|
||||||||
நான்காம் திருமுறை-107 |
||||||||
4.107.திருக்கழிப்பாலை
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்.
தேவியார் - வேதநாயகியம்மை.
1013 நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி
நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப் பாலை
யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த
பரிசறியோம்
எய்தப் பெறினிரங் காதுகண் டாய்நம்
மிறையவனே.
4.107.1
நெய்தல் நிலத்திலுள்ள நாரை தன் பார்ப்பு என்று கருதி அணுகி வெண்தாழை மடலைத் தழுவும் அழகிய கழிப்பாலையில் உறைபவனே! இளைய பிறைச் சந்திரனோடு தலையில் பாம்பையும் அருகில் வைத்த திறம் பற்றி யாம் அறியோம். தன் அருகே பிறைவரினும் பிறை அருகே தான் அணுகப் பெறினும் பாம்பு இரக்கமின்றி பிறையை விழுங்கிவிடும் என்பதனை நம் தலைவனாகிய நீ அறிவாய் அல்லையோ?
1014 பருமா மணியும் பவளமுத் தும்பரந்
துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் தெற்றப்
பொலிந்திலங்குங்
கருமா மிடறுடைக் கண்டனெம் மான்கழிப்
பாலையெந்தை
பெருமா வைனென்னை யாளுடை யானிப்
பெருநிலத்தே.
4.107.2
மலையை ஒத்த உயர்ந்த கடற்கரை மீது பெரிய மணி பவளம் முத்து என்பனவற்றைப் பரவிச் செலுத்தி அலைகள் கொண்டு வந்து சேர்ப்பதனால் விளங்கித் தோன்றும் கழிப்பாலை என்ற திருத்தலத்தில் உறையும் எம் தலைவன், எந்தை பெருமான் ஆகிய நீலகண்டன் இப்பேருலகில் அடியேனை அடிமையாகக் கொண்டவன் ஆவான்.
1015 நாட்பட் டிருந்தின்ப மெய்தலுற் றிங்கு
நமன்றமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி
ரார் தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப்
பாலையண்ணற்
காட்பட் டொழிந்தமன் றேவல்ல மாயிவ்
வகலிடத்தே.
4.107.3
இப்பரந்த உலகில் பல காலம் உயிர்வாழ்ந்து சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொள்ளப்பட்டு அழிவதன் முன்னம், குளிர்ந்த நீர் நிலைகளையும், தண்டு நீண்ட தாமரைப் பொய்கைகளையும் உடைய அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி வல்லமை உடையோமாய் யமபயத்திலிருந்து விடுபட்டோம்.
திருச்சிற்றம்பலம்
4.107.திருக்கழிப்பாலை திருவிருத்தம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பால்வண்ணநாதர். தேவியார் - வேதநாயகியம்மை.
1013 நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச்சென்று கைதை மடற்புல்கு தென்கழிப் பாலை யதனுறைவாய் பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம் எய்தப் பெறினிரங் காதுகண் டாய்நம் மிறையவனே. 4.107.1
நெய்தல் நிலத்திலுள்ள நாரை தன் பார்ப்பு என்று கருதி அணுகி வெண்தாழை மடலைத் தழுவும் அழகிய கழிப்பாலையில் உறைபவனே! இளைய பிறைச் சந்திரனோடு தலையில் பாம்பையும் அருகில் வைத்த திறம் பற்றி யாம் அறியோம். தன் அருகே பிறைவரினும் பிறை அருகே தான் அணுகப் பெறினும் பாம்பு இரக்கமின்றி பிறையை விழுங்கிவிடும் என்பதனை நம் தலைவனாகிய நீ அறிவாய் அல்லையோ?
1014 பருமா மணியும் பவளமுத் தும்பரந் துந்திவரை பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் தெற்றப் பொலிந்திலங்குங் கருமா மிடறுடைக் கண்டனெம் மான்கழிப் பாலையெந்தை பெருமா வைனென்னை யாளுடை யானிப் பெருநிலத்தே. 4.107.2
மலையை ஒத்த உயர்ந்த கடற்கரை மீது பெரிய மணி பவளம் முத்து என்பனவற்றைப் பரவிச் செலுத்தி அலைகள் கொண்டு வந்து சேர்ப்பதனால் விளங்கித் தோன்றும் கழிப்பாலை என்ற திருத்தலத்தில் உறையும் எம் தலைவன், எந்தை பெருமான் ஆகிய நீலகண்டன் இப்பேருலகில் அடியேனை அடிமையாகக் கொண்டவன் ஆவான்.
1015 நாட்பட் டிருந்தின்ப மெய்தலுற் றிங்கு நமன்றமராற் கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார் தடத்துத் தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற் காட்பட் டொழிந்தமன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே. 4.107.3
இப்பரந்த உலகில் பல காலம் உயிர்வாழ்ந்து சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொள்ளப்பட்டு அழிவதன் முன்னம், குளிர்ந்த நீர் நிலைகளையும், தண்டு நீண்ட தாமரைப் பொய்கைகளையும் உடைய அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி வல்லமை உடையோமாய் யமபயத்திலிருந்து விடுபட்டோம்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|