LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-100

 

4.100.திருவேகம்பம் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர். 
தேவியார் - காமாட்சியம்மை. 
956 ஓதுவித் தாய்முன் னறவுரை காட்டி
யமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய்
கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி
யம்வளாரால்
மோதுவிப் பாயுகப் பாய்முனி வாய்கச்சி
யேகம்பனே. 
4.100.1
காஞ்சிபுரத்தில் ஒற்றை மாமர நிழலில் இருக்கும் பெருமானே! அடியேனுடைய வாழ்க்கையின் முற்பகுதியில் சமணருடைய அறவுரைகளைப் பின்பற்றத்தக்கனவாக உள்ளத்தில் தெரிவித்துச் சமண சமய நூல்களை ஓதுமாறு செய்தாய். பிறகு அவர்களே என்னை அழிப்பதற்கு முயலுமாறு செய்தாய். கொடிய நோயினால் அடியேன் பிணிக்கப்பட்டிருந்த நிலையை நீக்கினாய். அடியேனுடைய உள்ளத்தில் கலந்து சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய். உன்னுடைய திருத்தொண்டில் தவறு செய்வேனாயின் அடியேனைப் புளிய மரக்குச்சியால் அடித்துத் தண்டிப்பாயாக. நீ சர்வ சுதந்திரன் ஆதலின் நீ விரும்பியதை உகப்பதும் விரும்பாததை வெறுப்பதும் செய்வாய். அடியேனை, உன் திருவுள்ளம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நடத்துவாயாக.
957 எத்தைக்கொண் டெத்தகை யேழை யமனொ
டிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னக்
கோகுசெய்தாய்
முத்திற் றிரளும் பளிங்கினிற் சோதியு
மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி
யேகம்பனே. 
4.100.2
முத்தின் குவியலும் பளிங்கின் ஒளியும் செறிந்த பவளக் கொத்தினை ஒத்துச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்திருக்கும் கச்சி ஏகம்பனே! யாது காரணம் பற்றி அடியேனை எப்பேர்ப்பட்ட அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்ற இழிவினைச் செய்துவிட்டாய்?
958 மெய்யம்பு கோத்த விசயனொ டன்றொரு
வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய் தாய்புர
மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி போற்றாக்
கயவர்நெஞ்சில்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில் சூழ்கச்சி
யேகம்பனே. 
4.100.3
கச்சி ஏகம்பனே! உண்மையாக அம்புகளை வில்லில் சேர்த்துப் போரிட்ட அருச்சுனனோடு அக் காலத்தில் ஒரு வேடன் வடிவினனாய்ப் பொய்யாக அம்பை வில்லில் சேர்த்து அவனோடு போரிட்டு அவனுக்கு அம்பறாத் தூணியை அருளிச் செய்தவனே! முப்புரமும் தீக்கு இரையாகுமாறு கைகளால் அம்பு எய்தவனே! உன்னுடைய வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளைப் போற்றாத கயவர்களுடைய உள்ளத்தில் மாயையால் உண்மையை மறைத்தல் செய்தவனே! குய்யம் - வஞ்சனை. (சிந்தாமணி-253)
959 குறிக்கொண் டிருந்துசெந் தாமரை யாயிரம்
வைகல்வைகல்
நெறிப்பட விண்டை புனைகின்ற மாலை
நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண்
சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம்
பிஞ்ஞகனே. 
4.100.4
மதியின் கூறாகிய பிறையை அணிந்த நீண்ட சடையனே! பெரிய காஞ்சி மாநகரில் உள்ளாயாய்த் தலைக்கோலம் என்ற அணியை அணிந்தவனே! நாளும் ஆயிரம் பூக்களால் இண்டை மாலை தொடுத்துச் சிவபெருமானுக்கு அணிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து நாள்தோறும் ஆயிரம் செந்தாமரை மலர்களால் வரிசை அமைய இண்டை மாலையைத் தொடுக்கின்ற திருமாலுடைய மனநிறைவை அழிப்பவன் போல நீலகண்டனாகிய நீ ஒரு பூவைக் குறையச் செய்து அப்பூவின் தானத்தில் செந்தாமரை போன்ற தன் கண்ணை இடந்து அவன் பூவாகத் தொடுப்பதற்காக அவன் கண் ஒன்றனைத் தோண்டி எடுக்குமாறு செய்தாயே.
960 960,உரைக்குங் கழிந்திங் குணர்வரி யானுள்கு
வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி
ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மாலெண் வசுக்களே
காதசர்கள்
இரைக்கு மமிர்தர்க் கறியவொண் ணானெங்க
ளேகம்பனே. 
4.100.5
சொற்களால் தன் பெருமையைச் சொல்ல இயலாதவனாய், மனத்தாலும் உணர்வதற்கு அரியவனாய்த் தன்னை வணங்கு பவர்களுடைய வினைகளைச் செயலற்றன ஆக்குவான் என்ற கருத்தொடு கையால் தொழுவதே அல்லாமல், எங்கள் ஏகம்பப் பெருமான் பிரமன், திருமால், ஆதித்தர் பன்னிருவர், வசுக்கள் எண்மர், உருத்திரர் பதினொருவர் முதலாகத் தன்னை உரத்த குரலில் துதிக்கும் தேவர்களுக்கும் உள்ளவாறு அறிய இயலாதவன் ஆவான்.
