|
||||||||
நான்காம் திருமுறை-72 |
||||||||
4.072.திருவின்னம்பர்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்.
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
697 விண்ணவர் மகுட கோடி
மிடைந்தசே வடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும்
பேடலி யாணர் போலும்
வண்ணமா லயனுங் காணா
மால்வரை யெரியர் போலும்
எண்ணுரு வநேகர் போலும்
இன்னம்ப ரீச னாரே.
4.072.1
இன்னம்பரில் உறைந்து எல்லோரையும் ஆளும் தலைவர், தேவர்களுடைய பல மகுடங்களும் நெருங்கிக் கலந்த திருவடிகளை உடையவர். பார்வதி பாகர். ஆண் பெண் அலி ஆனவர். நல்ல அழகுடைய திருமாலும், பிரமனும் அடிமுடி காணாத வகையில் பெரிய தீ மலையாகக் காட்சி வழங்கியவர். அட்டமூர்த்தியாயும் அவற்றினும் பல வடிவத்தராயும் உள்ளவர்.
698 பன்னிய மறையர் போலும்
பாம்பரை யுடையர் போலும்
துன்னிய சடையர் போலுந்
தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும்
மாதிட மகிழ்வர் போலும்
என்னையு முடையர் போலும்
இன்னம்ப ரீச னாரே.
4.072.2
இன்னம்பர் ஈசர் வேதத்தை ஒலித்து, இடையில் ஆடைமேல் பாம்பைஇறுகக் கட்டி, செறிந்த சடையில் பிறையும் ஊமத்தம் பூவும் அணிந்து, மழுப்படை தாங்கிய கையராய், பார்வதி பாகராய், அடியேனையும் அடியவனாக உடையவர்.
699 மறியொரு கையர் போலும்
மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப்
பணிகொள வல்லர் போலும்
செறிவுடை யங்க மாலை
சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும்
இன்னம்ப ரீச னாரே.
4.072.3
ஒரு கையில் மான்கன்றை ஏந்திப் பார்வதி பாகராய், தலைமயிரை வலிந்து பிடுங்கிக் கொள்ளும் சமணத் தோற்றத்தை நீக்கி, அடியேனைத் தம் திருத்தொண்டில் ஈடுபடுத்த வல்லவராய், செறிந்த தலைமாலையை அணிந்த வடிவினராய், அலைவீசும் கங்கையைச் சடையில் தரித்தவராய் உள்ளார் இன்னம்பர் ஈசன்.
700 விடமலி கண்டர் போலும்
வேள்வியை யழிப்பர் போலும்
கடவுநல் விடையர் போலுங்
காலனைக் காய்வர் போலும்
படமலி யரவர் போலும்
பாய்புலித் தோலர் போலும்
இடர்களைந் தருள்வர்போலும்
இன்னம்ப ரீச னாரே.
4.072.4
இன்னம்பர் ஈசன், நஞ்சு பொருந்திய கழுத்தினராய், தக்கன் வேள்வியை அழித்தவராய், பெரிய காளையைச் செலுத்துபவராய், கூற்றுவனைக் கோபித்தவராய், படம் எடுக்கும் பாம்பினை உடையவராய், பரவிய புலித்தோலை உடுத்தவராய், அடியார்களுடைய துன்பங்களைப் போக்கி அருள் செய்பவர் ஆவர்.
701 அளிமலர்க்கொன்றை துன்று
மவிர்சடையுடையர் போலும்
களிமயிற்சாய லோடுங்
காமனைவிழிப்பர் போலும்
வெளிவளருருவர் போலும்
வெண்பொடியணிவர் போலும்
எளியவரடியர்க் கென்றும்
இன்னம்பரீச னாரே.
4.072.5
இன்னம்பர் ஈசன் வண்டுகள் மொய்க்கும் கொன்றைப்பூமாலை பொருந்திய. ஒளிவீசும் சடையை உடையவராய், மகிழ்ச்சியுறும் மயில் போன்ற மென்மையை உடைய பார்வதி பாகராய் மன்மதனைச் சாம்பலாகுமாறு விழித்தவராய், எல்லா அண்டங்களும் நிறைந்த விசுவரூபம் எடுத்தவராய், திருநீற்றை அணிபவராய், அடியவர்கள் எப்பொழுதும் வணங்கி வேண்டுவதற்கு எளியவராய் உள்ளார்.
