LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-112

 

4.112.சரக்கறை 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
1039 விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம்
வெம்மழுவாட்
படையும் படையாய் நிரைத்தபல் பூதமும்
பாய்புலித்தோல்
உடையு முடைதலை மாலையு மாலைப்
பிறையொதுங்கும்
சடையு மிருக்குஞ் சரக்கறை யோவென்
றனிநெஞ்சமே. 
4.112.1
பகைவரோடு போரிடும் காளையை இவரும் பெரிய பாகனே! அடியேன் வேண்டி உரைப்பது இது. கொடிய மழுவாள் ஆகிய படையும், படைகளாய் வரிசைப் படுத்தப்பட்ட பெரிய பூதங்களும், பாய்கின்ற புலியின் தோலாகிய ஆடையும், உடைந்த தலைகளால் ஆகிய மாலையும், மாலையில் தோன்றும் வளர்பிறை தங்கும் சடைமுடியும் தங்கியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனிமையை விரும்பும் நெஞ்சம்?
1040 விஞ்சத் தடவரை வெற்பாவென் விண்ணப்ப
மேலிலங்கு
சங்கக் கலனுஞ் சரிகோ வணமுந்
தமருகமும்
அந்திப் பிறையு மனல்வா யரவும்
விரவியெல்லாம்
சந்தித் திருக்குஞ் சரக்கறை யோவென்
றனிநெஞ்சமே. 
4.112.2
உயரத்தில் மேம்பட்ட பெரிய பக்க மலைகளை உடைய கயிலை மலையானே! காதுகளில் விளங்கும் சங்கினாலாகிய காதணியும், வளைவாக உடுக்கப்பட்ட கோவணமும், உடுக்கையும், அந்தியில் தோன்றும் வளர்பிறையும், விடத்தை உடைய வாயதாகிய பாம்பும் ஆகிய எல்லாம் கலந்து கூடியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1041 வீந்தார் தலைகல னேந்தீயென் விண்ணப்ப
மேலிலங்கு
சாந்தாய வெந்த தவளவெண் ணீறுந்
தகுணிச்சமும்
பூந்தா மரைமேனிப் புள்ளி யுழைமா
னதள்புலித்தோல்
தாந்தா மிருக்குஞ் சரக்கறை யோவென்
றனிநெஞ்சமே. 
4.112.3
இறந்தவர் தலையைப் பிச்சை எடுக்கும் பாத்திரமாக ஏந்தி இருப்பவனே! திருமேனியில் விளங்கும் சந்தனம் போன்ற வெள்ளிய திருநீறும், தகுணிச்சம் என்ற இசைக்கருவியும், பூத்த தாமரை போன்ற திருமேனியில் அணிந்துள்ள புள்ளிகளை உடைய மான்தோலும் புலித்தோலும் இருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1042 வெஞ்சமர் வேழத் துரியாயென் விண்ணப்ப
மேலிலங்கு
வஞ்சமா வந்த வருபுனற் கங்கையும்
வான்மதியும்
நஞ்சமா நாக நகுசிர மாலை
நகுவெண்டலை
தஞ்சமா வாழுஞ் சரக்கறை யோவென்
றனிநெஞ்சமே. 
4.112.4
கொடிய போரிட வந்த யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தவனே! தலையிலே விளங்குகின்ற வஞ்சனையாக வந்த நீரை உடைய கங்கையும், வானில் உலவும் பிறையும், விடத்தை உடைய பெரிய பாம்பும், சிரிக்கின்ற தலைகளால் ஆகிய மாலையும், பிச்சை எடுக்க உதவும் மண்டையோடும் வாழும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1043 வேலைக் கடனஞ்ச முண்டாயென் விண்ணப்ப
மேலிலங்கு
காலற்க டந்தா னிடங்கயி லாயமுங்
காமர்கொன்றை
மாலைப் பிறையு மணிவா யரவும்
விரவியெல்லாம்
சாலக் கிடக்குஞ் சரக்கறை யோவென்
றனிநெஞ்சமே.
4.112.5
கரையை உடைய பாற்கடலினின்றும் தோன்றிய விடத்தை அருந்தியவனே! கூற்றுவனை அழித்த உன்னுடைய கயிலாய மலையும், தலைமேலே விளங்கும் விருப்பம் மருவிய கொன்றை மாலையும் அதனோடு தோன்றும் பிறையும், அழகிய வாயை உடைய பாம்பும் எல்லாம் பெரிதும் கலந்து கிடக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1044 வீழிட்ட கொன்றையந் தாராயென் விண்ணப்ப
மேலிலங்கு
சூழிட் டிருக்குநற் சூளா மணியுஞ்
சுடலைநீறும்
ஏழிட் டிருக்குநல் லக்கு மரவுமென்
பாமையோடும்
தாழிட் டிருக்கும் சரக்கறை யோவென்
றனிநெஞ்சமே.
4.112.6
விரும்பப்பட்ட கொன்றை மாலையை அணிந்தவனே! தலையில் விளங்கும் ஒளி சூழ்ந்த சூளாமணி என்னும் தலைக்கு அணியும் மணி ஆபரணமும், சுடுகாட்டுச் சாம்பலும், எழு கோவையாக அமைக்கப்பட்ட சிறந்த அக்கு மணிமாலையும், பாம்பும், எலும்பும், ஆமையோடும் சேர்த்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1045 விண்டார் புரமூன்று மெய்தாயென் விண்ணப்ப
