|
||||||||
நான்காம் திருமுறை-33 |
||||||||
4.033.திருமறைக்காடு
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்.
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
324 இந்திர னோடு தேவ
ரிருடிக ளேத்து கின்ற
சுந்தர மானார் போலுந்
துதிக்கலாஞ் சோதி போலும்
சந்திர னோடு கங்கை
யரவையுஞ் சடையுள் வைத்து
மந்திர மானார் போலு
மாமறைக் காட னாரே. 4.033.1
மேம்பட்ட மறைக்காட்டுப் பெருமானார் இந்திரனோடு தேவர்களும் முனிவர்களும் புகழுகின்ற அழகராய், எல்லோரும் போற்றும் ஞானஒளியினராய்ச் சந்திரன் கங்கை பாம்பு என்பனவற்றைச் சடையில் வைத்தவராய், தம்மைத் தியானிப்பவரைக் காப்பவராய் உள்ளார்.
325 தேயன நாட ராகித்
தேவர்க டேவர் போலும்
பாயன நாட றுக்கும்
பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டங்
கதனுளார் காள கண்டர்
மாயன நாடர் போலு
மாமறைக் காட னாரே. 4.033.2
தெய்வந் தன்மையே வடிவான அத்தகைய வீட்டுலகத்தை உடைய தேவர்கள் தலைவரான மாமறைக்காடரைப் பலவாகப் பரவியுள்ள உலகப்பற்றுக்களைத் துறக்கும் பக்தர்களே! வழி பட வாருங்கள். நாடுகளையும் கண்டங்களையும் கோபிப்பனவாய பலகூறுகளாகப் பரவிவந்த ஆலகால விடத்தின் கோபத்தை மனத்துள் கொண்டு அதனை விழுங்கிய நீலகண்டராம் பெருமானார், திருமாலால் தேடப் படுபவராவார்.
326 அறுமையிவ் வுலகு தன்னை
யாமெனக் கருதிநின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து
வினைகளா னலிவு ணாதே
சிறுமதி யரவு கொன்றை
திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையு மிம்மை யாவார்
மாமறைக் காட னாரே. 4.033.3
மாமறைக் காடனார் அழியும் இயல்பினை உடைய இவ்வுலகை நிலைபெற்றது என்று நினைத்துக் கொண்டு உலக வாழ்க்கை வழி நின்று வீணாக இல்வாழ்க்கை நடத்தி இரு வினைகளால் துன்புறுத்தப்படாத வகையில், பிறை பாம்பு கொன்றை இவற்றைச் சடையுள் வைத்த பெருமானாய், தம் அடியவர்களுக்கு மறுமை இன்பமும் இம்மை இன்பமும் வழங்குபவராவார்.
327 கால்கொடுத் திருகை யேற்றிக்
கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீராற்
சுவரெடுத் திரண்டு வாசல்
ஏல்வுடைத் தாவ மைத்தங்
கேழுசா லேகம் பண்ணி
மால்கொடுத் தாவி வைத்தார்
மாமறைக் காட னாரே 4.033.4
மாமறைக்காடனார் கால்களைக் கொடுத்து கைகளை ஏற்றி எலும்புக் கழிகளை நிரைத்து மேலே புலாலை வேய்ந்து குருதிநீரைக் கலந்து தோலை தட்டிச் சுவரை வைத்து இரண்டு வாயில்களையும் ஏழு சன்னல்களையும் அமைத்து உயிர்க்கு ஒரு வீடுகட்டி அதனுக்கு மால் என்ற பெயர் குறிக்கும் மயக்கம், காற்று, வேட்கை என்பனவற்றைச் செல்வங்களாகக் கொடுத்து குடியேற்றி வைத்துள்ளார்.
328 விண்ணினார் விண்ணின் மிக்கார்
வேதங்கள் விரும்பி யோதப்
பண்ணினார் கின்ன ரங்கள்
பத்தர்கள் பாடி யாடக்
கண்ணினார் கண்ணி னுள்ளே
சோதியாய் நின்ற வெந்தை
மண்ணினார் வலங்கொண் டேத்து
மாமறைக் காட னாரே. 4.033.5
நிலவுலக மக்கள் நகரையே வலம் வந்து போற்றும் மகிமையுள்ள திருமறைக்காட்டுப் பெருமான் விண்ணுலகில் உளரேனும் விண்ணினும் மேம்பட்டவர். உலகம் வேதத்தை விரும்பி ஓதப்பண்ணியவர். பத்தர்கள் இசைப்பாடல்களைப் பாடியாடத் திருவுளம் பற்றியவர். அகக்கண்ணினுள்ளே ஞானவொளியை எய்தி திகழும் எம் தலைவரும் அவராவார்.
