|
||||||||
நான்காம் திருமுறை-38 |
||||||||
4.038.திருவையாறு
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
374 கங்கையைச் சடையுள் வைத்தார்
கதிர்ப்பொறி யரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்
திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையு ளனலும் வைத்தார்
ஐயனை யாற னாரே.
4.038.1
நம் தலைவனாராகிய ஐயாறனார், சடையில் கங்கையையும் ஒளிவீசும் புள்ளிகளையுடைய பாம்பையும் பிறையையும் விளங்குமாறு வைத்துத் தம்மை எல்லாத் திசையிலுள்ளாரும் தொழுமாறு அமைத்துக்கொண்டு பார்வதி பாகராய், மான்குட்டியையும், மழுப்படையையும், உள்ளங் கையில் வைத்த தீயையும் உடையவராவார்.
375 பொடிதனைப் பூச வைத்தார்
பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார்
காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை
மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார்
ஐயனை யாற னாரே.
4.038.2
ஒளி விளங்கும் பூணூலை அணிந்து, கொடிய நாகத்தைப் பூண்டு, கூற்றுவனை உயிர்கக்குமாறு உதைத்து, அழகிய பார்வதியை ஒரு பாகமாக மார்பில் வைத்து ஐயாற்றுத் தலைவராம் பெருமான் அடியவர்கள் திருநீற்றைப்பூசித்தம் திருவடிகளைத் தொழுமாறு வைத்தவராவார்.
376 உடைதரு கீளும் வைத்தார்
உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார்
பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார்
வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர வருளும் வைத்தார்
ஐயனை யாற னாரே.
4.038.3
கீளொடு கோவணம் அணிந்து, உலகங்களை நிலை நிறுத்தி, மழுப்படை ஏந்தி, பாய்கின்ற புலியின் தோலை உடுத்து, காளை எழுதிய கொடியை உயர்த்தி, வெண்புரிநூல் அணிந்து அடியார்கள் தம்மை அடைய அருள்புரிபவர் ஐயாறராகிய நம் தலைவராவார்.
377 தொண்டர்க டொழவும் வைத்தார்
தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்
எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை
மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்க ளேத்து
மையனை யாற னாரே.
4.038.4
எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் வழிபடும் தலைவராகிய ஐயாறனார், சடையில் தூய பிறையைச் சூடி, முடி மாலையை விளங்க வைத்து, வண்டுகள் சேர்ந்த கூந்தலையுடைய பார்வதி பாகராய், அடியார்கள் தம்மைத் தொழவும் அடியவராகிய எங்களுக்கு என்றும் இன்பம் பெருகவும் வாய்ப்பு அளித்துள்ளார்.
378 வானவர் வணங்க வைத்தார்
வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார்
காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை யைந்தும் வைத்தார்
ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையி னுரிவை வைத்தார்
ஐயனை யாற னாரே.
4.038.5
தலைவராகிய ஐயாறனார் வானவர் தம்மை வணங்கச் செய்தவராய், அடியார்களுடைய கொடிய வினைகளை அழிய வைத்தவராய், சுடுகாட்டிடைக் கூத்து நிகழ்த்துபவராய், மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு செய்து, பசுவினிடைப் பஞ்ச கவ்வியத்தை அமைத்து அதனால் தம்மை அபிடேகிப்பவருக்கு அருள் செய்து, யானைத்தோலைப் போர்த்திக் கொண்டவராவார்.
379 சங்கணி குழையும் வைத்தார்
சாம்பர்மெய் பூச வைத்தார்
வெங்கதி ரெரிய வைத்தார்
விரிபொழி லனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்
கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார்
ஐயனை யாற னாரே.
4.038.6
தலைவராகிய ஐயாறனார் சங்கினாலாகிய காதணியை அணிந்தவராய், அடியவர்களும் திருநீறு அணிய வைத்தவராய், சூரியனை வெயிலை வெளிப்படுத்துமாறு செய்தவராய், எல்லா உலகங்களும் படைத்தவராய், இரவையும், பகலையும் தோற்றுவித்தவராய், கொடிய வினைகளைப் போக்கும் வழிகளை உலகுக்கு அறிவித்தவராய், வேதாங்கங்கள் ஆறினையும் ஓதி உணரவைத்தவராய் உள்ளார்.
380 பத்தர்கட் கருளும் வைத்தார்
பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை யொன்ற வைத்தார்
சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்
முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியி னுரிவை வைத்தார்
ஐயனை யாற னாரே.
