டு
பறக்கச் சொல்லும்
சுதந்திர நாட்டில்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!

அன்று நீ
சுதந்திர இந்தியாவில்
அரசியலையே ஆன்மீகமாக்கி
வாழ நினைத்து வாழ்ந்தாய் !

இன்று
ஆன்மீகத்தையே முதலீடாக்கி
ஆன்மீகத்தையே அரசியலாக்கி
நாட்டையே
ஆள நினைக்கிறார்கள் !

வெளிச்சம் என்று நினைத்து
நாங்கள் தீயில் விழுந்து
வெந்து கொண்டு இருக்கிறோம் !

சுதந்திர ஆன்மீக வெளிச்சம்
எங்களுக்குக் கிடைப்பதற்கு
தேச பிதாவே,
எப்போது வருவாய் ?

தேச பிதாவே நீ
மீண்டும் வந்தால்
மனிதநேயம்
மீண்டும் துளிர்த்து விடும்
மகாத்மாவே தேச பிதாவே
மறக்காமல் மீண்டும் வா !

பூ. சுப்ரமணியன்,
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

by Subramanian   on 11 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.