LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-69

 

4.069.திருக்கோவலூர்வீரட்டம் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். 
தேவியார் - சிவானந்தவல்லியம்மை. 
669 செத்தையேன் சிதம்பன் நாயேன்
செடியனே னழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும்
புகலிட மறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கே
னிருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே
கோவல் வீரட்ட னீரே.
4.069.1
திருக்கோவலூர் வீரட்டப்பெருமானே! காய்ந்த செத்தையைப் போன்ற பயனற்றவனாய், பண்பிலேனாய், நாய் போன்றேனாய், குற்றமுடையேனாய், முடைநாற்றம் உடையேனாய், அழுக்குப் பரவியிருக்கும் பொத்தலாகிய இவ்வுடம்பினையே விரும்பிப் பாதுகாத்து நாளும் சென்று சேரத்தக்க இடத்தை அறிய இயலாதேனாய், இருள் தீரமனத்தால் உணரமாட்டாத மனக் குருடன் ஆகிய அடியேன் எதனைப்பற்றுதலால் நிலைபேறுடையேனாவேன்? யாது செயற்பாலேன்?
670 தலைசுமந் திருகை நாற்றித்
தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னு
ணித்தலு மைவர்வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன்
வேண்டிற்றே வேண்டி யெய்த்தேன்
குலைகள்மாங் கனிகள் சிந்துங்
கோவல்வீ ரட்ட னீரே.
4.069.2
குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் திருக்கோவலூர்ப் பெருமானே! தலையைச் சுமந்து கொண்டு, இருகைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு பூமிக்குப் பாரமாய் ஒரு நிலையில் நில்லாத உள்ளத்திலே நாள்தோறும் ஐம்பொறிகள் வேண்டுவனவற்றை வழங்கி அவற்றின் ஆதிக்கத்தை ஒழிக்க இயலாதேனாய் அவை வேண்டியவற்றையே யானும் விரும்பி இளைத்துப் பாழானேன்.
671 வழித்தலைப் படவு மாட்டேன்
வைகலுந் தூய்மைசெய்து
பழித்திலேன் பாச மற்றுப்
பரமநான்பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை
யென்னினைந்திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க்
கோவல்வீரட்ட னீரே.
4.069.3
இருபுறமும் பல பொருள்களையும் அலைகளால் கரையில் சேர்க்கும் தௌந்த நீரை உடைய திருக்கோவலூர்ப் பெருமானே! சான்றோர் குறிப்பிடும் நல்வழியில் செல்லாதேனாய், நாள்தோறும் உள்ளத்தைத் தூய்மையாக்கி உலகப்பற்றுக்களைப் பழித்து நீத்து மேம்பட்ட உன்னை முன் நின்று புகழமாட்டேனாய், இப்பிறப்பை இழிவாகக் கருதேனாய், யான் பொருத்தமில்லாத பலவற்றை நினைத்துக் காலத்தை வீணாகப் போக்குகிறேன்.
672 சாற்றுவ ரைவர் வந்து
சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக்
கண்செவி மூக்குவாயுள்
ஆற்றுவ ரலந்து போனே
னாதியை யறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன்
கோவல்வீ ரட்ட னீரே.
4.069.4
கோவலூர்ப்பெருமானே! இவ்வுயிர் இவ்வுடலாகிய வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்வதால் இவ்வுடம்பில் ஆதிக்கம் செலுத்தும் உடைமையாளரைப் போல உள்ள ஐம்பொறிகள் தம் விருப்பத்திற்கு வேண்டியவற்றைக் குறிப்பிட்டுக் கண், செவி, மூக்கு, வாய் என்ற தமக்கு அவற்றை வழங்கவேண்டும் என்று கடுமையாகப்பேசி என்னை நடத்துதலால் வருந்தினேனாய் மூலமாயுள்ள உன்னை அறியும் அறிவு இன்றிக் கூற்றுவனுடைய வாயில் அகப்பட்டுள்ளேன்.
673 தடுத்திலே னைவர் தம்மைத்
தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப்
பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார
வார்வலித் தன்பு திண்ணம்
கொடுத்திலேன் கொடிய வாநான்
கோவல்வீ ரட்ட னீரே.
4.069.5
