LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-72

 

4.072.திருவின்னம்பர் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர். 
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை. 
697 விண்ணவர் மகுட கோடி
மிடைந்தசே வடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும்
பேடலி யாணர் போலும்
வண்ணமா லயனுங் காணா
மால்வரை யெரியர் போலும்
எண்ணுரு வநேகர் போலும்
இன்னம்ப ரீச னாரே.
4.072.1
இன்னம்பரில் உறைந்து எல்லோரையும் ஆளும் தலைவர், தேவர்களுடைய பல மகுடங்களும் நெருங்கிக் கலந்த திருவடிகளை உடையவர். பார்வதி பாகர். ஆண் பெண் அலி ஆனவர். நல்ல அழகுடைய திருமாலும், பிரமனும் அடிமுடி காணாத வகையில் பெரிய தீ மலையாகக் காட்சி வழங்கியவர். அட்டமூர்த்தியாயும் அவற்றினும் பல வடிவத்தராயும் உள்ளவர்.
698 பன்னிய மறையர் போலும்
பாம்பரை யுடையர் போலும்
துன்னிய சடையர் போலுந்
தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும்
மாதிட மகிழ்வர் போலும்
என்னையு முடையர் போலும்
இன்னம்ப ரீச னாரே.
4.072.2
இன்னம்பர் ஈசர் வேதத்தை ஒலித்து, இடையில் ஆடைமேல் பாம்பைஇறுகக் கட்டி, செறிந்த சடையில் பிறையும் ஊமத்தம் பூவும் அணிந்து, மழுப்படை தாங்கிய கையராய், பார்வதி பாகராய், அடியேனையும் அடியவனாக உடையவர்.
699 மறியொரு கையர் போலும்
மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப்
பணிகொள வல்லர் போலும்
செறிவுடை யங்க மாலை
சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும்
இன்னம்ப ரீச னாரே.
4.072.3
ஒரு கையில் மான்கன்றை ஏந்திப் பார்வதி பாகராய், தலைமயிரை வலிந்து பிடுங்கிக் கொள்ளும் சமணத் தோற்றத்தை நீக்கி, அடியேனைத் தம் திருத்தொண்டில் ஈடுபடுத்த வல்லவராய், செறிந்த தலைமாலையை அணிந்த வடிவினராய், அலைவீசும் கங்கையைச் சடையில் தரித்தவராய் உள்ளார் இன்னம்பர் ஈசன்.
700 விடமலி கண்டர் போலும்
வேள்வியை யழிப்பர் போலும்
கடவுநல் விடையர் போலுங்
காலனைக் காய்வர் போலும்
படமலி யரவர் போலும்
பாய்புலித் தோலர் போலும்
இடர்களைந் தருள்வர்போலும்
இன்னம்ப ரீச னாரே.
4.072.4
இன்னம்பர் ஈசன், நஞ்சு பொருந்திய கழுத்தினராய், தக்கன் வேள்வியை அழித்தவராய், பெரிய காளையைச் செலுத்துபவராய், கூற்றுவனைக் கோபித்தவராய், படம் எடுக்கும் பாம்பினை உடையவராய், பரவிய புலித்தோலை உடுத்தவராய், அடியார்களுடைய துன்பங்களைப் போக்கி அருள் செய்பவர் ஆவர்.
701 அளிமலர்க்கொன்றை துன்று
மவிர்சடையுடையர் போலும்
களிமயிற்சாய லோடுங்
காமனைவிழிப்பர் போலும்
வெளிவளருருவர் போலும்
வெண்பொடியணிவர் போலும்
எளியவரடியர்க் கென்றும்
இன்னம்பரீச னாரே.
4.072.5
இன்னம்பர் ஈசன் வண்டுகள் மொய்க்கும் கொன்றைப்பூமாலை பொருந்திய. ஒளிவீசும் சடையை உடையவராய், மகிழ்ச்சியுறும் மயில் போன்ற மென்மையை உடைய பார்வதி பாகராய் மன்மதனைச் சாம்பலாகுமாறு விழித்தவராய், எல்லா அண்டங்களும் நிறைந்த விசுவரூபம் எடுத்தவராய், திருநீற்றை அணிபவராய், அடியவர்கள் எப்பொழுதும் வணங்கி வேண்டுவதற்கு எளியவராய் உள்ளார்.
702 கணையமர் சிலையர் போலுங்
