LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்

முத்தப்பருவம்

 

878 கருகு மூல மலத்தினுயிர் கலப்புற் றதுவே யகப்பந்தங்
      கவற்று மாயை கன்மமொடு கலந்த பந்த மகப்புறமாம்
பெருகு புறமாந் தனுகரணம் பெற்ற பந்தம் புறப்புறமாம்
      பிறங்கு புவன போகத்திற் பிணைந்த பந்த மெனவிரித்தே
யுருகு மடியர்க் கிரங்கியவை யொழியு மாறு மின்பநிலை
      யுதிக்கு மாறு முண்மையினொன் றுபதே சிக்குந் திருவாயான்
முருகு மலியும் பொழிற்றுறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (1)
(1)
879 தங்கு பருவ மதம்பாகஞ் சத்தி பதிதல் வினையொப்புச்
      சார்ந்து மலக்கட் டற்றுயிர்சு த்ததிற் றசஞ்செய் தத்துவிதத்
தெங்கு நிறைநம் மொடுங்கலத்த லிதுவே யகச்சம் பந்தமரு
      ளிடத்து நிற்ற லகப்புறமவ் விலகு மருளி னுபகாரம்
பொங்கு மருடீர் தரக்காண்டல் புறநாம் பிரம மென்றல்புறப்
      புறமா மிவற்றுண் முன்னையதே பொலியா நின்ற தென்றதனுண்
முங்கும் வகைசெய் தருடுறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (2)
(2)
880 நாடு நிலமுன் னிருபத்து நான்கு நாளம் வித்தையெட்டு
      நறிய விதழ்க ணாலெட்டு நாலெட் டாய கேசரங்க
ணீடு மீசர் சதாசிவரே நிகழுஞ் சத்தி கேசரத்து
      ணிலவும் பொகுட்டு வடிவுசிவ நிலைய வனைய பொகுட்டகத்துட்
கூடு மைம்பத் தொருபீசங் குலாய விதய பங்கயத்திற்
      குறிக்கு நந்தா ணிலையென்று கொண்டா டெங்கட் கருள்வாயான்
மூடும் பொழில்சால் வளத்துறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (3) 
(3)
881 உற்ற விதய பங்கயத்தி லோரைந் தெழுத்தா கியவடிவி
      லுனைக்கொல் லாமை முதலெண்பூ வுறவம் மநுவா லருச்சித்தும்
பொற்ற வுந்தித் தலத்தழலைப் பொலிய வெழுப்பி விந்துவகம்
      புணராச் சியத்தை யிருநாடி பொய்தீர் தரக்கொண் டோமித்துஞ்
செற்ற புருவ நடுச்சிவய திகழு மூன்று பதப்பொருளாந்
      திறமை நோக்கி யதனாலே சிவாக மேபா வனைசெய்ய
முற்ற வுணர்ந்தார்க் கருடுறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (4)
(4)
882 நகைசெ யுயிர்க ணசிக்குமெனி னசித்த லாலொன் றுவவில்லை
      நசியா வென்னி லிரண்டுபட்டு நம்மை யொன்று வனவல்ல
வுகைசெ யருத்தா பத்தியா லுப்புத் தனது கண்டிப்பை
      யொழிந்து புனலி னொன்றாமா றொப்பத் தமது சகசமலப்
பகைசெ யாற்றல் கெட்டொழியப் பண்பி னொன்றி நங்கழற்குப்
      பகருஞ் சேட மாமென்று பரிவுற் றெங்கட் கருள்வாயான்
முகைசெய் பொழில்சூழ் தருதுறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (5)
(5)
வேறு.
883 உண்ணீர்மை யுயிருணர்ந் துய்யவே தாகம மொருங்கெடுத் துப்புகன்று -
      மோலமென் றபயமிடு நெடியமான் முதலமர ருய்யநஞ் சமிர்தமுண்டும்,