961 கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே
காண்பதற்கு
உருகிற்றெ னுள்ளமும் நானுங் கிடந்தலந்
தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால வாயா
திருவாரூரா
ஒருபற்றி லாமையுங் கண்டிரங் காய்கச்சி
யேகம்பனே. 
4.100.6
திருவொற்றியூரா! திருவாலவாயா! திருவாரூரா! கச்சிஏகம்பனே! அடியேன் தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக உன் திருவடியைக் காண்பதற்கு அடியேனுடைய உள்ளம் உருகுகிறது. அடியேனும் கிடந்து வருந்தி இளைத்துச் செயலற்று விட்டேன். அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை என்பதனையும் கண்டு அடியேன்மாட்டு இரக்கம் கொள்வாயாக.
962 அரியய னிந்திரன் சந்திரா தித்த
ரமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை யாருணங்
காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக முனிவர்
புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை யேகம்ப வென்னோ
திருக்குறிப்பே. 
4.100.7
தீப் போன்ற ஒளியை உடைய சிவந்த சடைமுடியனாகிய ஏகம்பனே! திருமால், பிரமன், இந்திரன், சந்திரன், சூரியன் முதலிய தேவர்கள் எல்லோரும் உரிய உன்னுடைய வெற்றி பொருந்திய கோயிலின் முதல்வாசலில் உன் காட்சியை விரும்பி வாடிக் கிடக்கின்றார்கள். முறுக்கேறிய சிவந்த சடைகளை உடைய, சிவானந்த போகத்தைத் துய்க்க விரும்பும் முனிவர்களும் உன் காட்சி கிட்டாமையால் தனிமைத் துன்பம் உறுகின்றார்கள். அவர்களுக்குக் காட்சி வழங்குவது பற்றி உன் திருவுள்ளம் யாதோ? அருளுவாயாக.
963 பாம்பரைச் சேர்த்திப் படருஞ் சடைமுடிப்
பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத் தன்பர்கள்
கூடிப்பன்னாள்
சாம்பரைப் பூசித் தரையிற் புரண்டுநின்
றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண் டாய்கச்சி
யேகம்பனே. 
4.100.8
பாம்பினை இடுப்பில் இறுகக் கட்டிப் பரவிய சடைமுடியை உடைய பால் நிறத்தனே! சச்சி ஏகம்பனே! அடியார்கள் இருகைகளையும் குவித்துக் கொண்டு திருநீற்றைப் பூசிக்கொண்டு அடியார் குழாத்துடன் கூடிப் பலநாள்களாகத் தரையில் புரண்டு உன் திருவடிகளே தங்களுக்கு அடைக்கலம் என்று கூறிவந்து அடைந்துள்ளனர். அவர்களுக்கு நீ இரங்கி அருளுவாயாக.
964 ஏன்றுகொண் டாயென்னை யெம்பெரு மானினி
யல்லமென்னில்
சான்றுகண் டாயிவ் வுலகமெல் லாந்தனி
யேனென்றெனை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை
யொற்றியெல்லாம்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய
சுடர்வண்ணனே. 
4.100.9
கச்சி ஏகம்பத்தில் விரும்பி உறைகின்ற ஒளி வடிவினனே! எம் பெருமானே! அடியேனை உன் அடியவன் என்று ஏற்றுக் கொண்ட நீ இப்பொழுது அடியேனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால், நீ அடியேனை ஏற்றுத் கொண்டதற்கு இவ்வுலகம் முழுதும் சாட்சி என்பதனை நினைத்துப்பார். தன் உணர்வு இல்லாதவன் என்று அடியேனைப் பற்றி நின்ற ஐம்பொறிகளுக்கும் போக்கியப் பொருளாக வழங்கிப் பின் அந்தப் போக்கியப் பொருளாயிருந்த தன்மையிலிருந்து அடியேனை மீட்டுக் கொண்டாய் என்பதனை உளம் கொள்வாயாக.
965 உந்திநின் றார்உன்றன் ஓலக்கச் சூளைகள்
வாய்தல் பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம்
பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு மாலு
மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி யெங்ஙன மோவந்
திறைஞ்சுவதே. 
4.100.10
மதில்கள் உடைய காஞ்சி நகரில் உறைபவனே! உன்னுடைய திருவோலக்க மண்டபத்தின் வாயிலைப் பொருந்தித் தேவலோக அரம்பையர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நிற்கிறார்கள். பழைய வானவர் கூட்டத்தினர் தமக்கு இடப்படும் திருத்தொண்டு யாது என்று அறிவதற்கு ஓலக்கத்தில் நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறார்கள். பிரமனும் திருமாலும் அம்மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள். இவ்விடத்தில் நிற்கின்ற அடியோங்கள் அவ்வளவு கூட்டம் நிரம்பிய உன் திருவோலக்க மண்டபத்தில் எங்ஙனம் வந்து உன்னைக் கண்டு வழிபடல் இயலும்?
திருச்சிற்றம்பலம்

