|
||||||||
நான்காம் திருமுறை-37 |
||||||||
4.037.திருநெய்த்தானம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்.
தேவியார் - வாலாம்பிகையம்மை.
364 காலனை வீழச் செற்ற
கழலடி யிரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன்
மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங்
குளிர்பொழிற் கோயின் மேய
நீலம்வைத் தனைய கண்ட
நினைக்குமா நினைக்கின் றேனே.
4.037.1
கூற்றுவன் கீழே விழுமாறு அவனை உதைத்த வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டும் என்தலைமேல் இருத்தலைப் பெற்றேன். ஆதலின் மிகச் சிறப்பாகக் காட்சிவழங்குகின்ற அழகிய நெய்த்தானத் திருப்பதியின் குளிர்ந்த பொழில்களிடையே அமைந்த கோயிலில் விரும்பி உறைகின்ற நீலகண்டனே! தற்போதம் அற்று நின் போதத்தால் தியானிக்கும் வகையில் உன்னைத் தியானிக்கின்றேன்.
365 காமனை யன்றுகண் ணாற்
கனலெரி யாக நோக்கித்
தூமமுந் தீபங் காட்டித்
தொழுமவர்க் கருள்கள் செய்து
சேமநெய்த் தான மென்னுஞ்
செறிபொழிற் கோயின் மேய
வாமனை நினைந்த நெஞ்சம்
வாழ்வுற நினைந்த வாறே.
4.037.2
மன்மதனை ஒரு காலத்தில் நெற்றிக்கண்ணால் நெருப்பாகப் பார்த்து அழித்து, நறும்புகையும் தீபமும் காட்டித் தொழும் அடியவர்களுக்கு அருள்கள்செய்து, எல்லா உயிர்களுக்கும் பாதுகாவலைத் தரும் சோலைகளால் சூழப்பட்ட நெய்த்தானம் என்னும் இருப்பிடத்தில் பொருந்தியுள்ள சிவபெருமானைத் தியானிக்கும் அடியேனுடைய மனம் நல்வாழ்வுக்கு உரிய செய்தியைத் தியானித்த செயல் போற்றத்தக்கது.
366 பிறைதரு சடையின் மேலே
பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த வெங்க
ளுத்தம னூழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ
நின்றநெய்த் தான மென்று
குறைதரு மடிய வர்க்குக்
குழகனைக் கூட லாமே.
4.037.3
பிறைதங்கிய சடையின்மேலே கங்கைதங்குமாறு வைத்த எங்கள் மேம்பட்ட தலைவனாய், பல ஊழிகளின் வடிவினனாய், பலசோலைகளாலும் சூழப்பட்ட நெய்த்தானமாகிய அவன் உகந்தருளும் திருப்பதியைக் குறையிரந்து வேண்டித் கொள்ளும் திருவடித்தொண்டர்களுக்கு இளையவனாகிய எம்பெருமான் அடைவதற்கு எளியவனாய் உள்ளான்.
367 வடிதரு மழுவொன் றேந்தி
வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே
புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ
நின்றநெய்த் தான மேவி
அடிதரு கழல்க ளார்ப்ப
வாடுமெம் மண்ண லாரே.
4.037.4
சிள்வீடு என்ற வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ நிலைபெற்ற நெய்த்தானத்தில் விரும்பி உறைந்து திரவடிகளில் அணிந்த கழல்கள் ஒலிக்குமாறு கூத்து நிகழ்த்தும் எம் மேம்பட்ட தலைவர் காய்ச்சி வடிக்கப்பட்டுக் கூரிதாக்கப்பட்ட மழுவைக் கையிலேந்தி, நீண்ட சடையிலே பிறையை அணிந்து திருநீறு அணிந்த மார்பிலே பல நூல்களை முறுக்கி அமைக்கப்பட்ட பூணூலை அணிந்தவராவார்.
368 காடிட மாக நின்று
கனலெரி கையி லேந்திப்
பாடிய பூதஞ் சூழப்
பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலர் சீரா
ரந்தணெய்த் தான மென்றும்
கூடிய குழக னாரைக்
கூடுமா றறிகி லேனே.
4.037.5
கையில் ஒளிவீசும் நெருப்பை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு பாடுகின்ற பூதங்கள் தம்மைச் சூழப் பண்ணோடு பல பாடல்கள் பாடி ஆடிய திருவடிகளை உடையவராய்ச் சிறப்புமிக்க அழகிய குளிர்ந்த நெய்த்தானத்தில் எப்பொழுதும் உறைகின்ற இளையவராகிய எம்பெருமானை அடையும் திறத்தை அறியாது இருக்கின்றேனே!