702 கணையமர் சிலையர் போலுங்
கரியுரி யுடையர் போலும்
துணையமர் பெண்ணர் போலுந்
தூமணிக் குன்றர் போலும்
அணையுடை யடியர் கூடி
யன்பொடு மலர்கள் தூவும்
இணையடி யுடையர் போலும்
இன்னம்ப ரீச னாரே.
4.072.6
இன்னம்பர் ஈசன். அம்பு பொருந்திய வில்லினராய், யானைத்தோற் போர்வையினராய், பார்வதி பாகராய், தூய மாணிக்கக் குன்றம் போல்பவராய், உள்ளத்தில் தியானம் செய்யும் அடியார்கள் கூடி அன்பொடு மலர்களைத் தூவும் திருவடி இணையை உடையவருமாவார்.
703 பொருப்பமர் புயத்தர் போலும்
புனலணிசடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு
மார்பில்வெண்ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும்
உணர்விலார்புரங்கண் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும்
இன்னம்ப ரீச னாரே.
4.072.7
இன்னம்பர் ஈசன் மலையை ஒத்த தோள்களை உடையவராய், கங்கையை அணிந்த சடையினராய், பன்றியின் கொம்பு, இளைய ஆமைஓடு எனும் இவற்றை அணிந்த மார்பில் வெண்ணூலைப் பூண்டவராய், உருத்திர மூர்த்தியாய், நல் உணர்வு இல்லாத அசுரர்களுடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய மேருமலையாகிய வில்லை உடையவருமாவார்.
704 காடிட முடையர் போலுங்
கடிகுரல்விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும்
வெண்மதிக்கொழுந்தர் போலும்
கோடலர் வன்னி தும்பை
கொக்கிறகலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும்
இன்னம்பரீச னாரே.
4.072.8
இன்னம்பர் ஈசன், சுடுகாட்டைத் தங்கும் இடமாகக் கொண்டவராய் ,கடுமையான குரலால் ஒலி உண்டாக்குபவராய், அருச்சுனனுக்காக வேடர் வடிவு எடுத்தவராய், பிறை சூடியவராய், கிளைகளில் மலர்கின்ற கொன்றைப் பூவின் இதழ்கள், தும்பை, வன்னி, கொக்கின் இறகு இவை அணியப்பட்ட சடையை உடையவராய் உள்ளார்.
705 காறிடு விடத்தை யுண்ட
கண்டரெண் டோளர் போலும்
நீறுடை யுருவர் போலும்
நினைப்பினை யரியர் போலும்
பாறுடைத் தலைகை யேந்திப்
பலிதிரிந் துண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும்
இன்னம்ப ரீச னாரே
4.072.9
இன்னம்பர் ஈசன், கைப்புச்சுவையை உடைய நஞ்சினை உண்ட கழுத்தினராய், எட்டுத் தோள்களை உடையவராய், திருநீறு அணிந்த வடிவினராய், நினைப்பதற்கும் எட்டாதவராய், பருந்துகள் நெருங்கும் மண்டை ஓட்டைக் கையில் எந்திப் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்று உண்பவராய், காளை வடிவம் எழுதிய கொடியினராய் உள்ளார்.
706 ஆர்த்தெழு மிலங்கைக் கோனை
யருவரை யடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது
படைகொடுத் தருள்வர் போலும்
தீர்த்தமாங் கங்கை தன்னைத்
திருச்சடை வைப்பர் போலும்
ஏத்துவே ழுலகும் வைத்தார்
இன்னம்ப ரீச னாரே.
