LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

முதல் திருமுறை-78

 

1.078.திருஇடைச்சுரம் 
பண் - குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - இடைச்சுரநாதர். 
தேவியார் - இமயமடக்கொடியம்மை. 
842 வரிவளரவிரொளி யரவரைதாழ
வார்சடைமுடிமிசை வளர்மதிசூடிக்
கரிவளர்தருகழல் கால்வலனேந்திக்
கனலெரியாடுவர் காடரங்காக
விரிவளர்தருபொழி லிளமயிலால
வெண்ணிறத்தருவிக டிண்ணெனவீழும்
எரிவளரினமணி புனமணிசார
லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
1.078.1
மரங்கள் வளர்ந்த விரிந்த பொழில்களில் இளமயில்கள் ஆடுவதும், வெண்மையான நிறத்துடன் அருவிகள் திண்ணென்ற ஒலிக் குறிப்போடு வீழ்வதும், எரி போன்று ஒளிரும் ஓரினமான மணிகள் காடுகளில் அழகுற விளங்குவதுமாய மலைச் சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், வரிகளையும் ஒளியையும் உடைய பாம்பை இடையிலே கட்டி, நீண்ட சடைமுடிமீது வளரும் பிறை மதியைச் சூடி யானை உருவம் பொறித்த வீரக் கழலைக்காலின்கண் வெற்றி பெறச் சூடிச் சுடுகாட்டைத் தமது அரங்காகக் கொண்டு ஆடும் இவ்விறைவரது இயல்பு யாதோ? 
843 ஆற்றையுமேற்றதோ ரவிர்சடையுடைய
ரழகினையருளுவர் குழகலதறியார்
கூற்றுயிர்செகுப்பதோர் கொடுமையையுடையர்
நடுவிருளாடுவர் கொன்றையந்தாரார்
சேற்றயன்மிளிர்வன கயலிளவாளை
செருச்செயவோர்ப்பன செம்முகமந்தி
ஏற்றையொடுழிதரு மெழிறிகழ்சார
லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
1.078.2
வயல்களில் உள்ள சேற்றில் விளங்கும் கயல் மீன்களும் வாளை மீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண் குரங்கோடு ஆண் குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச் சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், கங்கை நதியையும் ஏற்றருளிய விரிந்த சடையை உடையவராய், அழகும் இளமையும் உடையவராய், கூற்றுவன் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராய், நள்ளிருளில் திருநடம்புரிபவராய், கொன்றை மலர் மாலை சூடியவராய் விளங்கும் இவ்விறைவர்தம் இயல்பு யாதோ? 
844 கானமுஞ்சுடலையுங் கற்படுநிலனுங்
காதலர்தீதிலர் கனன்மழுவாளர்
வானமுநிலமையு மிருமையுமானர்
வணங்கவுமிணங்கவும் வாழ்த்தவும்படுவார்
நானமும்புகையொளி விரையொடுகமழ
நளிர்பொழிலிளமஞ்ஞை மன்னியபாங்கர்
ஏனமும்பிணையலு மெழிறிகழ்சார
லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
1.078.3
தூவி எரிக்கும் புழுகு, சந்தனம், அகில் முதலியவற்றின் புகையும் அவை எரிதலால் விளங்கும் ஒளியும் மணம் வீசச் செறிந்த பொழில்களிடையே இளமயில்கள் நிறைந்துள்ளதும், அருகில் பன்றிகளும் மானினங்களும் வாழ்வதுமான அழகிய மலைச் சாரலை அடுத்துள்ள திருஇடைச்சுரத்தில் காட்டையும், சுடலையையும், கற்கள் நிரம்பிய மலையிடங்களையும் விரும்புபவரும், தீமையில்லாதவரும், அழல் போன்ற வெம்மையான மழுவாயுதத்தை ஏந்தியவரும், தீமையில்லாதவரும், மறுமை இம்மை ஆகிய இருமை இன்பங்களையும் தருபவரும் வணங்குதற்கும் பழகுதற்கும் வாழ்த்துதற்கும் உரிமையானவருமாகிய இவ்விறைவரின் இயல்பு யாதோ? 
845 கடமணிமார்பினர் கடறனிலுறைவார்
காதலர்தீதிலர் கனன்மழுவாளர்
விடமணிமிடறினர் மிளிர்வதோரரவர்
வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர்
வடமுலையயலன கருங்குருந்தேறி
வாழையின்றீங்கனி வார்ந்துதேனட்டும்
இடைமுலையரிவைய ரெழிறிகழ்சார
லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
1.078.4
