|
||||||||
நான்காம் திருமுறை-57 |
||||||||
4.057.திருஆவடுதுறை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர்.
தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
548 மஞ்சனே மணியு மானாய்
மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று
நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து
துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும்
ஆவடு துறையு ளானே.
4.057.1
ஆவடுதுறைப் பெருமானே! வலிமை உடையவனே! மணியே! மரகதமணிக் குவியலே! அடியேனுடைய உள்ளத்திற் புகுந்து உன்னை நினைக்கும் நிலையை இன்று தந்துள்ளவனே! யான் உயிர் நீக்கும் போது வந்து அடியேனுக்குத் துணையாக நின்று அஞ்சாதே என்று நீ அருள் செய்யவேண்டும்.
549 நானுகந் துன்னை நாளும்
நணுகுமா கருதி யேயும்
ஊனுகந் தோம்பு நாயே
னுள்ளுற வைவர்நின்றார்
தானுகந் தேயு கந்த
தகவிலாத் தொண்டனேனான்
ஆனுகந் தேறு வானே
ஆவடு துறையுளானே.
4.057.2
காளையை விரும்பி ஏறிஊர்பவனே! ஆவடுதுறைப் பெருமானே! நான் விரும்பி உன்னை அணுகி வரக் கருதியபோதும், உடம்பையே விரும்பிப் பாதுகாக்கும் அடியேனுடைய உட்புறத்தில் நிலையாக நிற்கும் ஐம்பொறிகளும் விரும்புவனவற்றையே யானும் விரும்பிச் செயற்பட்டுஉன் தொண்டன் என்று கூறும் தகுதியற்றவனாய் உள்ளேன்.
550 கட்டமே வினைக ளான
காத்திவை நோக்கி யாளாய்
ஒட்டவே யொட்டி நாளு
முன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் றலைகை யேந்திப்
பலிதிரிந் தூர்க டோறும்
அட்டமா வுருவி னானே
யாவடு துறையு ளானே.
4.057.3
தன் பரிசழிந்த பெரிய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை எடுத்து ஊர்கள்தோறும் திரிந்தவனாய்உள்ள அட்ட மூர்த்தியாம் ஆவடுதுறைப் பெருமானே! அடியேன் துன்பம் மேவுதற்குக் காரணமான வினைகள் சாராதவாறு தடுத்து, உனக்கு அடியவனாய், நீ அருட் கண்ணால்நோக்கி அடியேன் உயிரோடு ஒட்டும்படியே, அடியேனும் உன்னோடு ஒட்டி நாளும் உன்னைத் தியானித்தலைச் செய்ய இயலாதேனாய் உள்ளேன்.
551 பெருமைநன் றுடைய தில்லை
யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையா லுன்னை யுள்கி
யுகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வூனைக்
கட்டமே கழிக்கின் றேனான்
அருமையா நஞ்ச முண்ட
ஆவடு துறையு ளானே.
4.057.4
பெருமைகளை மிகுதியாக உள்ள தில்லைத் திருத்தலத்தைப் பற்றிப் பேசி நல்வினையைத் தேடிக் கொள்ளமாட்டேன். ஒருமைப்பட்ட உள்ளத்தாலே உன்னை நினைத்து உகந்து பேசி வீட்டுலகை அடையமாட்டேன். ஆணவச் சார்பால் எய்திய உடம்பைத் துயரத்திலேயே கழிக்கின்றேன். நுகர்தற்கு அரிய விடத்தை உண்டு அருளிய ஆவடுதுறைப் பெருமானே! அடியேற்கு அருளுக.
552 துட்டனாய் வினைய தென்னுஞ்
சுழித்தலை யகப்பட் டேனைக்
கட்டனா வைவர் வந்து
கலக்காமைக் காத்துக்கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை
மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும்
ஆவடு துறையு ளானே.
4.057.5
நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை மகிழ்வோடு ஒரு பாகமாக்கொண்டு எட்டுப்பெரிய பாம்புகளை ஆட்டுகின்ற ஆவடுதுறைப் பெருமானே! கொடியவனாய் வினை என்று சுழியில் அகப்பட்ட என்னைப் பாசத்தை உடையேனாக ஐம்பொறிகள் கலக்க முடியாதபடி பாதுகாத்து உன் அடியவனாகக் கொள்வாயாக.
