|
||||||||
நான்காம் திருமுறை-75 |
||||||||
4.075.தனித் திருநேரிசை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
726 தொண்டனேன் பட்ட தென்னே
தூயகா விரியி னன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக்
குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி
யீசனை யெம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே
காலத்தைக் கழித்த வாறே.
4.075.1
தூய காவிரியின் தீர்த்தத்தைக் கொண்டு மந்திரங்களை ஓதி அபிடேகம் செய்து குங்குமக் குழம்பைச் சார்த்தி, தலையில் மாலையை அணிவித்து, நீலகண்டனாய் எம் தலைவனாய் இருக்கின்ற ஈசனை கண்குளிர நோக்கி மகிழாமல், காலத்தை வீணாக்கின செயலிலே அடியேன் ஈடுபட்டவாறு வருந்தத்தக்கது.
727 பின்னிலேன் முன்னிலே னான்
பிறப்பறுத் தருள்செய் வானே
என்னிலே னாயி னேனா
னிளங்கதிர்ப் பயலைத் திங்கள்
சின்னிலா வெறிக்குஞ் சென்னிச்
சிவபுரத் தமர ரேறே
நின்னலாற் களைக ணாரே
நீறுசே ரகலத் தானே.
4.075.2
முதலும் முடிவும் இல்லாத அடியேனுடைய பிறவித் துயரைப் போக்கி அருள் செய்பவனே! இளைய கதிர்களை உடைய பிறை தலையிலே சிறிதளவு ஒளிவீசும், தேவர்கள் தலைவனாய்ச் சிவபுரத்து இருப்பவனே! திருநீறணிந்த மார்பினனே! அடியேனுக்கு என்று ஒரு பொருளும் இல்லாதேன் நான். எனக்கு உன்னைத் தவிர பற்றுக்கோடு ஆவார் எவர்?
728 கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க்
காலத்தைக் கழித்துப் போக்கித்
தௌளியே னாகி நின்று
தேடினே னாடிக் கண்டேன்
உள்குவா ருள்கிற் றெல்லா
முடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும்
விலாவிறச் சிரித்திட் டேனே.
4.075.3
வஞ்சனை உடைய யான், போலித் தொண்டனாய், காலத்தைப் பல ஆண்டுகள் வீணாக்கி, பின் மனத்தௌவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன். நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவருடனேயே உள்ளத்தில் இருந்து கொண்டு, நீ அறிகின்றாய் என்பதை அறிந்து நான் வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன்.
729 உடம்பெனு மனைய கத்து
வுள்ளமே தகளியாக
மடம்படு முணர்நெய் யட்டி
யுயிரெனுந் திரிமயக்கி
இடம்படு ஞானத் தீயா
லெரிகொளவிருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை
கழலடி காணலாமே.
4.075.4
உடம்பு என்ற வீட்டிலே மனமே அகலாக, பசு ஞானமான உணர்வே நெய்யாக, உயிரே திரியாக, சிவஞானத் தீயினால் விளக்கை ஏற்றி, அந்த ஞான ஒளியிலே இலயித்திருந்து பார்க்கில் கடம்ப மலர் மாலையை விரும்பி அணியும், முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் காணலாம்.
730 வஞ்சப்பெண் ணரங்கு கோயில்
வாளெயிற் றரவந் துஞ்சா
வஞ்சப்பெண் ணிருந்த சூழல்
வான்றவிழ் மதியந் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன்
வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன்
வஞ்சனே னென்செய் கேனே.
4.075.5
வஞ்சனை உடைய பெண்ணாகிய கங்கை தங்குமிடம் சடைமுடி. அந்தச் சடைமுடியிலே ஒளிபொருந்திய பற்களை உடையபாம்புகள் உறங்காவாய் உள்ளன. அந்தச் செஞ்சடைச் சூழலிலே பிறை கங்கையில் தோய்ந்தவாறு உள்ளது. அந்தக் கங்கையினுடைய வாழ்க்கையை ஆள்பவன் சிவபெருமான். அவனைப் போன்ற வாழ்வை வாழத் தொடங்கி, வஞ்சனை உடைய அடியேன், வஞ்சனை உடைய பெண்ணின் உறக்கத்தைப் போலப் பொய் வாழ்க்கை வாழ்ந்து யாது செய்ய வல்லேன்?
