|
||||||||
நான்காம் திருமுறை-68 |
||||||||
4.068.திருவாலங்காடு
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்.
தேவியார் - வண்டார்குழலியம்மை.
659 வெள்ளநீர்ச் சடையர்போலும்
விரும்புவார்க் கௌயர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங்
குகப்பவர்க் கன்பர் போலும்
கள்ளமே வினைக ளெல்லாங்
கரிசறுத் திடுவர்போலும்
அள்ளலம் பழனை மேய
வாலங்காட் டடிக ளாரே.
4.068.1
வயல்களில் சேறு நிரம்பிய பழையனூரை அடுத்த திருவாலங்காட்டுப் பெருமான் கங்கை சூடிய சடையினராய், விரும்புபவர்களுக்கு எளியவராய், உள்ளத்திலே இறை தியானத்தால் நெகிழ்ச்சியுற்று மகிழும் அடியவர்பால் அன்பராய், நுகர்வோர் காரணம் உணராத வகையில் நுகர்விக்கும் இரு வினைகளின் மாசுகளைப் போக்குபவர் ஆவார்.
660 செந்தழ லுருவர் போலுஞ்
சினவிடை யுடையர்போலும்
வெந்தவெண் ணீறு கொண்டு
மெய்க்கணிந் திடுவர் போலும்
மந்தமாம் பொழிற்ப ழனை
மல்கிய வள்ளல் போலும்
அந்தமி லடிகள் போலு
மாலங்காட் டடிக ளாரே.
4.068.2
ஆலங்காட்டு அடிகளார் செந்தழல் நிறத்தவராய், கோபம் உடைய காளையை உடையவராய், வெண்ணீற்றைத் திருமேனியில் அணிபவராய், தென்றல் வீசும் சோலைகளை உடைய பழையனூரில் உறையும் வள்ளலாராய்த் தமக்கு ஒரு காலத்தும் இறுதியில்லாத பெருமானாய் உள்ளார்.
661 கண்ணினாற் காம வேளைக்
கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கண் மூன்று
மெரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவாப்
பைம்பொழிற் பழனை மேய
அண்ணலா ரெம்மை யாளு
மாலங்காட் டடிக ளாரே.
4.068.3
நம்மை அடிமை கொள்ளும் ஆலங்காட்டுப் பெருமான் நெற்றிக்கண்ணால் கருவேள் ஆகிய மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு விழித்தவரும், பகைவருடைய மும்மதில் களும் தீக்கு இரையாகுமாறு சிரித்தவரும், பண்ணுக்குஏற்ப ஒலிக்கும் முழாவின் ஒலி நீங்காததும், சோலைகளை உடையதுமான பழையனூரில் விரும்பித்தங்கிய தலைவரும் ஆவார்.
662 காறிடு விடத்தை யுண்ட
கண்டரெண் டோளர் போலும்
தூறிடு சுடலை தன்னிற்
சுண்ணவெண் ணீற்றர் போலும்
கூறிடு முருவர் போலுங்
குளிர்பொழிற் பழனைமேய
ஆறிடு சடையர் போலு
மாலங்காட் டடிக ளாரே.
4.068.4
குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரைச் சேர்ந்த, கங்கை சூடிய ஆலங்காட்டுப் பெருமான் கொல்லுகின்ற விடத்தை உண்ட கழுத்தினராய், எட்டுத் தோளினராய்த் தூறுகள் மண்டிக் கிடக்கும் சுடுகாட்டு வெள்ளிய சாம்பலைப் பூசியவராய்ப் பார்வதிக்காக இடப்பாகத்தைப் பிரித்துக் கொடுத்துப் பார்வதிபாகராம் உருவினராய் உள்ளார்.
663 பார்த்தனோ டமர் பொருது
பத்திமை காண்பர்போலும்
கூர்த்தவா யம்பு கோத்துக்
குணங்களை யறிவர்போலும்
பேர்த்துமோ ராவ நாழி
யம்பொடுங் கொடுப்பர் போலும்
தீர்த்தமாம் பழனை மேய
திருவாலங் காட னாரே.
4.068.5
பழையனூரையடுத்த, பாவத்தைப் போக்கும் தூய்மையை உடைய ஆலங்காட்டுப் பெருமான் பார்த்தனோடு போரிட்டு அவனுடைய பக்தியைக் கண்டவராய், கூர்மையான நுனியை உடைய அம்புகளைக் கோத்து அவன் குணங்களை அறிந்தவராய்ப் பின்னும் ஒரு அம்புப் புட்டிலை அத்திரத்தோடு அவனுக்கு வழங்கியவராய் உள்ளார்.