புண்ணீர்மை யாயஞ ரழுந்துலக முய்யமுப் புரநீறு படநகைத்தும் -
      புலவரொடு வழுதியு மயக்கந் தெளிந்துயப் பொருண்மரபு முழுதுரைத்து,
மெண்ணீர்மை யார்க்குமதி மலிகொங்கு தேரெனு மியற்றமிழ்க் கவிபாடியு -
      மிரும்புகழ் படைத்தநின் செய்யாவா யாங்களுய விதுசெயிற் பழியாகுமோ,
தெண்ணிருடைப்பொன்னி சூழுமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே. (6)
(6)
884 மிக்கதுவர் வாய்ந்தநம் மிதழ்முன் பொருத்திப்பின் மேவக் குவிக்குமாறோர் -
      வேலைவந் ததுகொலென நின்றிரு வுளங்கோளேல் விமலநீ கொள்வாயெனிற்,
றொக்கநின் போதுநாம மாமைந் தெழுத்தினுஞ் சுடருஞ் சிறப்புநாமத் -
      தொகையைந் தெழுத்தினுமொ ரைந்தெழுத் தென்னநவில் சூக்குமத் தினுநினடியார்க்,
கொக்கமுத லயலா மிரண்டா மெழுத்தினை யொழித்தருளு வாய்கொலோசற் -
      றுரையொழித் தருள்வமெனின் முற்றுமுடி யாதிதனை யோர்ந்துபல மாளிகைதொறுஞ்,
செக்கர்மணி யிருள்பருகி யோங்குமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே. (7)
(7)
885 ஒளிவார் திருப்பனந் தாளின்முன் னாளிலுள் ளுருகிநி னடிப்பூசையாற் -
      றொருமாது சூட்டுபூ மாலையை விரும்பிநின் னுருவமிக வுங்குனிந்தா,
யளிவார் மனத்தினெம் பாமாலை வேண்டுமே லவ்வளவு குனியல்வேண்டா -
      வையசற் றேகுனிந் தெண்ணியதை யன்புடனளித்தருள வேண்டுமின்னும்,
வளிவார் பெரும்புவி தெரிக்கவவ் வணநிற்கின் மாண்புடைக் கலயனாரை
      மற்றெங் கியாஞ்சென்று தேடுவே மாதலால் வளமிக்க கழகந்தொறுந்
தெளிவார் குழாங்குழுமி யோங்குமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே.
(8)
886 முன்னைநா ணின்னால் வெலப்பட்ட கரிவன்றி முதுமீன முதவுமுத்து -
      முண்டக மலர்த்தாளி லரைபட்ட வெண்மதிய முத்துநஞ் சுணவுதந்த,
புன்னைவாய் நெய்தற் கடற்றோன்று மிப்பிவளை பொறையுயிர்த் திட்டமுத்தும் -
      பொருதிக லழிந்தகொக் குதவுமுத் துங்கொண்டு பூணுத னினக்கேகட,
னென்னையோ துந்திற மெனிற்சின்ன மேற்றதா ரிந்நாளி லில்லையென்னி -
      லிலகுகண் மணிமாலை யிடையிடைக் கோத்திடுக வெண்ணில பழுத்தபாக,
றென்னைமா வாதிபல சூழுமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே.
(9)
887 பல்காலு நின்னைத் துதித்துநின் பதமுட் பதித்துவாழ் வேங்களுக்குப் -
      பயனாக வொருதர மெனுந்தந் திடாயெனிற் பல்வளப் பூவணத்தி,
லல்காத மாமைநிறை பொன்னனையண் முன்னைநா ளள்ளிமுத் தங்கொள்ளுமா -
      றளவளாய் மேயதை வெளிப்பட வுரைத்திடுவ மதனினு மிரங்காயெனி,
னொல்காத மற்றவ ளுகிர்க்குறி கபோலத்தி லுற்றது முரைத்துலிடுவோ -
      மொண்கதிர்ச் செல்வன்மதி யோனெனத் தண்ணென் றுடம்புகூ னிக்கடந்து,
செல்காறும் வளைபொழி லுயர்ந்தவா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே.
(10)