369 வானவ வணங்கி யேத்தி
வைகலு மலர்க டூவத்
தானவர்க் கருள்கள் செய்யுஞ்
சங்கரன் செங்க ணேற்றன்
தேனமர் பொழில்கள் சூழத்
திகழுநெய்த் தான மேய
கூனிள மதியி னானைக்
கூடுமா றறிகி லேனே.
4.037.6
தேவர்கள் நாடோறும் வணங்கித்துதித்து மலர்களை அருச்சிக்க, அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் நன்மை செய்பவனாய், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய காளையை உடையவனாய், வண்டுகள் விரும்பித் தங்குகின்ற சோலைகள் நாற்புறமும் சூழ விளங்கும் நெய்த்தானத்தில் விரும்பி உறைகின்ற, வளைந்த பிறை சூடியபெருமானைக் கூடும் திறத்தை அறியாது உள்ளேனே!
370 காலதிர் கழல்க ளார்ப்பக்
கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று
நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய
விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக
மகிழ்ந்தநெய்த் தான னாரே.
4.037.7
திருமாலைத் தம் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு மகிழ்ந்த நெய்த்தானப் பெருமானார் காலிலே அசைகின்ற கழல்கள் ஒலியெழுப்ப, ஒளிவீசுகின்ற தீயினைக் கையில் வைத்து வீசிக்கொண்டு தரையில் பள்ளம் தோன்றவும், விரிந்த சடை வானத்தை அளாவ எட்டுத் திசைகளிலும் பரவவும் கூத்து நிகழ்த்தும் மேம்பட்டவராவார்.
371 பந்தித்த சடையின் மேலே
பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி
யடிகளை யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று
வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார்
திருந்துநெய்த் தான னாரே.
4.037.8
முடிக்கப்பட்ட சடையின்மேலே கங்கையைச் சூடி மாலை நேரத்தில் தீயில் கூத்தாடும் பெருமானார் திருவையாற்றை அடைந்தவராய்த் தம்மைக் கும்பிடுபவராய் வணங்கி வழிநின்று வாழ்த்துபவராகிய அடியவர்களின் நாவில் நின்று, தியானம் செய்பவர் மனத்தில் உறைந்து சிறந்த நெய்த்தானத்தில் நிலையாகத் தங்கி விட்டார்.
372 சோதியாய்ச் சுடரு மானார்
சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலக மேத்த
வுகந்துதா மருள்கள் செய்வார்
ஆதியா யந்த மானார்
யாவரு மிறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி
நின்றநெய்த் தான னாரே.
4.037.9
ஆதியும் அந்தமும் ஆகியவராய், எல்லோரும் விரும்பித் துதிக்க, நீதியாகவும் தவம் முதலிய வகுக்கப்பட்ட நெறிகளாகவும், நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானப் பெருமான் ஒளியாகவும், அவ்வொளியை வெளிப்படுத்தும் சூரியன் முதலிய சுடர்ப் பொருள்களாகவும் ஆயினவராய், திருநீற்றைச் சந்தனமாகப் பூசி வேதம் ஓதி, நன்மக்கள் தம்மைத் துதித்தலால் தாம் அவர்களுக்கு அருள் செய்பவராவார்.
373 இலையுடைப் படைகை யேந்து
மிலங்கையர் மன்னன் றன்னைத்
தலையுட னடர்த்து மீண்டே
தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத்
திரிபுர மெரியச் செற்ற
நிலையுடை யடிகள் போலு
நின்றநெய்த் தான னாரே.
4.037.10
இலைவடிவமாக அமைந்த வேலினைக் கையில் ஏந்திய இராவணனைத் தலை உட்பட உடல் முழுதையும் நசுக்கிப் பின் மீண்டும் அவனுக்குப் பல அருள்களைக் கொடுத்து, வில்லிலே அம்பினை இணைத்து மும்மதில்களையும் அழியுமாறு வெகுண்ட, என்றும் அழியாத நிலையை உடைய பெருமான் நிலைபெற்ற திருநெய்த்தானத் திருப்பதியை உகந்திருப்பவராவார்.
திருச்சிற்றம்பலம்
4.037.திருநெய்த்தானம் திருநேரிசை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நெய்யாடியப்பர். தேவியார் - வாலாம்பிகையம்மை.
