|
||||||||
நான்காம் திருமுறை-71 |
||||||||
4.071.திருநாகைக்காரோணம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்.
தேவியார் - நீலாயதாட்சியம்மை.
688 மனைவிதாய் தந்தை மக்கள்
மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி
வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை
மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகி
லுய்யலா நெஞ்சி னீரே.
4.071.1
மனமே! பெற்றோர் மனைவி மக்கள் ஏனைய சுற்றத்தார் என்று சொல்லப்படும் தேக பந்துக்களின் பாசமாகிய வினையிலே அகப்பட்டு அழுந்தித் துயருக்கு இடமாகாமல் ஒலிக்கின்ற பெரிய கடல் ஒருபுறம் சூழ்ந்த நாகையில் உறையும் காரோணத்தானை விருப்புற்று நினைக்கும் ஆற்றல் உடையையாயின் துயர்களிலிருந்து தப்பி உய்யலாம்.
689 வையனை வைய முண்ட
மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற்
றிசைமுகன் சிரமொன் றேந்தும்
கையனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே
யம்மநா முய்ந்த வாறே.
4.071.2
எருதை ஊர்பவனாய், ஊழிக்காலத்தே உலகத்தை வயிற்றில் கொண்ட திருமாலுடைய எலும்புருவான கங்காளத்தை தன் தோள் மேல் கொண்ட செந்நிறத்தனாய், செந்தாமரையில் தங்கிய பிரமனுடைய மண்டையோடு ஒன்றனை ஏந்திய கையனாய் ஒருபுறம் கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தை இருப்பிடமாகக் கொண்ட தலைவனை விருப்புற்று நினைத்த மனமே! நாம் துயரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவாறு வியக்கத்தகும்.
690 நிருத்தனை நிமலன் றன்னை
நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை
விளைபொருண் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை யுணர்த லானா
முய்ந்தவா நெஞ்சி னீரே.
4.071.3
மனமே! கூத்தனாய், தூயனாய், நீண்ட இவ்வுலகம், தேவருலகம் ஆகியவற்றிற்கு மேம்பட்டவனாய், வேதங்களால் காரணன் என்று கூறப்படுபவனாய், தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனாய் உள்ள நாகைக்காரோணத்து ஒப்பற்ற பெருமானைப் பரம்பொருள் என்று உணர்வதால் நாம் உய்ந்தமை இருந்தவாறென்னே.
691 மண்டனை யிரந்து கொண்ட
மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த
தீவிடந்தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில்கொண்ட
அண்டனை நினைந்து நெஞ்சே
யம்மநா முய்ந்த வாறே.
4.071.4
உலகங்களை மாவலியிடத்துத் தானமாகப் பெற்ற திருமாலோடு அசுரர்களும் தேவர்களும் தௌந்த அலைகளை உடைய பாற்கடலைக் கடைய அப்பொழுது எழுந்த கொடிய நஞ்சினை உண்ட கழுத்தை உடையவனாய் உள்ள காரோணப்பெருமானை நினைந்த நெஞ்சமே! நாம் உய்ந்தவாறு வியக்கத்தகும்.
692 நிறைபுன லணிந்த சென்னி
நீணிலா வரவஞ் சூடி
மறையொலி பாடி யாடன்
மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த
விடும்பைபோ யின்ப மாமே.
4.071.5
கங்கையை அணிந்த தலையிலே பிறையையும் பாம்பையும் சூடி, வேதங்களைப் பாடிக்கொண்டு, சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய ஆற்றல் உடையவனாய், கரு நிறம் மிக்க கடல் சூழ்ந்த திருநாகைக்காரோணம் கோயிலாகக் கொண்ட இறைவனை நாள்தோறும் துதித்தலால் துன்பங்கள் நீங்க இன்பங்கள் மிகும்.
693 வெம்பனைக் கருங்கை யானை
வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த
காலனை ஞால மேத்தும்
உம்பனை யும்பர் கோனை
நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே
திண்ணநா முய்ந்த வாறே.
4.071.6
கொடிய, பனைமரம் போன்ற துதிக்கையை உடைய யானை அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த ஏகம்பனாய், கூற்றுவனை உதைத்த காலை உடையவனாய், உலகங்கள் துதிக்கும் தேவனாய், தேவர்கள் தலைவனாய், நாகைக் காரோணத்தில் விரும்பி உறையும் செம்பொன் மேனியனை நினைந்த. நெஞ்சே! நாம் துயரங்களிலிருந்து விடுபட்டமை நிச்சயமாயிற்று.
694 வெங்கடுங் கானத் தேழை
தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற்
கடுசர மருளி னானை
மங்கைமா ராட லோவா
மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப்
பெற்றுநாங் களித்த வாறே.