அசையும் ஆலமரத்தினருகே விளங்கும் கரிய குருந்த மரங்களில் ஏறி வாழைக் கனிகளின்மீது ஒழுகுமாறு தேன் அடைகளை எடுத்துப் பிழியும், இடங்கொண்டு வளர்ந்த முலைகளை உடைய பெண்கள் வாழும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், மலைச்சாரல்களில் விளைந்த மணிகளை அணிந்த மார்பினரும் கடலில் உறைபவரும், அன்புடையவரும் தீமையில்லாதவரும், கனலும் மழுவை ஏந்தியவரும் விடத்தை அடக்கிய மணிமிடற்றினரும், பாம்பை அணிகலனாகப் பூண்டவரும் வேறு வேறான ஒழுக்க நெறிகளை உடையவரும் பல்வேறு தோற்றங்களையுடைய வருமாய் எழுந்தருளிய இவ்விறைவரின் இயல்பு யாதோ? 
846 கார்கொண்டகடிகமழ் விரிமலர்க்கொன்றைக்
கண்ணியர்வளர்மதி கதிர்விடக்கங்கை
நீர்கொண்டசடையினர் விடையுயர்கொடியர்
நிழறிகழ்மழுவின ரழறிகழ்நிறத்தர்
சீர்கொண்டமென்சிறை வண்டுபண்செய்யும்
செழும்புனலனையன செங்குலைவாழை
ஏர்கொண்டபலவினொ டெழிறிகழ்சார
லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
1.078.5
கார்காலத்தே உண்டான மணம் கமழும் விரிந்த கொன்றை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவரும், வளரும் பிறைமதி ஒளிவிடக் கங்கை நீரை ஏற்ற சடையினரும், விடை எழுதிய உயர்ந்த கொடியை உடையவரும், ஒளி விளங்கும் மழுப்படையை ஏந்தியவரும், அழல்போலும் சிவந்த நிறத்தினரும் ஆய், சிறப்புமிக்க மெல்லிய இறகுகளை உடைய வண்டுகள் இசை பாடுவதும் வளவிய புனல் போலும் தண்ணிய செவ்வாழைக் குலைகள் அழகுமிக்க பலாக்கனிகளோடு விளங்கி அழகு செய்வதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியிருக்கும் இவரது தன்மை யாதோ? 
847 தோடணிகுழையினர் சுண்ணவெண்ணீற்றர்
சுடலையினாடுவர் தோலுடையாகப்
பீடுயர்செய்ததோர் பெருமையையுடையர்
பேயுடனாடுவர் பெரியவர்பெருமான்
கோடல்களொழுகுவ முழுகுவதும்பி
குரவமுமரவமு மன்னியபாங்கர்
ஏடவிழ்புதுமலர் கடிகமழ்சார
லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
1.078.6
தோடணிந்த காதினராய்த் திருவெண்ணீறாகிய சுண்ணப் பொடி பூசியவரும், தோலை உடுத்திச் சுடுகாட்டில் நடனம் ஆடுபவரும், பீடு என்னும் சொல் பெருமை உறுமாறு மிக்க பெருமையை உடையவரும் பேய்க் கணங்களோடு ஆடுபவரும், பெரியவர் எனப் போற்றத் தக்கவர்கட்குத் தலைவருமாய்ச் செங்காந்தட் பூக்கள் தேனைச் சொரிய அவற்றின்கண் முழுகும் வண்டுகளை உடையதும் குரவம் கடம்ப மரம் ஆகியன நிறைந்துள்ள சோலைகளில் பூத்த புதுமலர்களின் மணம் வீசப் பெறுவதுமாகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானது இயல்பு யாதோ? 
848 கழன்மல்குகாலினர் வேலினர்நூலர்
கவர்தலையரவொடு கண்டியும்பூண்பர்
அழன்மல்குமெரியொடு மணிமழுவேந்தி
யாடுவர்பாடுவ ராரணங்குடையர்
பொழின்மல்குநீடிய மரவமுமரவ
மன்னியகவட்டிடைப் புணர்குயிலாலும்
எழின்மல்குசோலையில் வண்டிசைபாடு
மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
1.078.7
வீரக்கழல் அணிந்த திருவடியினரும், கையில் வேலை ஏந்தியவரும், முப்புரிநூல் அணிந்தவரும் ஐந்தாகக் கிளைத்த தலைகளை உடைய பாம்போடு உருத்திராக்க மாலை அணிந்துள்ளவரும், சுவாலைவிட்ட எரியோடு அழகிய மழுவை ஏந்தி ஆடுபவரும், பாடுபவரும், பிறரை வருத்தும் அழகுடையவருமாய்ப் பொழில்களில் நிறைந்து உயர்ந்துள்ள மராமரங்களில் பொருந்திய கிளைகளில் ஆண்பெண் குயில்கள் இணைந்து பாடுவதும் அழகிய சோலைகளில் வண்டுகள் இசை பாடுவதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் சிவபிரானது இயல்பு யாதோ? 
849 தேங்கமழ்கொன்றையந் திருமலர்புனைவார்
திகழ்தருசடைமிசைத் திங்களுஞ்சூடி
வீந்தவர்சுடலைவெண் ணீறுமெய்பூசி
வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர்
சாந்தமுமகிலொடு முகில்பொதிந்தலம்பித்