553 காரழல் கண்டமே யாய்க்
கடிமதிற்புரங்கண் மூன்றும்
ஓரழ லம்பி னாலே
யுகைத்துத்தீயெரிய மூட்டி
நீரழற் சடையு ளானே
நினைப்பவர்வினைக டீர்ப்பாய்
ஆரழ லேந்தி யாடு
ஆவடு துறையு ளானே.
4.057.6
கரிய நெருப்பைப் போன்ற விடத்தை கழுத்தில் இருத்தி, பெரிய மதில்களை உடைய முப்புரங்களையும் ஒரு தீ அம்பைச் செலுத்தித் தீயினால் எரியுமாறு செய்து, கங்கையைத் தீப்போன்ற சடையில் வைத்துத் தன்னை விரும்பும் அடியவர்களுடைய வினைகளைத் தீர்ப்பவனாய் அரிய நெருப்பை உள்ளங்கையில் ஏந்திக் கூத்து நிகழ்த்தும் ஆவடுதுறைப் பெருமானே!
554 செறிவிலேன் சிந்தை யுள்ளே
சிவனடி தெரியமாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன்
கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லே
னினையுமா நினையமாட்டேன்
அறிவிலே னயர்த்துப் போனே
னாவடு துறையுளானே.
4.057.7
ஆவடுதுறைப் பெருமானே! மனத்திலே அலைதல் இன்றி செறிவு இல்லாதேனாய்ச் சிவன் அடிகளை அறிய மாட்டேனாய்க் குறிக்கோள் இன்றி நற்பண்பின்றிப் பெரியோர்கள் கூறும் வழியிலே உன் புகழைச் சொல்ல மாட்டாதேனாய் நல்வழியில் செல்லும் அறிவில்லேனாய் நினைக்க வேண்டியவழியிலே நினைக்க மாட்டேனாய் இவ்வாறு உண்மை அறிவு இன்மையால் புல்லறிவினால் மயங்கிப் போயினேன்.
555 கோலமா மங்கை தன்னைக்
கொண்டொருகோல மாய
சீலமே யறிய மாட்டேன்
செய்வினை மூடிநின்று
ஞாலமா மிதனு ளென்னை
நைவியா வண்ணநல்காய்
ஆலமா நஞ்ச முண்ட
வாவடு துறையுளானே.
4.057.8
ஆலகால விடத்தை உண்ட ஆவடுதுறைப் பெருமானே! அழகிய பார்வதி பாகனான அழகினை உடைய உன் தன்மையை அறிய மாட்டேனாய் யான் செய்யும் இருவினையும் என்னைப் பிணித்து இவ்வுலகப் பாசத்துள் என்னை வருத்தாத வகையில் அடியேனை விரும்பிப் பாதுகாப்பாயாக.
556 நெடியவன் மலரி னானுந்
நேர்ந்திருபாலு நேடக்
கடியதோ ருருவ மாகிக்
கனலெரியாகி நின்ற
வடிவின வண்ண மென்றே
யென்றுதாம்பேச லாகார்
அடியனே னெஞ்சி னுள்ளார்
ஆவடு துறையுளானே.
4.057.9
திருமாலும் பிரமனும் தம்முள் உடன்பட்டு அடியும் முடியும் தேடுமாறு விரைவில் தீத்தம்பமாய் நின்றதன் வடிவமும் தன் நிறமும் இன்ன என்று தம்மால் பேச இயலாதாராக அவ்விருவரும் இருக்க ஆவடுதுறைப் பெருமான் அடியேன் உள்ளத்துள்ளே நிலையாக வீற்றிருக்கிறான்.
557 மலைக்குநே ராய ரக்கன்
சென்றுற மங்கையஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே
தாங்கினான்வலியை மாள
வுலப்பிலா விரலா லூன்றி
யொறுத்தவற்கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும்
ஆவடு துறையுளானே.
4.057.10
கயிலைமலைக்கு நேராக இராவணன் சென்று சேரப் பார்வதி அஞ்சத் தன் தலைக்கு மேலே கைகளாலே அம்மலையைப் பெயர்க்கத் தாங்கிய அவன் வலிமை அழியுமாறு என்றும் அழிவில்லாத தன் கால்விரலால் ஊன்றி அவனைத் தண்டித்து, அலைகளை உடைய சடையில் கங்கையைச் சூடும் ஆவடுதுறைப் பெருமான் பின் அவனுக்கு அருள் செய்தான்.