664 வீட்டினார் சுடுவெண் ணீறு
மெய்க்கணிந் திடுவர் போலும்
காட்டினின் றாடல் பேணுங்
கருத்தினையுடையர் போலுங்
பாட்டினார் முழவ மோவாப்
பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினா ரரவந் தன்னை
யாலங்காட் டடிக ளாரே.
4.068.6
ஆலங்காட்டுப் பெருமான் இறந்தவர்களைக் கொளுத்திய சாம்பலை உடலில் பூசியவராய்ச் சுடுகாட்டிலிருந்து கூத்தாடுதலை விரும்பும் கருத்தினை உடையவராய்ப் பாம்பினை ஆட்டுபவராய்ப் பாடுதலை உடையவராய், முழாவின் ஒலி நீங்காததும், பசுமையான சோலைகளை உடையதுமான பழையனூரை விரும்பி உறைகின்றார்.
665 தாளுடைச் செங் கமலத்
தடங்கொள்சே வடியர் போலும்
நாளுடைக் காலன் வீழ
வுதைசெய்த நம்பர் போலும்
கோளுடைப் பிறவி தீர்ப்பார்
குளிர்பொழிற் பழனை மேய
ஆளுடை யண்ணல் போலு
மாலங்காட் டடிக ளாரே.
4.068.7
குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரை அடுத்த ஆலங்காட்டுப் பெருமான் தண்டினை உடைய செங்கமலப்பூப் போன்ற பெருமை பொருந்திய திருவடிகளை உடையவராய், தனக்கு உயிர்வாழ வேண்டிய நாள்கள் இன்னும் பலவாக உடைய இயமன் அழியுமாறு உதைத்த, நம்மால் விரும்பப்படும் தலைவராய், யாம் வினைவயத்தாற் கொள்ளுதற்குரிய பிறவிகளைப் போக்குபவராய் நம்மை அடிமையாகக்கொள்ளும் தலைவராக உள்ளார்.
666 கூடினா ருமை தனோடே
குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச்
சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம்
பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண
வாலங்காட் டடிக ளாரே.
4.068.8
பசுமையாகிய சோலைகளை உடைய பழையனூரை விரும்புபவராகிய ஆலங்காட்டுப் பெருமான் காதற் குறிப்புடைய வேடத்தைக் கொண்டு பார்வதி பாகராகிக் கங்கையைச் சூடி அதன் பெருக்கைக் குறைத்த சடையினராய்ச் சாமவேதம் பாடினவராய்க் காளிதேவி காண ஆடிய பெருமானாராவார்.
667 வெற்றரைச் சமண ரோடு
விலையுடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார்
குணங்களை யுகப்பர் போலும்
பெற்றமே யுகந்தங் கேறும்
பெருமையை யுடையர் போலும்
அற்றங்க ளறிவர் போலு
மாலங்காட் டடிக ளாரே.
4.068.9
ஆலங்காட்டு அடிகளார் ஆடையற்ற சமணர்களோடு விலைமதிப்புடைய ஆடைகளைப் போர்க்கும் புத்தர்கள் பேசும் ஒன்றும் பாதியுமாகிய சொற்களை ஏற்றுக் கொள்ளாத சிவனடியார்களுடைய குணங்களை விரும்பியவராய், விரும்பிக் காளையை வாகனமாகக் கொள்ளும் பெருமையை உடையவராய்ப் பிறர் அறியாதவாறு மறைத்துச் செய்யும் பாவங்களை அறியும் ஞானமுடையவராய் உள்ளார்.
668 மத்தனாய் மலையெ டுத்த
வரக்கனைக் கரத்தோ டொல்க
ஒத்தினார் திருவி ரலா
லூன்றியிட் டருள்வர் போலும்
பத்தர்தம் பாவந் தீர்க்கும்
பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை யாள்வா
ராலங்காட் டடிக ளாரே.
4.068.10
ஆலங்காட்டுப் பெருமான் செருக்குற்றவனாய்க் கயிலையைப் பெயர்த்த இராவணனைக் கைகளோடு தளருமாறு விரலை ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்தவராய், பக்தர்களுடைய தீவினைகளைத் தீர்ப்பவராய், பசுமையான சோலைகளை உடைய பழையனூரை விரும்பி உறையும் தலைவராய் நம்மை அடிமை கொள்பவராய் உள்ளார்.