கோவலூர்ப் பெருமானே! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய், எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு, அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பலமலர்களையும் பறித்துத் தொகுக்காதேனாய், மனம் நிறைய அன்புகொண்டு அவ்வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே!
674 மாச்செய்த குரம்பை தன்னை
மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்த நாலு மைந்து
நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயந் தன்னு
ணித்தலு மைவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன்
கோவல்வீ ரட்ட னீரே.
4.069.6
கோவலூர்ப் பெருமானே! ஐம்பெரும் பூதங்களால் அமைந்த உடம்பாகிய குடிசைக்கு உலகிலே நாவின் சுவையோடு ஒன்பது வாசல்களை அமைத்து உயிரைச் சுமக்கும் இவ்வுடலினுள்ளே நாள்தோறும் ஆட்சி செய்வனவாக, ஐம்பொறிகள் அழிவு செய்தலால் அவற்றின் தீங்குகளைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன்.
675 படைகள்போல் வினைகள் வந்து
பற்றியென் பக்க னின்றும்
விடகிலா வாத லாலே
விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலே னென்செய் கேனா
னிரப்பவர் தங்கட் கென்றும்
கொடையிலேன் கொள்வதே நான்
கோவல்வீரட்ட னீரே.
4.069.7
கோவலூர்ப் பெருமானே! வினைகள் என்னைத் தாக்கும் படைகளைப் போல வந்து பற்றி விடாமல் வருத்துவதால், என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு ஒருநாளும் ஒன்றையும் கொடுத்து அறியாதேனாய்ப் பிறரிடம் எதனையாவது பெறுவதனையே தொழிலாகக் கொண்டுள்ள அடியேன், பெருமானாராகிய உங்களை விரும்பித் துதிக்கும் வாய்ப்பினைப் பெறேனாய்ப் பயனற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
676 பிச்சிலேன் பிறவி தன்னைப்
பேதையேன்பிணக்க மென்னும்
துச்சுளே யழுந்தி வீழ்ந்து
துயரமே யிடும்பைதன்னுள்
அச்சனா யாதி மூர்த்திக்
கன்பனாய் வாழமாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே
கோவல்வீரட்ட னீரே.
4.069.8
கோவலூர்ப் பெருமானே! அறிவற்றவனாகிய அடியேன் பிறவிப் பிணியை அடியோடு சிதறச் செய்து போக்கும் ஆற்றல் இல்லேன். உயிர் தங்கியிருக்கும் இவ்வுடலின் பற்றிலே அழுந்திக் கிடந்து துயரமே நுகர்தற்குரிய இவ்வுடம்பில் உள்ள உயிரை ஆதிமூர்த்தியாகிய உமக்கு அன்புடையதாகச் செய்து வாழமுடியாத அகக்கண் குருடனாகிய அடியேன் செயற்பாலது யாது உளது?
677 நிணத்திடை யாக்கை பேணி
நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை யாட்டம் பேசி
மக்களே சுற்ற மென்னும்
கணத்திடை யாட்டப் பட்டுக்
காதலா லுன்னைப் பேணும்
குணத்திடை வாழ மாட்டேன்
கோவல்வீ ரட்ட னீரே.
4.069.9
கோவலூர்ப் பெருமானே! கொழுப்பை இணைத்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பினை விரும்பி நாடோறும் செய்யவேண்டிய வழிபாட்டுக் கடமைகளைச் செய்ய மாட்டேனாய், திருமணத்திலே விருப்பம் கொண்டு பேசி மக்கள் சுற்றம் என்னும் கூட்டத்திலே தடுமாறுமாறு செயற் படுத்தப்பட்டு அன்போடு உம்மை விரும்பும் நற்பண்போடு வாழமாட்டாதேன் ஆயினேன்.
678 விரிகட லிலங்கைக் கோனை
விரிகயி லாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச்
சிரங்களு நெரிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப்
படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த
கோவல் வீரட்ட னாரே.
4.069.10
குரவ மரமும் கோங்க மரமும் சூழ்ந்த திருக்கோவலூர்ப் பெருமான். விரிந்த கடலால் சூழப்பட்ட இலங்கை நகர மன்னனான இராவணனைப் பரந்த கயிலை மலையின் கீழே அவனுடைய இருபது தோள்களும் பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலை அழுத்திப் பின் அவன் முன் நின்று போற்றிய பாடல்களைக் கேட்டு அவனுக்கு வாட்படையைக் கொடுத்து அருளியவராவர்.
திருச்சிற்றம்பலம்