364 காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென் மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயின் மேய நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.(4.037.1)
கூற்றுவன் கீழே விழுமாறு அவனை உதைத்த வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டும் என்தலைமேல் இருத்தலைப் பெற்றேன். ஆதலின் மிகச் சிறப்பாகக் காட்சிவழங்குகின்ற அழகிய நெய்த்தானத் திருப்பதியின் குளிர்ந்த பொழில்களிடையே அமைந்த கோயிலில் விரும்பி உறைகின்ற நீலகண்டனே! தற்போதம் அற்று நின் போதத்தால் தியானிக்கும் வகையில் உன்னைத் தியானிக்கின்றேன்.
365 காமனை யன்றுகண் ணாற் கனலெரி யாக நோக்கித் தூமமுந் தீபங் காட்டித் தொழுமவர்க் கருள்கள் செய்து சேமநெய்த் தான மென்னுஞ் செறிபொழிற் கோயின் மேய வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த வாறே.(4.037.2)
மன்மதனை ஒரு காலத்தில் நெற்றிக்கண்ணால் நெருப்பாகப் பார்த்து அழித்து, நறும்புகையும் தீபமும் காட்டித் தொழும் அடியவர்களுக்கு அருள்கள்செய்து, எல்லா உயிர்களுக்கும் பாதுகாவலைத் தரும் சோலைகளால் சூழப்பட்ட நெய்த்தானம் என்னும் இருப்பிடத்தில் பொருந்தியுள்ள சிவபெருமானைத் தியானிக்கும் அடியேனுடைய மனம் நல்வாழ்வுக்கு உரிய செய்தியைத் தியானித்த செயல் போற்றத்தக்கது.
366 பிறைதரு சடையின் மேலே பெய்புனற் கங்கை தன்னை உறைதர வைத்த வெங்க ளுத்தம னூழி யாய நிறைதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மென்று குறைதரு மடிய வர்க்குக் குழகனைக் கூட லாமே.(4.037.3)
பிறைதங்கிய சடையின்மேலே கங்கைதங்குமாறு வைத்த எங்கள் மேம்பட்ட தலைவனாய், பல ஊழிகளின் வடிவினனாய், பலசோலைகளாலும் சூழப்பட்ட நெய்த்தானமாகிய அவன் உகந்தருளும் திருப்பதியைக் குறையிரந்து வேண்டித் கொள்ளும் திருவடித்தொண்டர்களுக்கு இளையவனாகிய எம்பெருமான் அடைவதற்கு எளியவனாய் உள்ளான்.
367 வடிதரு மழுவொன் றேந்தி வார்சடை மதியம் வைத்துப் பொடிதரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் நெடிதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மேவி அடிதரு கழல்க ளார்ப்ப வாடுமெம் மண்ண லாரே.(4.037.4)
சிள்வீடு என்ற வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ நிலைபெற்ற நெய்த்தானத்தில் விரும்பி உறைந்து திரவடிகளில் அணிந்த கழல்கள் ஒலிக்குமாறு கூத்து நிகழ்த்தும் எம் மேம்பட்ட தலைவர் காய்ச்சி வடிக்கப்பட்டுக் கூரிதாக்கப்பட்ட மழுவைக் கையிலேந்தி, நீண்ட சடையிலே பிறையை அணிந்து திருநீறு அணிந்த மார்பிலே பல நூல்களை முறுக்கி அமைக்கப்பட்ட பூணூலை அணிந்தவராவார்.
368 காடிட மாக நின்று கனலெரி கையி லேந்திப் பாடிய பூதஞ் சூழப் பண்ணுடன் பலவுஞ் சொல்லி ஆடிய கழலர் சீரா ரந்தணெய்த் தான மென்றும் கூடிய குழக னாரைக் கூடுமா றறிகி லேனே.(4.037.5)
கையில் ஒளிவீசும் நெருப்பை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு பாடுகின்ற பூதங்கள் தம்மைச் சூழப் பண்ணோடு பல பாடல்கள் பாடி ஆடிய திருவடிகளை உடையவராய்ச் சிறப்புமிக்க அழகிய குளிர்ந்த நெய்த்தானத்தில் எப்பொழுதும் உறைகின்ற இளையவராகிய எம்பெருமானை அடையும் திறத்தை அறியாது இருக்கின்றேனே!
