LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

முதுமொழிக் காஞ்சி

 

நூல்
1. சிறந்த பத்து
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை
4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை
5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று
10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று
2. அறிவுப்பத்து
11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப
12. ஈரம் உடைமை ஈகையின் அறிப
13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப
14. கற்றது உடைமை காட்சியின் அறிப
15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப
16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப
17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப
18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப
19. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப
20. சீருடை யாண்மை செய்கையின் அறிப
3. பழியாப் பத்து
21. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் யாப்பி லோரை இயல்குணம் பழியார்
22. மீப்பி லோரை மீக்குணம் பழியார்
23. பெருமை உடையதன் அருமை பழியார்
24. அருமை யுடையதன் பெருமை பழியார்
25. நிறையச் செய்யாக் குறைவினை பழியார்
26. முறையில் அரசர்நாட் டிருந்து பழியார்
27. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்
28. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்
29. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்
30. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.
4. துவ்வாப் பத்து
31. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது
32. கழிதறு கண்மை பேடியின் துவ்வாது
33. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது
34. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது
35. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது
36. பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது
37. கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது
38. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது
39. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது
40. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.
5. அல்ல பத்து
41. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்
42. தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று
43. ஈரலில் லாதது கிளைநட் பன்று
44. சோராக் கையன் சொன்மலை யல்லன்
45. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்
46. நேராமற் கற்றது கல்வி யன்று
47. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று
48. அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று
49. திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று
50. மறுபிறப் பறியா ததுமூப் பன்று.
6. இல்லைப் பத்து
51. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை
52. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை
53. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை
54. வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை
55. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை
56. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை
57. நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை
58. இசையின் பெரியதோர் எச்ச மில்லை
59. இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை
60. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை
7. பொய்ப் பத்து
61. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரறவி னோன்இனிது வாழா மைபொய்
62. பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய்
63. கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய்
64. காலம்அறி யாதோன் கையுறல் பொய்
65. மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய்
66. உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய்
67. சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய்
68. பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய்
69. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்
70. வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய்.
8. எளிய பத்து
71. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது
72. உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது
73. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது
74. குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது
75. துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது
76. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது
77. உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது
78. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது
79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது
80. சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது
9. நல்கூர்ந்த பத்து
81. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று
82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று
83. செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று
84. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று
85. தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று
86. முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று
87. சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று
88. அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று
89. உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று
90. நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.
10. தண்டாப் பத்து
91. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்
92. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்
93. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்
94. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான்
95. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்
96. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்
97. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்
98. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்
99. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்
100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான்.
முதுமொழிக்காஞ்சி முற்றிற்று.

நூல்

1. சிறந்த பத்து
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று

2. அறிவுப்பத்து
11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப12. ஈரம் உடைமை ஈகையின் அறிப13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப14. கற்றது உடைமை காட்சியின் அறிப15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப19. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப20. சீருடை யாண்மை செய்கையின் அறிப

3. பழியாப் பத்து
21. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் யாப்பி லோரை இயல்குணம் பழியார்22. மீப்பி லோரை மீக்குணம் பழியார்23. பெருமை உடையதன் அருமை பழியார்24. அருமை யுடையதன் பெருமை பழியார்25. நிறையச் செய்யாக் குறைவினை பழியார்26. முறையில் அரசர்நாட் டிருந்து பழியார்27. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்28. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்29. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்30. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.

4. துவ்வாப் பத்து
31. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது32. கழிதறு கண்மை பேடியின் துவ்வாது33. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது34. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது35. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது36. பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது37. கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது38. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது39. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது40. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.

5. அல்ல பத்து
41. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்42. தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று43. ஈரலில் லாதது கிளைநட் பன்று44. சோராக் கையன் சொன்மலை யல்லன்45. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்46. நேராமற் கற்றது கல்வி யன்று47. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று48. அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று49. திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று50. மறுபிறப் பறியா ததுமூப் பன்று.

6. இல்லைப் பத்து
51. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை52. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை53. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை54. வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை55. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை56. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை57. நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை58. இசையின் பெரியதோர் எச்ச மில்லை59. இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை60. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை

7. பொய்ப் பத்து
61. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரறவி னோன்இனிது வாழா மைபொய்62. பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய்63. கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய்64. காலம்அறி யாதோன் கையுறல் பொய்65. மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய்66. உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய்67. சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய்68. பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய்69. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்70. வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய்.

8. எளிய பத்து
71. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது72. உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது73. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது74. குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது75. துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது76. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது77. உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது78. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது80. சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது

9. நல்கூர்ந்த பத்து
81. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று83. செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று84. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று85. தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று86. முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று87. சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று88. அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று89. உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று90. நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.

10. தண்டாப் பத்து
91. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்92. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்93. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்94. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான்95. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்96. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்97. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்98. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்99. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான்.

முதுமொழிக்காஞ்சி முற்றிற்று.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.