LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-71

 

4.071.திருநாகைக்காரோணம் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர். 
தேவியார் - நீலாயதாட்சியம்மை. 
688 மனைவிதாய் தந்தை மக்கள்
மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி
வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை
மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகி
லுய்யலா நெஞ்சி னீரே.
4.071.1
மனமே! பெற்றோர் மனைவி மக்கள் ஏனைய சுற்றத்தார் என்று சொல்லப்படும் தேக பந்துக்களின் பாசமாகிய வினையிலே அகப்பட்டு அழுந்தித் துயருக்கு இடமாகாமல் ஒலிக்கின்ற பெரிய கடல் ஒருபுறம் சூழ்ந்த நாகையில் உறையும் காரோணத்தானை விருப்புற்று நினைக்கும் ஆற்றல் உடையையாயின் துயர்களிலிருந்து தப்பி உய்யலாம்.
689 வையனை வைய முண்ட
மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற்
றிசைமுகன் சிரமொன் றேந்தும்
கையனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே
யம்மநா முய்ந்த வாறே.
4.071.2
எருதை ஊர்பவனாய், ஊழிக்காலத்தே உலகத்தை வயிற்றில் கொண்ட திருமாலுடைய எலும்புருவான கங்காளத்தை தன் தோள் மேல் கொண்ட செந்நிறத்தனாய், செந்தாமரையில் தங்கிய பிரமனுடைய மண்டையோடு ஒன்றனை ஏந்திய கையனாய் ஒருபுறம் கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தை இருப்பிடமாகக் கொண்ட தலைவனை விருப்புற்று நினைத்த மனமே! நாம் துயரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவாறு வியக்கத்தகும்.
690 நிருத்தனை நிமலன் றன்னை
நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை
விளைபொருண் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை யுணர்த லானா
முய்ந்தவா நெஞ்சி னீரே.
4.071.3
மனமே! கூத்தனாய், தூயனாய், நீண்ட இவ்வுலகம், தேவருலகம் ஆகியவற்றிற்கு மேம்பட்டவனாய், வேதங்களால் காரணன் என்று கூறப்படுபவனாய், தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனாய் உள்ள நாகைக்காரோணத்து ஒப்பற்ற பெருமானைப் பரம்பொருள் என்று உணர்வதால் நாம் உய்ந்தமை இருந்தவாறென்னே.
691 மண்டனை யிரந்து கொண்ட
மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த
தீவிடந்தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில்கொண்ட
அண்டனை நினைந்து நெஞ்சே
யம்மநா முய்ந்த வாறே.
4.071.4
உலகங்களை மாவலியிடத்துத் தானமாகப் பெற்ற திருமாலோடு அசுரர்களும் தேவர்களும் தௌந்த அலைகளை உடைய பாற்கடலைக் கடைய அப்பொழுது எழுந்த கொடிய நஞ்சினை உண்ட கழுத்தை உடையவனாய் உள்ள காரோணப்பெருமானை நினைந்த நெஞ்சமே! நாம் உய்ந்தவாறு வியக்கத்தகும்.
692 நிறைபுன லணிந்த சென்னி
நீணிலா வரவஞ் சூடி
மறையொலி பாடி யாடன்
மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த
விடும்பைபோ யின்ப மாமே.
4.071.5