 

4.069.திருக்கோவலூர்வீரட்டம் 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். 

தேவியார் - சிவானந்தவல்லியம்மை. 

 

 

669 செத்தையேன் சிதம்பன் நாயேன்

செடியனே னழுக்குப் பாயும்

பொத்தையே போற்றி நாளும்

புகலிட மறிய மாட்டேன்

எத்தைநான் பற்றி நிற்கே

னிருளற நோக்க மாட்டாக்

கொத்தையேன் செய்வ தென்னே

கோவல் வீரட்ட னீரே.

4.069.1

 

  திருக்கோவலூர் வீரட்டப்பெருமானே! காய்ந்த செத்தையைப் போன்ற பயனற்றவனாய், பண்பிலேனாய், நாய் போன்றேனாய், குற்றமுடையேனாய், முடைநாற்றம் உடையேனாய், அழுக்குப் பரவியிருக்கும் பொத்தலாகிய இவ்வுடம்பினையே விரும்பிப் பாதுகாத்து நாளும் சென்று சேரத்தக்க இடத்தை அறிய இயலாதேனாய், இருள் தீரமனத்தால் உணரமாட்டாத மனக் குருடன் ஆகிய அடியேன் எதனைப்பற்றுதலால் நிலைபேறுடையேனாவேன்? யாது செயற்பாலேன்?

 

 

 

670 தலைசுமந் திருகை நாற்றித்

தரணிக்கே பொறைய தாகி

நிலையிலா நெஞ்சந் தன்னு

ணித்தலு மைவர்வேண்டும்

விலைகொடுத் தறுக்க மாட்டேன்

வேண்டிற்றே வேண்டி யெய்த்தேன்

குலைகள்மாங் கனிகள் சிந்துங்

கோவல்வீ ரட்ட னீரே.

4.069.2

 

  குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் திருக்கோவலூர்ப் பெருமானே! தலையைச் சுமந்து கொண்டு, இருகைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு பூமிக்குப் பாரமாய் ஒரு நிலையில் நில்லாத உள்ளத்திலே நாள்தோறும் ஐம்பொறிகள் வேண்டுவனவற்றை வழங்கி அவற்றின் ஆதிக்கத்தை ஒழிக்க இயலாதேனாய் அவை வேண்டியவற்றையே யானும் விரும்பி இளைத்துப் பாழானேன்.

 

 

 

671 வழித்தலைப் படவு மாட்டேன்

வைகலுந் தூய்மைசெய்து

பழித்திலேன் பாச மற்றுப்

பரமநான்பரவ மாட்டேன்

இழித்திலேன் பிறவி தன்னை

யென்னினைந்திருக்க மாட்டேன்

கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க்

கோவல்வீரட்ட னீரே.

4.069.3

 

  இருபுறமும் பல பொருள்களையும் அலைகளால் கரையில் சேர்க்கும் தௌந்த நீரை உடைய திருக்கோவலூர்ப் பெருமானே! சான்றோர் குறிப்பிடும் நல்வழியில் செல்லாதேனாய், நாள்தோறும் உள்ளத்தைத் தூய்மையாக்கி உலகப்பற்றுக்களைப் பழித்து நீத்து மேம்பட்ட உன்னை முன் நின்று புகழமாட்டேனாய், இப்பிறப்பை இழிவாகக் கருதேனாய், யான் பொருத்தமில்லாத பலவற்றை நினைத்துக் காலத்தை வீணாகப் போக்குகிறேன்.

 

 

 

672 சாற்றுவ ரைவர் வந்து

சந்தித்த குடிமை வேண்டிக்

காற்றுவர் கனலப் பேசிக்

கண்செவி மூக்குவாயுள்

ஆற்றுவ ரலந்து போனே

னாதியை யறிவொன் றின்றிக்

கூற்றுவர் வாயிற் பட்டேன்

கோவல்வீ ரட்ட னீரே.

4.069.4

 

  கோவலூர்ப்பெருமானே! இவ்வுயிர் இவ்வுடலாகிய வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்வதால் இவ்வுடம்பில் ஆதிக்கம் செலுத்தும் உடைமையாளரைப் போல உள்ள ஐம்பொறிகள் தம் விருப்பத்திற்கு வேண்டியவற்றைக் குறிப்பிட்டுக் கண், செவி, மூக்கு, வாய் என்ற தமக்கு அவற்றை வழங்கவேண்டும் என்று கடுமையாகப்பேசி என்னை நடத்துதலால் வருந்தினேனாய் மூலமாயுள்ள உன்னை அறியும் அறிவு இன்றிக் கூற்றுவனுடைய வாயில் அகப்பட்டுள்ளேன்.

 

 

 

673 தடுத்திலே னைவர் தம்மைத்

தத்துவத் துயர்வு நீர்மைப்

படுத்திலேன் பரப்பு நோக்கிப்

பன்மலர்ப் பாத முற்ற

அடுத்திலேன் சிந்தை யார

வார்வலித் தன்பு திண்ணம்

கொடுத்திலேன் கொடிய வாநான்

கோவல்வீ ரட்ட னீரே.

4.069.5

 

  கோவலூர்ப் பெருமானே! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய், எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு, அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பலமலர்களையும் பறித்துத் தொகுக்காதேனாய், மனம் நிறைய அன்புகொண்டு அவ்வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே!

