|
||||||||
நான்காம் திருமுறை-66 |
||||||||
4.066.திருநாகேச்சரம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சண்பகாரண்ணியேசுவரர்.
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
639 கச்சைசேர ரரவர் போலுங்
கறையணி மிடறர்போலும்
பிச்சைகொண் டுண்பர்போலும்
பேரரு ளாளர்போலும்
இச்சையான் மலர்கள் தூவி
யிரவொடுபகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர்போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.1
திருநாகேச்சுரத்துப் பெருமான், பாம்புக் கச்சை உடையவராய், நீலகண்டராய், பிச்சை எடுத்து உண்பவராய், பேரருளாளராய், விருப்போடு பூக்களைத் தூவி இரவும் பகலும் தம்மை விரும்பி வழிபடுபவர்களுக்கு இனியராய் உள்ளார்.
640 வேடுறு வேட ராகி
விசயனோ டெய்தார்போலும்
காடுறு பதியர் போலுங்
கடிபுனற் கங்கைநங்கை
சேடெறி சடையர் போலுந்
தீவினை தீர்க்கவல்ல
நாடறி புகழர் போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.2
திருநாகேச்சுரத்துப் பெருமான் வேடன் உருவில் வந்து அருச்சுனனோடு அம்பு எய்து பொருதவராய், சுடுகாட்டை இருப்பிடமாகக் கொண்டவராய், நறுமணம் கமழும் கங்கையாகிய நங்கையை, பெருமையை வெளிப்படுத்தும் சடையில் அடக்கியவராய், தீவினையைத் தீர்க்க வல்லவராய், அதனால் உலகறிந்த புகழை உடையவராய் உள்ளார்.
641 கற்றுணை வில்ல தாகக்
கடியரண் செற்றார்போலும்
பொற்றுணைப் பாதர் போலும்
புலியதளுடையர் போலும்
சொற்றுணை மாலை கொண்டு
தொழுதெழுவார்கட் கெல்லாம்
நற்றுணை யாவர் போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.3
திருநாகேச்சுரத்துப் பெருமான் மலையையே தமக்குத் துணையான வில்லாகக் கொண்டு காவல் அமைந்த முப்புரங்களை அம்பு எய்து அழித்தவராய், பொன்னுக்கு ஒப்பான திருவடிகளை உடையவராய், புலித்தோல் ஆடையராய், வேதத்துக்குச் சமமான பாமாலைகளைக் கொண்டு தொழுது வழிபடுபவர்க்கெல்லாம் மேம்பட்ட துணைவராவார்.
642 கொம்பனாள் பாகர் போலுங்
கொடியுடைவிடையர் போலும்
செம்பொனா ருருவர் போலுந்
திகழ்திருநீற்றர் போலும்
எம்பிரா னெம்மை யாளு
மிறைவனே யென்றுதம்மை
நம்புவார்க் கன்பர்போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.4
பார்வதி பாகராய். காளை எழுதிய கொடியினராய், செம்பொன் போன்ற நிறத்தினராய், விளங்கும் திருநீற்றினராய், எம் பெருமானே! எம்மை அடிமை கொள்ளும் இறைவனே! என்று தம்மை விரும்பும் அடியார்களுக்கு அன்பராய் உள்ளார்.
643 கடகரி யுரியர் போலுங்
கனன்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும்
பாரிடம் பலவுங்கூடிக்
குடமுடை முழவ மார்ப்பக்
கூளிகள் பாட நாளும்
நடநவி லடிகள் போலும்
நாகவீச் சரவ னாரே.
4.066.5
யானைத்தோலைப் போர்த்தவராய், கனல் வீசும் மழுப்படையை ஏந்தியவராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் கட்டியவராய், பூதங்கள் பலவும் கூடிக் குடமுழாவை ஒலிப்பப் பேய்கள் பாட நாடோறும் கூத்து நிகழ்த்தும் தலைவராய் உள்ளார் திருநாகேச்சுரப் பெருமான்.
644 பிறையுறு சடையர் போலும்
பெண்ணொருபாகர் போலும்
மறையுறு மொழியர் போலும்
நான்மறையவன்ற னோடும்
முறைமுறை யமரர் கூடி
முடிகளால்வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.6
திருநாகேச்சுரப் பெருமான் பிறைதங்கும் சடையினராய்ப் பார்வதிபாகராய், வேதங்களை ஓதுபவராய், திருமாலோடும் பிரமனோடும் தேவர்கள் முறையாகக்கூடித் தம் தலைகளால் வணங்கும் தேனைப்போல விரும்பத்தக்க திருவடிகளை உடையவராய் உள்ளார்.