தவழ்கனமணியொடு மிகுபளிங்கிடறி
ஏந்துவெள்ளருவிக ளெழிறிகழ்சார
லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
1.078.8
தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலர் மாலையைச் சூடுபவரும், விளங்கும் சடைமுடியில் பிறை மதியைச் சூடி இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டுச் சாம்பலைத் தம் திருமேனி மீது பூசி, வேறுபடும் புராண வரலாறுகளை உடையவரும் அவ்வாறே வேறுபடும் பல வேடங்களுடன் காட்சி தருபவருமாய், சந்தனம் அகில் ஆகியவற்றின் மணம் பொதிந்து இடித்துப் பொழியும் மழையாள் உருண்டுவரும் பெரிய மணிகளையும் பளிங்குகளையும் அடித்து வருவனவாகிய உயர்ந்த வெண்மையான அருவிகள் விளங்கும் மலைச் சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் பெருமானது இயல்பு யாதோ? 
850 பலவிலமிடுபலி கையிலொன்றேற்பர்
பலபுகழல்லது பழியிலர்தாமும்
தலையிலங்கவிரொளி நெடுமுடியரக்கன்
றடக்கைகளடர்த்ததோர் தன்மையையுடையர்
மலையிலங்கருவிகண் மணமுழவதிர
மழைதவழிளமஞ்ஞை மல்கியசாரல்
இலையிலவங்கமு மேலமுங்கமழு
மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
1.078.9
பலர் இல்லங்களுக்கும் சென்று மகளிர் இடும் உணவைக் கைகளில் ஏற்பவரும், பலவாய் விரிந்த புகழ் அல்லது பழி எதுவும் இல்லாதவரும், விட்டு விளங்கும் ஒளியை உடைய நீண்ட மகுடங்களைத் தரித்த பத்துத் தலைகளையுடைய இராவணனின் நீண்ட கைகளை நெரித்த வலிமையை உடையவருமாய், மலையில் விளங்கும் அருவிகள் மணமுழாப் போல் ஒலியோடு இழிவதும், இளமயில்கள் நிறைந்ததும், மேகங்கள் தவழும் சாரலை உடையதும், இலைகளை உடைய இலவங்கம் ஏலம் கமழ்வதுமான திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய இப்பெருமானது இயல்பு யாதோ? 
851 பெருமைகடருக்கியோர் பேதுறுகின்ற
பெருங்கடல்வண்ணனும் பிரமனுமோரா
அருமையரடிநிழல் பரவிநின்றேத்து
மன்புடையடியவர்க் கணியருமாவர்
கருமைகொள்வடிவொடு சுனைவளர்குவளைக்
கயலினம்வயலிள வாளைகளிரிய
எருமைகள்படிதர விளவனமாலு
மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
1.078.10
பெருமைகளால் செருக்குற்றுப் பேதைமை உறுகின்ற கடல் நிற வண்ணனாகிய திருமாலும் பிரமனும் அறிய முடியாத அருமையை உடையவரும், தம் திருவடி நிழலை நின்று பரவிப் போற்றும் அன்புடைய அடியவர்கட்கு அணிமையானவருமாய், சுனைகளில் கரிய நிறவடிவோடு பூத்து வளர்ந்த குவளை மலர்களையும் கயலினங்களையும் உடையதும் வயல்களில் வாளைமீன்களும் கயல் மீன்களும் அஞ்சித் துள்ளுமாறு எருமைகள் படிய அதனைக் கண்டு இளைய அன்னங்கள் ஆரவாரிப்பதுமாகிய திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய சிவபிரானாராகிய இவர்தம் இயல்பு யாதோ? 
852 மடைச்சுரமறிவன வாளையுங்கயலு
மருவியவயறனில் வருபுனற்காழிச்
சடைச்சுரத்துறைவதோர் பிறையுடையண்ணல்
சரிதைகள்பரவிநின் றுருகுசம்பந்தன்
புடைச்சுரத்தருவரைப் பூக்கமழ்சாரற்
புணர்மடநடையவர் புடையிடையார்ந்த
இடைச்சுரமேத்திய விசையொடுபாட
லிவைசொலவல்லவர் பிணியிலர்தாமே.
1.078.11
நீர் மடைகளில் துள்ளுவனவாகிய வாளை மீன்களும் கயல் மீன்களும் வயல்களிடத்து வரும் நீர் வளம் மிக்க காழி நகரில், சடைக்காட்டில் உறையும் பிறை மதியை உடைய சிவபிரானின் வரலாறுகளைப் பரவி உருகும் ஞானசம்பந்தன், அருகருகே வெற்றிடங்களை உடைய மலையின் பூக்கமழ் சாரலில் அழகிய மட நடையினை உடைய மகளிர் பல இடங்களில் தங்கி அழகு செய்வதாகிய இடைச்சுரத்தைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடலை இசையோடு சொல்ல வல்லவர், பிணிகள் இன்றி வாழ்வர். 
திருச்சிற்றம்பலம்

