நனந்தலை யுலகம் வளைஇ நேமியடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப், பாடிமிழ் பனிக்கடல் பருகிவல னேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி -5 பெரும்புயல் பொழிந்த சிறுபுன் மாலை, யருங்கடி மூதூர் மருங்கிற் போகி யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை யரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது -10 பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச், சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி னுறுதுய ரலமர னோக்கி யாய்மக ணடுங்குசுவ லசைத்த கையள் "கைய கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர -15 வின்னே வருகுவர் தாய" ரென்போ ணன்னநர் நன்மொழி கேட்டன மதனா னல்ல நல்லோர் வாய்ப்புட், டெவ்வர் முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து வருத றலைவர் வாய்வது, நீநின் -20 பருவர லெவ்வங் களைமா யோயெனக் காட்டவுங் காட்டவுங் காணாள், கலுழ்சிறந்து பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப் பக்; கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற் சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி -25 வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட விடுமுட் புரிசை யேமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி, யுவலைக் கூரை யழுகிய தெருவிற் கவலை முற்றங் காவ நின்ற -30 தேம்படு கவுள சிறுகண் யானை யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத் தயினுளை மருப்பிற்றங் கையிடை கொண்டெனக் கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் -35 கல்லா வினைஞர் கவளங் கைப்பக், கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ ரோடா வல்விற் றூணி நாற்றிக், கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் -40 பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து வாங்குவில் லரண மரணமாக, வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர் நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு, குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத் -45 திரவுபகற் செய்யுந் திண்பிடி யள்வாள் விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர் நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக் கையமை விளக்க நந்துதொறு மாட்ட நெடுநா வெண்மணி1 நிழத்திய2 நடுநா, -50 ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர் சிதர்வர லசைவளிக் கசைவந் தாங்குத் துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப் பெருமூ தாள ரேமஞ் சூழப், பொழுதளந் தறியும் பொய்யா மாக்க -55 டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி, "யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின் குறுநீர்க் கன்ன லினைத்" தென்றிசைப்ப, மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து -60 வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற் றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞா ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளியு, ளுடம்பி நுரைக்கு முரையா நாவிற் -65 படம்புகு மிலேச்ச ருழையராக, மண்டமர் நசையடு கண்படை பெறாஅ, தெடுத்தெறி யெ·கம் பாய்தலிற் புண்கூர்ந்து பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப் பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் -70 தேம்பாய் கண்ணி நவ்வலந் திருத்திச் சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந், தோறுமிபு வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த் துண்ணா துயங்கு மாசிந் தித்து மொருகை பள்ளி யற்றி யருகை -75 முடியடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை, யின்றுயில் வதியுநற் காணா டுயருழந்து, -80 நெடுஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல -85 விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ, ளஞ்செவி நிறைய வாலின, வென்றுபிறர் வேண்டுபுலங் கவர்ந்த வீண்டுபெருந் தாநையடு -90 விசயம் வெல்கொடி யுயர், வலனேர்பு வயிரும் வளையு மார்ப்ப, வயிர செறியிலைக் காயா வஞ்சன மலர முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக், கோடற் குவிமுகை யங்கை யவிழத், -95 தோடார் தோன்றி குருதி பூப்பக், கான நந்திய செந்நிலப் பெருவழி வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற் றிரிமருப் பிரலையடு மாடமா னுகள, வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் -100 முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத் துனைபரி துரக்குஞ் செலவினர் வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.
|