மேலிலங்கு
தொண்டா டியதொண் டடிப்பொடி நீறுந்
தொழுதுபாதம்
கண்டார்கள் கண்டிருக் குங்கயி லாயமுங்
காமர்கொன்றைத்
தண்டா ரிருக்குஞ் சரக்கறை யோவென்
றனிநெஞ்சமே.
4.112.7
பகைவருடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்தவனே! உன் மேல் விளங்கும் விருப்பம் மருவிய கொன்றையாகிய குளிர்ந்த மாலையும், தொண்டு செய்யும் அடியவர்களுடைய பாத தூளியும், தொழுது உன் திருவடியைத் தியானிப்பவர்கள் தரிசித்துக் கொண்டிருக்கும் கயிலாய மலையும் பொருந்தியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1046 விடுபட்டி யேறுகந் தேறீயென் விண்ணப்ப
மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழறாளம்
வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியு மத்தமும்
வாளரவும்
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென்
றனிநெஞ்சமே. 
4.112.8
அடக்கமின்றி வேண்டியவாறு திரியுமாறு விடப்பட்ட பட்டிக்காளையை விரும்பி வாகனமாகக் கொள்பவனே! கொடு கொட்டி, கொக்கரை, தக்கை, குழல், தாளம், வீணை, மொந்தை என்ற இசைக்கருவிகளும், உன் திருமேனியில் விளங்கும் கொன்றை வன்னி ஊமத்தம்பூ, பாம்பு என்பனவும் குணலைக் கூத்தாடும் கருவூலமோ அடியேன் தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.
1047 வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்ப
மேலிலங்கு
கண்டிகை பூண்டு கடிசூத் திரமேற்
கபாலவடம்
குண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட்
பூதப்படை
தண்டிவைத் திட்ட சரக்கறை யோவென்
றனிநெஞ்சமே. 
4.112.9
வெள்ளிய அலைகளை உடைய கங்கையைச் சடையில் ஏந்திய வேறுபட்டவனே! மார்பின் மேல் விளங்கும் கண்டிகையைக் கழுத்தில் பூண்டு, அரை நாண் கயிற்றின்மீது தலைகளை இணைத்த தலைமாலையை அணிந்து, நீர்ப்பாத்திரம், கொக்கரை என்ற இசைக்கருவி, வளைந்த பிறை, குட்டையான வடிவத்தை உடைய பூதப்படை இவற்றைப் பெருமானாகிய நீ சேகரித்து வைத்துள்ள சரக்கறையோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பம் செய்கிறேன்.
1048 வேதித்த வெம்மழு வாளீயென் விண்ணப்ப
மேலிலங்கு
சோதித் திருக்குநற் சூளா மணியுஞ்
சுடலைநீறும்
பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும்
பாய்புலித்தோல்
சாதித் திருக்குஞ் சரக்கறை யோவென்
றனிநெஞ்சமே. 
4.112.10
பகைவர் உடலைப் பிளக்கும் வெள்ளிய மழுப்படையை ஆள்பவனே! தலைமேல் விளங்கும் ஒளியுடைய சூளா மணியும், சுடுகாட்டுச் சாம்பலும், சிறுபிறையும், துண்டமான மண்டையோடும், பாயும் புலித்தோலும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் சரக்கறை அன்றோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பம் செய்கிறேன்.
1049 விவந்தா டியகழ லெந்தாயென் விண்ணப்ப
மேலிலங்கு
தவந்தா னெடுக்கத் தலைபத் திறுத்தனை
தாழ்புலித்தோல்
சிவந்தா டியபொடி நீறுஞ் சிரமாலை
சூடிநின்று
தவந்தா னிருக்குஞ் சரக்கறை யோவென்
றனிநெஞ்சமே. 
4.112.11
மற்றவர்களோடு மாறுபட்டு வந்து ஆடிய திருவடிகளை உடைய எம் தலைவனே! முற்பிறவிகளில் செய்து விளங்கிய தவத்தானாகிய இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட அவனுடைய பத்துத் தலைகளையும் சிதைத்தாய். முழந்தாளவு தாழ்ந்த புலியின்தோலும் செம்மேனியில் பூசப்பட்ட வெண் திருநீறும், தலைமாலையும் சூடிக் கொண்டு நீ தவ நிலையில் இருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனிநெஞ்சம் என்பதனை விண்ணப்பம் செய்கிறேன்.
திருச்சிற்றம்பலம்