திருச்சிற்றம்பலம்
4.057.திருஆவடுதுறை திருநேரிசை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர். தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
548 மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளு மானாய் நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானே துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று அஞ்சலென் றருள வேண்டும் ஆவடு துறையு ளானே. 4.057.1
ஆவடுதுறைப் பெருமானே! வலிமை உடையவனே! மணியே! மரகதமணிக் குவியலே! அடியேனுடைய உள்ளத்திற் புகுந்து உன்னை நினைக்கும் நிலையை இன்று தந்துள்ளவனே! யான் உயிர் நீக்கும் போது வந்து அடியேனுக்குத் துணையாக நின்று அஞ்சாதே என்று நீ அருள் செய்யவேண்டும்.
549 நானுகந் துன்னை நாளும் நணுகுமா கருதி யேயும் ஊனுகந் தோம்பு நாயே னுள்ளுற வைவர்நின்றார் தானுகந் தேயு கந்த தகவிலாத் தொண்டனேனான் ஆனுகந் தேறு வானே ஆவடு துறையுளானே. 4.057.2
காளையை விரும்பி ஏறிஊர்பவனே! ஆவடுதுறைப் பெருமானே! நான் விரும்பி உன்னை அணுகி வரக் கருதியபோதும், உடம்பையே விரும்பிப் பாதுகாக்கும் அடியேனுடைய உட்புறத்தில் நிலையாக நிற்கும் ஐம்பொறிகளும் விரும்புவனவற்றையே யானும் விரும்பிச் செயற்பட்டுஉன் தொண்டன் என்று கூறும் தகுதியற்றவனாய் உள்ளேன்.
550 கட்டமே வினைக ளான காத்திவை நோக்கி யாளாய் ஒட்டவே யொட்டி நாளு முன்னையுள் வைக்க மாட்டேன் பட்டவான் றலைகை யேந்திப் பலிதிரிந் தூர்க டோறும் அட்டமா வுருவி னானே யாவடு துறையு ளானே. 4.057.3
தன் பரிசழிந்த பெரிய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை எடுத்து ஊர்கள்தோறும் திரிந்தவனாய்உள்ள அட்ட மூர்த்தியாம் ஆவடுதுறைப் பெருமானே! அடியேன் துன்பம் மேவுதற்குக் காரணமான வினைகள் சாராதவாறு தடுத்து, உனக்கு அடியவனாய், நீ அருட் கண்ணால்நோக்கி அடியேன் உயிரோடு ஒட்டும்படியே, அடியேனும் உன்னோடு ஒட்டி நாளும் உன்னைத் தியானித்தலைச் செய்ய இயலாதேனாய் உள்ளேன்.
551 பெருமைநன் றுடைய தில்லை யென்றுநான் பேச மாட்டேன் ஒருமையா லுன்னை யுள்கி யுகந்துவா னேற மாட்டேன் கருமையிட் டாய வூனைக் கட்டமே கழிக்கின் றேனான் அருமையா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே. 4.057.4
பெருமைகளை மிகுதியாக உள்ள தில்லைத் திருத்தலத்தைப் பற்றிப் பேசி நல்வினையைத் தேடிக் கொள்ளமாட்டேன். ஒருமைப்பட்ட உள்ளத்தாலே உன்னை நினைத்து உகந்து பேசி வீட்டுலகை அடையமாட்டேன். ஆணவச் சார்பால் எய்திய உடம்பைத் துயரத்திலேயே கழிக்கின்றேன். நுகர்தற்கு அரிய விடத்தை உண்டு அருளிய ஆவடுதுறைப் பெருமானே! அடியேற்கு அருளுக.
552 துட்டனாய் வினைய தென்னுஞ் சுழித்தலை யகப்பட் டேனைக் கட்டனா வைவர் வந்து கலக்காமைக் காத்துக்கொள்வாய் மட்டவிழ் கோதை தன்னை மகிழ்ந்தொரு பாகம் வைத்து அட்டமா நாக மாட்டும் ஆவடு துறையு ளானே. 4.057.5
நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை மகிழ்வோடு ஒரு பாகமாக்கொண்டு எட்டுப்பெரிய பாம்புகளை ஆட்டுகின்ற ஆவடுதுறைப் பெருமானே! கொடியவனாய் வினை என்று சுழியில் அகப்பட்ட என்னைப் பாசத்தை உடையேனாக ஐம்பொறிகள் கலக்க முடியாதபடி பாதுகாத்து உன் அடியவனாகக் கொள்வாயாக.