1.078.திருஇடைச்சுரம் 
பண் - குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - இடைச்சுரநாதர். தேவியார் - இமயமடக்கொடியம்மை. 

842 வரிவளரவிரொளி யரவரைதாழவார்சடைமுடிமிசை வளர்மதிசூடிக்கரிவளர்தருகழல் கால்வலனேந்திக்கனலெரியாடுவர் காடரங்காகவிரிவளர்தருபொழி லிளமயிலாலவெண்ணிறத்தருவிக டிண்ணெனவீழும்எரிவளரினமணி புனமணிசாரலிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.1.078.1
மரங்கள் வளர்ந்த விரிந்த பொழில்களில் இளமயில்கள் ஆடுவதும், வெண்மையான நிறத்துடன் அருவிகள் திண்ணென்ற ஒலிக் குறிப்போடு வீழ்வதும், எரி போன்று ஒளிரும் ஓரினமான மணிகள் காடுகளில் அழகுற விளங்குவதுமாய மலைச் சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், வரிகளையும் ஒளியையும் உடைய பாம்பை இடையிலே கட்டி, நீண்ட சடைமுடிமீது வளரும் பிறை மதியைச் சூடி யானை உருவம் பொறித்த வீரக் கழலைக்காலின்கண் வெற்றி பெறச் சூடிச் சுடுகாட்டைத் தமது அரங்காகக் கொண்டு ஆடும் இவ்விறைவரது இயல்பு யாதோ? 

843 ஆற்றையுமேற்றதோ ரவிர்சடையுடையரழகினையருளுவர் குழகலதறியார்கூற்றுயிர்செகுப்பதோர் கொடுமையையுடையர்நடுவிருளாடுவர் கொன்றையந்தாரார்சேற்றயன்மிளிர்வன கயலிளவாளைசெருச்செயவோர்ப்பன செம்முகமந்திஏற்றையொடுழிதரு மெழிறிகழ்சாரலிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.1.078.2
வயல்களில் உள்ள சேற்றில் விளங்கும் கயல் மீன்களும் வாளை மீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண் குரங்கோடு ஆண் குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச் சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், கங்கை நதியையும் ஏற்றருளிய விரிந்த சடையை உடையவராய், அழகும் இளமையும் உடையவராய், கூற்றுவன் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராய், நள்ளிருளில் திருநடம்புரிபவராய், கொன்றை மலர் மாலை சூடியவராய் விளங்கும் இவ்விறைவர்தம் இயல்பு யாதோ? 

