LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-85

 

3.085.திருவீழிமிழலை 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீழியழகர். 
தேவியார் - சுந்தரகுசாம்பிகை. 
3712 மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழன்
மடவரல்
பட்டொளி மணியல்கு லுமையமை யுருவொரு
பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை
முடிமிசை
விட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி
மிழலையே
3.085.1
மலர் விரிய நறுமணம் கமழும், நௌந்த கூந்தலையுடையளாய், மடமைப் பண்புடைய பெண்ணானவளாய், பட்டாடையில் ஒளிமிக்க மேகலா பரணத்தை அணிந்தவளான உமா தேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான், சடைமுடியின்கண் கட்டப்பட்டு விளங்கும் பிரகாசிக்கின்ற கங்கைநீரோடு, கடிக்கும் பாம்புசேர வசிக்கின்ற சடைமுடியில் விட்டுவிட்டுப் பிரகாசிக்கும், தேய்ந்த கலைகளையுடைய சந்திரனையும் அணிந்து வீற்றிருந்தருளும் பதி திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 
3713 எண்ணிற வரிவளை நெறிகுழ லெழின்மொழி
யிளமுலைப்
பெண்ணுறு முடலினர் பெருகிய கடல்விட
மிடறினர்
கண்ணுறு நுதலினர் கடியதொர் விடையினர்
கனலினர்
விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி
மிழலையே
3.085.2
சிவபெருமான், எண்ணற்ற வரிகளையுடைய வளையல்களையும், சுருண்ட கூந்தலையும் அழகிய மொழியையும், இளமுலைகளையும் உடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர். பெருகித் தோன்றிய கடல் விடமுண்ட கண்டத்தினர். நெற்றிக் கண்ணையுடையவர். விரைந்து நடக்கும் இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்பேந்திய கையினர். விண்ணில் திகழும் பிறைச்சந்திரனை அணிந்த சடையினர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி, திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 
3714 மைத்தகு மதர்விழி மலைமக ளுருவொரு
பாகமா
வைத்தவர் மதகிரி யுரிவைசெய் தவர்தமை
மருவினார்
தெத்தென விசைமுரல் சரிதையர் திகழ்தரு
மரவினர்
வித்தக நகுதலை யுடையவ ரிடம்விழி
மிழலையே
3.085.3
மை பூசிய அழகிய விழிகளையுடைய உமாதேவியை, சிவபெருமான் தம் உடம்பின் இடப்பாகமாக வைத்தவர். மதம் பிடித்த யானையின் தோலை உரித்தவர். தம்மை அடைந்தவர் தாளத்துடன் இசைபாடுகின்ற புகழையுடையவர். பாம்பை அணிந்தவர். அதிசயமான மண்டையோட்டைக் கொண்டவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 
3715 செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர்
செறிதரு
கவ்வழ லரவினர் கதிர்முதிர் மழுவினர்
தொழுவிலா
முவ்வழ னிசிசரர் விறலவை யழிதர 
முதுமதிள்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி
மிழலையே
3.085.4
சிவபெருமான் செந்நிறமான அழல்போன்ற மேனியுடையவர். நெருப்புப் போன்று விடமுடைய, கவ்வும் தன்மையுடைய பாம்பை அரையில் கச்சாக இறுக்கமாகக் கட்டியவர். சுடர் விடும் மழுப்படை உடையவர். தம்மைத் தொழாத, பகைமையுடைய, சினம் மிகுந்த மூன்று அசுரர்களின் வலிமை அழியுமாறு அவர்களின் மதில்களை எரியுண்ணும்படி மிகவும் கோபித்தவர். அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 
3716 பைங்கண தொருபெரு மழலைவெ ளேற்றினர்
பலியெனா
எங்கணு முழிதர்வ ரிமையவர் தொழுதெழு
மியல்பினர்
அங்கண ரமரர்க ளடியிணை தொழுதெழ
வாரமா
வெங்கண வரவின ருறைதரு பதிவிழி
மிழலையே
3.085.5
பசிய கண்களையும், சிறு முழக்கத்தையுமுடைய பெரிய வெண்ணிற இடபத்தைச் சிவபெருமான் வாகனமாகக் கொண்டவர். எல்லா இடங்களிலும் பிச்சை ஏற்றுத் திரிபவர். தேவர்களால் தொழப்படும் தன்மையர். தேவர்கள் தொழுது எழும் இயல்பினராகிய அடியவர்களாலும் தொழுது போற்றப்படுபவர். கொடிய கண்ணையுடைய பாம்பை அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 
3717 பொன்னன புரிதரு சடையினர் பொடியணி
வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை மருவிய
வொருவனார்
தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு
மார்பினில்
மின்னென மிளிர்வதொ ரரவினர் பதிவிழி
மிழலையே
3.085.6
