|
||||||||
நான்காம் திருமுறை-69 |
||||||||
4.069.திருக்கோவலூர்வீரட்டம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - சிவானந்தவல்லியம்மை.
669 செத்தையேன் சிதம்பன் நாயேன்
செடியனே னழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும்
புகலிட மறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கே
னிருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே
கோவல் வீரட்ட னீரே.
4.069.1
திருக்கோவலூர் வீரட்டப்பெருமானே! காய்ந்த செத்தையைப் போன்ற பயனற்றவனாய், பண்பிலேனாய், நாய் போன்றேனாய், குற்றமுடையேனாய், முடைநாற்றம் உடையேனாய், அழுக்குப் பரவியிருக்கும் பொத்தலாகிய இவ்வுடம்பினையே விரும்பிப் பாதுகாத்து நாளும் சென்று சேரத்தக்க இடத்தை அறிய இயலாதேனாய், இருள் தீரமனத்தால் உணரமாட்டாத மனக் குருடன் ஆகிய அடியேன் எதனைப்பற்றுதலால் நிலைபேறுடையேனாவேன்? யாது செயற்பாலேன்?
670 தலைசுமந் திருகை நாற்றித்
தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னு
ணித்தலு மைவர்வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன்
வேண்டிற்றே வேண்டி யெய்த்தேன்
குலைகள்மாங் கனிகள் சிந்துங்
கோவல்வீ ரட்ட னீரே.
4.069.2
குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் திருக்கோவலூர்ப் பெருமானே! தலையைச் சுமந்து கொண்டு, இருகைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு பூமிக்குப் பாரமாய் ஒரு நிலையில் நில்லாத உள்ளத்திலே நாள்தோறும் ஐம்பொறிகள் வேண்டுவனவற்றை வழங்கி அவற்றின் ஆதிக்கத்தை ஒழிக்க இயலாதேனாய் அவை வேண்டியவற்றையே யானும் விரும்பி இளைத்துப் பாழானேன்.
671 வழித்தலைப் படவு மாட்டேன்
வைகலுந் தூய்மைசெய்து
பழித்திலேன் பாச மற்றுப்
பரமநான்பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை
யென்னினைந்திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க்
கோவல்வீரட்ட னீரே.
4.069.3
இருபுறமும் பல பொருள்களையும் அலைகளால் கரையில் சேர்க்கும் தௌந்த நீரை உடைய திருக்கோவலூர்ப் பெருமானே! சான்றோர் குறிப்பிடும் நல்வழியில் செல்லாதேனாய், நாள்தோறும் உள்ளத்தைத் தூய்மையாக்கி உலகப்பற்றுக்களைப் பழித்து நீத்து மேம்பட்ட உன்னை முன் நின்று புகழமாட்டேனாய், இப்பிறப்பை இழிவாகக் கருதேனாய், யான் பொருத்தமில்லாத பலவற்றை நினைத்துக் காலத்தை வீணாகப் போக்குகிறேன்.
672 சாற்றுவ ரைவர் வந்து
சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக்
கண்செவி மூக்குவாயுள்
ஆற்றுவ ரலந்து போனே
னாதியை யறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன்
கோவல்வீ ரட்ட னீரே.
4.069.4
கோவலூர்ப்பெருமானே! இவ்வுயிர் இவ்வுடலாகிய வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்வதால் இவ்வுடம்பில் ஆதிக்கம் செலுத்தும் உடைமையாளரைப் போல உள்ள ஐம்பொறிகள் தம் விருப்பத்திற்கு வேண்டியவற்றைக் குறிப்பிட்டுக் கண், செவி, மூக்கு, வாய் என்ற தமக்கு அவற்றை வழங்கவேண்டும் என்று கடுமையாகப்பேசி என்னை நடத்துதலால் வருந்தினேனாய் மூலமாயுள்ள உன்னை அறியும் அறிவு இன்றிக் கூற்றுவனுடைய வாயில் அகப்பட்டுள்ளேன்.
673 தடுத்திலே னைவர் தம்மைத்
தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப்
பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார
வார்வலித் தன்பு திண்ணம்
கொடுத்திலேன் கொடிய வாநான்
கோவல்வீ ரட்ட னீரே.
4.069.5
கோவலூர்ப் பெருமானே! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய், எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு, அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பலமலர்களையும் பறித்துத் தொகுக்காதேனாய், மனம் நிறைய அன்புகொண்டு அவ்வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே!