329 அங்கையு ளனலும் வைத்தார்
அறுவகைச் சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார்
தம்மடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கை யோடு
திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
மாமறைக் காட னாரே. 4.033.6
மாமறைக் காடனார் பார்வதி பாகராய், உள்ளங்கையில் தீயையும், ஒரு கையில், வீணையையும் வைத்தார். அறுவகைச் சமயங் களைப் படைத்து அடியவர்கள் தம் திருவடிகளை வழிபடுமாறு செய்தவராவார். விளங்குகிற சடையில் சந்திரனைக் கங்கையோடும் வைத்தவர் ஆவார்.
330 கீதராய்க் கீதங் கேட்டுக்
கின்னரந் தன்னை வைத்தார்
வேதராய் வேத மோதி
விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய் நட்ட மாடி
யிட்டமாய்க் கங்கை யோடு
மாதையோர் பாகம் வைத்தார்
மாமறைக் காட னாரே. 4.033.7
மாமறைக் காடனார் பார்வதி பாகராய், கங்கையிடம் விருப்பம் உடையவராய், இசைவடிவினராய்ப் பாடலைக் கேட்டு மகிழும் இசை உணர்வை உலகுக்கு வழங்கியவராய், வேதவடிவினராய், வேதம் ஓதுதலால் ஏற்படும் ஞான ஒளியை வழங்குபவராய், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஆதிகாரணராய்க் கூத்து நிகழ்த்துபவராய் உள்ளார்.
331 கனத்தினார் வலியு டைய
கடிமதி லரண மூன்றும்
சினத்தினுட் சினமாய் நின்று
தீயெழச் செற்றார் போலும்
தனத்தினைத் தவிர்ந்து நின்று
தம்மடி பரவு வார்க்கு
மனத்தினுண் மாசு தீர்ப்பார்
மாமறைக் காட னாரே. 4.033.8
மாமறைக் காடனார் செருக்குற்ற அசுரர்களுடைய மும்மதில்களையும் கோபத்தின் கோபமாய்க் காட்சி வழங்கித் தீக்கு இரையாகுமாறு அழித்தவர்! உலகச் செல்வத்தின் பற்றுக்களை விடுத்துத் தம் திருவடிகளை முன்நின்று போற்றும் அடியார்களின் மனத்திலுள்ள களங்கங்களை எல்லாம் போக்குபவர்.
332 தேசனைத் தேசன் றன்னைத்
தேவர்கள் போற்றி சைப்பார்
வாசனை செய்து நின்று
வைகலும் வணங்கு மின்கள்
காசினைக் கனலை யென்றுங்
கருத்தினில் வைத்த வர்க்கு
மாசினைத் தீர்ப்பர் போலு
மாமறைக் காட னாரே. 4.033.9
மாமறைக் காடனார் ஒளி வடிவினராய், எல்லா உலகங்களையும் உடையவராய் உள்ளார். அவரை நறுமணப் பொருள்களைக் கொண்டு வழிபடும் அடியார்களே! நாள்தோறும் வணங்குங்கள். பொன்போல ஒளி வீசுபவராய்க் கனல் போல மாசுகளை எரித்து ஒழிப்பவராய் உள்ள அப்பெருமானாரை என்றும் தியானிப்பவருடைய மாசுகளை அவர் அடியோடு போக்குபவராவார்.
333 பிணியுடை யாக்கை தன்னைப்
பிறப்பறுத் துய்ய வேண்டில்
பணியுடைத் தொழில்கள் பூண்டு
பத்தர்கள் பற்றி னாலே
துணிவுடை யரக்க னோடி
யெடுத்தலுந் தோகை யஞ்ச
மணிமுடிப் பத்தி றுத்தார்
மாமறைக் காட னாரே. 4.033.10
கயிலையைப் பெயர்த்து அற்புறப்படுத்தலாம் என்ற துணிவினை உடைய இராவணன் விரைந்து சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி. அஞ்ச, அவன்தலைகள் பத்தனையும் நசுக்கியவர் மாமறைக் காடனார், பலபற்றுக்களையும் உடைய இவ்வுடல் தொடர்புக்கேதுவான பிறவிப் பிணியைப் போக்கி ஒழிக்கக் கருதினால், தம் பணிவைப் புலப்படுத்தலுக்கு உரிய இறை தொண்டினை மேற்கொண்டு அடியவர்கள் விருப்பத்தோடு மாமறைக்காடனாரை வழிபடுங்கள்.