இறைவன் பொன்போன்று ஒளிரும் முறுக்கேறிய சடைமுடி உடையவர். திருவெண்ணீறு அணிந்த திருமேனியர். தம்மை நினைந்து போற்றும் அடியவர்களின் வினைகளை வேரோடு களைந்து அருள்புரியும் ஒப்பற்றவர். இனிய இசையுடன் போற்றப் படும் புகழையுடையவர். அழகிய திருமார்பில் மின்னலைப் போல் ஒளிரும் பாம்பணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதி, திருவீழி மிழலை என்னும் திருத்தலமாகும். 
3718 அக்கினொ டரவரை யணிதிக ழொளியதொ
ராமைபூண்
டிக்குக மலிதலை கலனென விடுபலி
யேகுவர்
கொக்கரை குழன்முழ விழவொடு மிசைவதொர்
சரிதையர்
மிக்கவ ருறைவது விரைகமழ் பொழில்விழி
மிழலையே
3.085.7
சிவபெருமான், அக்குப்பாசியோடு பாம்பையும் அரையில் அணிந்தவர். ஒளிரும் ஆமையோட்டை மார்பில் பூண்டவர். கரும்பின் சுவை போன்று இனிய மொழிகளைப்பேசி, தம் கையில் நீங்காது பொருந்திய மண்டையோடாகிய பாத்திரத்தில் இடப்படுகின்ற பிச்சையை ஏற்பவர். கொக்கரை, குழல், முழவு முதலான வாத்தியங்கள் இசைக்க, நிகழும் விழாக்களில் அடியார் செய்யும் சிறப்புக்களை ஏற்று மகிழும் பண்பினர். தம்மினும் மிக்கவரில்லையாக மேம்பட்ட அப்பெருமான் வீற்றிருந்தருளுவது நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 
3719 பாதமொர் விரலுற மலையடர் பலதலை
நெரிதரப்
பூதமொ டடியவர் புனைகழ றொழுதெழு
புகழினர்
ஓதமொ டொலிதிரை படுகடல் விடமுடை
மிடறினர்
வேதமொ டுறுதொழின் மதியவர் பதிவிழி
மிழலையே
3.085.8
தம் பாதத்திலுள்ள ஒரு விரலை ஊன்றி, கயிலை மலையின்கீழ் இராவணனின் பத்துத் தலைகளும் நெரியும்படி செய்தவர். பூதகணங்களும் அடியவர்களும் தம்முடைய அழகிய திருவடிகளைத் தொழுது போற்றத்தக்க புகழையுடையவர். ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர். அச்சிவபெருமான் வீற்றிருந் தருளும் பதியாவது, வேதம் ஓதுதலுடன், தமக்குரிய ஆறு தொழில்களையும் செய்கின்ற அறிஞர்களாகிய அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 
3720 நீரணி மலர்மிசை யுறைபவ னிறைகட
லுறுதுயில்
நாரண னெனவிவ ரிருவரு நறுமல
ரடிமுடி
ஓருணர் வினர்செல லுறலரு முருவினொ
டொளிதிகழ்
வீரண ருறைவது வெறிகமழ் பொழில்விழி
மிழலையே
3.085.9
நீரில் விளங்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், நிறைந்த நீருடைய கடலில் துயிலும் திருமாலும் ஆகிய இவர்கள் இருவரும் இறைவனின் நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடியையும், மலரணிந்த திருமுடியையும் காண வேண்டும் என்ற ஒரே உணர்வினராய்ச் சென்றும், காணற்கு அரியவராய்ப் பேரொளியாய் ஓங்கி நின்ற வீரம் பொருந்திய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 
3721 இச்சைய ரினிதென இடுபலி படுதலை
மகிழ்வதோர்
பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவென
வுணர்விலர்
மொச்சைய வமணரு முடைபடு துகிலரு
மழிவதோர்
விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி
மிழலையே
3.085.10
பிரமனின் மண்டையோட்டில் இடப்படுகின்ற பிச்சையை இனிதென ஏற்கும் விருப்பமுடைய சிவபெருமானின் பெருமையைச் சிறிதும் அறியும் உணர்வில்லாதவர்கள் சமணர்களும், புத்தர்களும் ஆவர். நீராடாமையால் துர்நாற்றத்தை உடைய சமணர்களும், துவைத்து உடுத்தாமையால் முடைநாற்றமுடைய திருச்சிற்றம்பலம் ஆடையைப் போர்ப்பவர்களாகிய புத்தர்களும் அழிவதற்குக் காரணமான வித்தை செய்பவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நறுமணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 
3722 உன்னிய வருமறை யொலியினை முறைமிகு
பாடல்செய்
இன்னிசை யவருறை யெழிறிகழ் பொழில்விழி
மிழலையை
மன்னிய புகலியுண் ஞானசம் பந்தன
வண்டமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி
பெறுவரே
3.085.11
இறைவன் அருளிச்செய்ததாகக் கருதப்படும் அருமறையின் ஒலியினை முறையாக இசையோடு பாடிப் போற்றும் அந்தணர்கள் வசிக்கின்றதும், அழகிய சோலைகள் விளங்குவதுமான திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தைப் போற்றி, நிலைபெற்ற புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் வண்தமிழால் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் இம்மையில் துயரற்றவராவர். மறுமையில் வீடுபேறடைவர். 
திருச்சிற்றம்பலம்