731 உள்குவா ருள்ளத் தானை
யுணர்வெனும்பெருமை யானை
உள்கினே னானுங் காண்பா
னுருகினே னூறியூறி
எள்கினே னெந்தை பெம்மா
னிருதலைமின்னு கின்ற
கொள்ளிமே லெறும்பெ னுள்ள
மெங்ஙனங் கூடுமாறே.
4.075.6
நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவனாய்ச் சிவஞானமாகிய பெருமையை உடையவனாய் உள்ள பெருமானை நானும் காண்பதற்கு நினைத்து, உருகி அன்பு ஊறி, உள்ளம் உருகினேன். எந்தையாகிய பெருமானே! உன்னை இரண்டு பக்கமும் பற்றி எரிகின்ற கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பு போன்ற என் உள்ளம் எங்ஙனம் அடைய இயலும்?
732 மோத்தையைக் கண்ட காக்கை
போலவல்வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா
மயக்கநான்மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச்
செடிகொணோய்வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ண
முணர்வுதாவுலக மூர்த்தீ.
4.075.7
பிணத்தைக் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய தீய வினைகள் அடியேனைச் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன். உலகத்துக்குத் தலைவனே! வெறுக்கத் தக்கதாய், பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய், நோய்க்கு இருப்பிடமாய் அழகிய வடிவில்லாத இந்த உடலை அடியோடு போக்கும்வண்ணம் அடியேனுக்குச் சிவஞானத்தை அருளுவாயாக.
733 அங்கத்தை மண்ணுக் காக்கி
யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப்
பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்தமேனிச் செல்வா
சாதனாணாயேனுன்னை
எங்குற்றாயென்ற போதா
விங்குற்றேனென்கண் டாயே.
4.075.8
மேம்பட்டவனே! சங்கை ஒத்த வெண்மையான மேனியை உடைய செல்வனே! இந்த உடம்பு மண்ணிற்பொருந்துமாறு நெடிது வீழ்ந்து விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்துப் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி, உன்னையே ஞான பாவனையால் மனத்திற் கொண்டுள்ளேன். என் உயிர் போகின்ற அன்று நாயைப் போன்று இழிந்த அடியேன் உன்னை, எங்கிருக்கின்றாய் என்று வினவினால், இங்கிருக்கிறேன் என்று அருள் செய்வாயாக.
734 வெள்ளநீர்ச் சடைய னார்தாம்
வினவுவார்போலவந்தென்
னுள்ளமே புகுந்து நின்றார்க்
குறங்குநான்புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீரென்னக்
கலந்துதான்நோக்கிநக்கு
வெள்ளரோமென்று நின்றார்
விளங்கிளம்பிறைய னாரே.
4.075.9
விளங்குகின்ற இளம்பிறையைச் சூடிக் கங்கையைச் சடையில் ஏற்ற பெருமான், ஏதோ என்னை வினவுபவர் போல வந்து என் உள்ளத்துக்குள்ளே புகுந்து நின்றாராக, உறங்கின நான் விழித்தெழுந்து இங்கு புகுந்த நீர் கள்ளரோ என்று வினவ, என் உள்ளத்தில் கலந்திருந்து, தாம் என்னைப் பார்த்துச் சிரித்து கங்கை ஆகிய வெள்ளத்தை உடையோம் என்று நின்றார்.
735 பெருவிர லிறைதா னூன்றப்
பிறையெயிறிலங்க வங்காந்
தருவரை யனைய தோளா
னரக்கனன்றலறி வீழ்ந்தான
இருவரு மொருவ னாய
வுருவமங்குடையவள்ளல்
திருவடி சுமந்து கொண்ட
காண்கநான் றிரியு மாறே.
4.075.10
பார்வதி பாகனாய் உள்ள உருவத்தை யுடைய வள்ளலாகிய சிவபெருமான், தம் காற் பெருவிரலைச் சிறிது ஊன்றிய அளவில் மலையைப் போன்ற தோள்களை உடைய இராவணன் பிறையைப் போன்ற பற்கள் வெளித்தோன்ற வாயைப் பிளந்து கொண்டு அலறிக் கீழே சாய்ந்தான். சிறிதும் வலிமையில்லாத அடியேன் அம்யைப்பனாகிய அப்பெருமானுடைய திருவடிகளைத் தலையில் சுமந்து கொண்டு எங்கும் திரிகின்றவாற்றைக் காண்க.