4.112.சரக்கறை 

திருவிருத்தம் 

திருச்சிற்றம்பலம் 

 

1039 விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம்

வெம்மழுவாட்

படையும் படையாய் நிரைத்தபல் பூதமும்

பாய்புலித்தோல்

உடையு முடைதலை மாலையு மாலைப்

பிறையொதுங்கும்

சடையு மிருக்குஞ் சரக்கறை யோவென்

றனிநெஞ்சமே. 

4.112.1

 

  பகைவரோடு போரிடும் காளையை இவரும் பெரிய பாகனே! அடியேன் வேண்டி உரைப்பது இது. கொடிய மழுவாள் ஆகிய படையும், படைகளாய் வரிசைப் படுத்தப்பட்ட பெரிய பூதங்களும், பாய்கின்ற புலியின் தோலாகிய ஆடையும், உடைந்த தலைகளால் ஆகிய மாலையும், மாலையில் தோன்றும் வளர்பிறை தங்கும் சடைமுடியும் தங்கியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனிமையை விரும்பும் நெஞ்சம்?

 

 

1040 விஞ்சத் தடவரை வெற்பாவென் விண்ணப்ப

மேலிலங்கு

சங்கக் கலனுஞ் சரிகோ வணமுந்

தமருகமும்

அந்திப் பிறையு மனல்வா யரவும்

விரவியெல்லாம்

சந்தித் திருக்குஞ் சரக்கறை யோவென்

றனிநெஞ்சமே. 

4.112.2

 

  உயரத்தில் மேம்பட்ட பெரிய பக்க மலைகளை உடைய கயிலை மலையானே! காதுகளில் விளங்கும் சங்கினாலாகிய காதணியும், வளைவாக உடுக்கப்பட்ட கோவணமும், உடுக்கையும், அந்தியில் தோன்றும் வளர்பிறையும், விடத்தை உடைய வாயதாகிய பாம்பும் ஆகிய எல்லாம் கலந்து கூடியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.

 

 

1041 வீந்தார் தலைகல னேந்தீயென் விண்ணப்ப

மேலிலங்கு

சாந்தாய வெந்த தவளவெண் ணீறுந்

தகுணிச்சமும்

பூந்தா மரைமேனிப் புள்ளி யுழைமா

னதள்புலித்தோல்

தாந்தா மிருக்குஞ் சரக்கறை யோவென்

றனிநெஞ்சமே. 

