|
||||||||
நான்காம் திருமுறை-67 |
||||||||
4.067.திருக்கொண்டீச்சரம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் - பசுபதீசுவரர்.
தேவியார் - சாந்தநாயகியம்மை.
649 வரைகிலேன் புலன்க ளைந்தும்
வரைகிலாப்பிறவி மாயப்
புரையிலே யடங்கி நின்று
புறப்படும்வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாகத்
தண்ணலே யஞ்சலென்னாய்
திரையுலாம் பழன வேலித்
திருக்கொண்டீச்சரத்து ளானே.
4.067.1
அலைகள் உலாவுகின்ற வயல்களால் சூழப்பட்ட திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே! இடையில் பாம்பினை விளங்குமாறு அணிந்த அண்ணலே! ஐம்புல வேட்கையை நீக்கும் ஆற்றல் இல்லேனாய், நீக்குதற்கு அரிய பிறவியாகிய வஞ்சனைப் படுகுழியிலே விழுந்து அதனினின்றும் கரையேறும் வழியைக் காணேனாய் உள்ள அடியேனுக்கு அஞ்சேல் என்று அருள் செய்வாயாக!.
650 தொண்டனேன் பிறந்து வாளா
தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து
பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே யண்ட வாணா
வறிவனே யஞ்ச லென்னாய்
தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த
திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.067.2
தேவனே! உலகங்களில் பரந்து எங்கும் கலந்து வாழ்பவனே! முக்காலமும் அறிபவனே! தௌந்த அலைகளை உடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரத்துப் பெருமானே! உன் அடியேன் பிறவி எடுத்தபின் வீணாகப் பழைய வினைப்பயனாகிய குழியில் விழுந்து இந்த உடம்பைச் சுமந்து வருந்தி இத்துயரிலிருந்து தப்பிப் பிறவாமையை அடைவதற்குரிய வழியைக் காணேனாய் அஞ்சுகின்றேன். அடியேனுக்கு அஞ்சேல் என்று அருளுவாயாக.
651 கால்கொடுத் தெலும்பு மூட்டிக்
கதிர்நரம் பாக்கை யார்த்துத்
தோலுடுத் துதிர மட்டித்
தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத் துழைஞர் கூடி
யொளிப்பதற் கஞ்சு கின்றேன்
சேலுடைப் பழனஞ் சூழ்ந்த
திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.067.3
சேல் மீன்களை உடைய வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரப் பெருமானே! இரண்டு கால்களைக் கொடுத்து எலும்புகளைப் பொருத்தி, விளங்கும் நரம்புகளை உடம்பினுள் இணைத்துத் தோலை மேலே போர்த்திக் குருதியை உள்ளே நிரப்பித் தொக்க மயிர்களால் வேய்ந்து அமைக்கப்பட்ட கூரையாகிய இவ்வுடம்பு நிலையாமையை அடையும்போது பக்கத்திலுள்ள உற்றார் உறவினர் ஒன்று கூடி இதன் பிரிவிற்கு வாய் விட்டுக் கதறிச் சுடுகாட்டில் குழி தோண்டிப் புதைப்பதற்கு அஞ்சுகின்றேன்.
652 கூட்டமா யைவர் வந்து
கொடுந்தொழிற் குணத்த ராகி
ஆட்டுவார்க் காற்ற கில்லே
னாடர வசைத்த கோவே
காட்டிடை யரங்க மாக
வாடிய கடவுளேயோ
சேட்டிரும் பழன வேலித்
திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.067.4
ஆடுகின்ற பாம்பை இடையில் இறுகக் கட்டிய தலைவனே! சுடுகாட்டைக் கூத்தாடும் அரங்கமாகக் கொண்டு ஆடும் கடவுளே! பெருமை பொருந்திய பரப்புடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரப் பெருமானே! ஐம்பொறிகளும் கூடிவந்து கொடிய தொழில்கள் செய்வதனையே தம் பண்பாகக் கொண்டு என்னைத் தம் விருப்பப்படி செயற்படுத்த அவற்றின் தொல்லையைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன்.