674 மாச்செய்த குரம்பை தன்னை
மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்த நாலு மைந்து
நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயந் தன்னு
ணித்தலு மைவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன்
கோவல்வீ ரட்ட னீரே.
4.069.6
கோவலூர்ப் பெருமானே! ஐம்பெரும் பூதங்களால் அமைந்த உடம்பாகிய குடிசைக்கு உலகிலே நாவின் சுவையோடு ஒன்பது வாசல்களை அமைத்து உயிரைச் சுமக்கும் இவ்வுடலினுள்ளே நாள்தோறும் ஆட்சி செய்வனவாக, ஐம்பொறிகள் அழிவு செய்தலால் அவற்றின் தீங்குகளைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன்.
675 படைகள்போல் வினைகள் வந்து
பற்றியென் பக்க னின்றும்
விடகிலா வாத லாலே
விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலே னென்செய் கேனா
னிரப்பவர் தங்கட் கென்றும்
கொடையிலேன் கொள்வதே நான்
கோவல்வீரட்ட னீரே.
4.069.7
கோவலூர்ப் பெருமானே! வினைகள் என்னைத் தாக்கும் படைகளைப் போல வந்து பற்றி விடாமல் வருத்துவதால், என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு ஒருநாளும் ஒன்றையும் கொடுத்து அறியாதேனாய்ப் பிறரிடம் எதனையாவது பெறுவதனையே தொழிலாகக் கொண்டுள்ள அடியேன், பெருமானாராகிய உங்களை விரும்பித் துதிக்கும் வாய்ப்பினைப் பெறேனாய்ப் பயனற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
676 பிச்சிலேன் பிறவி தன்னைப்
பேதையேன்பிணக்க மென்னும்
துச்சுளே யழுந்தி வீழ்ந்து
துயரமே யிடும்பைதன்னுள்
அச்சனா யாதி மூர்த்திக்
கன்பனாய் வாழமாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே
கோவல்வீரட்ட னீரே.
4.069.8
கோவலூர்ப் பெருமானே! அறிவற்றவனாகிய அடியேன் பிறவிப் பிணியை அடியோடு சிதறச் செய்து போக்கும் ஆற்றல் இல்லேன். உயிர் தங்கியிருக்கும் இவ்வுடலின் பற்றிலே அழுந்திக் கிடந்து துயரமே நுகர்தற்குரிய இவ்வுடம்பில் உள்ள உயிரை ஆதிமூர்த்தியாகிய உமக்கு அன்புடையதாகச் செய்து வாழமுடியாத அகக்கண் குருடனாகிய அடியேன் செயற்பாலது யாது உளது?
677 நிணத்திடை யாக்கை பேணி
நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை யாட்டம் பேசி
மக்களே சுற்ற மென்னும்
கணத்திடை யாட்டப் பட்டுக்
காதலா லுன்னைப் பேணும்
குணத்திடை வாழ மாட்டேன்
கோவல்வீ ரட்ட னீரே.
4.069.9
கோவலூர்ப் பெருமானே! கொழுப்பை இணைத்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பினை விரும்பி நாடோறும் செய்யவேண்டிய வழிபாட்டுக் கடமைகளைச் செய்ய மாட்டேனாய், திருமணத்திலே விருப்பம் கொண்டு பேசி மக்கள் சுற்றம் என்னும் கூட்டத்திலே தடுமாறுமாறு செயற் படுத்தப்பட்டு அன்போடு உம்மை விரும்பும் நற்பண்போடு வாழமாட்டாதேன் ஆயினேன்.
678 விரிகட லிலங்கைக் கோனை
விரிகயி லாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச்
சிரங்களு நெரிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப்
படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த
கோவல் வீரட்ட னாரே.
4.069.10
குரவ மரமும் கோங்க மரமும் சூழ்ந்த திருக்கோவலூர்ப் பெருமான். விரிந்த கடலால் சூழப்பட்ட இலங்கை நகர மன்னனான இராவணனைப் பரந்த கயிலை மலையின் கீழே அவனுடைய இருபது தோள்களும் பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலை அழுத்திப் பின் அவன் முன் நின்று போற்றிய பாடல்களைக் கேட்டு அவனுக்கு வாட்படையைக் கொடுத்து அருளியவராவர்.
திருச்சிற்றம்பலம்
4.069.திருக்கோவலூர்வீரட்டம் திருநேரிசை திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். தேவியார் - சிவானந்தவல்லியம்மை.