கரியுரி யுடையர் போலும்
துணையமர் பெண்ணர் போலுந்
தூமணிக் குன்றர் போலும்
அணையுடை யடியர் கூடி
யன்பொடு மலர்கள் தூவும்
இணையடி யுடையர் போலும்
இன்னம்ப ரீச னாரே.
4.072.6
இன்னம்பர் ஈசன். அம்பு பொருந்திய வில்லினராய், யானைத்தோற் போர்வையினராய், பார்வதி பாகராய், தூய மாணிக்கக் குன்றம் போல்பவராய், உள்ளத்தில் தியானம் செய்யும் அடியார்கள் கூடி அன்பொடு மலர்களைத் தூவும் திருவடி இணையை உடையவருமாவார்.
703 பொருப்பமர் புயத்தர் போலும்
புனலணிசடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு
மார்பில்வெண்ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும்
உணர்விலார்புரங்கண் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும்
இன்னம்ப ரீச னாரே.
4.072.7
இன்னம்பர் ஈசன் மலையை ஒத்த தோள்களை உடையவராய், கங்கையை அணிந்த சடையினராய், பன்றியின் கொம்பு, இளைய ஆமைஓடு எனும் இவற்றை அணிந்த மார்பில் வெண்ணூலைப் பூண்டவராய், உருத்திர மூர்த்தியாய், நல் உணர்வு இல்லாத அசுரர்களுடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய மேருமலையாகிய வில்லை உடையவருமாவார்.
704 காடிட முடையர் போலுங்
கடிகுரல்விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும்
வெண்மதிக்கொழுந்தர் போலும்
கோடலர் வன்னி தும்பை
கொக்கிறகலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும்
இன்னம்பரீச னாரே. 
4.072.8
இன்னம்பர் ஈசன், சுடுகாட்டைத் தங்கும் இடமாகக் கொண்டவராய் ,கடுமையான குரலால் ஒலி உண்டாக்குபவராய், அருச்சுனனுக்காக வேடர் வடிவு எடுத்தவராய், பிறை சூடியவராய், கிளைகளில் மலர்கின்ற கொன்றைப் பூவின் இதழ்கள், தும்பை, வன்னி, கொக்கின் இறகு இவை அணியப்பட்ட சடையை உடையவராய் உள்ளார்.
705 காறிடு விடத்தை யுண்ட
கண்டரெண் டோளர் போலும்
நீறுடை யுருவர் போலும்
நினைப்பினை யரியர் போலும்
பாறுடைத் தலைகை யேந்திப்
பலிதிரிந் துண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும்
இன்னம்ப ரீச னாரே
4.072.9
இன்னம்பர் ஈசன், கைப்புச்சுவையை உடைய நஞ்சினை உண்ட கழுத்தினராய், எட்டுத் தோள்களை உடையவராய், திருநீறு அணிந்த வடிவினராய், நினைப்பதற்கும் எட்டாதவராய், பருந்துகள் நெருங்கும் மண்டை ஓட்டைக் கையில் எந்திப் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்று உண்பவராய், காளை வடிவம் எழுதிய கொடியினராய் உள்ளார்.
706 ஆர்த்தெழு மிலங்கைக் கோனை
யருவரை யடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது
படைகொடுத் தருள்வர் போலும்
தீர்த்தமாங் கங்கை தன்னைத்
திருச்சடை வைப்பர் போலும்
ஏத்துவே ழுலகும் வைத்தார்
இன்னம்ப ரீச னாரே.
4.072.10
இன்னம்பர் ஈசன், ஆரவாரித்துக் கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க வந்த இராவணனை, மலையின் கீழ் நசுக்கியவர். அருச்சுனனோடு போரிட்டு, அவனுக்குத் தெய்வப் படை களைக் கொடுத்து அருளியவர். தூய்மையை நல்கும் கங்கையைச் சடையில் வைத்தவர். தம்மைப் போற்றிப் புகழ ஏழு உலகங்களிலும் சீவான்மாக்களை வாழ வைத்தவராவார்
திருச்சிற்றம்பலம்