653 பொக்கமாய் நின்றபொல்லாப்
புழுமிடை முடைகொ ளாக்கை
தொக்குநின் றைவர் தொண்ணூற்
றறுவருந் துயக்க மெய்த
மிக்குநின் றிவர்கள் செய்யும்
வேதனைக் கலந்து போனேன்
செக்கரே திகழு மேனித்
திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.067.5
செம்மேனி அம்மானாகிய கொண்டீச்சரப் பெருமானே! நிலைபேறின்றிப் பொய்யாக அமைந்த அழகற்ற புழுக்கள் மிகக் கலந்த தீ நாற்றமுடைய இவ்வுடலிலே இணைந்து இருக்கின்ற ஐம்பொறிகளும், 96 தத்துவ தாத்துவிகங்களும் அடியேன் சோர்வு எய்துமாறு செய்யும் கொடுஞ்செயல்களைத் தாங்க இயலாமல் துன்புற்றிருக்கின்றேன்.
654 ஊனுலா முடைகொ ளாக்கை
யுடைகல மாவ தென்றும்
மானுலா மழைக்க ணார்தம்
வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
நானெலா மினைய கால
நண்ணிலே னெண்ண மில்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த
திருக்கொண்டீச் சரத்துளானே.
4.067.6
வண்டுகள் உலாவும் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே! புலாலால் அமைக்கப்பட்ட நாற்றம் வீசும் உடம்புப் பாறையில் மோதி உடையும் மரக்கலம் போல்வது என்னும் எண்ணம் இல்லாதேனாய், மான் கண்கள் போன்று மருளும் குளிர்ந்த கண்களையுடைய மகளிரோடு வாழும் வாழ்க்கையை உண்மையான வாழ்வு என்று எண்ணினேனாய், அடியேன் இதுகாறும் உன்னை அணுகாது வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேன்.
655 சாணிரு மடங்கு நீண்ட
சழக்குடைப்பதிக்கு நாதர்
வாணிக ரைவர் தொண்ணூற்
றறுவரு மயக்கஞ்செய்து
பேணிய பதியி னின்று
பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு
திருக்கொண்டீச்சரத்து ளானே.
4.067.7
வானளாவிய மாடங்கள் பலவாக உள்ள திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே! ஒரு முழம் நீளம் உடைய பொய்யான உடம்பாகிய ஊருக்கு ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கும் வாணிக நோக்கமுடைய ஐம்பொறிகளாகிய வாணிகரும், தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்களும் கலக்கத்தை உண்டாக்க அடியேன் விரும்பித் தங்கிய அவ்வூரிலிருந்து பிரிந்து போகக் கூடிய நாள் இன்னது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேனாய் உள்ளேன்.
656 பொய்ம்மறித் தியற்றி வைத்துப்
புலால்கமழ்பண்டம் பெய்து
பைம்மறித் தியற்றி யன்ன
பாங்கிலாக்குரம்பை நின்று
கைம்மறித் தனைய வாவி
கழியும்போ தறிய மாட்டேன்
செந்நெறிச் செலவு காணேன்
திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.067.8
திருக்கொண்டீச்சரத்துப்பெருமானே! பொய்களை வெளியே செல்லாதபடி தடுத்துத் திருப்பி அவற்றிற்கு வடிவுதந்து புலால் நாற்றம் வீசும் பொருள்களை அவற்றிற் பொருத்திப் பையை அழுக்குப் புலப்படாதபடி திருப்பி வைத்தாற்போன்று, எனக்குத் துணையாக உதவாத இந்த உடம்பிலிருந்து இது தகாது என்று கைகளால் குறிப்பிட்டுச் செல்வது போன்ற உயிர் நீங்கும் காலம் இது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேன். உயிருக்கு உறுதி தேடி நேரிய வழியில் செல்லும் ஞான சாரத்தையும் உணரேன்.
657 பாலனாய்க் கழிந்த நாளும்
பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு
மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளுங்
குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுலாம் பழனவேலித்
திருக்கொண்டீச் சரத்துளானே.
4.067.9
சேல்கள் உலாவும் வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரத்துப் பெருமானே! சிறுவனாய் இருந்து கழிந்தபாலப் பருவத்தும், குளிர்ந்த மலர் மாலைகளை அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும், மெலிவோடு கிழப் பருவம் வரக் கோலை ஊன்றிக் கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றி வாழ்ந்து கெட்டுப் போயினேன்.
658 விரைதரு கருமென் கூந்தல்
விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர விலங்கைக் கோமான்
விலங்கலை யெடுத்த ஞான்று
பருவரை யனைய தோளு
முடிகளும் பாறி வீழத்
திருவிர லூன்றி னானே
திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.067.10
திருக்கொண்டீச்சரத்துப் பெருமான் நறுமணம் கமழும் கரிய மெல்லிய கூந்தலையும் விளங்குகின்ற அணிகலன்களையும் வேல்போன்ற ஒளிபொருந்திய கண்களையும் உடைய பார்வதி அஞ்சுமாறு இராவணன் மலையை எடுத்த போது அவனுடைய பருத்த மலைபோன்ற தோள்களும் முடிகளும் சிதறி விழுமாறு அழகிய கால் விரலை ஊன்றினார்.
