LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

முதல் திருமுறை-69

 

1.069.திரு அண்ணாமலை 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
இது நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர். 
தேவியார் - உண்ணாமுலையம்மை. 
743 பூவார்மலர்கொண் டடியார்தொழுவார்
புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்க ளெரித்தவன்று
மூவர்க் கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித்
தொறுவின் னிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல்
அண்ணா மலையாரே.
1.069.1
நீர்த்துளிகளைத் தூவும் கரிய மேகங்கள் வானத்தில் நின்றவாறு இடி முழக்கத்தைச்செய்ய, அதனைக் கேட்டு அஞ்சியகாட்டுப் பசுக்களின் மந்தைகளான வரிசைகள் வந்து ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை இறைவர், அடியவர்கள் பொலிவுமிக்க நறுமலர்களைத் தூவி வழிபடவும், வானோர்கள் புகழ்ந்து போற்றவும், அழியா வரம் பெற்ற அசுரர்களின் முப்புரங்களை எரித்து அழித்து அவ்வசுரர்களில் மூவர்க்கு அருளையும் வழங்கிய பெருமையுடையவர். 
744 மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும்
வானோர் பெருமானார்
நஞ்சைக்கண்டத் தடக்குமதுவு
நன்மைப் பொருள்போலும்
வெஞ்சொற்பேசும் வேடர்மடவா
ரிதண மதுவேறி
அஞ்சொற்கிளிக ளாயோவென்னும்
அண்ணா மலையாரே.
1.069.2
குத்து வெட்டு முதலிய கொடிய சொற்களையே பேசும் வேடர்களின் பெண்கள் தினைப்புனங்களில் பரண்மீது ஏறியிருந்து தினைகவர வரும் அழகிய சொற்களைப் பேசும் கிளிகளை ஆயோ என ஒலியெழுப்பி ஓட்டும் திருவண்ணாமலை இறைவர், மேகங்களைக் கிழித்துச் செல்லும் பிறைமதியை முடியிற்சூடும் வானவர் தலைவர். கடலிடைத் தோன்றிய நஞ்சையுண்டு கண்டத்தில் அடக்கியவர். இச்செயல் உலகத்தை அழியாது காக்கும் நன்மை கருதியதேயாகும். 
745 ஞானத்திரளாய் நின்றபெருமா
னல்ல வடியார்மேல்
ஊனத்திரளை நீக்குமதுவு
முண்மைப் பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி
யிழியு மிரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல்
அண்ணா மலையாரே.
1.069.3
இராப்போதில் பன்றிகளின் கூட்டமும், மான் இனங்களும், கரடிகளும், ஒருங்கே இறங்கிவரும் மலைச்சாரலில் யானைகளின் கூட்டமும் வந்தணையும் திருவண்ணாமலை இறைவர், ஞானப் பிழம்பாய் நிற்பவர். நன்மைகளையே கருதும் அடியவர்கள் ஊனுடலோடு பிறக்கும் பிறவிகளை நீக்குபவர். இவ்வருட்செயல் வேதாகம நூல்கள் உணர்த்தும் உண்மைப் பொருளாகும். 
746 இழைத்தவிடையா ளுமையாள்பங்க
ரிமையோர் பெருமானார்
தழைத்தசடையார் விடையொன்றேறித்
தரியார் புரமெய்தார்
பிழைத்தபிடியைக் காணாதோடிப்
பெருங்கை மதவேழம்
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல்
அண்ணா மலையாரே.
1.069.4
தன்னைவிட்டுப் பிரிந்த பெண் யானையைக் காணாத பெரிய கையை உடைய மதம் பொருந்திய ஆண் யானை, குரல் கொடுத்து அழைத்துத் திரிந்து அலுத்து உறங்கும் சாரலை உடைய திருவண்ணாமலை இறைவர், நூல் போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவர். விடைமீது ஏறிச் சென்று பகைவரின் முப்புரங்களை எரித்தவர். 
747 உருவிற்றிகழு முமையாள்பங்க
ரிமையோர் பெருமானார்
செருவில்லொருகால் வளையவூன்றிச்
செந்தீ யெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த
பருமா மணிமுத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல்
அண்ணா மலையாரே.
1.069.5
பெரிய வில்லை ஏந்திய குறவர்கள் விளைநில வரப்புக்களில் குவித்து வைத்திருந்த பெரிய முத்துக்களும் மணிகளும் அருவித்திரள்களின் வழியே நிலத்தில் வந்து இழியும் திருவண்ணாமலை இறைவர், உருவத்தால் அழகிய உமையவளை ஒருபாகமாகக் கொண்டவர். இமையவர்கட்குத் தலைவர். பெரிய போர்வில்லை ஒரு காலால் ஊன்றிக்கொண்டு வளைத்துக் கணை எய்து முப்புரங்களும் செந்தீயால் அழிந்து விழுமாறு செய்தவர். 
748 எனைத்தோரூழி யடியாரேத்த
விமையோர் பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும்
நிமல ருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன்
கைம்மேற் குழலூத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல்
அண்ணா மலையாரே.
1.069.6