844 கானமுஞ்சுடலையுங் கற்படுநிலனுங்காதலர்தீதிலர் கனன்மழுவாளர்வானமுநிலமையு மிருமையுமானர்வணங்கவுமிணங்கவும் வாழ்த்தவும்படுவார்நானமும்புகையொளி விரையொடுகமழநளிர்பொழிலிளமஞ்ஞை மன்னியபாங்கர்ஏனமும்பிணையலு மெழிறிகழ்சாரலிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.1.078.3
தூவி எரிக்கும் புழுகு, சந்தனம், அகில் முதலியவற்றின் புகையும் அவை எரிதலால் விளங்கும் ஒளியும் மணம் வீசச் செறிந்த பொழில்களிடையே இளமயில்கள் நிறைந்துள்ளதும், அருகில் பன்றிகளும் மானினங்களும் வாழ்வதுமான அழகிய மலைச் சாரலை அடுத்துள்ள திருஇடைச்சுரத்தில் காட்டையும், சுடலையையும், கற்கள் நிரம்பிய மலையிடங்களையும் விரும்புபவரும், தீமையில்லாதவரும், அழல் போன்ற வெம்மையான மழுவாயுதத்தை ஏந்தியவரும், தீமையில்லாதவரும், மறுமை இம்மை ஆகிய இருமை இன்பங்களையும் தருபவரும் வணங்குதற்கும் பழகுதற்கும் வாழ்த்துதற்கும் உரிமையானவருமாகிய இவ்விறைவரின் இயல்பு யாதோ? 

845 கடமணிமார்பினர் கடறனிலுறைவார்காதலர்தீதிலர் கனன்மழுவாளர்விடமணிமிடறினர் மிளிர்வதோரரவர்வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர்வடமுலையயலன கருங்குருந்தேறிவாழையின்றீங்கனி வார்ந்துதேனட்டும்இடைமுலையரிவைய ரெழிறிகழ்சாரலிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.1.078.4
அசையும் ஆலமரத்தினருகே விளங்கும் கரிய குருந்த மரங்களில் ஏறி வாழைக் கனிகளின்மீது ஒழுகுமாறு தேன் அடைகளை எடுத்துப் பிழியும், இடங்கொண்டு வளர்ந்த முலைகளை உடைய பெண்கள் வாழும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், மலைச்சாரல்களில் விளைந்த மணிகளை அணிந்த மார்பினரும் கடலில் உறைபவரும், அன்புடையவரும் தீமையில்லாதவரும், கனலும் மழுவை ஏந்தியவரும் விடத்தை அடக்கிய மணிமிடற்றினரும், பாம்பை அணிகலனாகப் பூண்டவரும் வேறு வேறான ஒழுக்க நெறிகளை உடையவரும் பல்வேறு தோற்றங்களையுடைய வருமாய் எழுந்தருளிய இவ்விறைவரின் இயல்பு யாதோ? 

846 கார்கொண்டகடிகமழ் விரிமலர்க்கொன்றைக்கண்ணியர்வளர்மதி கதிர்விடக்கங்கைநீர்கொண்டசடையினர் விடையுயர்கொடியர்நிழறிகழ்மழுவின ரழறிகழ்நிறத்தர்சீர்கொண்டமென்சிறை வண்டுபண்செய்யும்செழும்புனலனையன செங்குலைவாழைஏர்கொண்டபலவினொ டெழிறிகழ்சாரலிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.1.078.5
கார்காலத்தே உண்டான மணம் கமழும் விரிந்த கொன்றை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவரும், வளரும் பிறைமதி ஒளிவிடக் கங்கை நீரை ஏற்ற சடையினரும், விடை எழுதிய உயர்ந்த கொடியை உடையவரும், ஒளி விளங்கும் மழுப்படையை ஏந்தியவரும், அழல்போலும் சிவந்த நிறத்தினரும் ஆய், சிறப்புமிக்க மெல்லிய இறகுகளை உடைய வண்டுகள் இசை பாடுவதும் வளவிய புனல் போலும் தண்ணிய செவ்வாழைக் குலைகள் அழகுமிக்க பலாக்கனிகளோடு விளங்கி அழகு செய்வதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியிருக்கும் இவரது தன்மை யாதோ? 

