LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-113

 

3.113.திருக்கழுமலம் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
4012 உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருண் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே
கனல்விழி காய்வது காமனையே
அற்ற மறைப்பது முன்பணியே
அமரர்கள் செய்வது முன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே
பிரம புரத்தை யுகந்தனையே
3.113.1
இறைவரே! உமாதேவியார் பிரியாது பொருந்தி இருப்பது உம் திருமேனியையே. சிவஞானிகள் உணர்ந்து போற்றுவது உமது பேரருளையே. கற்றுணர்ந்த துறவிகள் வெறுப்பது மனைவி முதலிய குடும்பத்தையே. நெற்றிக்கண் எரித்தது மன்மதனையே. உமது திருமேனியை மறைப்பது பாம்பே. தேவர்கள் செய்வது உமது பணிவிடையே. நீர் பெற்றெடுத்து விரும்பி அணைத்தது முருகப் பெருமானையே. நீர் திருப்பிரமபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றீர். 
4013 சதிமிக வந்த சலந்தரனே
தடிசிர நேர்கொள் சலந்தரனே
அதிரொளி சேர்திகி ரிப்படையா
லமர்ந்தன ரும்பர்து திப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே
மருவிட மேற்பது கைச்சிலையே
விதியினி லிட்டவி ரும்பரனே
வேணு புரத்தை விரும்பரனே
3.113.2
வஞ்சனை செய்து வந்தவன் சலந்தரன் என்னும் அசுரனே. அவன் தலையை வெட்டியவன் கங்கையைத் தாங்கிய அரன். கண்டவர்கள் நடுங்கத்தக்க ஒளிபொருந்திய சக்கராயுதத்தால் சலந்தனைக் கொல்லத் தேவர்கள் துதித்து மகிழ்ந்தனர். சந்திர மண்டலத்தை அளாவிய மேருமலை, கையிலேந்திய வில்லாம். பொருந்திய நஞ்சை உணவாக ஏற்பதில் வெறுத்திலீர். விதிக்கப்பட்ட அறவழியில் உலகவர் ஒழுகுவதில் விருப்பத்தையுடைய பெரிய மேலான கடவுளே. வேணுபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அரனே! 
4014 காதம ரத்திகழ் தோடினனே
கானவ னாய்க்கடி தோடினனே
பாதம தாற்கூற் றுதைத்தனனே
பார்த்த னுடலம் புதைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே
சார்ந்த வினைய தரித்தனனே
போத மமரு முரைப்பொருளே
புகலி யமர்ந்த பரம்பொருளே
3.113.3
இறைவர் காதில் தோட்டை அணிந்தவர். வேடுவனாகி மிக விரைந்து சென்றவர். யமனைக் காலால் உதைத்தவர்.அர்ச்சுனனது உடலைக் கவசம் போல் மூடினவர். மகரந்தத்தோடு மலர்ந்த கொன்றையை அணிந்தவர். அன்பர்களின் வினைகளை அழித்தவர். சிவஞானக் கருத்தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவர். அவரே திருப்புகலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் பரம்பொருள். 
4015 மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே
மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே
மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே
வேதம தோதுவர் மேன்மதியே
பொய்த்தலை யோடுறு மத்தமதே
புரிசடை வைத்தது மத்தமதே
வித்தக ராகிய வெங்குருவே
விரும்பி யமர்ந்தனர் வெங்குருவே
3.113.4
கருநிறமுடைய நஞ்சைக் கக்கும் பாம்பை மகிழ்ந்து இடுப்பில் அணிந்துள்ளவர். திருநீற்றினையே சந்தனம் போல் உடம்பில் பூசியவர். அவர் தலைமேல் விளங்குவது சந்திரனே. அவர் வேதம் அருளியது உயிர்கட்கு மேலான ஞானம் அருளவே. மண்டையோடு ஏந்தி மயானத்தில் விளங்குபவர். முறுக்குண்ட சடையில் அவர் அணிந்துள்ளது ஊமத்த மலரே. வித்தகராகிய அப்பெருமான் எம் குரு ஆவார். அவர் விரும்பி வீற்றிருந்தருளுவதும் திருவெங்குரு என்னும் திருத்தலமாகும். 
4016 உடன்பயில் கின்றனன் மாதவனே