4.038.7
தலைவராகிய ஐயாறனார் பத்தர்களுக்கு அருள்பவராய், காளையை ஏறியூர்பவராய், அடியவர் மனத்தை ஒருவழிப்படுத்துபவராய், அம்மனம் சிவனையே நினைக்குமாறு செய்பவராய், அடியார்களுக்கு முத்தி நிலையை முழுதுமாக வைத்தவராய், அந்நிலை எய்துதற்குரிய வழிகளை அமைத்தவராய், யானைத்தோலைப் போர்வையாகக் கொண்டவராய் உள்ளார்.
381 ஏறுகந் தேற வைத்தார்
இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார்
நாகமு மரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார்
கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார்
ஐயனை யாற னாரே.
4.038.8
தலைவராகிய ஐயாறனார் தாம் விரும்பி இவரக்காளை வாகனத்தை உடையவராய், இருப்பிடமாக இடைமருதூரைக் கொண்டவராய், நறுமணங்கமழும் கொன்றைப் பூவைச் சூடியவராய், இடையில் பாம்பினை இறுகக்கட்டியவராய், பார்வதிபாகராய், கொல்லும் புலியின் தோலை ஆடையாக உடையவராய்க் கங்கையைச் சடையில் சூடியவராய் உள்ளார்.
382 பூதங்கள் பலவும் வைத்தார்
பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்
கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்
பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியு மந்தம் வைத்தார்
ஐயனை யாற னாரே.
4.038.9
தலைவராகிய ஐயாறனார் பல பூதகணங்களை உடையவராய், ஒளிவீசும் வெண்ணீறு அணிந்தவராய், இசைப்பாடல்களை அடியவர் பாட வைத்தவராய், இசைக்குச் சிறப்பிடம் வழங்கியவராய், தம் திருவடிகளை அடியவர்கள் முன் நின்று போற்றி வழிபடச் செய்பவராய், தம்மையே ஆதியும் அந்தமுமாக வைத்தவராய் உள்ளார்.
383 இரப்பவர்க் கீய வைத்தார்
ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயனை யாற னாரே.
4.038.10
தலைவராகிய ஐயாறனார், பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளியவராய், அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தம் அருளை வழங்கியவராய், நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குபவராய், பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய், இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார்.
திருச்சிற்றம்பலம்
4.038.திருவையாறு திருநேரிசை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர். தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
374 கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி யரவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார் அங்கையு ளனலும் வைத்தார் ஐயனை யாற னாரே.(4.038.1)
நம் தலைவனாராகிய ஐயாறனார், சடையில் கங்கையையும் ஒளிவீசும் புள்ளிகளையுடைய பாம்பையும் பிறையையும் விளங்குமாறு வைத்துத் தம்மை எல்லாத் திசையிலுள்ளாரும் தொழுமாறு அமைத்துக்கொண்டு பார்வதி பாகராய், மான்குட்டியையும், மழுப்படையையும், உள்ளங் கையில் வைத்த தீயையும் உடையவராவார். 375 பொடிதனைப் பூச வைத்தார் பொங்குவெண் ணூலும் வைத்தார் கடியதோர் நாகம் வைத்தார் காலனைக் கால வைத்தார் வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார் அடியிணை தொழவும் வைத்தார் ஐயனை யாற னாரே.(4.038.2)
ஒளி விளங்கும் பூணூலை அணிந்து, கொடிய நாகத்தைப் பூண்டு, கூற்றுவனை உயிர்கக்குமாறு உதைத்து, அழகிய பார்வதியை ஒரு பாகமாக மார்பில் வைத்து ஐயாற்றுத் தலைவராம் பெருமான் அடியவர்கள் திருநீற்றைப்பூசித்தம் திருவடிகளைத் தொழுமாறு வைத்தவராவார்.
376 உடைதரு கீளும் வைத்தார் உலகங்க ளனைத்தும் வைத்தார் படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார் விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார் அடைதர வருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.(4.038.3)
கீளொடு கோவணம் அணிந்து, உலகங்களை நிலை நிறுத்தி, மழுப்படை ஏந்தி, பாய்கின்ற புலியின் தோலை உடுத்து, காளை எழுதிய கொடியை உயர்த்தி, வெண்புரிநூல் அணிந்து அடியார்கள் தம்மை அடைய அருள்புரிபவர் ஐயாறராகிய நம் தலைவராவார்.