4.071.7
வெப்பம் மிக்ககொடிய காட்டிலே, பார்வதியோடு வேடன் வடிவில் சென்று, அங்கு அருச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதாத்திரத்தை வழங்கியவனாய், பெண்களுடைய கூத்து நீங்காமல் நிலைபெற்ற காரோணத்தில் உள்ள பெருமானை இரவும் பகலும் தரிசிக்கப் பெற்று நாம் களிப்புற்றவாறென்னே!.
695 தெற்றினர் புரங்கண் மூன்றுந்
தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர்
சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலு நாகைக்
காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப்
பிறந்தவர் பிறந்தி லாரே.
4.071.8
மாறுபட்ட அசுரர்களின் மும்மதில்களும் தீயினில் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பால் அழித்த கொடிய வில்லை ஏந்தியவராய், வஞ்சனை உடையவர் உள்ளத்தில் பொருந்தாதவராய் உள்ள பெருமானாருடைய திருவடிகளை வணங்கக் கற்றவர் பலராக உள்ள நாகைக்காரோணத்தை விரும்பிப் புகழும் பேறு பெற்றவர் பிறவிப் பயனடைந்தவராவர். மற்றவர்கள் பிறந்தும் பிறவாதாரே ஆவார்.
696 கருமலி கடல்சூழ் நாகைக்
காரோணர் கமல பாதத்
தொருவிர னுதிக்கு நில்லா
தொண்டிற லரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ
டெம்பிரான் செம்பொ னாகம்
திருவடி தரித்து நிற்கத்
திண்ணநா முய்ந்த வாறே.
4.071.9
மனமே! கருமைமிக்க கடல் ஒருபுறம் சேர்ந்த நாகைக்காரோணருடைய தாமரை போன்ற பாதத்து ஒருவிரல் நுனியைத் தாங்கமுடியாமல் சிறந்த திறமையை உடைய இராவணன் சிதறிவிட்டான். கங்கை, பார்வதி என்ற இரண்டு பெண்களோடு சிவபெருமானுடைய சிவந்த பொன் போன்ற உடம்பைத் தாங்கி நிற்கும் திருவடிகளை நாம் நம்மிடத்தில் தாங்கிக் கொண்டிருப்பதால் நாம் துயரங்களிலிருந்து விடுபட்டவாறு நிச்சயமேயாயிற்று.
திருச்சிற்றம்பலம்
4.071.திருநாகைக்காரோணம் திருநேரிசை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர். தேவியார் - நீலாயதாட்சியம்மை.
688 மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும் வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை நினையுமா வல்லீ ராகி லுய்யலா நெஞ்சி னீரே. 4.071.1
மனமே! பெற்றோர் மனைவி மக்கள் ஏனைய சுற்றத்தார் என்று சொல்லப்படும் தேக பந்துக்களின் பாசமாகிய வினையிலே அகப்பட்டு அழுந்தித் துயருக்கு இடமாகாமல் ஒலிக்கின்ற பெரிய கடல் ஒருபுறம் சூழ்ந்த நாகையில் உறையும் காரோணத்தானை விருப்புற்று நினைக்கும் ஆற்றல் உடையையாயின் துயர்களிலிருந்து தப்பி உய்யலாம்.
689 வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட செய்யனைச் செய்ய போதிற் றிசைமுகன் சிரமொன் றேந்தும் கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட ஐயனை நினைந்த நெஞ்சே யம்மநா முய்ந்த வாறே. 4.071.2
எருதை ஊர்பவனாய், ஊழிக்காலத்தே உலகத்தை வயிற்றில் கொண்ட திருமாலுடைய எலும்புருவான கங்காளத்தை தன் தோள் மேல் கொண்ட செந்நிறத்தனாய், செந்தாமரையில் தங்கிய பிரமனுடைய மண்டையோடு ஒன்றனை ஏந்திய கையனாய் ஒருபுறம் கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தை இருப்பிடமாகக் கொண்ட தலைவனை விருப்புற்று நினைத்த மனமே! நாம் துயரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவாறு வியக்கத்தகும்.
690 நிருத்தனை நிமலன் றன்னை நீணிலம் விண்ணின் மிக்க விருத்தனை வேத வித்தை விளைபொருண் மூல மான கருத்தனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட ஒருத்தனை யுணர்த லானா முய்ந்தவா நெஞ்சி னீரே. 4.071.3
மனமே! கூத்தனாய், தூயனாய், நீண்ட இவ்வுலகம், தேவருலகம் ஆகியவற்றிற்கு மேம்பட்டவனாய், வேதங்களால் காரணன் என்று கூறப்படுபவனாய், தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனாய் உள்ள நாகைக்காரோணத்து ஒப்பற்ற பெருமானைப் பரம்பொருள் என்று உணர்வதால் நாம் உய்ந்தமை இருந்தவாறென்னே.