4.112.3

 

  இறந்தவர் தலையைப் பிச்சை எடுக்கும் பாத்திரமாக ஏந்தி இருப்பவனே! திருமேனியில் விளங்கும் சந்தனம் போன்ற வெள்ளிய திருநீறும், தகுணிச்சம் என்ற இசைக்கருவியும், பூத்த தாமரை போன்ற திருமேனியில் அணிந்துள்ள புள்ளிகளை உடைய மான்தோலும் புலித்தோலும் இருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.

 

 

1042 வெஞ்சமர் வேழத் துரியாயென் விண்ணப்ப

மேலிலங்கு

வஞ்சமா வந்த வருபுனற் கங்கையும்

வான்மதியும்

நஞ்சமா நாக நகுசிர மாலை

நகுவெண்டலை

தஞ்சமா வாழுஞ் சரக்கறை யோவென்

றனிநெஞ்சமே. 

4.112.4

 

  கொடிய போரிட வந்த யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தவனே! தலையிலே விளங்குகின்ற வஞ்சனையாக வந்த நீரை உடைய கங்கையும், வானில் உலவும் பிறையும், விடத்தை உடைய பெரிய பாம்பும், சிரிக்கின்ற தலைகளால் ஆகிய மாலையும், பிச்சை எடுக்க உதவும் மண்டையோடும் வாழும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.

 

 

1043 வேலைக் கடனஞ்ச முண்டாயென் விண்ணப்ப

மேலிலங்கு

காலற்க டந்தா னிடங்கயி லாயமுங்

காமர்கொன்றை

மாலைப் பிறையு மணிவா யரவும்

விரவியெல்லாம்

சாலக் கிடக்குஞ் சரக்கறை யோவென்

றனிநெஞ்சமே.

4.112.5

 

  கரையை உடைய பாற்கடலினின்றும் தோன்றிய விடத்தை அருந்தியவனே! கூற்றுவனை அழித்த உன்னுடைய கயிலாய மலையும், தலைமேலே விளங்கும் விருப்பம் மருவிய கொன்றை மாலையும் அதனோடு தோன்றும் பிறையும், அழகிய வாயை உடைய பாம்பும் எல்லாம் பெரிதும் கலந்து கிடக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.

 

 

1044 வீழிட்ட கொன்றையந் தாராயென் விண்ணப்ப

மேலிலங்கு

சூழிட் டிருக்குநற் சூளா மணியுஞ்

சுடலைநீறும்

ஏழிட் டிருக்குநல் லக்கு மரவுமென்

பாமையோடும்

தாழிட் டிருக்கும் சரக்கறை யோவென்

றனிநெஞ்சமே.

4.112.6

 

  விரும்பப்பட்ட கொன்றை மாலையை அணிந்தவனே! தலையில் விளங்கும் ஒளி சூழ்ந்த சூளாமணி என்னும் தலைக்கு அணியும் மணி ஆபரணமும், சுடுகாட்டுச் சாம்பலும், எழு கோவையாக அமைக்கப்பட்ட சிறந்த அக்கு மணிமாலையும், பாம்பும், எலும்பும், ஆமையோடும் சேர்த்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.

 

 

1045 விண்டார் புரமூன்று மெய்தாயென் விண்ணப்ப

மேலிலங்கு

தொண்டா டியதொண் டடிப்பொடி நீறுந்

தொழுதுபாதம்

கண்டார்கள் கண்டிருக் குங்கயி லாயமுங்

காமர்கொன்றைத்

தண்டா ரிருக்குஞ் சரக்கறை யோவென்

றனிநெஞ்சமே.

4.112.7

 

  பகைவருடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்தவனே! உன் மேல் விளங்கும் விருப்பம் மருவிய கொன்றையாகிய குளிர்ந்த மாலையும், தொண்டு செய்யும் அடியவர்களுடைய பாத தூளியும், தொழுது உன் திருவடியைத் தியானிப்பவர்கள் தரிசித்துக் கொண்டிருக்கும் கயிலாய மலையும் பொருந்தியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.