மலைச்சாரலில் புல் மேய்க்கச் சென்ற ஆயன்கனைத்து மேய்ந்த தம் எருமைகளைக் காணாதவனாய்த் தன் கையிலிருந்த வேய்ங்குழலை ஊத அவ்வளவில் அனைத்தெருமைகளும் வீடு திரும்பும் விருப்போடு ஒன்று திரளும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை, அடியவர்கள் தன்னைத் துதிக்க இமையவர் தலைவனாய்ப் பல்லூழிக் காலங்களைக் கண்ட பழையோனாய் விளங்கும் தன்னை நினைத்துத் தொழும் அன்பர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் நிமலனாய் விளங்கும் அப்பெரியோனின் கோயிலாக விளங்குவது ஆகும். 
749 வந்தித்திருக்கு மடியார்தங்கள்
வருமேல் வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும்
பரம னுறைகோயில்
முந்தியெழுந்த முழவினோசை
முதுகல் வரைகண்மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல்
அண்ணா மலையாரே.
1.069.7
விழா நிகழ்ச்சிகளை முன்னதாக அறிவித்தெழும் முழவின் ஓசை இடையறாது கேட்பதும், பழமையான மலைப் பாறைகளுக்கு இடையே அந்திக்காலத்துப் பிறை வந்து அணைவதுமாகிய திருவண்ணாமலையில் விளங்கும் இறைவன் தன்னை வழிபட்டு வேறு நினைவின்றி இருக்கும் அடியவர்களின் ஆகாமிய வினைகளோடு அவர்களைப் பந்தித்திருக்கும் பாவங்களையும் போக்கியருளும் பரமனாவான். அவனது கோயில் திருவண்ணாமலையாகும். 
750 மறந்தான்கருதி வலியைநினைந்து
மாறா யெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெரியவூன்றி
நிறைய வருள்செய்தார்
திறந்தான்காட்டி யருளாயென்று
தேவ ரவர்வேண்ட
அறந்தான்காட்டி யருளிச்செய்தார்
அண்ணா மலையாரே.
1.069.8
தனது வலிமையை வெளிப்படுத்தித் திரிபுர அசுரர்களை அழித்து அருள்புரியுமாறு தேவர்கள் வேண்ட, தீயவரை ஒறுப்பது அறநெறியின் பாற்பட்டதாதலை உணர்த்தும் நிலையில் அசுரர்களை அழித்துத் தேவர்கட்கு அருள்செய்த பெருமானாகிய திருவண்ணாமலை இறைவன், தன் வலிமையையும், பெற்ற வெற்றிகளையும் பெரிதாக எண்ணியவனாய்த் தனக்கு மாறாகத் தான் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் மார்பு தோள் ஆகியனவற்றை நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவ்விராவணன் வேண்ட அவனுக்கு அருள் செய்த மேம்பாடுடையவனாவன். 
751 தேடிக்காணார் திருமால்பிரமன்
றேவர் பெருமானை
மூடியோங்கி முதுவேயுகுத்த
முத்தம் பலகொண்டு
கூடிக்குறவர் மடவார்குவித்துக்
கொள்ள வம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல்
அண்ணா மலையாரே.
1.069.9
மலையை மூடி ஓங்கி வளர்ந்த பழமையான மூங்கில் மரங்கள் உகுத்த முத்துக்கள் பலவற்றைக் குறவர்குலப் பெண்கள் ஓரிடத்தே குவித்து வைத்து அவற்றை வாங்கிட வருக என மக்களை அழைத்து ஆடிப்பாடி அவர்களுக்கு அளந்து அளிக்கும் திருவண்ணாமலை இறைவனாகிய தேவர் பெருமானைத் திருமால் பிரமன் ஆகிய இருவர் தேடிக் காணாதவராயினர். 
752 தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச்
சமணே நின்றுண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா
பேணித் தொழுமின்கள்
வட்டமுலையா ளுமையாள்பங்கர்
மன்னி யுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்தணையும்
அண்ணா மலையாரே.
1.069.10
தடுக்கை அக்குளில் இடுக்கிக் கொண்டு தலை மயிரை ஒன்றொன்றாகப் பறித்த முண்டிதராய் ஆடையின்றி நின்றுண்ணும் சமணர்களாகிய பித்தர்களின் சொற்களைப் பொருளெனக் கொள்ளல் வேண்டா. வட்டமான தனங்களைக் கொண்ட உமையம்மையின் பங்கராய், மலைச்சாரல்களில் சிங்க ஏறுகள் கூட்டமாய் வந்தணையும் திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும் பெருமான் நிலையாக எழுந்தருளி உறையும் கோயிலை விரும்பித் தொழுவீராக. 
753 அல்லாடரவ மியங்குஞ்சாரல்
அண்ணா மலையாரை
நல்லார்பரவப் படுவான்காழி
ஞான சம்பந்தன்
சொல்லான்மலிந்த பாடலான
பத்து மிவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்வணங்க
மன்னி வாழ்வாரே.
1.069.11
இரவு வேளைகளில் படம் எடுத்தாடும் பாம்புகள் இயங்கும் சாரலை உடைய திருவண்ணாமலையில் உறையும் இறைவரை, நல்லவர்களால் போற்றப்படுபவனாகிய, சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய அருஞ்சொல்லமைப்புக்கள் நிறைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் கற்று வல்லவர் அனைவரும் வானோர் வணங்க நிலைபெற்று வாழ்வர். 
திருச்சிற்றம்பலம்