4.072.10
இன்னம்பர் ஈசன், ஆரவாரித்துக் கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க வந்த இராவணனை, மலையின் கீழ் நசுக்கியவர். அருச்சுனனோடு போரிட்டு, அவனுக்குத் தெய்வப் படை களைக் கொடுத்து அருளியவர். தூய்மையை நல்கும் கங்கையைச் சடையில் வைத்தவர். தம்மைப் போற்றிப் புகழ ஏழு உலகங்களிலும் சீவான்மாக்களை வாழ வைத்தவராவார்
திருச்சிற்றம்பலம்
4.072.திருவின்னம்பர் திருநேரிசை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர். தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
697 விண்ணவர் மகுட கோடி மிடைந்தசே வடியர் போலும் பெண்ணொரு பாகர் போலும் பேடலி யாணர் போலும் வண்ணமா லயனுங் காணா மால்வரை யெரியர் போலும் எண்ணுரு வநேகர் போலும் இன்னம்ப ரீச னாரே. 4.072.1
இன்னம்பரில் உறைந்து எல்லோரையும் ஆளும் தலைவர், தேவர்களுடைய பல மகுடங்களும் நெருங்கிக் கலந்த திருவடிகளை உடையவர். பார்வதி பாகர். ஆண் பெண் அலி ஆனவர். நல்ல அழகுடைய திருமாலும், பிரமனும் அடிமுடி காணாத வகையில் பெரிய தீ மலையாகக் காட்சி வழங்கியவர். அட்டமூர்த்தியாயும் அவற்றினும் பல வடிவத்தராயும் உள்ளவர்.
698 பன்னிய மறையர் போலும் பாம்பரை யுடையர் போலும் துன்னிய சடையர் போலுந் தூமதி மத்தர் போலும் மன்னிய மழுவர் போலும் மாதிட மகிழ்வர் போலும் என்னையு முடையர் போலும் இன்னம்ப ரீச னாரே. 4.072.2
இன்னம்பர் ஈசர் வேதத்தை ஒலித்து, இடையில் ஆடைமேல் பாம்பைஇறுகக் கட்டி, செறிந்த சடையில் பிறையும் ஊமத்தம் பூவும் அணிந்து, மழுப்படை தாங்கிய கையராய், பார்வதி பாகராய், அடியேனையும் அடியவனாக உடையவர்.
699 மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும் பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலும் செறிவுடை யங்க மாலை சேர்திரு வுருவர் போலும் எறிபுனற் சடையர் போலும் இன்னம்ப ரீச னாரே. 4.072.3
ஒரு கையில் மான்கன்றை ஏந்திப் பார்வதி பாகராய், தலைமயிரை வலிந்து பிடுங்கிக் கொள்ளும் சமணத் தோற்றத்தை நீக்கி, அடியேனைத் தம் திருத்தொண்டில் ஈடுபடுத்த வல்லவராய், செறிந்த தலைமாலையை அணிந்த வடிவினராய், அலைவீசும் கங்கையைச் சடையில் தரித்தவராய் உள்ளார் இன்னம்பர் ஈசன்.
700 விடமலி கண்டர் போலும் வேள்வியை யழிப்பர் போலும் கடவுநல் விடையர் போலுங் காலனைக் காய்வர் போலும் படமலி யரவர் போலும் பாய்புலித் தோலர் போலும் இடர்களைந் தருள்வர்போலும் இன்னம்ப ரீச னாரே. 4.072.4
இன்னம்பர் ஈசன், நஞ்சு பொருந்திய கழுத்தினராய், தக்கன் வேள்வியை அழித்தவராய், பெரிய காளையைச் செலுத்துபவராய், கூற்றுவனைக் கோபித்தவராய், படம் எடுக்கும் பாம்பினை உடையவராய், பரவிய புலித்தோலை உடுத்தவராய், அடியார்களுடைய துன்பங்களைப் போக்கி அருள் செய்பவர் ஆவர்.
701 அளிமலர்க்கொன்றை துன்று மவிர்சடையுடையர் போலும் களிமயிற்சாய லோடுங் காமனைவிழிப்பர் போலும் வெளிவளருருவர் போலும் வெண்பொடியணிவர் போலும் எளியவரடியர்க் கென்றும் இன்னம்பரீச னாரே. 4.072.5
இன்னம்பர் ஈசன் வண்டுகள் மொய்க்கும் கொன்றைப்பூமாலை பொருந்திய. ஒளிவீசும் சடையை உடையவராய், மகிழ்ச்சியுறும் மயில் போன்ற மென்மையை உடைய பார்வதி பாகராய் மன்மதனைச் சாம்பலாகுமாறு விழித்தவராய், எல்லா அண்டங்களும் நிறைந்த விசுவரூபம் எடுத்தவராய், திருநீற்றை அணிபவராய், அடியவர்கள் எப்பொழுதும் வணங்கி வேண்டுவதற்கு எளியவராய் உள்ளார்.