திருச்சிற்றம்பலம்
4.068.திருவாலங்காடு திருநேரிசை திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர். தேவியார் - வண்டார்குழலியம்மை.
659 வெள்ளநீர்ச் சடையர்போலும் விரும்புவார்க் கௌயர் போலும் உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலும் கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர்போலும் அள்ளலம் பழனை மேய வாலங்காட் டடிக ளாரே. 4.068.1
வயல்களில் சேறு நிரம்பிய பழையனூரை அடுத்த திருவாலங்காட்டுப் பெருமான் கங்கை சூடிய சடையினராய், விரும்புபவர்களுக்கு எளியவராய், உள்ளத்திலே இறை தியானத்தால் நெகிழ்ச்சியுற்று மகிழும் அடியவர்பால் அன்பராய், நுகர்வோர் காரணம் உணராத வகையில் நுகர்விக்கும் இரு வினைகளின் மாசுகளைப் போக்குபவர் ஆவார்.
660 செந்தழ லுருவர் போலுஞ் சினவிடை யுடையர்போலும் வெந்தவெண் ணீறு கொண்டு மெய்க்கணிந் திடுவர் போலும் மந்தமாம் பொழிற்ப ழனை மல்கிய வள்ளல் போலும் அந்தமி லடிகள் போலு மாலங்காட் டடிக ளாரே. 4.068.2
ஆலங்காட்டு அடிகளார் செந்தழல் நிறத்தவராய், கோபம் உடைய காளையை உடையவராய், வெண்ணீற்றைத் திருமேனியில் அணிபவராய், தென்றல் வீசும் சோலைகளை உடைய பழையனூரில் உறையும் வள்ளலாராய்த் தமக்கு ஒரு காலத்தும் இறுதியில்லாத பெருமானாய் உள்ளார்.
661 கண்ணினாற் காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும் எண்ணிலார் புரங்கண் மூன்று மெரியுணச் சிரிப்பர் போலும் பண்ணினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேய அண்ணலா ரெம்மை யாளு மாலங்காட் டடிக ளாரே. 4.068.3
நம்மை அடிமை கொள்ளும் ஆலங்காட்டுப் பெருமான் நெற்றிக்கண்ணால் கருவேள் ஆகிய மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு விழித்தவரும், பகைவருடைய மும்மதில் களும் தீக்கு இரையாகுமாறு சிரித்தவரும், பண்ணுக்குஏற்ப ஒலிக்கும் முழாவின் ஒலி நீங்காததும், சோலைகளை உடையதுமான பழையனூரில் விரும்பித்தங்கிய தலைவரும் ஆவார்.
662 காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோளர் போலும் தூறிடு சுடலை தன்னிற் சுண்ணவெண் ணீற்றர் போலும் கூறிடு முருவர் போலுங் குளிர்பொழிற் பழனைமேய ஆறிடு சடையர் போலு மாலங்காட் டடிக ளாரே. 4.068.4
குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரைச் சேர்ந்த, கங்கை சூடிய ஆலங்காட்டுப் பெருமான் கொல்லுகின்ற விடத்தை உண்ட கழுத்தினராய், எட்டுத் தோளினராய்த் தூறுகள் மண்டிக் கிடக்கும் சுடுகாட்டு வெள்ளிய சாம்பலைப் பூசியவராய்ப் பார்வதிக்காக இடப்பாகத்தைப் பிரித்துக் கொடுத்துப் பார்வதிபாகராம் உருவினராய் உள்ளார்.
663 பார்த்தனோ டமர் பொருது பத்திமை காண்பர்போலும் கூர்த்தவா யம்பு கோத்துக் குணங்களை யறிவர்போலும் பேர்த்துமோ ராவ நாழி யம்பொடுங் கொடுப்பர் போலும் தீர்த்தமாம் பழனை மேய திருவாலங் காட னாரே. 4.068.5
பழையனூரையடுத்த, பாவத்தைப் போக்கும் தூய்மையை உடைய ஆலங்காட்டுப் பெருமான் பார்த்தனோடு போரிட்டு அவனுடைய பக்தியைக் கண்டவராய், கூர்மையான நுனியை உடைய அம்புகளைக் கோத்து அவன் குணங்களை அறிந்தவராய்ப் பின்னும் ஒரு அம்புப் புட்டிலை அத்திரத்தோடு அவனுக்கு வழங்கியவராய் உள்ளார்.