669 செத்தையேன் சிதம்பன் நாயேன் செடியனே னழுக்குப் பாயும் பொத்தையே போற்றி நாளும் புகலிட மறிய மாட்டேன் எத்தைநான் பற்றி நிற்கே னிருளற நோக்க மாட்டாக் கொத்தையேன் செய்வ தென்னே கோவல் வீரட்ட னீரே. 4.069.1
திருக்கோவலூர் வீரட்டப்பெருமானே! காய்ந்த செத்தையைப் போன்ற பயனற்றவனாய், பண்பிலேனாய், நாய் போன்றேனாய், குற்றமுடையேனாய், முடைநாற்றம் உடையேனாய், அழுக்குப் பரவியிருக்கும் பொத்தலாகிய இவ்வுடம்பினையே விரும்பிப் பாதுகாத்து நாளும் சென்று சேரத்தக்க இடத்தை அறிய இயலாதேனாய், இருள் தீரமனத்தால் உணரமாட்டாத மனக் குருடன் ஆகிய அடியேன் எதனைப்பற்றுதலால் நிலைபேறுடையேனாவேன்? யாது செயற்பாலேன்?
670 தலைசுமந் திருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி நிலையிலா நெஞ்சந் தன்னு ணித்தலு மைவர்வேண்டும் விலைகொடுத் தறுக்க மாட்டேன் வேண்டிற்றே வேண்டி யெய்த்தேன் குலைகள்மாங் கனிகள் சிந்துங் கோவல்வீ ரட்ட னீரே. 4.069.2
குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் திருக்கோவலூர்ப் பெருமானே! தலையைச் சுமந்து கொண்டு, இருகைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு பூமிக்குப் பாரமாய் ஒரு நிலையில் நில்லாத உள்ளத்திலே நாள்தோறும் ஐம்பொறிகள் வேண்டுவனவற்றை வழங்கி அவற்றின் ஆதிக்கத்தை ஒழிக்க இயலாதேனாய் அவை வேண்டியவற்றையே யானும் விரும்பி இளைத்துப் பாழானேன்.
671 வழித்தலைப் படவு மாட்டேன் வைகலுந் தூய்மைசெய்து பழித்திலேன் பாச மற்றுப் பரமநான்பரவ மாட்டேன் இழித்திலேன் பிறவி தன்னை யென்னினைந்திருக்க மாட்டேன் கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க் கோவல்வீரட்ட னீரே. 4.069.3
இருபுறமும் பல பொருள்களையும் அலைகளால் கரையில் சேர்க்கும் தௌந்த நீரை உடைய திருக்கோவலூர்ப் பெருமானே! சான்றோர் குறிப்பிடும் நல்வழியில் செல்லாதேனாய், நாள்தோறும் உள்ளத்தைத் தூய்மையாக்கி உலகப்பற்றுக்களைப் பழித்து நீத்து மேம்பட்ட உன்னை முன் நின்று புகழமாட்டேனாய், இப்பிறப்பை இழிவாகக் கருதேனாய், யான் பொருத்தமில்லாத பலவற்றை நினைத்துக் காலத்தை வீணாகப் போக்குகிறேன்.
672 சாற்றுவ ரைவர் வந்து சந்தித்த குடிமை வேண்டிக் காற்றுவர் கனலப் பேசிக் கண்செவி மூக்குவாயுள் ஆற்றுவ ரலந்து போனே னாதியை யறிவொன் றின்றிக் கூற்றுவர் வாயிற் பட்டேன் கோவல்வீ ரட்ட னீரே. 4.069.4
கோவலூர்ப்பெருமானே! இவ்வுயிர் இவ்வுடலாகிய வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்வதால் இவ்வுடம்பில் ஆதிக்கம் செலுத்தும் உடைமையாளரைப் போல உள்ள ஐம்பொறிகள் தம் விருப்பத்திற்கு வேண்டியவற்றைக் குறிப்பிட்டுக் கண், செவி, மூக்கு, வாய் என்ற தமக்கு அவற்றை வழங்கவேண்டும் என்று கடுமையாகப்பேசி என்னை நடத்துதலால் வருந்தினேனாய் மூலமாயுள்ள உன்னை அறியும் அறிவு இன்றிக் கூற்றுவனுடைய வாயில் அகப்பட்டுள்ளேன்.
673 தடுத்திலே னைவர் தம்மைத் தத்துவத் துயர்வு நீர்மைப் படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்ற அடுத்திலேன் சிந்தை யார வார்வலித் தன்பு திண்ணம் கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே. 4.069.5
கோவலூர்ப் பெருமானே! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய், எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு, அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பலமலர்களையும் பறித்துத் தொகுக்காதேனாய், மனம் நிறைய அன்புகொண்டு அவ்வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே!