 

 

4.100.திருவேகம்பம் 

திருவிருத்தம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர். 

தேவியார் - காமாட்சியம்மை. 

 

 

956 ஓதுவித் தாய்முன் னறவுரை காட்டி

யமணரொடே

காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய்

கலந்தருளிப்

போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி

யம்வளாரால்

மோதுவிப் பாயுகப் பாய்முனி வாய்கச்சி

யேகம்பனே. 

4.100.1

 

  காஞ்சிபுரத்தில் ஒற்றை மாமர நிழலில் இருக்கும் பெருமானே! அடியேனுடைய வாழ்க்கையின் முற்பகுதியில் சமணருடைய அறவுரைகளைப் பின்பற்றத்தக்கனவாக உள்ளத்தில் தெரிவித்துச் சமண சமய நூல்களை ஓதுமாறு செய்தாய். பிறகு அவர்களே என்னை அழிப்பதற்கு முயலுமாறு செய்தாய். கொடிய நோயினால் அடியேன் பிணிக்கப்பட்டிருந்த நிலையை நீக்கினாய். அடியேனுடைய உள்ளத்தில் கலந்து சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய். உன்னுடைய திருத்தொண்டில் தவறு செய்வேனாயின் அடியேனைப் புளிய மரக்குச்சியால் அடித்துத் தண்டிப்பாயாக. நீ சர்வ சுதந்திரன் ஆதலின் நீ விரும்பியதை உகப்பதும் விரும்பாததை வெறுப்பதும் செய்வாய். அடியேனை, உன் திருவுள்ளம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நடத்துவாயாக.

 

 

957 எத்தைக்கொண் டெத்தகை யேழை யமனொ

டிசைவித்தெனைக்

கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னக்

கோகுசெய்தாய்

முத்திற் றிரளும் பளிங்கினிற் சோதியு

மொய்பவளத்

தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி

யேகம்பனே. 

4.100.2

 

  முத்தின் குவியலும் பளிங்கின் ஒளியும் செறிந்த பவளக் கொத்தினை ஒத்துச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்திருக்கும் கச்சி ஏகம்பனே! யாது காரணம் பற்றி அடியேனை எப்பேர்ப்பட்ட அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்ற இழிவினைச் செய்துவிட்டாய்?

 

 

958 மெய்யம்பு கோத்த விசயனொ டன்றொரு

வேடுவனாய்ப்

பொய்யம்பெய் தாவ மருளிச்செய் தாய்புர

மூன்றெரியக்

கையம்பெய் தாய்நுன் கழலடி போற்றாக்

கயவர்நெஞ்சில்

குய்யம்பெய் தாய்கொடி மாமதில் சூழ்கச்சி

யேகம்பனே. 