திருச்சிற்றம்பலம்
4.075.தனித் திருநேரிசை திருநேரிசை திருச்சிற்றம்பலம்
726 தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியி னன்னீர் கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி இண்டைகொண் டேற நோக்கி யீசனை யெம்பி ரானைக் கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே. 4.075.1
தூய காவிரியின் தீர்த்தத்தைக் கொண்டு மந்திரங்களை ஓதி அபிடேகம் செய்து குங்குமக் குழம்பைச் சார்த்தி, தலையில் மாலையை அணிவித்து, நீலகண்டனாய் எம் தலைவனாய் இருக்கின்ற ஈசனை கண்குளிர நோக்கி மகிழாமல், காலத்தை வீணாக்கின செயலிலே அடியேன் ஈடுபட்டவாறு வருந்தத்தக்கது.
727 பின்னிலேன் முன்னிலே னான் பிறப்பறுத் தருள்செய் வானே என்னிலே னாயி னேனா னிளங்கதிர்ப் பயலைத் திங்கள் சின்னிலா வெறிக்குஞ் சென்னிச் சிவபுரத் தமர ரேறே நின்னலாற் களைக ணாரே நீறுசே ரகலத் தானே. 4.075.2
முதலும் முடிவும் இல்லாத அடியேனுடைய பிறவித் துயரைப் போக்கி அருள் செய்பவனே! இளைய கதிர்களை உடைய பிறை தலையிலே சிறிதளவு ஒளிவீசும், தேவர்கள் தலைவனாய்ச் சிவபுரத்து இருப்பவனே! திருநீறணிந்த மார்பினனே! அடியேனுக்கு என்று ஒரு பொருளும் இல்லாதேன் நான். எனக்கு உன்னைத் தவிர பற்றுக்கோடு ஆவார் எவர்?
728 கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித் தௌளியே னாகி நின்று தேடினே னாடிக் கண்டேன் உள்குவா ருள்கிற் றெல்லா முடனிருந் தறிதி யென்று வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே. 4.075.3
வஞ்சனை உடைய யான், போலித் தொண்டனாய், காலத்தைப் பல ஆண்டுகள் வீணாக்கி, பின் மனத்தௌவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன். நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவருடனேயே உள்ளத்தில் இருந்து கொண்டு, நீ அறிகின்றாய் என்பதை அறிந்து நான் வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன்.
729 உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளியாக மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத் தீயா லெரிகொளவிருந்து நோக்கில் கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே. 4.075.4
உடம்பு என்ற வீட்டிலே மனமே அகலாக, பசு ஞானமான உணர்வே நெய்யாக, உயிரே திரியாக, சிவஞானத் தீயினால் விளக்கை ஏற்றி, அந்த ஞான ஒளியிலே இலயித்திருந்து பார்க்கில் கடம்ப மலர் மாலையை விரும்பி அணியும், முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் காணலாம்.
730 வஞ்சப்பெண் ணரங்கு கோயில் வாளெயிற் றரவந் துஞ்சா வஞ்சப்பெண் ணிருந்த சூழல் வான்றவிழ் மதியந் தோயும் வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன் வாழ்வினை வாழ லுற்று வஞ்சப்பெண் ணுறக்க மானேன் வஞ்சனே னென்செய் கேனே. 4.075.5
வஞ்சனை உடைய பெண்ணாகிய கங்கை தங்குமிடம் சடைமுடி. அந்தச் சடைமுடியிலே ஒளிபொருந்திய பற்களை உடையபாம்புகள் உறங்காவாய் உள்ளன. அந்தச் செஞ்சடைச் சூழலிலே பிறை கங்கையில் தோய்ந்தவாறு உள்ளது. அந்தக் கங்கையினுடைய வாழ்க்கையை ஆள்பவன் சிவபெருமான். அவனைப் போன்ற வாழ்வை வாழத் தொடங்கி, வஞ்சனை உடைய அடியேன், வஞ்சனை உடைய பெண்ணின் உறக்கத்தைப் போலப் பொய் வாழ்க்கை வாழ்ந்து யாது செய்ய வல்லேன்?