 

 

 

674 மாச்செய்த குரம்பை தன்னை

மண்ணிடை மயக்க மெய்து

நாச்செய்த நாலு மைந்து

நல்லன வாய்தல் வைத்துக்

காச்செய்த காயந் தன்னு

ணித்தலு மைவர் வந்து

கோச்செய்து குமைக்க வாற்றேன்

கோவல்வீ ரட்ட னீரே.

4.069.6

 

  கோவலூர்ப் பெருமானே! ஐம்பெரும் பூதங்களால் அமைந்த உடம்பாகிய குடிசைக்கு உலகிலே நாவின் சுவையோடு ஒன்பது வாசல்களை அமைத்து உயிரைச் சுமக்கும் இவ்வுடலினுள்ளே நாள்தோறும் ஆட்சி செய்வனவாக, ஐம்பொறிகள் அழிவு செய்தலால் அவற்றின் தீங்குகளைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன்.

 

 

 

675 படைகள்போல் வினைகள் வந்து

பற்றியென் பக்க னின்றும்

விடகிலா வாத லாலே

விகிர்தனை விரும்பி யேத்தும்

இடையிலே னென்செய் கேனா

னிரப்பவர் தங்கட் கென்றும்

கொடையிலேன் கொள்வதே நான்

கோவல்வீரட்ட னீரே.

4.069.7

 

  கோவலூர்ப் பெருமானே! வினைகள் என்னைத் தாக்கும் படைகளைப் போல வந்து பற்றி விடாமல் வருத்துவதால், என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு ஒருநாளும் ஒன்றையும் கொடுத்து அறியாதேனாய்ப் பிறரிடம் எதனையாவது பெறுவதனையே தொழிலாகக் கொண்டுள்ள அடியேன், பெருமானாராகிய உங்களை விரும்பித் துதிக்கும் வாய்ப்பினைப் பெறேனாய்ப் பயனற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

 

 

 

676 பிச்சிலேன் பிறவி தன்னைப்

பேதையேன்பிணக்க மென்னும்

துச்சுளே யழுந்தி வீழ்ந்து

துயரமே யிடும்பைதன்னுள்

அச்சனா யாதி மூர்த்திக்

கன்பனாய் வாழமாட்டாக்

கொச்சையேன் செய்வ தென்னே

கோவல்வீரட்ட னீரே.

4.069.8

 

  கோவலூர்ப் பெருமானே! அறிவற்றவனாகிய அடியேன் பிறவிப் பிணியை அடியோடு சிதறச் செய்து போக்கும் ஆற்றல் இல்லேன். உயிர் தங்கியிருக்கும் இவ்வுடலின் பற்றிலே அழுந்திக் கிடந்து துயரமே நுகர்தற்குரிய இவ்வுடம்பில் உள்ள உயிரை ஆதிமூர்த்தியாகிய உமக்கு அன்புடையதாகச் செய்து வாழமுடியாத அகக்கண் குருடனாகிய அடியேன் செயற்பாலது யாது உளது?

 

 

 

677 நிணத்திடை யாக்கை பேணி

நியமஞ்செய் திருக்க மாட்டேன்

மணத்திடை யாட்டம் பேசி

மக்களே சுற்ற மென்னும்

கணத்திடை யாட்டப் பட்டுக்

காதலா லுன்னைப் பேணும்

குணத்திடை வாழ மாட்டேன்

கோவல்வீ ரட்ட னீரே.

4.069.9

 

  கோவலூர்ப் பெருமானே! கொழுப்பை இணைத்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பினை விரும்பி நாடோறும் செய்யவேண்டிய வழிபாட்டுக் கடமைகளைச் செய்ய மாட்டேனாய், திருமணத்திலே விருப்பம் கொண்டு பேசி மக்கள் சுற்றம் என்னும் கூட்டத்திலே தடுமாறுமாறு செயற் படுத்தப்பட்டு அன்போடு உம்மை விரும்பும் நற்பண்போடு வாழமாட்டாதேன் ஆயினேன்.

 

 

 

678 விரிகட லிலங்கைக் கோனை

விரிகயி லாயத்தின் கீழ்

இருபது தோளும் பத்துச்

சிரங்களு நெரிய வூன்றிப்

பரவிய பாடல் கேட்டுப்

படைகொடுத் தருளிச் செய்தார்

குரவொடு கோங்கு சூழ்ந்த

கோவல் வீரட்ட னாரே.

4.069.10

 

  குரவ மரமும் கோங்க மரமும் சூழ்ந்த திருக்கோவலூர்ப் பெருமான். விரிந்த கடலால் சூழப்பட்ட இலங்கை நகர மன்னனான இராவணனைப் பரந்த கயிலை மலையின் கீழே அவனுடைய இருபது தோள்களும் பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலை அழுத்திப் பின் அவன் முன் நின்று போற்றிய பாடல்களைக் கேட்டு அவனுக்கு வாட்படையைக் கொடுத்து அருளியவராவர்.

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.