LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-25

 

4.025.திருவதிகைவீரட்டானம் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். 
தேவியார் - திருவதிகைநாயகி. 
249 வெண்ணிலா மதியந் தன்னை
விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்றங்
குணர்வினுக் குணரக் கூறி
விண்ணிலார் மீயச் சூரார்
வேண்டுவார் 1வேண்டி லார்க்கே
அண்ணியார் பெரிதுஞ் சேயா
ரதிகைவீ ரட்ட னாரே.
4.025.1
தேவருலகிலும் இருப்பதோடு, நிலவுலகில் மீயச்சூர் முதலிய திருத்தலங்களில் உறைபவராய், தம்மை விரும்புபவருக்கு அண்மையில் உள்ளவராய், வேண்டாதவருக்குப் பெரிதும் தொலைவில் உள்ளவராய் விளங்கும் பெருமானார், வெள்ளிய ஒளிவீசும் பிறையை அது விரும்புமாறு விரிசடையிற் சூடி, அடியேன் உள்ளத்திலே ஞானஒளி நிலவப்புகுந்து நின்று, அவ்விடத்தில் உணர்விற்குப் பொருந்துமாறு உணர்த்த வேண்டியவற்றை உணர்த்தி, அதிகை வீரட்டத்தில் உள்ளார்.
250 பாடினார் மறைக ணான்கும்
பாயிருள் புகுந்தென் னுள்ளம்
கூடினார் கூட லால
வாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடன் மேவிச்
சூழ்சுடர் சுடலை வெண்ணீ
றாடினா ராடன் மேவி
யதிகைவீ ரட்ட னாரே.
4.025.2
கூடல் நகர ஆலவாய்க் கோயிலிலுள்ள பெருமான் நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு நறிய கொன்றை மாலையை விரும்பிச் சூடி, சுடுகாட்டின் ஒளிவீசும் சாம்பல் பூசி, திரிபுரத்தை அழிக்குந் திருவிளையாடலை விரும்பி அதிகை வீரட்டத்தில் தங்கியவராய், பரந்த ஆன்மிக இருளிலே நுழைந்து வந்து, அடியேனுடைய உள்ளத்தை அடைந்தார்.
251 ஊனையே கழிக்க வேண்டி
லுணர்மின்க ளுள்ளத் துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு
சிந்தையுட் சிந்திக் கின்ற
ஏனைய பலவு மாகி
யிமையவ ரேத்த நின்று
ஆனையி னுரிவை போர்த்தா
ரதிகைவீ ரட்ட னாரே.
4.025.3
உடம்பு எடுத்தலாகிய பிறவித்துயரை அடியோடு போக்க விரும்பினால், உள்ளத்துள்ளே நினைக்கும் எல்லா எண்ணங்களிலும் உறைபவராய், வண்டுகள் வருந்துமாறு மலர்களைக் கைகளில் கொண்டு தேவர்கள் துதிக்குமாறு, யானைத் தோலைப் போர்த்தி நின்று, அதிகை வீரட்டத்தில் காட்சி வழங்கும் பெருமானாரை உள்ளத்துள்ளே தியானித்து உணருங்கள்.
252 துருத்தியாங் குரம்பை தன்னிற்
றொண்ணூற்றங் கறுவர் நின்று
விருத்திதான் றருக வென்று
வேதனை பலவுஞ் செய்ய
வருத்தியால் வல்ல வாறு
வந்துவந் தடைய நின்ற
அருத்தியார்க் கன்பர் போலு
மதிகைவீ ரட்ட னாரே.
4.025.4
தோல்துருத்தி போன்ற உடம்பிலே தொண்ணுற்றாறு தத்துவங்களும் தாத்துவிகங்களும் உறைவிடங்கொண்டு தங்கள் வாழ்வுக்கு உரிய பொருள்களை அளிக்க வேண்டுமென்று பல துயரம் செய்யுமாறு உயிரினங்களை வருத்துவதனாலே, தம்மால் இயன்றளவு பெருமானாகிய தம்மை நாடி வந்து அடைந்த விருப்பினை உடைய அடியவர்பால் அதிகை வீரட்டனார் தாமும் அன்பராய் உதவுகிறார்.
253 பத்தியா லேத்தி நின்று
பணிபவர் நெஞ்சத் துள்ளார்
துத்தியைந் தலைய நாகஞ்
சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை
யுமையவ ணடுங்க வன்று
அத்தியி னுரிவை போர்த்தா
ரதிகைவீ ரட்ட னாரே.
4.025.5