திருச்சிற்றம்பலம்
4.067.திருக்கொண்டீச்சரம் திருநேரிசை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது சுவாமிபெயர் - பசுபதீசுவரர். தேவியார் - சாந்தநாயகியம்மை.
649 வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப்பிறவி மாயப் புரையிலே யடங்கி நின்று புறப்படும்வழியுங் காணேன் அரையிலே மிளிரு நாகத் தண்ணலே யஞ்சலென்னாய் திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சரத்து ளானே. 4.067.1
அலைகள் உலாவுகின்ற வயல்களால் சூழப்பட்ட திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே! இடையில் பாம்பினை விளங்குமாறு அணிந்த அண்ணலே! ஐம்புல வேட்கையை நீக்கும் ஆற்றல் இல்லேனாய், நீக்குதற்கு அரிய பிறவியாகிய வஞ்சனைப் படுகுழியிலே விழுந்து அதனினின்றும் கரையேறும் வழியைக் காணேனாய் உள்ள அடியேனுக்கு அஞ்சேல் என்று அருள் செய்வாயாக!.
650 தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன் அண்டனே யண்ட வாணா வறிவனே யஞ்ச லென்னாய் தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.067.2
தேவனே! உலகங்களில் பரந்து எங்கும் கலந்து வாழ்பவனே! முக்காலமும் அறிபவனே! தௌந்த அலைகளை உடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரத்துப் பெருமானே! உன் அடியேன் பிறவி எடுத்தபின் வீணாகப் பழைய வினைப்பயனாகிய குழியில் விழுந்து இந்த உடம்பைச் சுமந்து வருந்தி இத்துயரிலிருந்து தப்பிப் பிறவாமையை அடைவதற்குரிய வழியைக் காணேனாய் அஞ்சுகின்றேன். அடியேனுக்கு அஞ்சேல் என்று அருளுவாயாக.
651 கால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத் தோலுடுத் துதிர மட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரை ஓலெடுத் துழைஞர் கூடி யொளிப்பதற் கஞ்சு கின்றேன் சேலுடைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.067.3
சேல் மீன்களை உடைய வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரப் பெருமானே! இரண்டு கால்களைக் கொடுத்து எலும்புகளைப் பொருத்தி, விளங்கும் நரம்புகளை உடம்பினுள் இணைத்துத் தோலை மேலே போர்த்திக் குருதியை உள்ளே நிரப்பித் தொக்க மயிர்களால் வேய்ந்து அமைக்கப்பட்ட கூரையாகிய இவ்வுடம்பு நிலையாமையை அடையும்போது பக்கத்திலுள்ள உற்றார் உறவினர் ஒன்று கூடி இதன் பிரிவிற்கு வாய் விட்டுக் கதறிச் சுடுகாட்டில் குழி தோண்டிப் புதைப்பதற்கு அஞ்சுகின்றேன்.
652 கூட்டமா யைவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி ஆட்டுவார்க் காற்ற கில்லே னாடர வசைத்த கோவே காட்டிடை யரங்க மாக வாடிய கடவுளேயோ சேட்டிரும் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.067.4
ஆடுகின்ற பாம்பை இடையில் இறுகக் கட்டிய தலைவனே! சுடுகாட்டைக் கூத்தாடும் அரங்கமாகக் கொண்டு ஆடும் கடவுளே! பெருமை பொருந்திய பரப்புடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரப் பெருமானே! ஐம்பொறிகளும் கூடிவந்து கொடிய தொழில்கள் செய்வதனையே தம் பண்பாகக் கொண்டு என்னைத் தம் விருப்பப்படி செயற்படுத்த அவற்றின் தொல்லையைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன்.