உறுபொறி காய்ந்திசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே
திரிகுண மேவிய கண்டனனே
படங்கொ ளரவரை செய்தனனே
பகடுரி கொண்டரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே
தோணி புரத்துறை நஞ்சிவனே
3.113.5
இறைவனே! திருமாலைத் தம்முடன் இடப்பாகத்தில் இருக்கும்படி செய்கின்றவர். தம்வழிச் செல்லும் இயல்புடைய இந்திரியங்களை அடக்கும் பெரிய தவம் செய்தவர். உறுதி பயக்கும் சிறந்த வேதங்களை அருளியவர். முக்குண வயப்பட்டுச் செய்த புறச்சமயக் கொள்கைகளைக் கண்டனம் செய்பவர். படமெடுக்கும் பாம்பை இடுப்பில் அணிந்தவர். யானையின் தோலை உரித்து அதைக் கொன்றவர். தொடர்ந்த துன்பங்களை அழிப்பதில் இவர் விடம் போன்றவர். இவரே திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் நம் சிவபெருமான் ஆவார். 
4017 திகழ்கைய தும்புகை தங்கழலே
தேவர் தொழுவதுந் தங்கழலே
இகழ்பவர் தாமொரு மானிடமே
யிருந்தனு வோடெழின் மானிடமே
மிகவரு நீர்கொளு மஞ்சடையே
மின்னிகர் கின்றது மஞ்சடையே
தகவிர தங்கொள்வர் சுந்தரரே
தக்க தராயுறை சுந்தரரே
3.113.6
இறைவன் அழகிய கையில் ஏந்தியுள்ளது புகைகொண்டு எழும் நெருப்பே. தேவர்கள் போற்றுவது அவருடைய திருக்கழல்களையே. தம்மை இகழ்ந்த தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை இடக்கரத்தில் எந்தியுள்ளார். பக்குவான்மாக்கட்கு ஞானோபதேசம் செய்ய அவர் காட்சி தந்தது மானிட உடம்பில். பெருக்கெடுக்கும் கங்கையைத் தாங்கியது அழகிய சடையிலே. மின்னலைப் போன்று ஒளிரும் அழகிய சடையை உடையவர். தகுந்த விரதம் கொள்ளும் சுந்தர வடிவினர். அவர் எக்காலத்திலும் அழியாது நிலைத்து நிற்கும் பூந்தராய் என்னும் திருப்பதியில் வீற்றிருந்தருளும் அழகர். 
4018 ஓர்வரு கண்க ளிணைக்கயலே
யுமையவள் கண்க ளிணைக்கழலே
ஏர்மரு வுங்கழ னாகமதே
யெழில்கொளு தாசன நாகமதே
நீர்வரு கொந்தள கங்கையதே
நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோக தியம்பகனே
சிரபுர மேய தியம்பகனே
3.113.7
இறைவனையும், அடியாரையும் காணாத கண்கள் புறம்பானவை. உமாதேவியின் கண்கள் இரு கயல்மீன்கட்கு ஒப்பானவை. அழகிய திருவடிகளில் கட்டியிருப்பது நாகத்தையே. அவருடைய திருமேனியானது நெருப்பு வண்ணம் உடையது நீர்மயமான கொத்தான கூந்தல் ஒழுங்காய் உள்ளது. நெடுஞ்சடையில் தங்கியுள்ளது, கங்கையே. சேர்தற்கரிய யோகநிலையைக் காட்டிய மூன்று கண்களையுடையவரே. நெருப்பாகிய அம்பைக் கையின் இடத்துக்கொண்டு சிரபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார். 
4019 ஈண்டு துயிலம ரப்பினனே
யிருங்க ணிடந்தடி யப்பினனே
தீண்டல ரும்பரி சக்கரமே
திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத்தலையே
மிகைத்தவ ரோடு நகைத்தலையே
பூண்டனர் சேர லுமாபதியே
புறவ மமர்ந்த வுமாபதியே
3.113.8
பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால், தமது பெரிய கண்ணைத் தோண்டிச் சிவபெருமானின் திருவடிகளில் அர்ச்சித்தனர். தீண்டுதற்கரிய தன்மையுடைய அந்தக் கரத்தில் ஒளியுடையதாய் விளங்குவது சக்கரமே. தாருகாவனத்து முனிவர்கள் விரும்பி யாகம் செய்து சிரமப்படச் சிவனைக் கொல்ல வந்தது நகுவெண்டலை. அம்முனிவர்களைப் பரிகசிப்பது போல வெண்டலைகளை மாலையாக அணிந்து கொண்டனர். அவர் சேர்வது எவற்றிலும் சிறந்த அடியார் உள்ளமாகிய இடமாம். புறவம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் அந்த உமாபதியே ஆவார். 
4020 நின்மணி வாயது நீழலையே
நேசம தானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே
யொளியத னோடுறு சங்கமதே
கன்னிய ரைக்கவ ருங்களனே
கடல்விட முண்டக ருங்களனே
மன்னிவ ரைப்பதி சண்பையதே
வாரி வயன்மலி சண்பையதே
3.113.9
சிவபெருமானே! மணிகட்டிய உன் கோயில் வாசலின் நிழலையே அருளிடமாகக் கொண்ட நேசமுடைய அடியவர்களிடமிருந்து நீங்கமாட்டாய். அவர்களின் அடிச்சுவட்டை எண்ணி. மனத்தில் தொழுகின்ற அடியவர்கள் விளங்குகின்ற இடமே அடியவர் திருக்கூட்டம் எனத்தகும். அவர் தாருகாவனத்தில் வாழும் மகளிர் உள்ளத்தைக் கவர்ந்த கள்வர். கடலில் எழுந்த விடத்தை உண்ட கரிய கண்டத்தர். அப்பெருமான் நிலையாக விரும்பி வீற்றிருந்தருளும் வரையறுத்தலை உடையபதி சண்பைப்புல்லாலே அழகாகச் சூழப் பட்டதாகிய கடல்வளமும், வயல் வளமும் உடைய சண்பை நகராகும். 
4021 இலங்கை யரக்கர் தமக்கிறையே
யிடந்து கயிலை யெடுக்கிறையே
புலன்கள் கெடவுடன் பாடினனே
பொறிகள் கெடவுடன் பாடினனே
இலங்கிய மேனி யிராவணனே
யெய்து பெயரு மிராவணனே
கலந்தருள் பெற்றது மாவசியே
காழி யரனடி மாவசியே
3.113.10
இலங்கை அரக்கர்கட்கு அரசனான இராவணன் கயிலையைப் பெயர்த்து எடுக்க, இறைவன் திருப்பாத விரலை ஊன்றக் கயிலையின் கீழ் நடுக்குண்டு, இந்திரியங்கள் மயங்கச் சோர்ந்து தான் பிழைக்கும் வண்ணம் இறையருளை வேண்டி உடனே பாடினன். பழைய செருக்கு நீங்கி, பொறிகள் பக்தி நிலையில் செல்ல அவனுடைய பாடலுக்கு இறைவன் உடன்பட்டு அருளினன். இரவு போன்ற கரிய நிறத்தை உடைய அவன் கயிலைமலையின் கீழ் நடுக்குண்டு அழுததனால் உண்டான பெயரே இராவணன் என்பதாம். இறைவனின் அருளில் கலந்து அவன் பெற்றது சிறந்த வாளாயுதம். சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடி சிறந்த வசீகரத்தை உடையதாகும். 
4022 கண்ணிகழ் புண்டரி கத்தினனே
கலந்திரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரி சேனமதே
வானக மேய்வகை சேனமதே
நண்ணி யடிமுடி யெய்தலரே
நளிர்மலி சோலையி லெய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே
பசுமிக வூர்வர் பசுபதியே
3.113.11
தாமரை போன்ற கண்களையுடைய திருமாலும், அவனோடு சேர்ந்து திரிந்த உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும், பூமியைத் தோண்டும் பன்றியாகவும், வானத்தில் பறக்கும் பருந்தாகவும் அடி, முடி தேட முயன்று அடையாதவர் ஆயினர். குளிர்ச்சி மிக்க சோலைகளில் உள்ள மலர்கள் சிவபூசை பண்ணப் பயன்படத் திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார், உயிர்கட்கெல்லாம் தலைவரான பசுபதி எனப்படும் சிவபெருமான். அவர் ஆனேற்றில் ஏறுவதால் பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவார். 
4023 பருமதில் மதுரைமன் னவையெதிரே
பதிகம தெழுதிலை யவையெதிரே.
வருநதி யிடைமிசை வருகரனே
வசையொடு மலர்கெட வருகரனே
கருதலி லிசைமுர றருமருளே
கழுமல மமரிறை தருமருளே
மருவிய தமிழ்விர கனமொழியே
வல்லவர் தம்மிடம் திடமொழியே
3.113.12
பெரிய மதில்களையுடைய மதுரை நகரின்கண் அரசனது அவைமுன்னர்த், திருப்பதிகத்தை ஓலையில் எழுதி வைகை நதியின் மீது செலுத்த அதனை எதிர் நோக்கிச் செல்லுமாறு செய்த கரத்தையுடையவர் சிவபெருமான். அவர் சைவர்கட்கு வந்த பழியும், பழிதூற்றலும் கெடுமாறு சமணர்களை அழித்தவர். நினைக்கவும் முடியாதபடி சைவர்களின் புகழ் உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த வியப்பான செயல். திருக்கழுமலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனின் அருளே. அவ்வருளைப் பெற்ற முத்தமிழ் விரகரது பாடல்களை ஓதவல்லவர்கள் இடர் ஒழிதல் நிச்சயம். 
திருச்சிற்றம்பலம்