1.069.திரு அண்ணாமலை 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 

இது நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர். தேவியார் - உண்ணாமுலையம்மை. 

743 பூவார்மலர்கொண் டடியார்தொழுவார்புகழ்வார் வானோர்கள்மூவார்புரங்க ளெரித்தவன்றுமூவர்க் கருள்செய்தார்தூமாமழைநின் றதிரவெருவித்தொறுவின் னிரையோடும்ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல்அண்ணா மலையாரே.1.069.1
நீர்த்துளிகளைத் தூவும் கரிய மேகங்கள் வானத்தில் நின்றவாறு இடி முழக்கத்தைச்செய்ய, அதனைக் கேட்டு அஞ்சியகாட்டுப் பசுக்களின் மந்தைகளான வரிசைகள் வந்து ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை இறைவர், அடியவர்கள் பொலிவுமிக்க நறுமலர்களைத் தூவி வழிபடவும், வானோர்கள் புகழ்ந்து போற்றவும், அழியா வரம் பெற்ற அசுரர்களின் முப்புரங்களை எரித்து அழித்து அவ்வசுரர்களில் மூவர்க்கு அருளையும் வழங்கிய பெருமையுடையவர். 

744 மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும்வானோர் பெருமானார்நஞ்சைக்கண்டத் தடக்குமதுவுநன்மைப் பொருள்போலும்வெஞ்சொற்பேசும் வேடர்மடவாரிதண மதுவேறிஅஞ்சொற்கிளிக ளாயோவென்னும்அண்ணா மலையாரே.1.069.2
குத்து வெட்டு முதலிய கொடிய சொற்களையே பேசும் வேடர்களின் பெண்கள் தினைப்புனங்களில் பரண்மீது ஏறியிருந்து தினைகவர வரும் அழகிய சொற்களைப் பேசும் கிளிகளை ஆயோ என ஒலியெழுப்பி ஓட்டும் திருவண்ணாமலை இறைவர், மேகங்களைக் கிழித்துச் செல்லும் பிறைமதியை முடியிற்சூடும் வானவர் தலைவர். கடலிடைத் தோன்றிய நஞ்சையுண்டு கண்டத்தில் அடக்கியவர். இச்செயல் உலகத்தை அழியாது காக்கும் நன்மை கருதியதேயாகும். 