4.100.3

 

  கச்சி ஏகம்பனே! உண்மையாக அம்புகளை வில்லில் சேர்த்துப் போரிட்ட அருச்சுனனோடு அக் காலத்தில் ஒரு வேடன் வடிவினனாய்ப் பொய்யாக அம்பை வில்லில் சேர்த்து அவனோடு போரிட்டு அவனுக்கு அம்பறாத் தூணியை அருளிச் செய்தவனே! முப்புரமும் தீக்கு இரையாகுமாறு கைகளால் அம்பு எய்தவனே! உன்னுடைய வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளைப் போற்றாத கயவர்களுடைய உள்ளத்தில் மாயையால் உண்மையை மறைத்தல் செய்தவனே! குய்யம் - வஞ்சனை. (சிந்தாமணி-253)

 

 

959 குறிக்கொண் டிருந்துசெந் தாமரை யாயிரம்

வைகல்வைகல்

நெறிப்பட விண்டை புனைகின்ற மாலை

நிறையழிப்பான்

கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண்

சூல்விப்பதே

பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம்

பிஞ்ஞகனே. 

4.100.4

 

  மதியின் கூறாகிய பிறையை அணிந்த நீண்ட சடையனே! பெரிய காஞ்சி மாநகரில் உள்ளாயாய்த் தலைக்கோலம் என்ற அணியை அணிந்தவனே! நாளும் ஆயிரம் பூக்களால் இண்டை மாலை தொடுத்துச் சிவபெருமானுக்கு அணிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து நாள்தோறும் ஆயிரம் செந்தாமரை மலர்களால் வரிசை அமைய இண்டை மாலையைத் தொடுக்கின்ற திருமாலுடைய மனநிறைவை அழிப்பவன் போல நீலகண்டனாகிய நீ ஒரு பூவைக் குறையச் செய்து அப்பூவின் தானத்தில் செந்தாமரை போன்ற தன் கண்ணை இடந்து அவன் பூவாகத் தொடுப்பதற்காக அவன் கண் ஒன்றனைத் தோண்டி எடுக்குமாறு செய்தாயே.

 

 

960 960,உரைக்குங் கழிந்திங் குணர்வரி யானுள்கு

வார்வினையைக்

கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி

ரோர்களெல்லாம்

விரைக்கொண் மலரவன் மாலெண் வசுக்களே

காதசர்கள்

இரைக்கு மமிர்தர்க் கறியவொண் ணானெங்க

ளேகம்பனே. 

4.100.5

 

  சொற்களால் தன் பெருமையைச் சொல்ல இயலாதவனாய், மனத்தாலும் உணர்வதற்கு அரியவனாய்த் தன்னை வணங்கு பவர்களுடைய வினைகளைச் செயலற்றன ஆக்குவான் என்ற கருத்தொடு கையால் தொழுவதே அல்லாமல், எங்கள் ஏகம்பப் பெருமான் பிரமன், திருமால், ஆதித்தர் பன்னிருவர், வசுக்கள் எண்மர், உருத்திரர் பதினொருவர் முதலாகத் தன்னை உரத்த குரலில் துதிக்கும் தேவர்களுக்கும் உள்ளவாறு அறிய இயலாதவன் ஆவான்.

 

 

961 கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே

காண்பதற்கு

உருகிற்றெ னுள்ளமும் நானுங் கிடந்தலந்

தெய்த்தொழிந்தேன்

திருவொற்றி யூரா திருவால வாயா

திருவாரூரா

ஒருபற்றி லாமையுங் கண்டிரங் காய்கச்சி

யேகம்பனே. 

4.100.6

 

  திருவொற்றியூரா! திருவாலவாயா! திருவாரூரா! கச்சிஏகம்பனே! அடியேன் தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக உன் திருவடியைக் காண்பதற்கு அடியேனுடைய உள்ளம் உருகுகிறது. அடியேனும் கிடந்து வருந்தி இளைத்துச் செயலற்று விட்டேன். அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை என்பதனையும் கண்டு அடியேன்மாட்டு இரக்கம் கொள்வாயாக.

 

 

962 அரியய னிந்திரன் சந்திரா தித்த

ரமரரெல்லாம்

உரியநின் கொற்றக் கடைத்தலை யாருணங்

காக்கிடந்தார்

புரிதரு புன்சடைப் போக முனிவர்

புலம்புகின்றார்

எரிதரு செஞ்சடை யேகம்ப வென்னோ

திருக்குறிப்பே. 