847 தோடணிகுழையினர் சுண்ணவெண்ணீற்றர்சுடலையினாடுவர் தோலுடையாகப்பீடுயர்செய்ததோர் பெருமையையுடையர்பேயுடனாடுவர் பெரியவர்பெருமான்கோடல்களொழுகுவ முழுகுவதும்பிகுரவமுமரவமு மன்னியபாங்கர்ஏடவிழ்புதுமலர் கடிகமழ்சாரலிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.1.078.6
தோடணிந்த காதினராய்த் திருவெண்ணீறாகிய சுண்ணப் பொடி பூசியவரும், தோலை உடுத்திச் சுடுகாட்டில் நடனம் ஆடுபவரும், பீடு என்னும் சொல் பெருமை உறுமாறு மிக்க பெருமையை உடையவரும் பேய்க் கணங்களோடு ஆடுபவரும், பெரியவர் எனப் போற்றத் தக்கவர்கட்குத் தலைவருமாய்ச் செங்காந்தட் பூக்கள் தேனைச் சொரிய அவற்றின்கண் முழுகும் வண்டுகளை உடையதும் குரவம் கடம்ப மரம் ஆகியன நிறைந்துள்ள சோலைகளில் பூத்த புதுமலர்களின் மணம் வீசப் பெறுவதுமாகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானது இயல்பு யாதோ? 

848 கழன்மல்குகாலினர் வேலினர்நூலர்கவர்தலையரவொடு கண்டியும்பூண்பர்அழன்மல்குமெரியொடு மணிமழுவேந்தியாடுவர்பாடுவ ராரணங்குடையர்பொழின்மல்குநீடிய மரவமுமரவமன்னியகவட்டிடைப் புணர்குயிலாலும்எழின்மல்குசோலையில் வண்டிசைபாடுமிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.1.078.7
வீரக்கழல் அணிந்த திருவடியினரும், கையில் வேலை ஏந்தியவரும், முப்புரிநூல் அணிந்தவரும் ஐந்தாகக் கிளைத்த தலைகளை உடைய பாம்போடு உருத்திராக்க மாலை அணிந்துள்ளவரும், சுவாலைவிட்ட எரியோடு அழகிய மழுவை ஏந்தி ஆடுபவரும், பாடுபவரும், பிறரை வருத்தும் அழகுடையவருமாய்ப் பொழில்களில் நிறைந்து உயர்ந்துள்ள மராமரங்களில் பொருந்திய கிளைகளில் ஆண்பெண் குயில்கள் இணைந்து பாடுவதும் அழகிய சோலைகளில் வண்டுகள் இசை பாடுவதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் சிவபிரானது இயல்பு யாதோ? 

849 தேங்கமழ்கொன்றையந் திருமலர்புனைவார்திகழ்தருசடைமிசைத் திங்களுஞ்சூடிவீந்தவர்சுடலைவெண் ணீறுமெய்பூசிவேறுமோர்சரிதையர் வேடமுமுடையர்சாந்தமுமகிலொடு முகில்பொதிந்தலம்பித்தவழ்கனமணியொடு மிகுபளிங்கிடறிஏந்துவெள்ளருவிக ளெழிறிகழ்சாரலிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.1.078.8
தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலர் மாலையைச் சூடுபவரும், விளங்கும் சடைமுடியில் பிறை மதியைச் சூடி இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டுச் சாம்பலைத் தம் திருமேனி மீது பூசி, வேறுபடும் புராண வரலாறுகளை உடையவரும் அவ்வாறே வேறுபடும் பல வேடங்களுடன் காட்சி தருபவருமாய், சந்தனம் அகில் ஆகியவற்றின் மணம் பொதிந்து இடித்துப் பொழியும் மழையாள் உருண்டுவரும் பெரிய மணிகளையும் பளிங்குகளையும் அடித்து வருவனவாகிய உயர்ந்த வெண்மையான அருவிகள் விளங்கும் மலைச் சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் பெருமானது இயல்பு யாதோ? 