553 காரழல் கண்டமே யாய்க் கடிமதிற்புரங்கண் மூன்றும் ஓரழ லம்பி னாலே யுகைத்துத்தீயெரிய மூட்டி நீரழற் சடையு ளானே நினைப்பவர்வினைக டீர்ப்பாய் ஆரழ லேந்தி யாடு ஆவடு துறையு ளானே. 4.057.6
கரிய நெருப்பைப் போன்ற விடத்தை கழுத்தில் இருத்தி, பெரிய மதில்களை உடைய முப்புரங்களையும் ஒரு தீ அம்பைச் செலுத்தித் தீயினால் எரியுமாறு செய்து, கங்கையைத் தீப்போன்ற சடையில் வைத்துத் தன்னை விரும்பும் அடியவர்களுடைய வினைகளைத் தீர்ப்பவனாய் அரிய நெருப்பை உள்ளங்கையில் ஏந்திக் கூத்து நிகழ்த்தும் ஆவடுதுறைப் பெருமானே!
554 செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரியமாட்டேன் குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன் நெறிபடு மதியொன் றில்லே னினையுமா நினையமாட்டேன் அறிவிலே னயர்த்துப் போனே னாவடு துறையுளானே. 4.057.7
ஆவடுதுறைப் பெருமானே! மனத்திலே அலைதல் இன்றி செறிவு இல்லாதேனாய்ச் சிவன் அடிகளை அறிய மாட்டேனாய்க் குறிக்கோள் இன்றி நற்பண்பின்றிப் பெரியோர்கள் கூறும் வழியிலே உன் புகழைச் சொல்ல மாட்டாதேனாய் நல்வழியில் செல்லும் அறிவில்லேனாய் நினைக்க வேண்டியவழியிலே நினைக்க மாட்டேனாய் இவ்வாறு உண்மை அறிவு இன்மையால் புல்லறிவினால் மயங்கிப் போயினேன்.
555 கோலமா மங்கை தன்னைக் கொண்டொருகோல மாய சீலமே யறிய மாட்டேன் செய்வினை மூடிநின்று ஞாலமா மிதனு ளென்னை நைவியா வண்ணநல்காய் ஆலமா நஞ்ச முண்ட வாவடு துறையுளானே. 4.057.8
ஆலகால விடத்தை உண்ட ஆவடுதுறைப் பெருமானே! அழகிய பார்வதி பாகனான அழகினை உடைய உன் தன்மையை அறிய மாட்டேனாய் யான் செய்யும் இருவினையும் என்னைப் பிணித்து இவ்வுலகப் பாசத்துள் என்னை வருத்தாத வகையில் அடியேனை விரும்பிப் பாதுகாப்பாயாக.
556 நெடியவன் மலரி னானுந் நேர்ந்திருபாலு நேடக் கடியதோ ருருவ மாகிக் கனலெரியாகி நின்ற வடிவின வண்ண மென்றே யென்றுதாம்பேச லாகார் அடியனே னெஞ்சி னுள்ளார் ஆவடு துறையுளானே. 4.057.9
திருமாலும் பிரமனும் தம்முள் உடன்பட்டு அடியும் முடியும் தேடுமாறு விரைவில் தீத்தம்பமாய் நின்றதன் வடிவமும் தன் நிறமும் இன்ன என்று தம்மால் பேச இயலாதாராக அவ்விருவரும் இருக்க ஆவடுதுறைப் பெருமான் அடியேன் உள்ளத்துள்ளே நிலையாக வீற்றிருக்கிறான்.
557 மலைக்குநே ராய ரக்கன் சென்றுற மங்கையஞ்சத் தலைக்குமேற் கைக ளாலே தாங்கினான்வலியை மாள வுலப்பிலா விரலா லூன்றி யொறுத்தவற்கருள்கள் செய்து அலைத்தவான் கங்கை சூடும் ஆவடு துறையுளானே. 4.057.10
கயிலைமலைக்கு நேராக இராவணன் சென்று சேரப் பார்வதி அஞ்சத் தன் தலைக்கு மேலே கைகளாலே அம்மலையைப் பெயர்க்கத் தாங்கிய அவன் வலிமை அழியுமாறு என்றும் அழிவில்லாத தன் கால்விரலால் ஊன்றி அவனைத் தண்டித்து, அலைகளை உடைய சடையில் கங்கையைச் சூடும் ஆவடுதுறைப் பெருமான் பின் அவனுக்கு அருள் செய்தான்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|