 

4.072.திருவின்னம்பர் 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர். 

தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை. 

 

 

697 விண்ணவர் மகுட கோடி

மிடைந்தசே வடியர் போலும்

பெண்ணொரு பாகர் போலும்

பேடலி யாணர் போலும்

வண்ணமா லயனுங் காணா

மால்வரை யெரியர் போலும்

எண்ணுரு வநேகர் போலும்

இன்னம்ப ரீச னாரே.

4.072.1

 

  இன்னம்பரில் உறைந்து எல்லோரையும் ஆளும் தலைவர், தேவர்களுடைய பல மகுடங்களும் நெருங்கிக் கலந்த திருவடிகளை உடையவர். பார்வதி பாகர். ஆண் பெண் அலி ஆனவர். நல்ல அழகுடைய திருமாலும், பிரமனும் அடிமுடி காணாத வகையில் பெரிய தீ மலையாகக் காட்சி வழங்கியவர். அட்டமூர்த்தியாயும் அவற்றினும் பல வடிவத்தராயும் உள்ளவர்.

 

 

698 பன்னிய மறையர் போலும்

பாம்பரை யுடையர் போலும்

துன்னிய சடையர் போலுந்

தூமதி மத்தர் போலும்

மன்னிய மழுவர் போலும்

மாதிட மகிழ்வர் போலும்

என்னையு முடையர் போலும்

இன்னம்ப ரீச னாரே.

4.072.2

 

  இன்னம்பர் ஈசர் வேதத்தை ஒலித்து, இடையில் ஆடைமேல் பாம்பைஇறுகக் கட்டி, செறிந்த சடையில் பிறையும் ஊமத்தம் பூவும் அணிந்து, மழுப்படை தாங்கிய கையராய், பார்வதி பாகராய், அடியேனையும் அடியவனாக உடையவர்.

 

 

699 மறியொரு கையர் போலும்

மாதுமை யுடையர் போலும்

பறிதலைப் பிறவி நீக்கிப்

பணிகொள வல்லர் போலும்

செறிவுடை யங்க மாலை

சேர்திரு வுருவர் போலும்

எறிபுனற் சடையர் போலும்

இன்னம்ப ரீச னாரே.

4.072.3

 

  ஒரு கையில் மான்கன்றை ஏந்திப் பார்வதி பாகராய், தலைமயிரை வலிந்து பிடுங்கிக் கொள்ளும் சமணத் தோற்றத்தை நீக்கி, அடியேனைத் தம் திருத்தொண்டில் ஈடுபடுத்த வல்லவராய், செறிந்த தலைமாலையை அணிந்த வடிவினராய், அலைவீசும் கங்கையைச் சடையில் தரித்தவராய் உள்ளார் இன்னம்பர் ஈசன்.

 

 

700 விடமலி கண்டர் போலும்

வேள்வியை யழிப்பர் போலும்

கடவுநல் விடையர் போலுங்

காலனைக் காய்வர் போலும்

படமலி யரவர் போலும்

பாய்புலித் தோலர் போலும்

இடர்களைந் தருள்வர்போலும்

இன்னம்ப ரீச னாரே.

4.072.4

 

  இன்னம்பர் ஈசன், நஞ்சு பொருந்திய கழுத்தினராய், தக்கன் வேள்வியை அழித்தவராய், பெரிய காளையைச் செலுத்துபவராய், கூற்றுவனைக் கோபித்தவராய், படம் எடுக்கும் பாம்பினை உடையவராய், பரவிய புலித்தோலை உடுத்தவராய், அடியார்களுடைய துன்பங்களைப் போக்கி அருள் செய்பவர் ஆவர்.

 

 

701 அளிமலர்க்கொன்றை துன்று

மவிர்சடையுடையர் போலும்

களிமயிற்சாய லோடுங்

காமனைவிழிப்பர் போலும்

வெளிவளருருவர் போலும்

வெண்பொடியணிவர் போலும்

எளியவரடியர்க் கென்றும்

இன்னம்பரீச னாரே.

4.072.5

 

  இன்னம்பர் ஈசன் வண்டுகள் மொய்க்கும் கொன்றைப்பூமாலை பொருந்திய. ஒளிவீசும் சடையை உடையவராய், மகிழ்ச்சியுறும் மயில் போன்ற மென்மையை உடைய பார்வதி பாகராய் மன்மதனைச் சாம்பலாகுமாறு விழித்தவராய், எல்லா அண்டங்களும் நிறைந்த விசுவரூபம் எடுத்தவராய், திருநீற்றை அணிபவராய், அடியவர்கள் எப்பொழுதும் வணங்கி வேண்டுவதற்கு எளியவராய் உள்ளார்.

