LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

மருந்தில்லா வாழ்க்கை

சுலபமாய் கிடைப்பவைகள்

மதிப்பு கொள்வதில்லை என்றுமே !

 

ஒற்றை செடியை நட்டு

 

வைத்து தினமும் முகம்

 

கழுவும் தண்ணீர் போதும்

 

மரமொன்றை உருவாக்க !

 

 

 

செலவு செய்யும் தண்ணீரை

 

மண் குழியில் இறக்கினாலே,

 

நிலத்தடி நீரை சேர்த்திடலாம்.

 

 

 

ஆக்ரமிப்பு செய்வோரும்,மணலை

 

அள்ளி விற்போரும்,மனது வைத்து

 

ஆற்று வழி தடங்களை ஒன்றும்

 

செய்யாமல் விட்டாலே தடையில்லாமல்

 

தண்ணீர் ஊருக்குள் வந்து செல்லுமே !

 

 

 

விலை உயர்ந்த ஆடையும்,

 

வசதியான வசிப்பிடமும்,மதிப்பு

 

மிக்க பதவியும்,வியாதியில்லா

 

உடலை நமக்கு கொடுப்பதில்லை.

 

சுத்தமான காற்றும் துய்மையான

 

தண்ணீரும்,மருந்தில்லா தானியமும்

 

நமக்கு மருந்தில்லா வாழ்க்கையை

 

எப்பொழுதும் தந்திடும்.

 

 

 

இயற்கையும் யானையும் ஒன்றுதான்

 

இரண்டையும் கையாள திறமை

 

வேண்டும். மதம் பிடித்த

 

யானை மிரண்டு தாண்டவம்

 

ஆடுகிறது, இயற்கையும் சில

 

நேரங்களில் மதம் பிடித்து

 

ஆடி விடுகிறது.பூகம்பமாகவோ

 

மழையாகவோ, புயலாகவோ வறட்சியாகவோ !

 

யானையை !

 

பாகன் அதன் போக்கிலே

 

வளர்ப்பது போல,

 

நாமும் இயற்கையின் போக்கிலே

 

வளர்ந்து கொள்ள முயற்சிக்க

 

வேண்டும்.  

 

 

Without medicine for life
by Dhamotharan.S   on 08 Oct 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.