கங்கையை அணிந்த தலையிலே பிறையையும் பாம்பையும் சூடி, வேதங்களைப் பாடிக்கொண்டு, சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய ஆற்றல் உடையவனாய், கரு நிறம் மிக்க கடல் சூழ்ந்த திருநாகைக்காரோணம் கோயிலாகக் கொண்ட இறைவனை நாள்தோறும் துதித்தலால் துன்பங்கள் நீங்க இன்பங்கள் மிகும்.
693 வெம்பனைக் கருங்கை யானை
வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த
காலனை ஞால மேத்தும்
உம்பனை யும்பர் கோனை
நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே
திண்ணநா முய்ந்த வாறே.
4.071.6
கொடிய, பனைமரம் போன்ற துதிக்கையை உடைய யானை அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த ஏகம்பனாய், கூற்றுவனை உதைத்த காலை உடையவனாய், உலகங்கள் துதிக்கும் தேவனாய், தேவர்கள் தலைவனாய், நாகைக் காரோணத்தில் விரும்பி உறையும் செம்பொன் மேனியனை நினைந்த. நெஞ்சே! நாம் துயரங்களிலிருந்து விடுபட்டமை நிச்சயமாயிற்று.
694 வெங்கடுங் கானத் தேழை
தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற்
கடுசர மருளி னானை
மங்கைமா ராட லோவா
மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப்
பெற்றுநாங் களித்த வாறே.
4.071.7
வெப்பம் மிக்ககொடிய காட்டிலே, பார்வதியோடு வேடன் வடிவில் சென்று, அங்கு அருச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதாத்திரத்தை வழங்கியவனாய், பெண்களுடைய கூத்து நீங்காமல் நிலைபெற்ற காரோணத்தில் உள்ள பெருமானை இரவும் பகலும் தரிசிக்கப் பெற்று நாம் களிப்புற்றவாறென்னே!.
695 தெற்றினர் புரங்கண் மூன்றுந்
தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர்
சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலு நாகைக்
காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப்
பிறந்தவர் பிறந்தி லாரே.
4.071.8
மாறுபட்ட அசுரர்களின் மும்மதில்களும் தீயினில் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பால் அழித்த கொடிய வில்லை ஏந்தியவராய், வஞ்சனை உடையவர் உள்ளத்தில் பொருந்தாதவராய் உள்ள பெருமானாருடைய திருவடிகளை வணங்கக் கற்றவர் பலராக உள்ள நாகைக்காரோணத்தை விரும்பிப் புகழும் பேறு பெற்றவர் பிறவிப் பயனடைந்தவராவர். மற்றவர்கள் பிறந்தும் பிறவாதாரே ஆவார்.
696 கருமலி கடல்சூழ் நாகைக்
காரோணர் கமல பாதத்
தொருவிர னுதிக்கு நில்லா
தொண்டிற லரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ
டெம்பிரான் செம்பொ னாகம்
திருவடி தரித்து நிற்கத்
திண்ணநா முய்ந்த வாறே.
4.071.9
மனமே! கருமைமிக்க கடல் ஒருபுறம் சேர்ந்த நாகைக்காரோணருடைய தாமரை போன்ற பாதத்து ஒருவிரல் நுனியைத் தாங்கமுடியாமல் சிறந்த திறமையை உடைய இராவணன் சிதறிவிட்டான். கங்கை, பார்வதி என்ற இரண்டு பெண்களோடு சிவபெருமானுடைய சிவந்த பொன் போன்ற உடம்பைத் தாங்கி நிற்கும் திருவடிகளை நாம் நம்மிடத்தில் தாங்கிக் கொண்டிருப்பதால் நாம் துயரங்களிலிருந்து விடுபட்டவாறு நிச்சயமேயாயிற்று.
திருச்சிற்றம்பலம்