பத்தியோடு வணங்கும் மெய்யன்பர் சித்தத்தில் நிலையாக உள்ளவரும், படப்பொறிகளை உடைய ஐந்தலை நாகத்தைப் பரந்த சடைமுடியின்மேல் சூடி, வடக்கிலுள்ள இமய மலையரசன் மகளான உமாதேவி நடுங்குமாறு யானைத் தோலைப் போர்த்தியவரும் அதிகை வீரட்டனாரே.
254 வரிமுரி பாடி யென்றும்
வல்லவா றடைந்தும் நெஞ்சே
கரியுரி மூட வல்ல
கடவுளைக் காலத் தாலே
சுரிபுரி விரிகு ழ(ல்)லா
டுடியிடைப் பரவை யல்குல்
அரிவையோர் பாகர் போலு
மதிகைவீ ரட்ட னாரே.
4.025.6
நெஞ்சே! சுருண்ட கடைகுழன்ற விரிந்த கூந்தலினளாய்த் துடிபோன்ற இடையினளாய்க் கடல்போன்ற அல்குலை உடைய பார்வதி பாகராய் அதிகை வீரட்டராய் யானைத் தோலைப் போர்த்திய கடவுளாய் விளங்குகிறார் அதிகை வீரட்டனார். அவரை என்றும் வரிப்பாடல்களையும் முரிப்பாடல்களையும் பாடிக் கொண்டு நம்மால் இயன்றவாறு அடையக் கடவோம்.
255 நீதியா னினைசெய் நெஞ்சே
நிமலனை நித்த மாகப்
பாதியா முமைதன் னோடும்
பாகமாய் நின்ற வெந்தை
சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச்
சுண்ணவெண் ணீறதாடி
ஆதியு மீறு மானா
ரதிகைவீ ரட்ட னாரே.
4.025.7
நெஞ்சே! பார்வதி பாகராய்ச் சோதியாய், ஒளிவிடும் ஞானதீபமாய் நின்ற எம் பிதாவும், திருநீறு பூசி உலகுக்கெல் லாம் ஆதியும் அந்தமுமாக உள்ளவரும் அதிகை வீரட்டனாவார். அத்தூயோரை நாடோறும் முறைப்படி தியானம் செய்வாயாக.
256 எல்லியும் பகலு மெல்லாந்
துஞ்சுவேற் கொருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில்
புக்கனர் காம னென்னும்
வில்லியங் கணையி னானை
வெந்துக நோக்கி யிட்டார்
அல்லியம் பழன வேலி
யதிகைவீ ரட்ட னாரே.
4.025.8
வில்லையும் அம்புகளையும் உடைய மன்மதன் வெந்து விழும்படி நோக்கியவர், அல்லிச் செடிகள் களையாக நிறைந்த வயல்களை உடைய அதிகை வீரட்டனார். ஒப்பற்றவரான அப்பெருமான் செயற்பாடு ஏதும் இன்றி இரவும் பகலும் கழிக்கும் அடியேன் பக்கல்வந்து அடியேனுடைய அற்பமான மனமாகிய கோயிலிலே புகுந்து விட்டார்.
257 ஒன்றவே யுணர்தி ராகி
லோங்காரத் தொருவ னாகும்
வென்றவைம் புலன்க டம்மை
விலக்குதற் குரியீ ரெல்லாம்
நன்றவ னார ண(ன்)னு
நான்முக னாடிக் காண்குற்
றன்றவர்க் கரியர் போலு
மதிகைவீ ரட்ட னாரே.
4.025.9
பெரியோனாகிய திருமாலும், பிரமனும் தேடிக் காண முயன்ற அன்று அவர்களுக்குக் காண்டற்கு அரியவரான அதிகை வீரட்டனார், ஐம்புலன்களையும் வென்று விலக்குதற்குரிய நீங்கள் எல்லீரும் மனம் பொருந்தித் தியானிப்பீராயின் ஓங்காரத்தில் உள்ளே உள்ள மெய்ப்பொருளாக உங்களுக்குக் காட்சி வழங்குவார்.
258 தடக்கையா லெடுத்து வைத்துத்
தடவரை குலுங்க வார்த்துக்
கிடக்கையா லிடர்க ளோங்கக்
கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரல்தான்
முருகமர் கோதை பாகத்
தடக்கினா ரென்னையாளு
மதிகைவீ ரட்ட னாரே.
4.025.10
என்னை அடியவனாக்கிக் கொண்ட அதிகை வீரட்டனார், பெரிய கயிலை மலை நடுங்குமாறு ஆரவாரித்து நீண்ட கைகளால் பெயர்க்க முயன்ற இராவணன் அதன் கீழகப்பட்டுத் துன்பங்கள் மிகுந்து விளக்கமானமண மணிமுடிகள் நசுங்கி அவலமுறுமாறு தம் திருவடிப் பெருவிரலைச் சற்றே வளைத்து ஊன்றினார். அவரே நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை இடப்பாகமாக அடக்கியவரும் ஆவார்.
திருச்சிற்றம்பலம்