702 கணையமர் சிலையர் போலுங் கரியுரி யுடையர் போலும் துணையமர் பெண்ணர் போலுந் தூமணிக் குன்றர் போலும் அணையுடை யடியர் கூடி யன்பொடு மலர்கள் தூவும் இணையடி யுடையர் போலும் இன்னம்ப ரீச னாரே. 4.072.6
இன்னம்பர் ஈசன். அம்பு பொருந்திய வில்லினராய், யானைத்தோற் போர்வையினராய், பார்வதி பாகராய், தூய மாணிக்கக் குன்றம் போல்பவராய், உள்ளத்தில் தியானம் செய்யும் அடியார்கள் கூடி அன்பொடு மலர்களைத் தூவும் திருவடி இணையை உடையவருமாவார்.
703 பொருப்பமர் புயத்தர் போலும் புனலணிசடையர் போலும் மருப்பிள வாமை தாங்கு மார்பில்வெண்ணூலர் போலும் உருத்திர மூர்த்தி போலும் உணர்விலார்புரங்கண் மூன்றும் எரித்திடு சிலையர் போலும் இன்னம்ப ரீச னாரே. 4.072.7
இன்னம்பர் ஈசன் மலையை ஒத்த தோள்களை உடையவராய், கங்கையை அணிந்த சடையினராய், பன்றியின் கொம்பு, இளைய ஆமைஓடு எனும் இவற்றை அணிந்த மார்பில் வெண்ணூலைப் பூண்டவராய், உருத்திர மூர்த்தியாய், நல் உணர்வு இல்லாத அசுரர்களுடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய மேருமலையாகிய வில்லை உடையவருமாவார்.
704 காடிட முடையர் போலுங் கடிகுரல்விளியர் போலும் வேடுரு வுடையர் போலும் வெண்மதிக்கொழுந்தர் போலும் கோடலர் வன்னி தும்பை கொக்கிறகலர்ந்த கொன்றை ஏடமர் சடையர் போலும் இன்னம்பரீச னாரே. 4.072.8
இன்னம்பர் ஈசன், சுடுகாட்டைத் தங்கும் இடமாகக் கொண்டவராய் ,கடுமையான குரலால் ஒலி உண்டாக்குபவராய், அருச்சுனனுக்காக வேடர் வடிவு எடுத்தவராய், பிறை சூடியவராய், கிளைகளில் மலர்கின்ற கொன்றைப் பூவின் இதழ்கள், தும்பை, வன்னி, கொக்கின் இறகு இவை அணியப்பட்ட சடையை உடையவராய் உள்ளார்.
705 காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோளர் போலும் நீறுடை யுருவர் போலும் நினைப்பினை யரியர் போலும் பாறுடைத் தலைகை யேந்திப் பலிதிரிந் துண்பர் போலும் ஏறுடைக் கொடியர் போலும் இன்னம்ப ரீச னாரே 4.072.9
இன்னம்பர் ஈசன், கைப்புச்சுவையை உடைய நஞ்சினை உண்ட கழுத்தினராய், எட்டுத் தோள்களை உடையவராய், திருநீறு அணிந்த வடிவினராய், நினைப்பதற்கும் எட்டாதவராய், பருந்துகள் நெருங்கும் மண்டை ஓட்டைக் கையில் எந்திப் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்று உண்பவராய், காளை வடிவம் எழுதிய கொடியினராய் உள்ளார்.
706 ஆர்த்தெழு மிலங்கைக் கோனை யருவரை யடர்ப்பர் போலும் பார்த்தனோ டமர் பொருது படைகொடுத் தருள்வர் போலும் தீர்த்தமாங் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும் ஏத்துவே ழுலகும் வைத்தார் இன்னம்ப ரீச னாரே. 4.072.10
இன்னம்பர் ஈசன், ஆரவாரித்துக் கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க வந்த இராவணனை, மலையின் கீழ் நசுக்கியவர். அருச்சுனனோடு போரிட்டு, அவனுக்குத் தெய்வப் படை களைக் கொடுத்து அருளியவர். தூய்மையை நல்கும் கங்கையைச் சடையில் வைத்தவர். தம்மைப் போற்றிப் புகழ ஏழு உலகங்களிலும் சீவான்மாக்களை வாழ வைத்தவராவார்
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|