4.100.7

 

  தீப் போன்ற ஒளியை உடைய சிவந்த சடைமுடியனாகிய ஏகம்பனே! திருமால், பிரமன், இந்திரன், சந்திரன், சூரியன் முதலிய தேவர்கள் எல்லோரும் உரிய உன்னுடைய வெற்றி பொருந்திய கோயிலின் முதல்வாசலில் உன் காட்சியை விரும்பி வாடிக் கிடக்கின்றார்கள். முறுக்கேறிய சிவந்த சடைகளை உடைய, சிவானந்த போகத்தைத் துய்க்க விரும்பும் முனிவர்களும் உன் காட்சி கிட்டாமையால் தனிமைத் துன்பம் உறுகின்றார்கள். அவர்களுக்குக் காட்சி வழங்குவது பற்றி உன் திருவுள்ளம் யாதோ? அருளுவாயாக.

 

 

963 பாம்பரைச் சேர்த்திப் படருஞ் சடைமுடிப்

பால்வண்ணனே

கூம்பலைச் செய்த கரதலத் தன்பர்கள்

கூடிப்பன்னாள்

சாம்பரைப் பூசித் தரையிற் புரண்டுநின்

றாள்சரணென்

றேம்பலிப் பார்கட் கிரங்குகண் டாய்கச்சி

யேகம்பனே. 

4.100.8

 

  பாம்பினை இடுப்பில் இறுகக் கட்டிப் பரவிய சடைமுடியை உடைய பால் நிறத்தனே! சச்சி ஏகம்பனே! அடியார்கள் இருகைகளையும் குவித்துக் கொண்டு திருநீற்றைப் பூசிக்கொண்டு அடியார் குழாத்துடன் கூடிப் பலநாள்களாகத் தரையில் புரண்டு உன் திருவடிகளே தங்களுக்கு அடைக்கலம் என்று கூறிவந்து அடைந்துள்ளனர். அவர்களுக்கு நீ இரங்கி அருளுவாயாக.

 

 

964 ஏன்றுகொண் டாயென்னை யெம்பெரு மானினி

யல்லமென்னில்

சான்றுகண் டாயிவ் வுலகமெல் லாந்தனி

யேனென்றெனை

ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை

யொற்றியெல்லாம்

சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய

சுடர்வண்ணனே. 

4.100.9

 

  கச்சி ஏகம்பத்தில் விரும்பி உறைகின்ற ஒளி வடிவினனே! எம் பெருமானே! அடியேனை உன் அடியவன் என்று ஏற்றுக் கொண்ட நீ இப்பொழுது அடியேனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால், நீ அடியேனை ஏற்றுத் கொண்டதற்கு இவ்வுலகம் முழுதும் சாட்சி என்பதனை நினைத்துப்பார். தன் உணர்வு இல்லாதவன் என்று அடியேனைப் பற்றி நின்ற ஐம்பொறிகளுக்கும் போக்கியப் பொருளாக வழங்கிப் பின் அந்தப் போக்கியப் பொருளாயிருந்த தன்மையிலிருந்து அடியேனை மீட்டுக் கொண்டாய் என்பதனை உளம் கொள்வாயாக.

 

 

965 உந்திநின் றார்உன்றன் ஓலக்கச் சூளைகள்

வாய்தல் பற்றித்

துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம்

பணியறிவான்

வந்துநின் றாரய னுந்திரு மாலு

மதிற்கச்சியாய்

இந்தநின் றோமினி யெங்ஙன மோவந்

திறைஞ்சுவதே. 

4.100.10

 

  மதில்கள் உடைய காஞ்சி நகரில் உறைபவனே! உன்னுடைய திருவோலக்க மண்டபத்தின் வாயிலைப் பொருந்தித் தேவலோக அரம்பையர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நிற்கிறார்கள். பழைய வானவர் கூட்டத்தினர் தமக்கு இடப்படும் திருத்தொண்டு யாது என்று அறிவதற்கு ஓலக்கத்தில் நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறார்கள். பிரமனும் திருமாலும் அம்மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள். இவ்விடத்தில் நிற்கின்ற அடியோங்கள் அவ்வளவு கூட்டம் நிரம்பிய உன் திருவோலக்க மண்டபத்தில் எங்ஙனம் வந்து உன்னைக் கண்டு வழிபடல் இயலும்?

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.