850 பலவிலமிடுபலி கையிலொன்றேற்பர்பலபுகழல்லது பழியிலர்தாமும்தலையிலங்கவிரொளி நெடுமுடியரக்கன்றடக்கைகளடர்த்ததோர் தன்மையையுடையர்மலையிலங்கருவிகண் மணமுழவதிரமழைதவழிளமஞ்ஞை மல்கியசாரல்இலையிலவங்கமு மேலமுங்கமழுமிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.1.078.9
பலர் இல்லங்களுக்கும் சென்று மகளிர் இடும் உணவைக் கைகளில் ஏற்பவரும், பலவாய் விரிந்த புகழ் அல்லது பழி எதுவும் இல்லாதவரும், விட்டு விளங்கும் ஒளியை உடைய நீண்ட மகுடங்களைத் தரித்த பத்துத் தலைகளையுடைய இராவணனின் நீண்ட கைகளை நெரித்த வலிமையை உடையவருமாய், மலையில் விளங்கும் அருவிகள் மணமுழாப் போல் ஒலியோடு இழிவதும், இளமயில்கள் நிறைந்ததும், மேகங்கள் தவழும் சாரலை உடையதும், இலைகளை உடைய இலவங்கம் ஏலம் கமழ்வதுமான திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய இப்பெருமானது இயல்பு யாதோ? 

851 பெருமைகடருக்கியோர் பேதுறுகின்றபெருங்கடல்வண்ணனும் பிரமனுமோராஅருமையரடிநிழல் பரவிநின்றேத்துமன்புடையடியவர்க் கணியருமாவர்கருமைகொள்வடிவொடு சுனைவளர்குவளைக்கயலினம்வயலிள வாளைகளிரியஎருமைகள்படிதர விளவனமாலுமிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.1.078.10
பெருமைகளால் செருக்குற்றுப் பேதைமை உறுகின்ற கடல் நிற வண்ணனாகிய திருமாலும் பிரமனும் அறிய முடியாத அருமையை உடையவரும், தம் திருவடி நிழலை நின்று பரவிப் போற்றும் அன்புடைய அடியவர்கட்கு அணிமையானவருமாய், சுனைகளில் கரிய நிறவடிவோடு பூத்து வளர்ந்த குவளை மலர்களையும் கயலினங்களையும் உடையதும் வயல்களில் வாளைமீன்களும் கயல் மீன்களும் அஞ்சித் துள்ளுமாறு எருமைகள் படிய அதனைக் கண்டு இளைய அன்னங்கள் ஆரவாரிப்பதுமாகிய திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய சிவபிரானாராகிய இவர்தம் இயல்பு யாதோ? 

852 மடைச்சுரமறிவன வாளையுங்கயலுமருவியவயறனில் வருபுனற்காழிச்சடைச்சுரத்துறைவதோர் பிறையுடையண்ணல்சரிதைகள்பரவிநின் றுருகுசம்பந்தன்புடைச்சுரத்தருவரைப் பூக்கமழ்சாரற்புணர்மடநடையவர் புடையிடையார்ந்தஇடைச்சுரமேத்திய விசையொடுபாடலிவைசொலவல்லவர் பிணியிலர்தாமே.1.078.11
நீர் மடைகளில் துள்ளுவனவாகிய வாளை மீன்களும் கயல் மீன்களும் வயல்களிடத்து வரும் நீர் வளம் மிக்க காழி நகரில், சடைக்காட்டில் உறையும் பிறை மதியை உடைய சிவபிரானின் வரலாறுகளைப் பரவி உருகும் ஞானசம்பந்தன், அருகருகே வெற்றிடங்களை உடைய மலையின் பூக்கமழ் சாரலில் அழகிய மட நடையினை உடைய மகளிர் பல இடங்களில் தங்கி அழகு செய்வதாகிய இடைச்சுரத்தைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடலை இசையோடு சொல்ல வல்லவர், பிணிகள் இன்றி வாழ்வர். 


திருச்சிற்றம்பலம்

by Swathi   on 30 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.