4.025.திருவதிகைவீரட்டானம் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். தேவியார் - திருவதிகைநாயகி. 

249 வெண்ணிலா மதியந் தன்னைவிரிசடை மேவ வைத்துஉண்ணிலாப் புகுந்து நின்றங்குணர்வினுக் குணரக் கூறிவிண்ணிலார் மீயச் சூரார்வேண்டுவார் 1வேண்டி லார்க்கேஅண்ணியார் பெரிதுஞ் சேயாரதிகைவீ ரட்ட னாரே.4.025.1
தேவருலகிலும் இருப்பதோடு, நிலவுலகில் மீயச்சூர் முதலிய திருத்தலங்களில் உறைபவராய், தம்மை விரும்புபவருக்கு அண்மையில் உள்ளவராய், வேண்டாதவருக்குப் பெரிதும் தொலைவில் உள்ளவராய் விளங்கும் பெருமானார், வெள்ளிய ஒளிவீசும் பிறையை அது விரும்புமாறு விரிசடையிற் சூடி, அடியேன் உள்ளத்திலே ஞானஒளி நிலவப்புகுந்து நின்று, அவ்விடத்தில் உணர்விற்குப் பொருந்துமாறு உணர்த்த வேண்டியவற்றை உணர்த்தி, அதிகை வீரட்டத்தில் உள்ளார்.

250 பாடினார் மறைக ணான்கும்பாயிருள் புகுந்தென் னுள்ளம்கூடினார் கூட லாலவாயிலார் நல்ல கொன்றைசூடினார் சூடன் மேவிச்சூழ்சுடர் சுடலை வெண்ணீறாடினா ராடன் மேவியதிகைவீ ரட்ட னாரே.4.025.2
கூடல் நகர ஆலவாய்க் கோயிலிலுள்ள பெருமான் நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு நறிய கொன்றை மாலையை விரும்பிச் சூடி, சுடுகாட்டின் ஒளிவீசும் சாம்பல் பூசி, திரிபுரத்தை அழிக்குந் திருவிளையாடலை விரும்பி அதிகை வீரட்டத்தில் தங்கியவராய், பரந்த ஆன்மிக இருளிலே நுழைந்து வந்து, அடியேனுடைய உள்ளத்தை அடைந்தார்.

251 ஊனையே கழிக்க வேண்டிலுணர்மின்க ளுள்ளத் துள்ளேதேனைய மலர்கள் கொண்டுசிந்தையுட் சிந்திக் கின்றஏனைய பலவு மாகியிமையவ ரேத்த நின்றுஆனையி னுரிவை போர்த்தாரதிகைவீ ரட்ட னாரே.4.025.3
உடம்பு எடுத்தலாகிய பிறவித்துயரை அடியோடு போக்க விரும்பினால், உள்ளத்துள்ளே நினைக்கும் எல்லா எண்ணங்களிலும் உறைபவராய், வண்டுகள் வருந்துமாறு மலர்களைக் கைகளில் கொண்டு தேவர்கள் துதிக்குமாறு, யானைத் தோலைப் போர்த்தி நின்று, அதிகை வீரட்டத்தில் காட்சி வழங்கும் பெருமானாரை உள்ளத்துள்ளே தியானித்து உணருங்கள்.

252 துருத்தியாங் குரம்பை தன்னிற்றொண்ணூற்றங் கறுவர் நின்றுவிருத்திதான் றருக வென்றுவேதனை பலவுஞ் செய்யவருத்தியால் வல்ல வாறுவந்துவந் தடைய நின்றஅருத்தியார்க் கன்பர் போலுமதிகைவீ ரட்ட னாரே.4.025.4
தோல்துருத்தி போன்ற உடம்பிலே தொண்ணுற்றாறு தத்துவங்களும் தாத்துவிகங்களும் உறைவிடங்கொண்டு தங்கள் வாழ்வுக்கு உரிய பொருள்களை அளிக்க வேண்டுமென்று பல துயரம் செய்யுமாறு உயிரினங்களை வருத்துவதனாலே, தம்மால் இயன்றளவு பெருமானாகிய தம்மை நாடி வந்து அடைந்த விருப்பினை உடைய அடியவர்பால் அதிகை வீரட்டனார் தாமும் அன்பராய் உதவுகிறார்.

253 பத்தியா லேத்தி நின்றுபணிபவர் நெஞ்சத் துள்ளார்துத்தியைந் தலைய நாகஞ்சூழ்சடை முடிமேல் வைத்துஉத்தர மலையர் பாவையுமையவ ணடுங்க வன்றுஅத்தியி னுரிவை போர்த்தாரதிகைவீ ரட்ட னாரே.4.025.5
பத்தியோடு வணங்கும் மெய்யன்பர் சித்தத்தில் நிலையாக உள்ளவரும், படப்பொறிகளை உடைய ஐந்தலை நாகத்தைப் பரந்த சடைமுடியின்மேல் சூடி, வடக்கிலுள்ள இமய மலையரசன் மகளான உமாதேவி நடுங்குமாறு யானைத் தோலைப் போர்த்தியவரும் அதிகை வீரட்டனாரே.