691 மண்டனை யிரந்து கொண்ட மாயனோ டசுரர் வானோர் தெண்டிரை கடைய வந்த தீவிடந்தன்னை யுண்ட கண்டனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில்கொண்ட அண்டனை நினைந்து நெஞ்சே யம்மநா முய்ந்த வாறே. 4.071.4
உலகங்களை மாவலியிடத்துத் தானமாகப் பெற்ற திருமாலோடு அசுரர்களும் தேவர்களும் தௌந்த அலைகளை உடைய பாற்கடலைக் கடைய அப்பொழுது எழுந்த கொடிய நஞ்சினை உண்ட கழுத்தை உடையவனாய் உள்ள காரோணப்பெருமானை நினைந்த நெஞ்சமே! நாம் உய்ந்தவாறு வியக்கத்தகும்.
692 நிறைபுன லணிந்த சென்னி நீணிலா வரவஞ் சூடி மறையொலி பாடி யாடன் மயானத்து மகிழ்ந்த மைந்தன் கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட இறைவனை நாளு மேத்த விடும்பைபோ யின்ப மாமே. 4.071.5
கங்கையை அணிந்த தலையிலே பிறையையும் பாம்பையும் சூடி, வேதங்களைப் பாடிக்கொண்டு, சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய ஆற்றல் உடையவனாய், கரு நிறம் மிக்க கடல் சூழ்ந்த திருநாகைக்காரோணம் கோயிலாகக் கொண்ட இறைவனை நாள்தோறும் துதித்தலால் துன்பங்கள் நீங்க இன்பங்கள் மிகும்.
693 வெம்பனைக் கருங்கை யானை வெருவவன் றுரிவை போர்த்த கம்பனைக் காலற் காய்ந்த காலனை ஞால மேத்தும் உம்பனை யும்பர் கோனை நாகைக்கா ரோண மேய செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணநா முய்ந்த வாறே. 4.071.6
கொடிய, பனைமரம் போன்ற துதிக்கையை உடைய யானை அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த ஏகம்பனாய், கூற்றுவனை உதைத்த காலை உடையவனாய், உலகங்கள் துதிக்கும் தேவனாய், தேவர்கள் தலைவனாய், நாகைக் காரோணத்தில் விரும்பி உறையும் செம்பொன் மேனியனை நினைந்த. நெஞ்சே! நாம் துயரங்களிலிருந்து விடுபட்டமை நிச்சயமாயிற்று.
694 வெங்கடுங் கானத் தேழை தன்னொடும் வேட னாய்ச்சென் றங்கமர் மலைந்து பார்த்தற் கடுசர மருளி னானை மங்கைமா ராட லோவா மன்னுகா ரோணத் தானைக் கங்குலும் பகலுங் காணப் பெற்றுநாங் களித்த வாறே. 4.071.7
வெப்பம் மிக்ககொடிய காட்டிலே, பார்வதியோடு வேடன் வடிவில் சென்று, அங்கு அருச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதாத்திரத்தை வழங்கியவனாய், பெண்களுடைய கூத்து நீங்காமல் நிலைபெற்ற காரோணத்தில் உள்ள பெருமானை இரவும் பகலும் தரிசிக்கப் பெற்று நாம் களிப்புற்றவாறென்னே!.
695 தெற்றினர் புரங்கண் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால் செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார் கற்றவர் பயிலு நாகைக் காரோணங் கருதி யேத்தப் பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே. 4.071.8
மாறுபட்ட அசுரர்களின் மும்மதில்களும் தீயினில் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பால் அழித்த கொடிய வில்லை ஏந்தியவராய், வஞ்சனை உடையவர் உள்ளத்தில் பொருந்தாதவராய் உள்ள பெருமானாருடைய திருவடிகளை வணங்கக் கற்றவர் பலராக உள்ள நாகைக்காரோணத்தை விரும்பிப் புகழும் பேறு பெற்றவர் பிறவிப் பயனடைந்தவராவர். மற்றவர்கள் பிறந்தும் பிறவாதாரே ஆவார்.
696 கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமல பாதத் தொருவிர னுதிக்கு நில்லா தொண்டிற லரக்க னுக்கான் இருதிற மங்கை மாரோ டெம்பிரான் செம்பொ னாகம் திருவடி தரித்து நிற்கத் திண்ணநா முய்ந்த வாறே. 4.071.9
மனமே! கருமைமிக்க கடல் ஒருபுறம் சேர்ந்த நாகைக்காரோணருடைய தாமரை போன்ற பாதத்து ஒருவிரல் நுனியைத் தாங்கமுடியாமல் சிறந்த திறமையை உடைய இராவணன் சிதறிவிட்டான். கங்கை, பார்வதி என்ற இரண்டு பெண்களோடு சிவபெருமானுடைய சிவந்த பொன் போன்ற உடம்பைத் தாங்கி நிற்கும் திருவடிகளை நாம் நம்மிடத்தில் தாங்கிக் கொண்டிருப்பதால் நாம் துயரங்களிலிருந்து விடுபட்டவாறு நிச்சயமேயாயிற்று.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|