|
||||||||
நான்காம் திருமுறை-106 |
||||||||
4.106.திருப்புகலூர்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்.
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
1009 தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன்
னடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன
கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத்
தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத்
திருத்திடுமே.
4.106.1
புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளை உடைய திருப்புகலூர்ப் பெருமானை அடைக்கலமாகப் பற்றி அவன் திருவடிகளை அடைந்தேன். தன் திருவடிகளை அடைக்கலமாக அடைந்த அளவில் அவன் செய்வனவற்றைக் கேளுங்கள். என் பிறவிப் பிணியைப் போக்கி என் வினையாகிய கட்டினை அறுத்து நீக்கி எழு வகைப்பட்ட நரகத்தில் என்னைக் கிடக்குமாறு விடாமல் சிவலோகத்தில் கொண்டு சேர்த்து விடுவான்.
1010 பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர்
மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்த னேதமி
யேற்கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங் கும்புக
லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும் பைக்கிடம்
யாதுசொல்லே.
4.106.2
பொன்னார் மேனியனே! பார்வதி பாகனே! தனித்து வருந்தும் அடியேனுக்குக் கருணை செய்வாயாக. புன்னை மலர்களிலே வண்டுகள் உறங்கும் புகலூர்த் தலைவனே! யான் இல்லேனாயின் துன்பம் தங்குவதற்கு வேறு இடம் யாது உள்ளது?
1011 பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக
லூரரசே
மன்னுள தேவர்கள் தேடு மருந்தே
வலஞ்சுழியாய்
என்னள வேயுனக் காட்பட் டிடைக்கலத்
தேகிடப்பார்
உன்னள வேயெனக் கொன்று மிரங்காத
வுத்தமனே.
4.106.4
பொன்னை ஒத்த நீண்ட சடைக்கண் கொன்றைப்பூவை அணிந்தவனே! புகலூருக்கு அரசனே! பெருமையை உடைய தேவர்கள் தேடும் அமுதமே! திருவலஞ்சுழிப்பெருமானே! எனக்குச் சிறிதும் இரக்கம் காட்டாத மேம்பட்ட பண்பினனே! உனக்கு அடிமையாக அமைந்தும் கட்டுக்கும் வீட்டுக்கும் இடையே கிடப்பவர் என்னைத் தவிர உன் அடியவருள் வேறு யாவா உளர்?
1012 ஓணப் பிரானு மொளிர்மா மலர்மிசை
யுத்தமனும்
காணப் பராவியுங் காண்கின் றிலர்கர
நாலைந்துடைத்
தோணப் பிரானை வலிதொலைத் தோன்றொல்லை
நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக் குறுகா
கொடுவினையே.
4.106.10
திருவோணநாளுக்குத் தலைவனான திருமாலும் பிரகாசிக்கும் பெரிய தாமரைமலரில் உறையும் பிரமனும் உன்னைக் காண்பதற்காக வேண்டியும் காண இயலாதவர் ஆயினர். இருபது தோள்களை உடைய மேம்பட்ட தலைவனாகச் செருக்குக் கொண்ட இராவணனுடைய வலிமையை அழித்தவனாகிய, பண்டு தொட்டு நீர்வளம் மிக்க புகலூரில் உறையும் சாய்ந்த திருமேனியை உடைய பிரானை, அணுகிய அளவில், கொடிய தீவினைகள் நம்மைத் துன்புறுத்த நெருங்கிவாரா.
திருச்சிற்றம்பலம்
4.106.திருப்புகலூர் திருவிருத்தம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அக்கினீசுவரர். தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
1009 தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் னடியடையப் புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோ என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத் தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே. 4.106.1
புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளை உடைய திருப்புகலூர்ப் பெருமானை அடைக்கலமாகப் பற்றி அவன் திருவடிகளை அடைந்தேன். தன் திருவடிகளை அடைக்கலமாக அடைந்த அளவில் அவன் செய்வனவற்றைக் கேளுங்கள். என் பிறவிப் பிணியைப் போக்கி என் வினையாகிய கட்டினை அறுத்து நீக்கி எழு வகைப்பட்ட நரகத்தில் என்னைக் கிடக்குமாறு விடாமல் சிவலோகத்தில் கொண்டு சேர்த்து விடுவான்.
1010 பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர் மென்முலையாள் தன்னை வகுத்தன்ன பாகத்த னேதமி யேற்கிரங்காய் புன்னை மலர்த்தலை வண்டுறங் கும்புக லூரரசே என்னை வகுத்திலை யேலிடும் பைக்கிடம் யாதுசொல்லே. 4.106.2
பொன்னார் மேனியனே! பார்வதி பாகனே! தனித்து வருந்தும் அடியேனுக்குக் கருணை செய்வாயாக. புன்னை மலர்களிலே வண்டுகள் உறங்கும் புகலூர்த் தலைவனே! யான் இல்லேனாயின் துன்பம் தங்குவதற்கு வேறு இடம் யாது உள்ளது?
1011 பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக லூரரசே மன்னுள தேவர்கள் தேடு மருந்தே வலஞ்சுழியாய் என்னள வேயுனக் காட்பட் டிடைக்கலத் தேகிடப்பார் உன்னள வேயெனக் கொன்று மிரங்காத வுத்தமனே. 4.106.4
பொன்னை ஒத்த நீண்ட சடைக்கண் கொன்றைப்பூவை அணிந்தவனே! புகலூருக்கு அரசனே! பெருமையை உடைய தேவர்கள் தேடும் அமுதமே! திருவலஞ்சுழிப்பெருமானே! எனக்குச் சிறிதும் இரக்கம் காட்டாத மேம்பட்ட பண்பினனே! உனக்கு அடிமையாக அமைந்தும் கட்டுக்கும் வீட்டுக்கும் இடையே கிடப்பவர் என்னைத் தவிர உன் அடியவருள் வேறு யாவா உளர்?
1012 ஓணப் பிரானு மொளிர்மா மலர்மிசை யுத்தமனும் காணப் பராவியுங் காண்கின் றிலர்கர நாலைந்துடைத் தோணப் பிரானை வலிதொலைத் தோன்றொல்லை நீர்ப்புகலூர்க் கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே. 4.106.10
திருவோணநாளுக்குத் தலைவனான திருமாலும் பிரகாசிக்கும் பெரிய தாமரைமலரில் உறையும் பிரமனும் உன்னைக் காண்பதற்காக வேண்டியும் காண இயலாதவர் ஆயினர். இருபது தோள்களை உடைய மேம்பட்ட தலைவனாகச் செருக்குக் கொண்ட இராவணனுடைய வலிமையை அழித்தவனாகிய, பண்டு தொட்டு நீர்வளம் மிக்க புகலூரில் உறையும் சாய்ந்த திருமேனியை உடைய பிரானை, அணுகிய அளவில், கொடிய தீவினைகள் நம்மைத் துன்புறுத்த நெருங்கிவாரா.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|