254 வரிமுரி பாடி யென்றும்வல்லவா றடைந்தும் நெஞ்சேகரியுரி மூட வல்லகடவுளைக் காலத் தாலேசுரிபுரி விரிகு ழ(ல்)லாடுடியிடைப் பரவை யல்குல்அரிவையோர் பாகர் போலுமதிகைவீ ரட்ட னாரே.4.025.6
நெஞ்சே! சுருண்ட கடைகுழன்ற விரிந்த கூந்தலினளாய்த் துடிபோன்ற இடையினளாய்க் கடல்போன்ற அல்குலை உடைய பார்வதி பாகராய் அதிகை வீரட்டராய் யானைத் தோலைப் போர்த்திய கடவுளாய் விளங்குகிறார் அதிகை வீரட்டனார். அவரை என்றும் வரிப்பாடல்களையும் முரிப்பாடல்களையும் பாடிக் கொண்டு நம்மால் இயன்றவாறு அடையக் கடவோம்.

255 நீதியா னினைசெய் நெஞ்சேநிமலனை நித்த மாகப்பாதியா முமைதன் னோடும்பாகமாய் நின்ற வெந்தைசோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச்சுண்ணவெண் ணீறதாடிஆதியு மீறு மானாரதிகைவீ ரட்ட னாரே.4.025.7
நெஞ்சே! பார்வதி பாகராய்ச் சோதியாய், ஒளிவிடும் ஞானதீபமாய் நின்ற எம் பிதாவும், திருநீறு பூசி உலகுக்கெல் லாம் ஆதியும் அந்தமுமாக உள்ளவரும் அதிகை வீரட்டனாவார். அத்தூயோரை நாடோறும் முறைப்படி தியானம் செய்வாயாக.

256 எல்லியும் பகலு மெல்லாந்துஞ்சுவேற் கொருவர் வந்துபுல்லிய மனத்துக் கோயில்புக்கனர் காம னென்னும்வில்லியங் கணையி னானைவெந்துக நோக்கி யிட்டார்அல்லியம் பழன வேலியதிகைவீ ரட்ட னாரே.4.025.8
வில்லையும் அம்புகளையும் உடைய மன்மதன் வெந்து விழும்படி நோக்கியவர், அல்லிச் செடிகள் களையாக நிறைந்த வயல்களை உடைய அதிகை வீரட்டனார். ஒப்பற்றவரான அப்பெருமான் செயற்பாடு ஏதும் இன்றி இரவும் பகலும் கழிக்கும் அடியேன் பக்கல்வந்து அடியேனுடைய அற்பமான மனமாகிய கோயிலிலே புகுந்து விட்டார்.

257 ஒன்றவே யுணர்தி ராகிலோங்காரத் தொருவ னாகும்வென்றவைம் புலன்க டம்மைவிலக்குதற் குரியீ ரெல்லாம்நன்றவ னார ண(ன்)னுநான்முக னாடிக் காண்குற்றன்றவர்க் கரியர் போலுமதிகைவீ ரட்ட னாரே.4.025.9
பெரியோனாகிய திருமாலும், பிரமனும் தேடிக் காண முயன்ற அன்று அவர்களுக்குக் காண்டற்கு அரியவரான அதிகை வீரட்டனார், ஐம்புலன்களையும் வென்று விலக்குதற்குரிய நீங்கள் எல்லீரும் மனம் பொருந்தித் தியானிப்பீராயின் ஓங்காரத்தில் உள்ளே உள்ள மெய்ப்பொருளாக உங்களுக்குக் காட்சி வழங்குவார்.

258 தடக்கையா லெடுத்து வைத்துத்தடவரை குலுங்க வார்த்துக்கிடக்கையா லிடர்க ளோங்கக்கிளர்மணி முடிகள் சாயமுடக்கினார் திருவி ரல்தான்முருகமர் கோதை பாகத்தடக்கினா ரென்னையாளுமதிகைவீ ரட்ட னாரே.4.025.10
என்னை அடியவனாக்கிக் கொண்ட அதிகை வீரட்டனார், பெரிய கயிலை மலை நடுங்குமாறு ஆரவாரித்து நீண்ட கைகளால் பெயர்க்க முயன்ற இராவணன் அதன் கீழகப்பட்டுத் துன்பங்கள் மிகுந்து விளக்கமானமண மணிமுடிகள் நசுங்கி அவலமுறுமாறு தம் திருவடிப் பெருவிரலைச் சற்றே வளைத்து ஊன்றினார். அவரே நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை இடப்பாகமாக அடக்கியவரும் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 25 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.