 

4.071.திருநாகைக்காரோணம் 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர். 

தேவியார் - நீலாயதாட்சியம்மை. 

 

 

688 மனைவிதாய் தந்தை மக்கள்

மற்றுள சுற்ற மென்னும்

வினையுளே விழுந்த ழுந்தி

வேதனைக் கிடமா காதே

கனையுமா கடல்சூழ் நாகை

மன்னுகா ரோணத் தானை

நினையுமா வல்லீ ராகி

லுய்யலா நெஞ்சி னீரே.

4.071.1

 

  மனமே! பெற்றோர் மனைவி மக்கள் ஏனைய சுற்றத்தார் என்று சொல்லப்படும் தேக பந்துக்களின் பாசமாகிய வினையிலே அகப்பட்டு அழுந்தித் துயருக்கு இடமாகாமல் ஒலிக்கின்ற பெரிய கடல் ஒருபுறம் சூழ்ந்த நாகையில் உறையும் காரோணத்தானை விருப்புற்று நினைக்கும் ஆற்றல் உடையையாயின் துயர்களிலிருந்து தப்பி உய்யலாம்.

 

 

689 வையனை வைய முண்ட

மாலங்கந் தோண்மேற் கொண்ட

செய்யனைச் செய்ய போதிற்

றிசைமுகன் சிரமொன் றேந்தும்

கையனைக் கடல்சூழ் நாகைக்

காரோணங் கோயில் கொண்ட

ஐயனை நினைந்த நெஞ்சே

யம்மநா முய்ந்த வாறே.

4.071.2

 

  எருதை ஊர்பவனாய், ஊழிக்காலத்தே உலகத்தை வயிற்றில் கொண்ட திருமாலுடைய எலும்புருவான கங்காளத்தை தன் தோள் மேல் கொண்ட செந்நிறத்தனாய், செந்தாமரையில் தங்கிய பிரமனுடைய மண்டையோடு ஒன்றனை ஏந்திய கையனாய் ஒருபுறம் கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தை இருப்பிடமாகக் கொண்ட தலைவனை விருப்புற்று நினைத்த மனமே! நாம் துயரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவாறு வியக்கத்தகும்.

 

 

690 நிருத்தனை நிமலன் றன்னை

நீணிலம் விண்ணின் மிக்க

விருத்தனை வேத வித்தை

விளைபொருண் மூல மான

கருத்தனைக் கடல்சூழ் நாகைக்

காரோணங் கோயில் கொண்ட

ஒருத்தனை யுணர்த லானா

முய்ந்தவா நெஞ்சி னீரே.

4.071.3

 

  மனமே! கூத்தனாய், தூயனாய், நீண்ட இவ்வுலகம், தேவருலகம் ஆகியவற்றிற்கு மேம்பட்டவனாய், வேதங்களால் காரணன் என்று கூறப்படுபவனாய், தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனாய் உள்ள நாகைக்காரோணத்து ஒப்பற்ற பெருமானைப் பரம்பொருள் என்று உணர்வதால் நாம் உய்ந்தமை இருந்தவாறென்னே.

 

 

691 மண்டனை யிரந்து கொண்ட

மாயனோ டசுரர் வானோர்

தெண்டிரை கடைய வந்த

தீவிடந்தன்னை யுண்ட

கண்டனைக் கடல்சூழ் நாகைக்

காரோணங் கோயில்கொண்ட

அண்டனை நினைந்து நெஞ்சே

யம்மநா முய்ந்த வாறே.

4.071.4

 

  உலகங்களை மாவலியிடத்துத் தானமாகப் பெற்ற திருமாலோடு அசுரர்களும் தேவர்களும் தௌந்த அலைகளை உடைய பாற்கடலைக் கடைய அப்பொழுது எழுந்த கொடிய நஞ்சினை உண்ட கழுத்தை உடையவனாய் உள்ள காரோணப்பெருமானை நினைந்த நெஞ்சமே! நாம் உய்ந்தவாறு வியக்கத்தகும்.

 

 

692 நிறைபுன லணிந்த சென்னி

நீணிலா வரவஞ் சூடி

மறையொலி பாடி யாடன்

மயானத்து மகிழ்ந்த மைந்தன்

கறைமலி கடல்சூழ் நாகைக்

காரோணங் கோயில் கொண்ட

இறைவனை நாளு மேத்த

விடும்பைபோ யின்ப மாமே.

4.071.5

 

  கங்கையை அணிந்த தலையிலே பிறையையும் பாம்பையும் சூடி, வேதங்களைப் பாடிக்கொண்டு, சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய ஆற்றல் உடையவனாய், கரு நிறம் மிக்க கடல் சூழ்ந்த திருநாகைக்காரோணம் கோயிலாகக் கொண்ட இறைவனை நாள்தோறும் துதித்தலால் துன்பங்கள் நீங்க இன்பங்கள் மிகும்.