369 வானவ வணங்கி யேத்தி வைகலு மலர்க டூவத் தானவர்க் கருள்கள் செய்யுஞ் சங்கரன் செங்க ணேற்றன் தேனமர் பொழில்கள் சூழத் திகழுநெய்த் தான மேய கூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே.(4.037.6) தேவர்கள் நாடோறும் வணங்கித்துதித்து மலர்களை அருச்சிக்க, அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் நன்மை செய்பவனாய், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய காளையை உடையவனாய், வண்டுகள் விரும்பித் தங்குகின்ற சோலைகள் நாற்புறமும் சூழ விளங்கும் நெய்த்தானத்தில் விரும்பி உறைகின்ற, வளைந்த பிறை சூடியபெருமானைக் கூடும் திறத்தை அறியாது உள்ளேனே!
370 காலதிர் கழல்க ளார்ப்பக் கனலெரி கையில் வீசி ஞாலமுங் குழிய நின்று நட்டம தாடு கின்ற மேலவர் முகடு தோய விரிசடை திசைகள் பாய மாலொரு பாக மாக மகிழ்ந்தநெய்த் தான னாரே.(4.037.7)
திருமாலைத் தம் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு மகிழ்ந்த நெய்த்தானப் பெருமானார் காலிலே அசைகின்ற கழல்கள் ஒலியெழுப்ப, ஒளிவீசுகின்ற தீயினைக் கையில் வைத்து வீசிக்கொண்டு தரையில் பள்ளம் தோன்றவும், விரிந்த சடை வானத்தை அளாவ எட்டுத் திசைகளிலும் பரவவும் கூத்து நிகழ்த்தும் மேம்பட்டவராவார்.
371 பந்தித்த சடையின் மேலே பாய்புன லதனை வைத்து அந்திப்போ தனலு மாடி யடிகளை யாறு புக்கார் வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயி னுள்ளார் சிந்திப்பார் சிந்தை யுள்ளார் திருந்துநெய்த் தான னாரே.(4.037.8)
முடிக்கப்பட்ட சடையின்மேலே கங்கையைச் சூடி மாலை நேரத்தில் தீயில் கூத்தாடும் பெருமானார் திருவையாற்றை அடைந்தவராய்த் தம்மைக் கும்பிடுபவராய் வணங்கி வழிநின்று வாழ்த்துபவராகிய அடியவர்களின் நாவில் நின்று, தியானம் செய்பவர் மனத்தில் உறைந்து சிறந்த நெய்த்தானத்தில் நிலையாகத் தங்கி விட்டார்.
372 சோதியாய்ச் சுடரு மானார் சுண்ணவெண் சாந்து பூசி ஓதிவா யுலக மேத்த வுகந்துதா மருள்கள் செய்வார் ஆதியா யந்த மானார் யாவரு மிறைஞ்சி யேத்த நீதியாய் நியம மாகி நின்றநெய்த் தான னாரே.(4.037.9)
ஆதியும் அந்தமும் ஆகியவராய், எல்லோரும் விரும்பித் துதிக்க, நீதியாகவும் தவம் முதலிய வகுக்கப்பட்ட நெறிகளாகவும், நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானப் பெருமான் ஒளியாகவும், அவ்வொளியை வெளிப்படுத்தும் சூரியன் முதலிய சுடர்ப் பொருள்களாகவும் ஆயினவராய், திருநீற்றைச் சந்தனமாகப் பூசி வேதம் ஓதி, நன்மக்கள் தம்மைத் துதித்தலால் தாம் அவர்களுக்கு அருள் செய்பவராவார்.
373 இலையுடைப் படைகை யேந்து மிலங்கையர் மன்னன் றன்னைத் தலையுட னடர்த்து மீண்டே தானவற் கருள்கள் செய்து சிலையுடன் கணையைச் சேர்த்துத் திரிபுர மெரியச் செற்ற நிலையுடை யடிகள் போலு நின்றநெய்த் தான னாரே.(4.037.10)
இலைவடிவமாக அமைந்த வேலினைக் கையில் ஏந்திய இராவணனைத் தலை உட்பட உடல் முழுதையும் நசுக்கிப் பின் மீண்டும் அவனுக்குப் பல அருள்களைக் கொடுத்து, வில்லிலே அம்பினை இணைத்து மும்மதில்களையும் அழியுமாறு வெகுண்ட, என்றும் அழியாத நிலையை உடைய பெருமான் நிலைபெற்ற திருநெய்த்தானத் திருப்பதியை உகந்திருப்பவராவார்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by Swathi on 18 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|