திருச்சிற்றம்பலம்
4.033.திருமறைக்காடு திருநேரிசை திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர். தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
324 இந்திர னோடு தேவ ரிருடிக ளேத்து கின்ற சுந்தர மானார் போலுந் துதிக்கலாஞ் சோதி போலும் சந்திர னோடு கங்கை யரவையுஞ் சடையுள் வைத்து மந்திர மானார் போலு மாமறைக் காட னாரே. 4.033.1
மேம்பட்ட மறைக்காட்டுப் பெருமானார் இந்திரனோடு தேவர்களும் முனிவர்களும் புகழுகின்ற அழகராய், எல்லோரும் போற்றும் ஞானஒளியினராய்ச் சந்திரன் கங்கை பாம்பு என்பனவற்றைச் சடையில் வைத்தவராய், தம்மைத் தியானிப்பவரைக் காப்பவராய் உள்ளார்.
325 தேயன நாட ராகித் தேவர்க டேவர் போலும் பாயன நாட றுக்கும் பத்தர்கள் பணிய வம்மின் காயன நாடு கண்டங் கதனுளார் காள கண்டர் மாயன நாடர் போலு மாமறைக் காட னாரே. 4.033.2
தெய்வந் தன்மையே வடிவான அத்தகைய வீட்டுலகத்தை உடைய தேவர்கள் தலைவரான மாமறைக்காடரைப் பலவாகப் பரவியுள்ள உலகப்பற்றுக்களைத் துறக்கும் பக்தர்களே! வழி பட வாருங்கள். நாடுகளையும் கண்டங்களையும் கோபிப்பனவாய பலகூறுகளாகப் பரவிவந்த ஆலகால விடத்தின் கோபத்தை மனத்துள் கொண்டு அதனை விழுங்கிய நீலகண்டராம் பெருமானார், திருமாலால் தேடப் படுபவராவார்.
326 அறுமையிவ் வுலகு தன்னை யாமெனக் கருதிநின்று வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளா னலிவு ணாதே சிறுமதி யரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து மறுமையு மிம்மை யாவார் மாமறைக் காட னாரே. 4.033.3
மாமறைக் காடனார் அழியும் இயல்பினை உடைய இவ்வுலகை நிலைபெற்றது என்று நினைத்துக் கொண்டு உலக வாழ்க்கை வழி நின்று வீணாக இல்வாழ்க்கை நடத்தி இரு வினைகளால் துன்புறுத்தப்படாத வகையில், பிறை பாம்பு கொன்றை இவற்றைச் சடையுள் வைத்த பெருமானாய், தம் அடியவர்களுக்கு மறுமை இன்பமும் இம்மை இன்பமும் வழங்குபவராவார்.
327 கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல் ஏல்வுடைத் தாவ மைத்தங் கேழுசா லேகம் பண்ணி மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே 4.033.4
மாமறைக்காடனார் கால்களைக் கொடுத்து கைகளை ஏற்றி எலும்புக் கழிகளை நிரைத்து மேலே புலாலை வேய்ந்து குருதிநீரைக் கலந்து தோலை தட்டிச் சுவரை வைத்து இரண்டு வாயில்களையும் ஏழு சன்னல்களையும் அமைத்து உயிர்க்கு ஒரு வீடுகட்டி அதனுக்கு மால் என்ற பெயர் குறிக்கும் மயக்கம், காற்று, வேட்கை என்பனவற்றைச் செல்வங்களாகக் கொடுத்து குடியேற்றி வைத்துள்ளார்.
328 விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி யோதப் பண்ணினார் கின்ன ரங்கள் பத்தர்கள் பாடி யாடக் கண்ணினார் கண்ணி னுள்ளே சோதியாய் நின்ற வெந்தை மண்ணினார் வலங்கொண் டேத்து மாமறைக் காட னாரே. 4.033.5
நிலவுலக மக்கள் நகரையே வலம் வந்து போற்றும் மகிமையுள்ள திருமறைக்காட்டுப் பெருமான் விண்ணுலகில் உளரேனும் விண்ணினும் மேம்பட்டவர். உலகம் வேதத்தை விரும்பி ஓதப்பண்ணியவர். பத்தர்கள் இசைப்பாடல்களைப் பாடியாடத் திருவுளம் பற்றியவர். அகக்கண்ணினுள்ளே ஞானவொளியை எய்தி திகழும் எம் தலைவரும் அவராவார்.