 

 

702 கணையமர் சிலையர் போலுங்

கரியுரி யுடையர் போலும்

துணையமர் பெண்ணர் போலுந்

தூமணிக் குன்றர் போலும்

அணையுடை யடியர் கூடி

யன்பொடு மலர்கள் தூவும்

இணையடி யுடையர் போலும்

இன்னம்ப ரீச னாரே.

4.072.6

 

  இன்னம்பர் ஈசன். அம்பு பொருந்திய வில்லினராய், யானைத்தோற் போர்வையினராய், பார்வதி பாகராய், தூய மாணிக்கக் குன்றம் போல்பவராய், உள்ளத்தில் தியானம் செய்யும் அடியார்கள் கூடி அன்பொடு மலர்களைத் தூவும் திருவடி இணையை உடையவருமாவார்.

 

 

703 பொருப்பமர் புயத்தர் போலும்

புனலணிசடையர் போலும்

மருப்பிள வாமை தாங்கு

மார்பில்வெண்ணூலர் போலும்

உருத்திர மூர்த்தி போலும்

உணர்விலார்புரங்கண் மூன்றும்

எரித்திடு சிலையர் போலும்

இன்னம்ப ரீச னாரே.

4.072.7

 

  இன்னம்பர் ஈசன் மலையை ஒத்த தோள்களை உடையவராய், கங்கையை அணிந்த சடையினராய், பன்றியின் கொம்பு, இளைய ஆமைஓடு எனும் இவற்றை அணிந்த மார்பில் வெண்ணூலைப் பூண்டவராய், உருத்திர மூர்த்தியாய், நல் உணர்வு இல்லாத அசுரர்களுடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய மேருமலையாகிய வில்லை உடையவருமாவார்.

 

 

704 காடிட முடையர் போலுங்

கடிகுரல்விளியர் போலும்

வேடுரு வுடையர் போலும்

வெண்மதிக்கொழுந்தர் போலும்

கோடலர் வன்னி தும்பை

கொக்கிறகலர்ந்த கொன்றை

ஏடமர் சடையர் போலும்

இன்னம்பரீச னாரே. 

4.072.8

 

  இன்னம்பர் ஈசன், சுடுகாட்டைத் தங்கும் இடமாகக் கொண்டவராய் ,கடுமையான குரலால் ஒலி உண்டாக்குபவராய், அருச்சுனனுக்காக வேடர் வடிவு எடுத்தவராய், பிறை சூடியவராய், கிளைகளில் மலர்கின்ற கொன்றைப் பூவின் இதழ்கள், தும்பை, வன்னி, கொக்கின் இறகு இவை அணியப்பட்ட சடையை உடையவராய் உள்ளார்.

 

 

705 காறிடு விடத்தை யுண்ட

கண்டரெண் டோளர் போலும்

நீறுடை யுருவர் போலும்

நினைப்பினை யரியர் போலும்

பாறுடைத் தலைகை யேந்திப்

பலிதிரிந் துண்பர் போலும்

ஏறுடைக் கொடியர் போலும்

இன்னம்ப ரீச னாரே

4.072.9

 

  இன்னம்பர் ஈசன், கைப்புச்சுவையை உடைய நஞ்சினை உண்ட கழுத்தினராய், எட்டுத் தோள்களை உடையவராய், திருநீறு அணிந்த வடிவினராய், நினைப்பதற்கும் எட்டாதவராய், பருந்துகள் நெருங்கும் மண்டை ஓட்டைக் கையில் எந்திப் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்று உண்பவராய், காளை வடிவம் எழுதிய கொடியினராய் உள்ளார்.

 

 

706 ஆர்த்தெழு மிலங்கைக் கோனை

யருவரை யடர்ப்பர் போலும்

பார்த்தனோ டமர் பொருது

படைகொடுத் தருள்வர் போலும்

தீர்த்தமாங் கங்கை தன்னைத்

திருச்சடை வைப்பர் போலும்

ஏத்துவே ழுலகும் வைத்தார்

இன்னம்ப ரீச னாரே.

4.072.10

 

  இன்னம்பர் ஈசன், ஆரவாரித்துக் கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க வந்த இராவணனை, மலையின் கீழ் நசுக்கியவர். அருச்சுனனோடு போரிட்டு, அவனுக்குத் தெய்வப் படை களைக் கொடுத்து அருளியவர். தூய்மையை நல்கும் கங்கையைச் சடையில் வைத்தவர். தம்மைப் போற்றிப் புகழ ஏழு உலகங்களிலும் சீவான்மாக்களை வாழ வைத்தவராவார்

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.