 

 

1046 விடுபட்டி யேறுகந் தேறீயென் விண்ணப்ப

மேலிலங்கு

கொடுகொட்டி கொக்கரை தக்கை குழறாளம்

வீணைமொந்தை

வடுவிட்ட கொன்றையும் வன்னியு மத்தமும்

வாளரவும்

தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென்

றனிநெஞ்சமே. 

4.112.8

 

  அடக்கமின்றி வேண்டியவாறு திரியுமாறு விடப்பட்ட பட்டிக்காளையை விரும்பி வாகனமாகக் கொள்பவனே! கொடு கொட்டி, கொக்கரை, தக்கை, குழல், தாளம், வீணை, மொந்தை என்ற இசைக்கருவிகளும், உன் திருமேனியில் விளங்கும் கொன்றை வன்னி ஊமத்தம்பூ, பாம்பு என்பனவும் குணலைக் கூத்தாடும் கருவூலமோ அடியேன் தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன்.

 

 

1047 வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்ப

மேலிலங்கு

கண்டிகை பூண்டு கடிசூத் திரமேற்

கபாலவடம்

குண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட்

பூதப்படை

தண்டிவைத் திட்ட சரக்கறை யோவென்

றனிநெஞ்சமே. 

4.112.9

 

  வெள்ளிய அலைகளை உடைய கங்கையைச் சடையில் ஏந்திய வேறுபட்டவனே! மார்பின் மேல் விளங்கும் கண்டிகையைக் கழுத்தில் பூண்டு, அரை நாண் கயிற்றின்மீது தலைகளை இணைத்த தலைமாலையை அணிந்து, நீர்ப்பாத்திரம், கொக்கரை என்ற இசைக்கருவி, வளைந்த பிறை, குட்டையான வடிவத்தை உடைய பூதப்படை இவற்றைப் பெருமானாகிய நீ சேகரித்து வைத்துள்ள சரக்கறையோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பம் செய்கிறேன்.

 

 

1048 வேதித்த வெம்மழு வாளீயென் விண்ணப்ப

மேலிலங்கு

சோதித் திருக்குநற் சூளா மணியுஞ்

சுடலைநீறும்

பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும்

பாய்புலித்தோல்

சாதித் திருக்குஞ் சரக்கறை யோவென்

றனிநெஞ்சமே. 

4.112.10

 

  பகைவர் உடலைப் பிளக்கும் வெள்ளிய மழுப்படையை ஆள்பவனே! தலைமேல் விளங்கும் ஒளியுடைய சூளா மணியும், சுடுகாட்டுச் சாம்பலும், சிறுபிறையும், துண்டமான மண்டையோடும், பாயும் புலித்தோலும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் சரக்கறை அன்றோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பம் செய்கிறேன்.

 

 

1049 விவந்தா டியகழ லெந்தாயென் விண்ணப்ப

மேலிலங்கு

தவந்தா னெடுக்கத் தலைபத் திறுத்தனை

தாழ்புலித்தோல்

சிவந்தா டியபொடி நீறுஞ் சிரமாலை

சூடிநின்று

தவந்தா னிருக்குஞ் சரக்கறை யோவென்

றனிநெஞ்சமே. 

4.112.11

 

  மற்றவர்களோடு மாறுபட்டு வந்து ஆடிய திருவடிகளை உடைய எம் தலைவனே! முற்பிறவிகளில் செய்து விளங்கிய தவத்தானாகிய இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட அவனுடைய பத்துத் தலைகளையும் சிதைத்தாய். முழந்தாளவு தாழ்ந்த புலியின்தோலும் செம்மேனியில் பூசப்பட்ட வெண் திருநீறும், தலைமாலையும் சூடிக் கொண்டு நீ தவ நிலையில் இருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனிநெஞ்சம் என்பதனை விண்ணப்பம் செய்கிறேன்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.