 

878 கருகு மூல மலத்தினுயிர் கலப்புற் றதுவே யகப்பந்தங்

      கவற்று மாயை கன்மமொடு கலந்த பந்த மகப்புறமாம்

பெருகு புறமாந் தனுகரணம் பெற்ற பந்தம் புறப்புறமாம்

      பிறங்கு புவன போகத்திற் பிணைந்த பந்த மெனவிரித்தே

யுருகு மடியர்க் கிரங்கியவை யொழியு மாறு மின்பநிலை

      யுதிக்கு மாறு முண்மையினொன் றுபதே சிக்குந் திருவாயான்

முருகு மலியும் பொழிற்றுறைசை முன்னோன் முத்தந் தருகவே

      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (1)

(1)

879 தங்கு பருவ மதம்பாகஞ் சத்தி பதிதல் வினையொப்புச்

      சார்ந்து மலக்கட் டற்றுயிர்சு த்ததிற் றசஞ்செய் தத்துவிதத்

தெங்கு நிறைநம் மொடுங்கலத்த லிதுவே யகச்சம் பந்தமரு

      ளிடத்து நிற்ற லகப்புறமவ் விலகு மருளி னுபகாரம்

பொங்கு மருடீர் தரக்காண்டல் புறநாம் பிரம மென்றல்புறப்

      புறமா மிவற்றுண் முன்னையதே பொலியா நின்ற தென்றதனுண்

முங்கும் வகைசெய் தருடுறைசை முன்னோன் முத்தந் தருகவே

      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (2)

(2)

880 நாடு நிலமுன் னிருபத்து நான்கு நாளம் வித்தையெட்டு

      நறிய விதழ்க ணாலெட்டு நாலெட் டாய கேசரங்க

ணீடு மீசர் சதாசிவரே நிகழுஞ் சத்தி கேசரத்து

      ணிலவும் பொகுட்டு வடிவுசிவ நிலைய வனைய பொகுட்டகத்துட்

கூடு மைம்பத் தொருபீசங் குலாய விதய பங்கயத்திற்

      குறிக்கு நந்தா ணிலையென்று கொண்டா டெங்கட் கருள்வாயான்

மூடும் பொழில்சால் வளத்துறைசை முன்னோன் முத்தந் தருகவே

      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (3) 

(3)

881 உற்ற விதய பங்கயத்தி லோரைந் தெழுத்தா கியவடிவி

      லுனைக்கொல் லாமை முதலெண்பூ வுறவம் மநுவா லருச்சித்தும்

பொற்ற வுந்தித் தலத்தழலைப் பொலிய வெழுப்பி விந்துவகம்

      புணராச் சியத்தை யிருநாடி பொய்தீர் தரக்கொண் டோமித்துஞ்

செற்ற புருவ நடுச்சிவய திகழு மூன்று பதப்பொருளாந்

      திறமை நோக்கி யதனாலே சிவாக மேபா வனைசெய்ய

முற்ற வுணர்ந்தார்க் கருடுறைசை முன்னோன் முத்தந் தருகவே

      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (4)

(4)

882 நகைசெ யுயிர்க ணசிக்குமெனி னசித்த லாலொன் றுவவில்லை

      நசியா வென்னி லிரண்டுபட்டு நம்மை யொன்று வனவல்ல

வுகைசெ யருத்தா பத்தியா லுப்புத் தனது கண்டிப்பை

      யொழிந்து புனலி னொன்றாமா றொப்பத் தமது சகசமலப்

பகைசெ யாற்றல் கெட்டொழியப் பண்பி னொன்றி நங்கழற்குப்

      பகருஞ் சேட மாமென்று பரிவுற் றெங்கட் கருள்வாயான்

முகைசெய் பொழில்சூழ் தருதுறைசை முன்னோன் முத்தந் தருகவே

      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (5)

(5)

 

வேறு.