3.113.திருக்கழுமலம் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 

கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

4012 உற்றுமை சேர்வது மெய்யினையேஉணர்வது நின்னருண் மெய்யினையேகற்றவர் காய்வது காமனையேகனல்விழி காய்வது காமனையேஅற்ற மறைப்பது முன்பணியேஅமரர்கள் செய்வது முன்பணியேபெற்று முகந்தது கந்தனையேபிரம புரத்தை யுகந்தனையே3.113.1
இறைவரே! உமாதேவியார் பிரியாது பொருந்தி இருப்பது உம் திருமேனியையே. சிவஞானிகள் உணர்ந்து போற்றுவது உமது பேரருளையே. கற்றுணர்ந்த துறவிகள் வெறுப்பது மனைவி முதலிய குடும்பத்தையே. நெற்றிக்கண் எரித்தது மன்மதனையே. உமது திருமேனியை மறைப்பது பாம்பே. தேவர்கள் செய்வது உமது பணிவிடையே. நீர் பெற்றெடுத்து விரும்பி அணைத்தது முருகப் பெருமானையே. நீர் திருப்பிரமபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றீர். 

4013 சதிமிக வந்த சலந்தரனேதடிசிர நேர்கொள் சலந்தரனேஅதிரொளி சேர்திகி ரிப்படையாலமர்ந்தன ரும்பர்து திப்படையால்மதிதவழ் வெற்பது கைச்சிலையேமருவிட மேற்பது கைச்சிலையேவிதியினி லிட்டவி ரும்பரனேவேணு புரத்தை விரும்பரனே3.113.2
வஞ்சனை செய்து வந்தவன் சலந்தரன் என்னும் அசுரனே. அவன் தலையை வெட்டியவன் கங்கையைத் தாங்கிய அரன். கண்டவர்கள் நடுங்கத்தக்க ஒளிபொருந்திய சக்கராயுதத்தால் சலந்தனைக் கொல்லத் தேவர்கள் துதித்து மகிழ்ந்தனர். சந்திர மண்டலத்தை அளாவிய மேருமலை, கையிலேந்திய வில்லாம். பொருந்திய நஞ்சை உணவாக ஏற்பதில் வெறுத்திலீர். விதிக்கப்பட்ட அறவழியில் உலகவர் ஒழுகுவதில் விருப்பத்தையுடைய பெரிய மேலான கடவுளே. வேணுபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அரனே! 