329 அங்கையு ளனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார் தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார் திங்களைக் கங்கை யோடு திகழ்தரு சடையுள் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே. 4.033.6
மாமறைக் காடனார் பார்வதி பாகராய், உள்ளங்கையில் தீயையும், ஒரு கையில், வீணையையும் வைத்தார். அறுவகைச் சமயங் களைப் படைத்து அடியவர்கள் தம் திருவடிகளை வழிபடுமாறு செய்தவராவார். விளங்குகிற சடையில் சந்திரனைக் கங்கையோடும் வைத்தவர் ஆவார்.
330 கீதராய்க் கீதங் கேட்டுக் கின்னரந் தன்னை வைத்தார் வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார் ஏதராய் நட்ட மாடி யிட்டமாய்க் கங்கை யோடு மாதையோர் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே. 4.033.7
மாமறைக் காடனார் பார்வதி பாகராய், கங்கையிடம் விருப்பம் உடையவராய், இசைவடிவினராய்ப் பாடலைக் கேட்டு மகிழும் இசை உணர்வை உலகுக்கு வழங்கியவராய், வேதவடிவினராய், வேதம் ஓதுதலால் ஏற்படும் ஞான ஒளியை வழங்குபவராய், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஆதிகாரணராய்க் கூத்து நிகழ்த்துபவராய் உள்ளார்.
331 கனத்தினார் வலியு டைய கடிமதி லரண மூன்றும் சினத்தினுட் சினமாய் நின்று தீயெழச் செற்றார் போலும் தனத்தினைத் தவிர்ந்து நின்று தம்மடி பரவு வார்க்கு மனத்தினுண் மாசு தீர்ப்பார் மாமறைக் காட னாரே. 4.033.8
மாமறைக் காடனார் செருக்குற்ற அசுரர்களுடைய மும்மதில்களையும் கோபத்தின் கோபமாய்க் காட்சி வழங்கித் தீக்கு இரையாகுமாறு அழித்தவர்! உலகச் செல்வத்தின் பற்றுக்களை விடுத்துத் தம் திருவடிகளை முன்நின்று போற்றும் அடியார்களின் மனத்திலுள்ள களங்கங்களை எல்லாம் போக்குபவர்.
332 தேசனைத் தேசன் றன்னைத் தேவர்கள் போற்றி சைப்பார் வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள் காசினைக் கனலை யென்றுங் கருத்தினில் வைத்த வர்க்கு மாசினைத் தீர்ப்பர் போலு மாமறைக் காட னாரே. 4.033.9
மாமறைக் காடனார் ஒளி வடிவினராய், எல்லா உலகங்களையும் உடையவராய் உள்ளார். அவரை நறுமணப் பொருள்களைக் கொண்டு வழிபடும் அடியார்களே! நாள்தோறும் வணங்குங்கள். பொன்போல ஒளி வீசுபவராய்க் கனல் போல மாசுகளை எரித்து ஒழிப்பவராய் உள்ள அப்பெருமானாரை என்றும் தியானிப்பவருடைய மாசுகளை அவர் அடியோடு போக்குபவராவார்.
333 பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பறுத் துய்ய வேண்டில் பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றி னாலே துணிவுடை யரக்க னோடி யெடுத்தலுந் தோகை யஞ்ச மணிமுடிப் பத்தி றுத்தார் மாமறைக் காட னாரே. 4.033.10
கயிலையைப் பெயர்த்து அற்புறப்படுத்தலாம் என்ற துணிவினை உடைய இராவணன் விரைந்து சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி. அஞ்ச, அவன்தலைகள் பத்தனையும் நசுக்கியவர் மாமறைக் காடனார், பலபற்றுக்களையும் உடைய இவ்வுடல் தொடர்புக்கேதுவான பிறவிப் பிணியைப் போக்கி ஒழிக்கக் கருதினால், தம் பணிவைப் புலப்படுத்தலுக்கு உரிய இறை தொண்டினை மேற்கொண்டு அடியவர்கள் விருப்பத்தோடு மாமறைக்காடனாரை வழிபடுங்கள்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by Swathi on 18 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|