3.085.திருவீழிமிழலை 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீழியழகர். தேவியார் - சுந்தரகுசாம்பிகை. 

3712 மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழன்மடவரல்பட்டொளி மணியல்கு லுமையமை யுருவொருபாகமாக்கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறைமுடிமிசைவிட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழிமிழலையே3.085.1
மலர் விரிய நறுமணம் கமழும், நௌந்த கூந்தலையுடையளாய், மடமைப் பண்புடைய பெண்ணானவளாய், பட்டாடையில் ஒளிமிக்க மேகலா பரணத்தை அணிந்தவளான உமா தேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான், சடைமுடியின்கண் கட்டப்பட்டு விளங்கும் பிரகாசிக்கின்ற கங்கைநீரோடு, கடிக்கும் பாம்புசேர வசிக்கின்ற சடைமுடியில் விட்டுவிட்டுப் பிரகாசிக்கும், தேய்ந்த கலைகளையுடைய சந்திரனையும் அணிந்து வீற்றிருந்தருளும் பதி திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 

3713 எண்ணிற வரிவளை நெறிகுழ லெழின்மொழியிளமுலைப்பெண்ணுறு முடலினர் பெருகிய கடல்விடமிடறினர்கண்ணுறு நுதலினர் கடியதொர் விடையினர்கனலினர்விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழிமிழலையே3.085.2
சிவபெருமான், எண்ணற்ற வரிகளையுடைய வளையல்களையும், சுருண்ட கூந்தலையும் அழகிய மொழியையும், இளமுலைகளையும் உடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர். பெருகித் தோன்றிய கடல் விடமுண்ட கண்டத்தினர். நெற்றிக் கண்ணையுடையவர். விரைந்து நடக்கும் இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்பேந்திய கையினர். விண்ணில் திகழும் பிறைச்சந்திரனை அணிந்த சடையினர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி, திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 