4014 காதம ரத்திகழ் தோடினனேகானவ னாய்க்கடி தோடினனேபாதம தாற்கூற் றுதைத்தனனேபார்த்த னுடலம் புதைத்தனனேதாதவிழ் கொன்றை தரித்தனனேசார்ந்த வினைய தரித்தனனேபோத மமரு முரைப்பொருளேபுகலி யமர்ந்த பரம்பொருளே3.113.3
இறைவர் காதில் தோட்டை அணிந்தவர். வேடுவனாகி மிக விரைந்து சென்றவர். யமனைக் காலால் உதைத்தவர்.அர்ச்சுனனது உடலைக் கவசம் போல் மூடினவர். மகரந்தத்தோடு மலர்ந்த கொன்றையை அணிந்தவர். அன்பர்களின் வினைகளை அழித்தவர். சிவஞானக் கருத்தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவர். அவரே திருப்புகலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் பரம்பொருள். 

4015 மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமேமகிழ்ந்தரை சேர்வது மாசுணமேமெய்த்துடல் பூசுவர் மேன்மதியேவேதம தோதுவர் மேன்மதியேபொய்த்தலை யோடுறு மத்தமதேபுரிசடை வைத்தது மத்தமதேவித்தக ராகிய வெங்குருவேவிரும்பி யமர்ந்தனர் வெங்குருவே3.113.4
கருநிறமுடைய நஞ்சைக் கக்கும் பாம்பை மகிழ்ந்து இடுப்பில் அணிந்துள்ளவர். திருநீற்றினையே சந்தனம் போல் உடம்பில் பூசியவர். அவர் தலைமேல் விளங்குவது சந்திரனே. அவர் வேதம் அருளியது உயிர்கட்கு மேலான ஞானம் அருளவே. மண்டையோடு ஏந்தி மயானத்தில் விளங்குபவர். முறுக்குண்ட சடையில் அவர் அணிந்துள்ளது ஊமத்த மலரே. வித்தகராகிய அப்பெருமான் எம் குரு ஆவார். அவர் விரும்பி வீற்றிருந்தருளுவதும் திருவெங்குரு என்னும் திருத்தலமாகும். 

4016 உடன்பயில் கின்றனன் மாதவனேஉறுபொறி காய்ந்திசை மாதவனேதிடம்பட மாமறை கண்டனனேதிரிகுண மேவிய கண்டனனேபடங்கொ ளரவரை செய்தனனேபகடுரி கொண்டரை செய்தனனேதொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனேதோணி புரத்துறை நஞ்சிவனே3.113.5
இறைவனே! திருமாலைத் தம்முடன் இடப்பாகத்தில் இருக்கும்படி செய்கின்றவர். தம்வழிச் செல்லும் இயல்புடைய இந்திரியங்களை அடக்கும் பெரிய தவம் செய்தவர். உறுதி பயக்கும் சிறந்த வேதங்களை அருளியவர். முக்குண வயப்பட்டுச் செய்த புறச்சமயக் கொள்கைகளைக் கண்டனம் செய்பவர். படமெடுக்கும் பாம்பை இடுப்பில் அணிந்தவர். யானையின் தோலை உரித்து அதைக் கொன்றவர். தொடர்ந்த துன்பங்களை அழிப்பதில் இவர் விடம் போன்றவர். இவரே திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் நம் சிவபெருமான் ஆவார். 

4017 திகழ்கைய தும்புகை தங்கழலேதேவர் தொழுவதுந் தங்கழலேஇகழ்பவர் தாமொரு மானிடமேயிருந்தனு வோடெழின் மானிடமேமிகவரு நீர்கொளு மஞ்சடையேமின்னிகர் கின்றது மஞ்சடையேதகவிர தங்கொள்வர் சுந்தரரேதக்க தராயுறை சுந்தரரே3.113.6
இறைவன் அழகிய கையில் ஏந்தியுள்ளது புகைகொண்டு எழும் நெருப்பே. தேவர்கள் போற்றுவது அவருடைய திருக்கழல்களையே. தம்மை இகழ்ந்த தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை இடக்கரத்தில் எந்தியுள்ளார். பக்குவான்மாக்கட்கு ஞானோபதேசம் செய்ய அவர் காட்சி தந்தது மானிட உடம்பில். பெருக்கெடுக்கும் கங்கையைத் தாங்கியது அழகிய சடையிலே. மின்னலைப் போன்று ஒளிரும் அழகிய சடையை உடையவர். தகுந்த விரதம் கொள்ளும் சுந்தர வடிவினர். அவர் எக்காலத்திலும் அழியாது நிலைத்து நிற்கும் பூந்தராய் என்னும் திருப்பதியில் வீற்றிருந்தருளும் அழகர். 