883 உண்ணீர்மை யுயிருணர்ந் துய்யவே தாகம மொருங்கெடுத் துப்புகன்று -

      மோலமென் றபயமிடு நெடியமான் முதலமர ருய்யநஞ் சமிர்தமுண்டும்,

புண்ணீர்மை யாயஞ ரழுந்துலக முய்யமுப் புரநீறு படநகைத்தும் -

      புலவரொடு வழுதியு மயக்கந் தெளிந்துயப் பொருண்மரபு முழுதுரைத்து,

மெண்ணீர்மை யார்க்குமதி மலிகொங்கு தேரெனு மியற்றமிழ்க் கவிபாடியு -

      மிரும்புகழ் படைத்தநின் செய்யாவா யாங்களுய விதுசெயிற் பழியாகுமோ,

தெண்ணிருடைப்பொன்னி சூழுமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -

      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே. (6)

(6)

884 மிக்கதுவர் வாய்ந்தநம் மிதழ்முன் பொருத்திப்பின் மேவக் குவிக்குமாறோர் -

      வேலைவந் ததுகொலென நின்றிரு வுளங்கோளேல் விமலநீ கொள்வாயெனிற்,

றொக்கநின் போதுநாம மாமைந் தெழுத்தினுஞ் சுடருஞ் சிறப்புநாமத் -

      தொகையைந் தெழுத்தினுமொ ரைந்தெழுத் தென்னநவில் சூக்குமத் தினுநினடியார்க்,

கொக்கமுத லயலா மிரண்டா மெழுத்தினை யொழித்தருளு வாய்கொலோசற் -

      றுரையொழித் தருள்வமெனின் முற்றுமுடி யாதிதனை யோர்ந்துபல மாளிகைதொறுஞ்,

செக்கர்மணி யிருள்பருகி யோங்குமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -

      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே. (7)

(7)

885 ஒளிவார் திருப்பனந் தாளின்முன் னாளிலுள் ளுருகிநி னடிப்பூசையாற் -

      றொருமாது சூட்டுபூ மாலையை விரும்பிநின் னுருவமிக வுங்குனிந்தா,

யளிவார் மனத்தினெம் பாமாலை வேண்டுமே லவ்வளவு குனியல்வேண்டா -

      வையசற் றேகுனிந் தெண்ணியதை யன்புடனளித்தருள வேண்டுமின்னும்,

வளிவார் பெரும்புவி தெரிக்கவவ் வணநிற்கின் மாண்புடைக் கலயனாரை

      மற்றெங் கியாஞ்சென்று தேடுவே மாதலால் வளமிக்க கழகந்தொறுந்

தெளிவார் குழாங்குழுமி யோங்குமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே

      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே.

(8)

886 முன்னைநா ணின்னால் வெலப்பட்ட கரிவன்றி முதுமீன முதவுமுத்து -

      முண்டக மலர்த்தாளி லரைபட்ட வெண்மதிய முத்துநஞ் சுணவுதந்த,

புன்னைவாய் நெய்தற் கடற்றோன்று மிப்பிவளை பொறையுயிர்த் திட்டமுத்தும் -

      பொருதிக லழிந்தகொக் குதவுமுத் துங்கொண்டு பூணுத னினக்கேகட,

னென்னையோ துந்திற மெனிற்சின்ன மேற்றதா ரிந்நாளி லில்லையென்னி -

      லிலகுகண் மணிமாலை யிடையிடைக் கோத்திடுக வெண்ணில பழுத்தபாக,

றென்னைமா வாதிபல சூழுமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -

      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே.

(9)

887 பல்காலு நின்னைத் துதித்துநின் பதமுட் பதித்துவாழ் வேங்களுக்குப் -

      பயனாக வொருதர மெனுந்தந் திடாயெனிற் பல்வளப் பூவணத்தி,

லல்காத மாமைநிறை பொன்னனையண் முன்னைநா ளள்ளிமுத் தங்கொள்ளுமா -

      றளவளாய் மேயதை வெளிப்பட வுரைத்திடுவ மதனினு மிரங்காயெனி,

னொல்காத மற்றவ ளுகிர்க்குறி கபோலத்தி லுற்றது முரைத்துலிடுவோ -

      மொண்கதிர்ச் செல்வன்மதி யோனெனத் தண்ணென் றுடம்புகூ னிக்கடந்து,

செல்காறும் வளைபொழி லுயர்ந்தவா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -

      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே.

(10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.