3714 மைத்தகு மதர்விழி மலைமக ளுருவொருபாகமாவைத்தவர் மதகிரி யுரிவைசெய் தவர்தமைமருவினார்தெத்தென விசைமுரல் சரிதையர் திகழ்தருமரவினர்வித்தக நகுதலை யுடையவ ரிடம்விழிமிழலையே3.085.3
மை பூசிய அழகிய விழிகளையுடைய உமாதேவியை, சிவபெருமான் தம் உடம்பின் இடப்பாகமாக வைத்தவர். மதம் பிடித்த யானையின் தோலை உரித்தவர். தம்மை அடைந்தவர் தாளத்துடன் இசைபாடுகின்ற புகழையுடையவர். பாம்பை அணிந்தவர். அதிசயமான மண்டையோட்டைக் கொண்டவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 

3715 செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர்செறிதருகவ்வழ லரவினர் கதிர்முதிர் மழுவினர்தொழுவிலாமுவ்வழ னிசிசரர் விறலவை யழிதர முதுமதிள்வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழிமிழலையே3.085.4
சிவபெருமான் செந்நிறமான அழல்போன்ற மேனியுடையவர். நெருப்புப் போன்று விடமுடைய, கவ்வும் தன்மையுடைய பாம்பை அரையில் கச்சாக இறுக்கமாகக் கட்டியவர். சுடர் விடும் மழுப்படை உடையவர். தம்மைத் தொழாத, பகைமையுடைய, சினம் மிகுந்த மூன்று அசுரர்களின் வலிமை அழியுமாறு அவர்களின் மதில்களை எரியுண்ணும்படி மிகவும் கோபித்தவர். அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 

3716 பைங்கண தொருபெரு மழலைவெ ளேற்றினர்பலியெனாஎங்கணு முழிதர்வ ரிமையவர் தொழுதெழுமியல்பினர்அங்கண ரமரர்க ளடியிணை தொழுதெழவாரமாவெங்கண வரவின ருறைதரு பதிவிழிமிழலையே3.085.5
பசிய கண்களையும், சிறு முழக்கத்தையுமுடைய பெரிய வெண்ணிற இடபத்தைச் சிவபெருமான் வாகனமாகக் கொண்டவர். எல்லா இடங்களிலும் பிச்சை ஏற்றுத் திரிபவர். தேவர்களால் தொழப்படும் தன்மையர். தேவர்கள் தொழுது எழும் இயல்பினராகிய அடியவர்களாலும் தொழுது போற்றப்படுபவர். கொடிய கண்ணையுடைய பாம்பை அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 

3717 பொன்னன புரிதரு சடையினர் பொடியணிவடிவினர்உன்னினர் வினையவை களைதலை மருவியவொருவனார்தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தருமார்பினில்மின்னென மிளிர்வதொ ரரவினர் பதிவிழிமிழலையே3.085.6
இறைவன் பொன்போன்று ஒளிரும் முறுக்கேறிய சடைமுடி உடையவர். திருவெண்ணீறு அணிந்த திருமேனியர். தம்மை நினைந்து போற்றும் அடியவர்களின் வினைகளை வேரோடு களைந்து அருள்புரியும் ஒப்பற்றவர். இனிய இசையுடன் போற்றப் படும் புகழையுடையவர். அழகிய திருமார்பில் மின்னலைப் போல் ஒளிரும் பாம்பணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதி, திருவீழி மிழலை என்னும் திருத்தலமாகும். 

3718 அக்கினொ டரவரை யணிதிக ழொளியதொராமைபூண்டிக்குக மலிதலை கலனென விடுபலியேகுவர்கொக்கரை குழன்முழ விழவொடு மிசைவதொர்சரிதையர்மிக்கவ ருறைவது விரைகமழ் பொழில்விழிமிழலையே3.085.7
சிவபெருமான், அக்குப்பாசியோடு பாம்பையும் அரையில் அணிந்தவர். ஒளிரும் ஆமையோட்டை மார்பில் பூண்டவர். கரும்பின் சுவை போன்று இனிய மொழிகளைப்பேசி, தம் கையில் நீங்காது பொருந்திய மண்டையோடாகிய பாத்திரத்தில் இடப்படுகின்ற பிச்சையை ஏற்பவர். கொக்கரை, குழல், முழவு முதலான வாத்தியங்கள் இசைக்க, நிகழும் விழாக்களில் அடியார் செய்யும் சிறப்புக்களை ஏற்று மகிழும் பண்பினர். தம்மினும் மிக்கவரில்லையாக மேம்பட்ட அப்பெருமான் வீற்றிருந்தருளுவது நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 