745 ஞானத்திரளாய் நின்றபெருமானல்ல வடியார்மேல்ஊனத்திரளை நீக்குமதுவுமுண்மைப் பொருள்போலும்ஏனத்திரளோ டினமான்கரடியிழியு மிரவின்கண்ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல்அண்ணா மலையாரே.1.069.3
இராப்போதில் பன்றிகளின் கூட்டமும், மான் இனங்களும், கரடிகளும், ஒருங்கே இறங்கிவரும் மலைச்சாரலில் யானைகளின் கூட்டமும் வந்தணையும் திருவண்ணாமலை இறைவர், ஞானப் பிழம்பாய் நிற்பவர். நன்மைகளையே கருதும் அடியவர்கள் ஊனுடலோடு பிறக்கும் பிறவிகளை நீக்குபவர். இவ்வருட்செயல் வேதாகம நூல்கள் உணர்த்தும் உண்மைப் பொருளாகும். 

746 இழைத்தவிடையா ளுமையாள்பங்கரிமையோர் பெருமானார்தழைத்தசடையார் விடையொன்றேறித்தரியார் புரமெய்தார்பிழைத்தபிடியைக் காணாதோடிப்பெருங்கை மதவேழம்அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல்அண்ணா மலையாரே.1.069.4
தன்னைவிட்டுப் பிரிந்த பெண் யானையைக் காணாத பெரிய கையை உடைய மதம் பொருந்திய ஆண் யானை, குரல் கொடுத்து அழைத்துத் திரிந்து அலுத்து உறங்கும் சாரலை உடைய திருவண்ணாமலை இறைவர், நூல் போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவர். விடைமீது ஏறிச் சென்று பகைவரின் முப்புரங்களை எரித்தவர். 

747 உருவிற்றிகழு முமையாள்பங்கரிமையோர் பெருமானார்செருவில்லொருகால் வளையவூன்றிச்செந்தீ யெழுவித்தார்பருவிற்குறவர் புனத்திற்குவித்தபருமா மணிமுத்தம்அருவித்திரளோ டிழியுஞ்சாரல்அண்ணா மலையாரே.1.069.5
பெரிய வில்லை ஏந்திய குறவர்கள் விளைநில வரப்புக்களில் குவித்து வைத்திருந்த பெரிய முத்துக்களும் மணிகளும் அருவித்திரள்களின் வழியே நிலத்தில் வந்து இழியும் திருவண்ணாமலை இறைவர், உருவத்தால் அழகிய உமையவளை ஒருபாகமாகக் கொண்டவர். இமையவர்கட்குத் தலைவர். பெரிய போர்வில்லை ஒரு காலால் ஊன்றிக்கொண்டு வளைத்துக் கணை எய்து முப்புரங்களும் செந்தீயால் அழிந்து விழுமாறு செய்தவர். 

748 எனைத்தோரூழி யடியாரேத்தவிமையோர் பெருமானார்நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும்நிமல ருறைகோயில்கனைத்தமேதி காணாதாயன்கைம்மேற் குழலூதஅனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல்அண்ணா மலையாரே.1.069.6
மலைச்சாரலில் புல் மேய்க்கச் சென்ற ஆயன்கனைத்து மேய்ந்த தம் எருமைகளைக் காணாதவனாய்த் தன் கையிலிருந்த வேய்ங்குழலை ஊத அவ்வளவில் அனைத்தெருமைகளும் வீடு திரும்பும் விருப்போடு ஒன்று திரளும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை, அடியவர்கள் தன்னைத் துதிக்க இமையவர் தலைவனாய்ப் பல்லூழிக் காலங்களைக் கண்ட பழையோனாய் விளங்கும் தன்னை நினைத்துத் தொழும் அன்பர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் நிமலனாய் விளங்கும் அப்பெரியோனின் கோயிலாக விளங்குவது ஆகும். 

749 வந்தித்திருக்கு மடியார்தங்கள்வருமேல் வினையோடுபந்தித்திருந்த பாவந்தீர்க்கும்பரம னுறைகோயில்முந்தியெழுந்த முழவினோசைமுதுகல் வரைகண்மேல்அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல்அண்ணா மலையாரே.1.069.7
விழா நிகழ்ச்சிகளை முன்னதாக அறிவித்தெழும் முழவின் ஓசை இடையறாது கேட்பதும், பழமையான மலைப் பாறைகளுக்கு இடையே அந்திக்காலத்துப் பிறை வந்து அணைவதுமாகிய திருவண்ணாமலையில் விளங்கும் இறைவன் தன்னை வழிபட்டு வேறு நினைவின்றி இருக்கும் அடியவர்களின் ஆகாமிய வினைகளோடு அவர்களைப் பந்தித்திருக்கும் பாவங்களையும் போக்கியருளும் பரமனாவான். அவனது கோயில் திருவண்ணாமலையாகும். 

