LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

மழை [வெள்ளம் ]

வாரி கொடுக்கும் கொடையை கூட
வாங்க முடியாமல் மானுடம் ஒரு
வாய் தண்ணீருக்கு
அடுத்த மாநிலத்தை
அண்டி பிழைப்பது ஏன் ?
பூமிபள்ளங்களில் கான்க்ரீட் நிரப்பிய
புத்திசாலிகளே !
சாமியையும் மழையையும்
சபிப்பதேன் ?
ஏரிகளை தூர்த்து
குடியிருப்புகளாக்கிய மேதைகளே!
நாளை தண்ணீருக்கு
அமெரிக்காவை கேட்பீர்களா ?
குளங்களில் வீடுகட்டிவிட்டு
குடியிருக்கும் குணவான்களே!
ஓடிவரும் மழை நீர் குளத்திற்கு வற்றாமல்
கோட்டைக்கா போகும் ?
தண்ணீர் தேங்கிநிற்கிறது என்று
கண்ணீர் விடும் கதறி அழும் கனவான்களே!
குளங்களை அபகரிக்க யார் சொன்னது ?
குளங்களில் குடியிருப்பை யார் கட்ட சொன்னது ?
லஞ்சம் கொடுத்து அனுமதியை
யார் பெற சொன்னது? இப்போது
தஞ்சம் என்று பள்ளிகளில் முடங்க யார் சொன்னது?
மழையினும் கொடையாளி யாருமில்லை
மாநிலத்தீர் ! தவறிழைத்தீர் , வருந்துகிறீர்.
பிழை தவிர்ப்பீர் ,புவிப்பந்தை காப்பீர் .
மழை தரும் நிதியை சேமிப்பீர்

கவிஞர் ச .ரவிச்சந்திரன்  

by Swathi   on 16 Nov 2017  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
29-Dec-2017 14:18:26 samundeeswari said : Report Abuse
மிக அருமை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.