664 வீட்டினார் சுடுவெண் ணீறு மெய்க்கணிந் திடுவர் போலும் காட்டினின் றாடல் பேணுங் கருத்தினையுடையர் போலுங் பாட்டினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேயார் ஆட்டினா ரரவந் தன்னை யாலங்காட் டடிக ளாரே. 4.068.6
ஆலங்காட்டுப் பெருமான் இறந்தவர்களைக் கொளுத்திய சாம்பலை உடலில் பூசியவராய்ச் சுடுகாட்டிலிருந்து கூத்தாடுதலை விரும்பும் கருத்தினை உடையவராய்ப் பாம்பினை ஆட்டுபவராய்ப் பாடுதலை உடையவராய், முழாவின் ஒலி நீங்காததும், பசுமையான சோலைகளை உடையதுமான பழையனூரை விரும்பி உறைகின்றார்.
665 தாளுடைச் செங் கமலத் தடங்கொள்சே வடியர் போலும் நாளுடைக் காலன் வீழ வுதைசெய்த நம்பர் போலும் கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனை மேய ஆளுடை யண்ணல் போலு மாலங்காட் டடிக ளாரே. 4.068.7
குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரை அடுத்த ஆலங்காட்டுப் பெருமான் தண்டினை உடைய செங்கமலப்பூப் போன்ற பெருமை பொருந்திய திருவடிகளை உடையவராய், தனக்கு உயிர்வாழ வேண்டிய நாள்கள் இன்னும் பலவாக உடைய இயமன் அழியுமாறு உதைத்த, நம்மால் விரும்பப்படும் தலைவராய், யாம் வினைவயத்தாற் கொள்ளுதற்குரிய பிறவிகளைப் போக்குபவராய் நம்மை அடிமையாகக்கொள்ளும் தலைவராக உள்ளார்.
666 கூடினா ருமை தனோடே குறிப்புடை வேடங் கொண்டு சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும் பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார் ஆடினார் காளி காண வாலங்காட் டடிக ளாரே. 4.068.8
பசுமையாகிய சோலைகளை உடைய பழையனூரை விரும்புபவராகிய ஆலங்காட்டுப் பெருமான் காதற் குறிப்புடைய வேடத்தைக் கொண்டு பார்வதி பாகராகிக் கங்கையைச் சூடி அதன் பெருக்கைக் குறைத்த சடையினராய்ச் சாமவேதம் பாடினவராய்க் காளிதேவி காண ஆடிய பெருமானாராவார்.
667 வெற்றரைச் சமண ரோடு விலையுடைக் கூறை போர்க்கும் ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை யுகப்பர் போலும் பெற்றமே யுகந்தங் கேறும் பெருமையை யுடையர் போலும் அற்றங்க ளறிவர் போலு மாலங்காட் டடிக ளாரே. 4.068.9
ஆலங்காட்டு அடிகளார் ஆடையற்ற சமணர்களோடு விலைமதிப்புடைய ஆடைகளைப் போர்க்கும் புத்தர்கள் பேசும் ஒன்றும் பாதியுமாகிய சொற்களை ஏற்றுக் கொள்ளாத சிவனடியார்களுடைய குணங்களை விரும்பியவராய், விரும்பிக் காளையை வாகனமாகக் கொள்ளும் பெருமையை உடையவராய்ப் பிறர் அறியாதவாறு மறைத்துச் செய்யும் பாவங்களை அறியும் ஞானமுடையவராய் உள்ளார்.
668 மத்தனாய் மலையெ டுத்த வரக்கனைக் கரத்தோ டொல்க ஒத்தினார் திருவி ரலா லூன்றியிட் டருள்வர் போலும் பத்தர்தம் பாவந் தீர்க்கும் பைம்பொழிற் பழனை மேய அத்தனார் நம்மை யாள்வா ராலங்காட் டடிக ளாரே. 4.068.10
ஆலங்காட்டுப் பெருமான் செருக்குற்றவனாய்க் கயிலையைப் பெயர்த்த இராவணனைக் கைகளோடு தளருமாறு விரலை ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்தவராய், பக்தர்களுடைய தீவினைகளைத் தீர்ப்பவராய், பசுமையான சோலைகளை உடைய பழையனூரை விரும்பி உறையும் தலைவராய் நம்மை அடிமை கொள்பவராய் உள்ளார்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|