 

 

693 வெம்பனைக் கருங்கை யானை

வெருவவன் றுரிவை போர்த்த

கம்பனைக் காலற் காய்ந்த

காலனை ஞால மேத்தும்

உம்பனை யும்பர் கோனை

நாகைக்கா ரோண மேய

செம்பொனை நினைந்த நெஞ்சே

திண்ணநா முய்ந்த வாறே.

4.071.6

 

  கொடிய, பனைமரம் போன்ற துதிக்கையை உடைய யானை அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த ஏகம்பனாய், கூற்றுவனை உதைத்த காலை உடையவனாய், உலகங்கள் துதிக்கும் தேவனாய், தேவர்கள் தலைவனாய், நாகைக் காரோணத்தில் விரும்பி உறையும் செம்பொன் மேனியனை நினைந்த. நெஞ்சே! நாம் துயரங்களிலிருந்து விடுபட்டமை நிச்சயமாயிற்று.

 

 

694 வெங்கடுங் கானத் தேழை

தன்னொடும் வேட னாய்ச்சென்

றங்கமர் மலைந்து பார்த்தற்

கடுசர மருளி னானை

மங்கைமா ராட லோவா

மன்னுகா ரோணத் தானைக்

கங்குலும் பகலுங் காணப்

பெற்றுநாங் களித்த வாறே.

4.071.7

 

  வெப்பம் மிக்ககொடிய காட்டிலே, பார்வதியோடு வேடன் வடிவில் சென்று, அங்கு அருச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதாத்திரத்தை வழங்கியவனாய், பெண்களுடைய கூத்து நீங்காமல் நிலைபெற்ற காரோணத்தில் உள்ள பெருமானை இரவும் பகலும் தரிசிக்கப் பெற்று நாம் களிப்புற்றவாறென்னே!.

 

 

695 தெற்றினர் புரங்கண் மூன்றுந்

தீயினில் விழவோ ரம்பால்

செற்றவெஞ் சிலையர் வஞ்சர்

சிந்தையுட் சேர்வி லாதார்

கற்றவர் பயிலு நாகைக்

காரோணங் கருதி யேத்தப்

பெற்றவர் பிறந்தார் மற்றுப்

பிறந்தவர் பிறந்தி லாரே.

4.071.8

 

  மாறுபட்ட அசுரர்களின் மும்மதில்களும் தீயினில் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பால் அழித்த கொடிய வில்லை ஏந்தியவராய், வஞ்சனை உடையவர் உள்ளத்தில் பொருந்தாதவராய் உள்ள பெருமானாருடைய திருவடிகளை வணங்கக் கற்றவர் பலராக உள்ள நாகைக்காரோணத்தை விரும்பிப் புகழும் பேறு பெற்றவர் பிறவிப் பயனடைந்தவராவர். மற்றவர்கள் பிறந்தும் பிறவாதாரே ஆவார்.

 

 

696 கருமலி கடல்சூழ் நாகைக்

காரோணர் கமல பாதத்

தொருவிர னுதிக்கு நில்லா

தொண்டிற லரக்க னுக்கான்

இருதிற மங்கை மாரோ

டெம்பிரான் செம்பொ னாகம்

திருவடி தரித்து நிற்கத்

திண்ணநா முய்ந்த வாறே.

4.071.9

 

  மனமே! கருமைமிக்க கடல் ஒருபுறம் சேர்ந்த நாகைக்காரோணருடைய தாமரை போன்ற பாதத்து ஒருவிரல் நுனியைத் தாங்கமுடியாமல் சிறந்த திறமையை உடைய இராவணன் சிதறிவிட்டான். கங்கை, பார்வதி என்ற இரண்டு பெண்களோடு சிவபெருமானுடைய சிவந்த பொன் போன்ற உடம்பைத் தாங்கி நிற்கும் திருவடிகளை நாம் நம்மிடத்தில் தாங்கிக் கொண்டிருப்பதால் நாம் துயரங்களிலிருந்து விடுபட்டவாறு நிச்சயமேயாயிற்று.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.