3719 பாதமொர் விரலுற மலையடர் பலதலைநெரிதரப்பூதமொ டடியவர் புனைகழ றொழுதெழுபுகழினர்ஓதமொ டொலிதிரை படுகடல் விடமுடைமிடறினர்வேதமொ டுறுதொழின் மதியவர் பதிவிழிமிழலையே3.085.8
தம் பாதத்திலுள்ள ஒரு விரலை ஊன்றி, கயிலை மலையின்கீழ் இராவணனின் பத்துத் தலைகளும் நெரியும்படி செய்தவர். பூதகணங்களும் அடியவர்களும் தம்முடைய அழகிய திருவடிகளைத் தொழுது போற்றத்தக்க புகழையுடையவர். ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர். அச்சிவபெருமான் வீற்றிருந் தருளும் பதியாவது, வேதம் ஓதுதலுடன், தமக்குரிய ஆறு தொழில்களையும் செய்கின்ற அறிஞர்களாகிய அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 

3720 நீரணி மலர்மிசை யுறைபவ னிறைகடலுறுதுயில்நாரண னெனவிவ ரிருவரு நறுமலரடிமுடிஓருணர் வினர்செல லுறலரு முருவினொடொளிதிகழ்வீரண ருறைவது வெறிகமழ் பொழில்விழிமிழலையே3.085.9
நீரில் விளங்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், நிறைந்த நீருடைய கடலில் துயிலும் திருமாலும் ஆகிய இவர்கள் இருவரும் இறைவனின் நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடியையும், மலரணிந்த திருமுடியையும் காண வேண்டும் என்ற ஒரே உணர்வினராய்ச் சென்றும், காணற்கு அரியவராய்ப் பேரொளியாய் ஓங்கி நின்ற வீரம் பொருந்திய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 

3721 இச்சைய ரினிதென இடுபலி படுதலைமகிழ்வதோர்பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவெனவுணர்விலர்மொச்சைய வமணரு முடைபடு துகிலருமழிவதோர்விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழிமிழலையே3.085.10
பிரமனின் மண்டையோட்டில் இடப்படுகின்ற பிச்சையை இனிதென ஏற்கும் விருப்பமுடைய சிவபெருமானின் பெருமையைச் சிறிதும் அறியும் உணர்வில்லாதவர்கள் சமணர்களும், புத்தர்களும் ஆவர். நீராடாமையால் துர்நாற்றத்தை உடைய சமணர்களும், துவைத்து உடுத்தாமையால் முடைநாற்றமுடைய திருச்சிற்றம்பலம் ஆடையைப் போர்ப்பவர்களாகிய புத்தர்களும் அழிவதற்குக் காரணமான வித்தை செய்பவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நறுமணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். 

3722 உன்னிய வருமறை யொலியினை முறைமிகுபாடல்செய்இன்னிசை யவருறை யெழிறிகழ் பொழில்விழிமிழலையைமன்னிய புகலியுண் ஞானசம் பந்தனவண்டமிழ்சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதிபெறுவரே3.085.11
இறைவன் அருளிச்செய்ததாகக் கருதப்படும் அருமறையின் ஒலியினை முறையாக இசையோடு பாடிப் போற்றும் அந்தணர்கள் வசிக்கின்றதும், அழகிய சோலைகள் விளங்குவதுமான திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தைப் போற்றி, நிலைபெற்ற புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் வண்தமிழால் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் இம்மையில் துயரற்றவராவர். மறுமையில் வீடுபேறடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.