750 மறந்தான்கருதி வலியைநினைந்துமாறா யெடுத்தான்றோள்நிறந்தான்முரிய நெரியவூன்றிநிறைய வருள்செய்தார்திறந்தான்காட்டி யருளாயென்றுதேவ ரவர்வேண்டஅறந்தான்காட்டி யருளிச்செய்தார்அண்ணா மலையாரே.1.069.8
தனது வலிமையை வெளிப்படுத்தித் திரிபுர அசுரர்களை அழித்து அருள்புரியுமாறு தேவர்கள் வேண்ட, தீயவரை ஒறுப்பது அறநெறியின் பாற்பட்டதாதலை உணர்த்தும் நிலையில் அசுரர்களை அழித்துத் தேவர்கட்கு அருள்செய்த பெருமானாகிய திருவண்ணாமலை இறைவன், தன் வலிமையையும், பெற்ற வெற்றிகளையும் பெரிதாக எண்ணியவனாய்த் தனக்கு மாறாகத் தான் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் மார்பு தோள் ஆகியனவற்றை நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவ்விராவணன் வேண்ட அவனுக்கு அருள் செய்த மேம்பாடுடையவனாவன். 

751 தேடிக்காணார் திருமால்பிரமன்றேவர் பெருமானைமூடியோங்கி முதுவேயுகுத்தமுத்தம் பலகொண்டுகூடிக்குறவர் மடவார்குவித்துக்கொள்ள வம்மினென்றாடிப்பாடி யளக்குஞ்சாரல்அண்ணா மலையாரே.1.069.9
மலையை மூடி ஓங்கி வளர்ந்த பழமையான மூங்கில் மரங்கள் உகுத்த முத்துக்கள் பலவற்றைக் குறவர்குலப் பெண்கள் ஓரிடத்தே குவித்து வைத்து அவற்றை வாங்கிட வருக என மக்களை அழைத்து ஆடிப்பாடி அவர்களுக்கு அளந்து அளிக்கும் திருவண்ணாமலை இறைவனாகிய தேவர் பெருமானைத் திருமால் பிரமன் ஆகிய இருவர் தேடிக் காணாதவராயினர். 

752 தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச்சமணே நின்றுண்ணும்பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டாபேணித் தொழுமின்கள்வட்டமுலையா ளுமையாள்பங்கர்மன்னி யுறைகோயில்அட்டமாளித் திரள்வந்தணையும்அண்ணா மலையாரே.1.069.10
தடுக்கை அக்குளில் இடுக்கிக் கொண்டு தலை மயிரை ஒன்றொன்றாகப் பறித்த முண்டிதராய் ஆடையின்றி நின்றுண்ணும் சமணர்களாகிய பித்தர்களின் சொற்களைப் பொருளெனக் கொள்ளல் வேண்டா. வட்டமான தனங்களைக் கொண்ட உமையம்மையின் பங்கராய், மலைச்சாரல்களில் சிங்க ஏறுகள் கூட்டமாய் வந்தணையும் திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும் பெருமான் நிலையாக எழுந்தருளி உறையும் கோயிலை விரும்பித் தொழுவீராக. 

753 அல்லாடரவ மியங்குஞ்சாரல்அண்ணா மலையாரைநல்லார்பரவப் படுவான்காழிஞான சம்பந்தன்சொல்லான்மலிந்த பாடலானபத்து மிவைகற்றுவல்லாரெல்லாம் வானோர்வணங்கமன்னி வாழ்வாரே.1.069.11
இரவு வேளைகளில் படம் எடுத்தாடும் பாம்புகள் இயங்கும் சாரலை உடைய திருவண்ணாமலையில் உறையும் இறைவரை, நல்லவர்களால் போற்றப்படுபவனாகிய, சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய அருஞ்சொல்லமைப்புக்கள் நிறைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் கற்று வல்லவர் அனைவரும் வானோர் வணங்க நிலைபெற்று வாழ்வர். 


திருச்சிற்றம்பலம்

by Swathi   on 30 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.