645 வஞ்சகர்க் கரியர் போலும்
மருவினோர்க்கௌயர் போலும்
குஞ்சரத் துரியர் போலுங்
கூற்றினைக்குமைப்பர் போலும்
விஞ்சைய ரிரிய வன்று
வேலைவாய்வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.7
திருநாகேச்சுரத்துப் பெருமான் வஞ்சகர்களுக்கு அரியராய், தம்மை விரும்பிய அடியவர்களுக்கு எளியராய், யானைத்தோலைப் போர்த்தவராய், கூற்றுவனை ஒறுத்தவராய், தேவர்கள் அஞ்சி ஓடுமாறு கடலில் தோன்றிப் பரவிய விடம் அணிகண்டராய் உள்ளார்.
646 போகமார் மோடி கொங்கை
புணர்தரு புனிதர்போலும்
வேகமார் விடையர் போலும்
வெண்பொடியாடு மேனிப்
பாகமா லுடையர் போலும்
பருப்பதவில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும்
நாகவீச்சசரவ னாரே.
4.066.8
திருநாகேச்சுரத்துப் பெருமான் இன்பம் நிறைந்த காளியின் கொங்கைகளைத் தழுவும் புனிதராய், விரைந்து செல்லும் காளையை உடையவராய், வெண்ணீறணிந்த திருமேனியின் ஒருபாகமாகத் திருமாலை உடையவராய, மேருமலையாகிய வில்லையும், பாம்பாகிய நாணையும் உடையவராய் உள்ளார்.
647 கொக்கரை தாளம் வீணை
பாணிசெய்குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும்
ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும்
மாதரை மையல்செய்யும்
நக்கரை யுருவர் போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.9
திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளையராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.
648 வின்மையாற் புரங்கண் மூன்றும்
வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையா லமரர் தங்க
டலைவர்க்குந்தலைவர் போலும்
வன்மையான் மலையெ டுத்தான்
வலியினைத்தொலைவித் தாங்கே
நன்மையா லளிப்பர் போலும்
நாகவீச் சரவ னாரே.
4.066.10
திருநாகேச்சுரத்துப் பெருமான் தம் வில்லாற்றலால் மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவராய், தம் பண்பினாலே தேவர்களுடைய தலைவர்களுக்கும் தலைவராய், தன் உடல் வலிமையாலே கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனது வலிமையைப் போக்கி அவ்விடத்திலேயே அவனுக்கு நன்மை ஏற்படும் வகையில் அருள் செய்தவராவார்.
திருச்சிற்றம்பலம்
4.066.திருநாகேச்சரம் திருநேரிசை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சண்பகாரண்ணியேசுவரர். தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
639 கச்சைசேர ரரவர் போலுங் கறையணி மிடறர்போலும் பிச்சைகொண் டுண்பர்போலும் பேரரு ளாளர்போலும் இச்சையான் மலர்கள் தூவி யிரவொடுபகலுந் தம்மை நச்சுவார்க் கினியர்போலும் நாகவீச்சரவ னாரே. 4.066.1
திருநாகேச்சுரத்துப் பெருமான், பாம்புக் கச்சை உடையவராய், நீலகண்டராய், பிச்சை எடுத்து உண்பவராய், பேரருளாளராய், விருப்போடு பூக்களைத் தூவி இரவும் பகலும் தம்மை விரும்பி வழிபடுபவர்களுக்கு இனியராய் உள்ளார்.
640 வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார்போலும் காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கைநங்கை சேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்கவல்ல நாடறி புகழர் போலும் நாகவீச்சரவ னாரே. 4.066.2
திருநாகேச்சுரத்துப் பெருமான் வேடன் உருவில் வந்து அருச்சுனனோடு அம்பு எய்து பொருதவராய், சுடுகாட்டை இருப்பிடமாகக் கொண்டவராய், நறுமணம் கமழும் கங்கையாகிய நங்கையை, பெருமையை வெளிப்படுத்தும் சடையில் அடக்கியவராய், தீவினையைத் தீர்க்க வல்லவராய், அதனால் உலகறிந்த புகழை உடையவராய் உள்ளார்.
641 கற்றுணை வில்ல தாகக் கடியரண் செற்றார்போலும் பொற்றுணைப் பாதர் போலும் புலியதளுடையர் போலும் சொற்றுணை மாலை கொண்டு தொழுதெழுவார்கட் கெல்லாம் நற்றுணை யாவர் போலும் நாகவீச்சரவ னாரே. 4.066.3
திருநாகேச்சுரத்துப் பெருமான் மலையையே தமக்குத் துணையான வில்லாகக் கொண்டு காவல் அமைந்த முப்புரங்களை அம்பு எய்து அழித்தவராய், பொன்னுக்கு ஒப்பான திருவடிகளை உடையவராய், புலித்தோல் ஆடையராய், வேதத்துக்குச் சமமான பாமாலைகளைக் கொண்டு தொழுது வழிபடுபவர்க்கெல்லாம் மேம்பட்ட துணைவராவார்.