4018 ஓர்வரு கண்க ளிணைக்கயலேயுமையவள் கண்க ளிணைக்கழலேஏர்மரு வுங்கழ னாகமதேயெழில்கொளு தாசன நாகமதேநீர்வரு கொந்தள கங்கையதேநெடுஞ்சடை மேவிய கங்கையதேசேர்வரு யோக தியம்பகனேசிரபுர மேய தியம்பகனே3.113.7
இறைவனையும், அடியாரையும் காணாத கண்கள் புறம்பானவை. உமாதேவியின் கண்கள் இரு கயல்மீன்கட்கு ஒப்பானவை. அழகிய திருவடிகளில் கட்டியிருப்பது நாகத்தையே. அவருடைய திருமேனியானது நெருப்பு வண்ணம் உடையது நீர்மயமான கொத்தான கூந்தல் ஒழுங்காய் உள்ளது. நெடுஞ்சடையில் தங்கியுள்ளது, கங்கையே. சேர்தற்கரிய யோகநிலையைக் காட்டிய மூன்று கண்களையுடையவரே. நெருப்பாகிய அம்பைக் கையின் இடத்துக்கொண்டு சிரபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார். 

4019 ஈண்டு துயிலம ரப்பினனேயிருங்க ணிடந்தடி யப்பினனேதீண்டல ரும்பரி சக்கரமேதிகழ்ந்தொளி சேர்வது சக்கரமேவேண்டி வருந்த நகைத்தலையேமிகைத்தவ ரோடு நகைத்தலையேபூண்டனர் சேர லுமாபதியேபுறவ மமர்ந்த வுமாபதியே3.113.8
பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால், தமது பெரிய கண்ணைத் தோண்டிச் சிவபெருமானின் திருவடிகளில் அர்ச்சித்தனர். தீண்டுதற்கரிய தன்மையுடைய அந்தக் கரத்தில் ஒளியுடையதாய் விளங்குவது சக்கரமே. தாருகாவனத்து முனிவர்கள் விரும்பி யாகம் செய்து சிரமப்படச் சிவனைக் கொல்ல வந்தது நகுவெண்டலை. அம்முனிவர்களைப் பரிகசிப்பது போல வெண்டலைகளை மாலையாக அணிந்து கொண்டனர். அவர் சேர்வது எவற்றிலும் சிறந்த அடியார் உள்ளமாகிய இடமாம். புறவம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் அந்த உமாபதியே ஆவார். 

4020 நின்மணி வாயது நீழலையேநேசம தானவர் நீழலையேஉன்னி மனத்தெழு சங்கமதேயொளியத னோடுறு சங்கமதேகன்னிய ரைக்கவ ருங்களனேகடல்விட முண்டக ருங்களனேமன்னிவ ரைப்பதி சண்பையதேவாரி வயன்மலி சண்பையதே3.113.9
சிவபெருமானே! மணிகட்டிய உன் கோயில் வாசலின் நிழலையே அருளிடமாகக் கொண்ட நேசமுடைய அடியவர்களிடமிருந்து நீங்கமாட்டாய். அவர்களின் அடிச்சுவட்டை எண்ணி. மனத்தில் தொழுகின்ற அடியவர்கள் விளங்குகின்ற இடமே அடியவர் திருக்கூட்டம் எனத்தகும். அவர் தாருகாவனத்தில் வாழும் மகளிர் உள்ளத்தைக் கவர்ந்த கள்வர். கடலில் எழுந்த விடத்தை உண்ட கரிய கண்டத்தர். அப்பெருமான் நிலையாக விரும்பி வீற்றிருந்தருளும் வரையறுத்தலை உடையபதி சண்பைப்புல்லாலே அழகாகச் சூழப் பட்டதாகிய கடல்வளமும், வயல் வளமும் உடைய சண்பை நகராகும். 