731 உள்குவா ருள்ளத் தானை யுணர்வெனும்பெருமை யானை உள்கினே னானுங் காண்பா னுருகினே னூறியூறி எள்கினே னெந்தை பெம்மா னிருதலைமின்னு கின்ற கொள்ளிமே லெறும்பெ னுள்ள மெங்ஙனங் கூடுமாறே. 4.075.6
நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவனாய்ச் சிவஞானமாகிய பெருமையை உடையவனாய் உள்ள பெருமானை நானும் காண்பதற்கு நினைத்து, உருகி அன்பு ஊறி, உள்ளம் உருகினேன். எந்தையாகிய பெருமானே! உன்னை இரண்டு பக்கமும் பற்றி எரிகின்ற கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பு போன்ற என் உள்ளம் எங்ஙனம் அடைய இயலும்?
732 மோத்தையைக் கண்ட காக்கை போலவல்வினைகள் மொய்த்துன் வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான்மயங்கு கின்றேன் சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொணோய்வடிவொன் றில்லா ஊத்தையைக் கழிக்கும் வண்ண முணர்வுதாவுலக மூர்த்தீ. 4.075.7
பிணத்தைக் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய தீய வினைகள் அடியேனைச் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன். உலகத்துக்குத் தலைவனே! வெறுக்கத் தக்கதாய், பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய், நோய்க்கு இருப்பிடமாய் அழகிய வடிவில்லாத இந்த உடலை அடியோடு போக்கும்வண்ணம் அடியேனுக்குச் சிவஞானத்தை அருளுவாயாக.
733 அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச் சங்கொத்தமேனிச் செல்வா சாதனாணாயேனுன்னை எங்குற்றாயென்ற போதா விங்குற்றேனென்கண் டாயே. 4.075.8
மேம்பட்டவனே! சங்கை ஒத்த வெண்மையான மேனியை உடைய செல்வனே! இந்த உடம்பு மண்ணிற்பொருந்துமாறு நெடிது வீழ்ந்து விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்துப் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி, உன்னையே ஞான பாவனையால் மனத்திற் கொண்டுள்ளேன். என் உயிர் போகின்ற அன்று நாயைப் போன்று இழிந்த அடியேன் உன்னை, எங்கிருக்கின்றாய் என்று வினவினால், இங்கிருக்கிறேன் என்று அருள் செய்வாயாக.
734 வெள்ளநீர்ச் சடைய னார்தாம் வினவுவார்போலவந்தென் னுள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான்புடைகள் போந்து கள்ளரோ புகுந்தீரென்னக் கலந்துதான்நோக்கிநக்கு வெள்ளரோமென்று நின்றார் விளங்கிளம்பிறைய னாரே. 4.075.9
விளங்குகின்ற இளம்பிறையைச் சூடிக் கங்கையைச் சடையில் ஏற்ற பெருமான், ஏதோ என்னை வினவுபவர் போல வந்து என் உள்ளத்துக்குள்ளே புகுந்து நின்றாராக, உறங்கின நான் விழித்தெழுந்து இங்கு புகுந்த நீர் கள்ளரோ என்று வினவ, என் உள்ளத்தில் கலந்திருந்து, தாம் என்னைப் பார்த்துச் சிரித்து கங்கை ஆகிய வெள்ளத்தை உடையோம் என்று நின்றார்.
735 பெருவிர லிறைதா னூன்றப் பிறையெயிறிலங்க வங்காந் தருவரை யனைய தோளா னரக்கனன்றலறி வீழ்ந்தான இருவரு மொருவ னாய வுருவமங்குடையவள்ளல் திருவடி சுமந்து கொண்ட காண்கநான் றிரியு மாறே. 4.075.10
பார்வதி பாகனாய் உள்ள உருவத்தை யுடைய வள்ளலாகிய சிவபெருமான், தம் காற் பெருவிரலைச் சிறிது ஊன்றிய அளவில் மலையைப் போன்ற தோள்களை உடைய இராவணன் பிறையைப் போன்ற பற்கள் வெளித்தோன்ற வாயைப் பிளந்து கொண்டு அலறிக் கீழே சாய்ந்தான். சிறிதும் வலிமையில்லாத அடியேன் அம்யைப்பனாகிய அப்பெருமானுடைய திருவடிகளைத் தலையில் சுமந்து கொண்டு எங்கும் திரிகின்றவாற்றைக் காண்க.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|