642 கொம்பனாள் பாகர் போலுங் கொடியுடைவிடையர் போலும் செம்பொனா ருருவர் போலுந் திகழ்திருநீற்றர் போலும் எம்பிரா னெம்மை யாளு மிறைவனே யென்றுதம்மை நம்புவார்க் கன்பர்போலும் நாகவீச்சரவ னாரே. 4.066.4
பார்வதி பாகராய். காளை எழுதிய கொடியினராய், செம்பொன் போன்ற நிறத்தினராய், விளங்கும் திருநீற்றினராய், எம் பெருமானே! எம்மை அடிமை கொள்ளும் இறைவனே! என்று தம்மை விரும்பும் அடியார்களுக்கு அன்பராய் உள்ளார்.
643 கடகரி யுரியர் போலுங் கனன்மழு வாளர் போலும் படவர வரையர் போலும் பாரிடம் பலவுங்கூடிக் குடமுடை முழவ மார்ப்பக் கூளிகள் பாட நாளும் நடநவி லடிகள் போலும் நாகவீச் சரவ னாரே. 4.066.5
யானைத்தோலைப் போர்த்தவராய், கனல் வீசும் மழுப்படையை ஏந்தியவராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் கட்டியவராய், பூதங்கள் பலவும் கூடிக் குடமுழாவை ஒலிப்பப் பேய்கள் பாட நாடோறும் கூத்து நிகழ்த்தும் தலைவராய் உள்ளார் திருநாகேச்சுரப் பெருமான்.
644 பிறையுறு சடையர் போலும் பெண்ணொருபாகர் போலும் மறையுறு மொழியர் போலும் நான்மறையவன்ற னோடும் முறைமுறை யமரர் கூடி முடிகளால்வணங்க நின்ற நறவமர் கழலர் போலும் நாகவீச்சரவ னாரே. 4.066.6
திருநாகேச்சுரப் பெருமான் பிறைதங்கும் சடையினராய்ப் பார்வதிபாகராய், வேதங்களை ஓதுபவராய், திருமாலோடும் பிரமனோடும் தேவர்கள் முறையாகக்கூடித் தம் தலைகளால் வணங்கும் தேனைப்போல விரும்பத்தக்க திருவடிகளை உடையவராய் உள்ளார்.
645 வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க்கௌயர் போலும் குஞ்சரத் துரியர் போலுங் கூற்றினைக்குமைப்பர் போலும் விஞ்சைய ரிரிய வன்று வேலைவாய்வந்தெ ழுந்த நஞ்சணி மிடற்றர் போலும் நாகவீச்சரவ னாரே. 4.066.7
திருநாகேச்சுரத்துப் பெருமான் வஞ்சகர்களுக்கு அரியராய், தம்மை விரும்பிய அடியவர்களுக்கு எளியராய், யானைத்தோலைப் போர்த்தவராய், கூற்றுவனை ஒறுத்தவராய், தேவர்கள் அஞ்சி ஓடுமாறு கடலில் தோன்றிப் பரவிய விடம் அணிகண்டராய் உள்ளார்.
646 போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர்போலும் வேகமார் விடையர் போலும் வெண்பொடியாடு மேனிப் பாகமா லுடையர் போலும் பருப்பதவில்லர் போலும் நாகநா ணுடையர் போலும் நாகவீச்சசரவ னாரே. 4.066.8
திருநாகேச்சுரத்துப் பெருமான் இன்பம் நிறைந்த காளியின் கொங்கைகளைத் தழுவும் புனிதராய், விரைந்து செல்லும் காளையை உடையவராய், வெண்ணீறணிந்த திருமேனியின் ஒருபாகமாகத் திருமாலை உடையவராய, மேருமலையாகிய வில்லையும், பாம்பாகிய நாணையும் உடையவராய் உள்ளார்.
647 கொக்கரை தாளம் வீணை பாணிசெய்குழகர் போலும் அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும் வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல்செய்யும் நக்கரை யுருவர் போலும் நாகவீச்சரவ னாரே. 4.066.9
திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளையராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.
648 வின்மையாற் புரங்கண் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும் தன்மையா லமரர் தங்க டலைவர்க்குந்தலைவர் போலும் வன்மையான் மலையெ டுத்தான் வலியினைத்தொலைவித் தாங்கே நன்மையா லளிப்பர் போலும் நாகவீச் சரவ னாரே. 4.066.10
திருநாகேச்சுரத்துப் பெருமான் தம் வில்லாற்றலால் மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவராய், தம் பண்பினாலே தேவர்களுடைய தலைவர்களுக்கும் தலைவராய், தன் உடல் வலிமையாலே கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனது வலிமையைப் போக்கி அவ்விடத்திலேயே அவனுக்கு நன்மை ஏற்படும் வகையில் அருள் செய்தவராவார்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|