4021 இலங்கை யரக்கர் தமக்கிறையேயிடந்து கயிலை யெடுக்கிறையேபுலன்கள் கெடவுடன் பாடினனேபொறிகள் கெடவுடன் பாடினனேஇலங்கிய மேனி யிராவணனேயெய்து பெயரு மிராவணனேகலந்தருள் பெற்றது மாவசியேகாழி யரனடி மாவசியே3.113.10
இலங்கை அரக்கர்கட்கு அரசனான இராவணன் கயிலையைப் பெயர்த்து எடுக்க, இறைவன் திருப்பாத விரலை ஊன்றக் கயிலையின் கீழ் நடுக்குண்டு, இந்திரியங்கள் மயங்கச் சோர்ந்து தான் பிழைக்கும் வண்ணம் இறையருளை வேண்டி உடனே பாடினன். பழைய செருக்கு நீங்கி, பொறிகள் பக்தி நிலையில் செல்ல அவனுடைய பாடலுக்கு இறைவன் உடன்பட்டு அருளினன். இரவு போன்ற கரிய நிறத்தை உடைய அவன் கயிலைமலையின் கீழ் நடுக்குண்டு அழுததனால் உண்டான பெயரே இராவணன் என்பதாம். இறைவனின் அருளில் கலந்து அவன் பெற்றது சிறந்த வாளாயுதம். சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடி சிறந்த வசீகரத்தை உடையதாகும். 

4022 கண்ணிகழ் புண்டரி கத்தினனேகலந்திரி புண்டரி கத்தினனேமண்ணிக ழும்பரி சேனமதேவானக மேய்வகை சேனமதேநண்ணி யடிமுடி யெய்தலரேநளிர்மலி சோலையி லெய்தலரேபண்ணியல் கொச்சை பசுபதியேபசுமிக வூர்வர் பசுபதியே3.113.11
தாமரை போன்ற கண்களையுடைய திருமாலும், அவனோடு சேர்ந்து திரிந்த உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும், பூமியைத் தோண்டும் பன்றியாகவும், வானத்தில் பறக்கும் பருந்தாகவும் அடி, முடி தேட முயன்று அடையாதவர் ஆயினர். குளிர்ச்சி மிக்க சோலைகளில் உள்ள மலர்கள் சிவபூசை பண்ணப் பயன்படத் திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார், உயிர்கட்கெல்லாம் தலைவரான பசுபதி எனப்படும் சிவபெருமான். அவர் ஆனேற்றில் ஏறுவதால் பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவார். 

4023 பருமதில் மதுரைமன் னவையெதிரேபதிகம தெழுதிலை யவையெதிரே.வருநதி யிடைமிசை வருகரனேவசையொடு மலர்கெட வருகரனேகருதலி லிசைமுர றருமருளேகழுமல மமரிறை தருமருளேமருவிய தமிழ்விர கனமொழியேவல்லவர் தம்மிடம் திடமொழியே3.113.12
பெரிய மதில்களையுடைய மதுரை நகரின்கண் அரசனது அவைமுன்னர்த், திருப்பதிகத்தை ஓலையில் எழுதி வைகை நதியின் மீது செலுத்த அதனை எதிர் நோக்கிச் செல்லுமாறு செய்த கரத்தையுடையவர் சிவபெருமான். அவர் சைவர்கட்கு வந்த பழியும், பழிதூற்றலும் கெடுமாறு சமணர்களை அழித்தவர். நினைக்கவும் முடியாதபடி சைவர்களின் புகழ் உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த வியப்பான செயல். திருக்கழுமலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனின் அருளே. அவ்வருளைப் பெற்ற முத்தமிழ் விரகரது பாடல்களை ஓதவல்லவர்கள் இடர் ஒழிதல் நிச்சயம். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.