653 பொக்கமாய் நின்றபொல்லாப் புழுமிடை முடைகொ ளாக்கை தொக்குநின் றைவர் தொண்ணூற் றறுவருந் துயக்க மெய்த மிக்குநின் றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன் செக்கரே திகழு மேனித் திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.067.5
செம்மேனி அம்மானாகிய கொண்டீச்சரப் பெருமானே! நிலைபேறின்றிப் பொய்யாக அமைந்த அழகற்ற புழுக்கள் மிகக் கலந்த தீ நாற்றமுடைய இவ்வுடலிலே இணைந்து இருக்கின்ற ஐம்பொறிகளும், 96 தத்துவ தாத்துவிகங்களும் அடியேன் சோர்வு எய்துமாறு செய்யும் கொடுஞ்செயல்களைத் தாங்க இயலாமல் துன்புற்றிருக்கின்றேன்.
654 ஊனுலா முடைகொ ளாக்கை யுடைகல மாவ தென்றும் மானுலா மழைக்க ணார்தம் வாழ்க்கையை மெய்யென் றெண்ணி நானெலா மினைய கால நண்ணிலே னெண்ண மில்லேன் தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்துளானே. 4.067.6
வண்டுகள் உலாவும் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே! புலாலால் அமைக்கப்பட்ட நாற்றம் வீசும் உடம்புப் பாறையில் மோதி உடையும் மரக்கலம் போல்வது என்னும் எண்ணம் இல்லாதேனாய், மான் கண்கள் போன்று மருளும் குளிர்ந்த கண்களையுடைய மகளிரோடு வாழும் வாழ்க்கையை உண்மையான வாழ்வு என்று எண்ணினேனாய், அடியேன் இதுகாறும் உன்னை அணுகாது வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேன்.
655 சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப்பதிக்கு நாதர் வாணிக ரைவர் தொண்ணூற் றறுவரு மயக்கஞ்செய்து பேணிய பதியி னின்று பெயரும்போ தறிய மாட்டேன் சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச்சரத்து ளானே. 4.067.7
வானளாவிய மாடங்கள் பலவாக உள்ள திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே! ஒரு முழம் நீளம் உடைய பொய்யான உடம்பாகிய ஊருக்கு ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கும் வாணிக நோக்கமுடைய ஐம்பொறிகளாகிய வாணிகரும், தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்களும் கலக்கத்தை உண்டாக்க அடியேன் விரும்பித் தங்கிய அவ்வூரிலிருந்து பிரிந்து போகக் கூடிய நாள் இன்னது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேனாய் உள்ளேன்.
656 பொய்ம்மறித் தியற்றி வைத்துப் புலால்கமழ்பண்டம் பெய்து பைம்மறித் தியற்றி யன்ன பாங்கிலாக்குரம்பை நின்று கைம்மறித் தனைய வாவி கழியும்போ தறிய மாட்டேன் செந்நெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.067.8
திருக்கொண்டீச்சரத்துப்பெருமானே! பொய்களை வெளியே செல்லாதபடி தடுத்துத் திருப்பி அவற்றிற்கு வடிவுதந்து புலால் நாற்றம் வீசும் பொருள்களை அவற்றிற் பொருத்திப் பையை அழுக்குப் புலப்படாதபடி திருப்பி வைத்தாற்போன்று, எனக்குத் துணையாக உதவாத இந்த உடம்பிலிருந்து இது தகாது என்று கைகளால் குறிப்பிட்டுச் செல்வது போன்ற உயிர் நீங்கும் காலம் இது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேன். உயிருக்கு உறுதி தேடி நேரிய வழியில் செல்லும் ஞான சாரத்தையும் உணரேன்.
657 பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம் மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன் சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே. 4.067.9
சேல்கள் உலாவும் வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரத்துப் பெருமானே! சிறுவனாய் இருந்து கழிந்தபாலப் பருவத்தும், குளிர்ந்த மலர் மாலைகளை அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும், மெலிவோடு கிழப் பருவம் வரக் கோலை ஊன்றிக் கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றி வாழ்ந்து கெட்டுப் போயினேன்.
658 விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள் வெருவர விலங்கைக் கோமான் விலங்கலை யெடுத்த ஞான்று பருவரை யனைய தோளு முடிகளும் பாறி வீழத் திருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.067.10
திருக்கொண்டீச்சரத்துப் பெருமான் நறுமணம் கமழும் கரிய மெல்லிய கூந்தலையும் விளங்குகின்ற அணிகலன்களையும் வேல்போன்ற ஒளிபொருந்திய கண்களையும் உடைய பார்வதி அஞ்சுமாறு இராவணன் மலையை எடுத்த போது அவனுடைய பருத்த மலைபோன்ற தோள்களும் முடிகளும் சிதறி விழுமாறு அழகிய கால் விரலை ஊன்றினார்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|