377 தொண்டர்க டொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார் இண்டையைத் திகழ வைத்தார் எமக்கென்று மின்பம் வைத்தார் வண்டுசேர் குழலி னாளை மருவியோர் பாகம் வைத்தார் அண்டவா னவர்க ளேத்து மையனை யாற னாரே.(4.038.4)
எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் வழிபடும் தலைவராகிய ஐயாறனார், சடையில் தூய பிறையைச் சூடி, முடி மாலையை விளங்க வைத்து, வண்டுகள் சேர்ந்த கூந்தலையுடைய பார்வதி பாகராய், அடியார்கள் தம்மைத் தொழவும் அடியவராகிய எங்களுக்கு என்றும் இன்பம் பெருகவும் வாய்ப்பு அளித்துள்ளார்.
378 வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார் கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார் ஆனிடை யைந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார் ஆனையி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.(4.038.5)
தலைவராகிய ஐயாறனார் வானவர் தம்மை வணங்கச் செய்தவராய், அடியார்களுடைய கொடிய வினைகளை அழிய வைத்தவராய், சுடுகாட்டிடைக் கூத்து நிகழ்த்துபவராய், மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு செய்து, பசுவினிடைப் பஞ்ச கவ்வியத்தை அமைத்து அதனால் தம்மை அபிடேகிப்பவருக்கு அருள் செய்து, யானைத்தோலைப் போர்த்திக் கொண்டவராவார்.
379 சங்கணி குழையும் வைத்தார் சாம்பர்மெய் பூச வைத்தார் வெங்கதி ரெரிய வைத்தார் விரிபொழி லனைத்தும் வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் அங்கம தோத வைத்தார் ஐயனை யாற னாரே.(4.038.6)
தலைவராகிய ஐயாறனார் சங்கினாலாகிய காதணியை அணிந்தவராய், அடியவர்களும் திருநீறு அணிய வைத்தவராய், சூரியனை வெயிலை வெளிப்படுத்துமாறு செய்தவராய், எல்லா உலகங்களும் படைத்தவராய், இரவையும், பகலையும் தோற்றுவித்தவராய், கொடிய வினைகளைப் போக்கும் வழிகளை உலகுக்கு அறிவித்தவராய், வேதாங்கங்கள் ஆறினையும் ஓதி உணரவைத்தவராய் உள்ளார்.
380 பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார் சித்தத்தை யொன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார் முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார் அத்தியி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.(4.038.7)
தலைவராகிய ஐயாறனார் பத்தர்களுக்கு அருள்பவராய், காளையை ஏறியூர்பவராய், அடியவர் மனத்தை ஒருவழிப்படுத்துபவராய், அம்மனம் சிவனையே நினைக்குமாறு செய்பவராய், அடியார்களுக்கு முத்தி நிலையை முழுதுமாக வைத்தவராய், அந்நிலை எய்துதற்குரிய வழிகளை அமைத்தவராய், யானைத்தோலைப் போர்வையாகக் கொண்டவராய் உள்ளார்.
381 ஏறுகந் தேற வைத்தார் இடைமரு திடமும் வைத்தார் நாறுபூங் கொன்றை வைத்தார் நாகமு மரையில் வைத்தார் கூறுமை பாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார் ஆறுமோர் சடையில் வைத்தார் ஐயனை யாற னாரே.(4.038.8)
தலைவராகிய ஐயாறனார் தாம் விரும்பி இவரக்காளை வாகனத்தை உடையவராய், இருப்பிடமாக இடைமருதூரைக் கொண்டவராய், நறுமணங்கமழும் கொன்றைப் பூவைச் சூடியவராய், இடையில் பாம்பினை இறுகக்கட்டியவராய், பார்வதிபாகராய், கொல்லும் புலியின் தோலை ஆடையாக உடையவராய்க் கங்கையைச் சடையில் சூடியவராய் உள்ளார்.
382 பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார் கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார் பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் ஆதியு மந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.(4.038.9)
தலைவராகிய ஐயாறனார் பல பூதகணங்களை உடையவராய், ஒளிவீசும் வெண்ணீறு அணிந்தவராய், இசைப்பாடல்களை அடியவர் பாட வைத்தவராய், இசைக்குச் சிறப்பிடம் வழங்கியவராய், தம் திருவடிகளை அடியவர்கள் முன் நின்று போற்றி வழிபடச் செய்பவராய், தம்மையே ஆதியும் அந்தமுமாக வைத்தவராய் உள்ளார்.
383 இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார் கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார் பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார் அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.(4.038.10)
தலைவராகிய ஐயாறனார், பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளியவராய், அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தம் அருளை வழங்கியவராய், நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குபவராய், பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய், இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார்.
திருச்சிற்றம்பலம்
|
||||||||
by Swathi on 18 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|