674 மாச்செய்த குரம்பை தன்னை மண்ணிடை மயக்க மெய்து நாச்செய்த நாலு மைந்து நல்லன வாய்தல் வைத்துக் காச்செய்த காயந் தன்னு ணித்தலு மைவர் வந்து கோச்செய்து குமைக்க வாற்றேன் கோவல்வீ ரட்ட னீரே. 4.069.6
கோவலூர்ப் பெருமானே! ஐம்பெரும் பூதங்களால் அமைந்த உடம்பாகிய குடிசைக்கு உலகிலே நாவின் சுவையோடு ஒன்பது வாசல்களை அமைத்து உயிரைச் சுமக்கும் இவ்வுடலினுள்ளே நாள்தோறும் ஆட்சி செய்வனவாக, ஐம்பொறிகள் அழிவு செய்தலால் அவற்றின் தீங்குகளைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன்.
675 படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்க னின்றும் விடகிலா வாத லாலே விகிர்தனை விரும்பி யேத்தும் இடையிலே னென்செய் கேனா னிரப்பவர் தங்கட் கென்றும் கொடையிலேன் கொள்வதே நான் கோவல்வீரட்ட னீரே. 4.069.7
கோவலூர்ப் பெருமானே! வினைகள் என்னைத் தாக்கும் படைகளைப் போல வந்து பற்றி விடாமல் வருத்துவதால், என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு ஒருநாளும் ஒன்றையும் கொடுத்து அறியாதேனாய்ப் பிறரிடம் எதனையாவது பெறுவதனையே தொழிலாகக் கொண்டுள்ள அடியேன், பெருமானாராகிய உங்களை விரும்பித் துதிக்கும் வாய்ப்பினைப் பெறேனாய்ப் பயனற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
676 பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன்பிணக்க மென்னும் துச்சுளே யழுந்தி வீழ்ந்து துயரமே யிடும்பைதன்னுள் அச்சனா யாதி மூர்த்திக் கன்பனாய் வாழமாட்டாக் கொச்சையேன் செய்வ தென்னே கோவல்வீரட்ட னீரே. 4.069.8
கோவலூர்ப் பெருமானே! அறிவற்றவனாகிய அடியேன் பிறவிப் பிணியை அடியோடு சிதறச் செய்து போக்கும் ஆற்றல் இல்லேன். உயிர் தங்கியிருக்கும் இவ்வுடலின் பற்றிலே அழுந்திக் கிடந்து துயரமே நுகர்தற்குரிய இவ்வுடம்பில் உள்ள உயிரை ஆதிமூர்த்தியாகிய உமக்கு அன்புடையதாகச் செய்து வாழமுடியாத அகக்கண் குருடனாகிய அடியேன் செயற்பாலது யாது உளது?
677 நிணத்திடை யாக்கை பேணி நியமஞ்செய் திருக்க மாட்டேன் மணத்திடை யாட்டம் பேசி மக்களே சுற்ற மென்னும் கணத்திடை யாட்டப் பட்டுக் காதலா லுன்னைப் பேணும் குணத்திடை வாழ மாட்டேன் கோவல்வீ ரட்ட னீரே. 4.069.9
கோவலூர்ப் பெருமானே! கொழுப்பை இணைத்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பினை விரும்பி நாடோறும் செய்யவேண்டிய வழிபாட்டுக் கடமைகளைச் செய்ய மாட்டேனாய், திருமணத்திலே விருப்பம் கொண்டு பேசி மக்கள் சுற்றம் என்னும் கூட்டத்திலே தடுமாறுமாறு செயற் படுத்தப்பட்டு அன்போடு உம்மை விரும்பும் நற்பண்போடு வாழமாட்டாதேன் ஆயினேன்.
678 விரிகட லிலங்கைக் கோனை விரிகயி லாயத்தின் கீழ் இருபது தோளும் பத்துச் சிரங்களு நெரிய வூன்றிப் பரவிய பாடல் கேட்டுப் படைகொடுத் தருளிச் செய்தார் குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்ட னாரே. 4.069.10
குரவ மரமும் கோங்க மரமும் சூழ்ந்த திருக்கோவலூர்ப் பெருமான். விரிந்த கடலால் சூழப்பட்ட இலங்கை நகர மன்னனான இராவணனைப் பரந்த கயிலை மலையின் கீழே அவனுடைய இருபது தோள்களும் பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலை அழுத்திப் பின் அவன் முன் நின்று போற்றிய பாடல்களைக் கேட்டு அவனுக்கு வாட்படையைக் கொடுத்து அருளியவராவர்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|