|
||||||||
நான்காம் திருமுறை-76 |
||||||||
4.076.தனித் திருநேரிசை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
736 மருளவா மனத்த னாகி
மயங்கினேன்மதியி லாதேன்
இருளவா வறுக்கு மெந்தை
யிணையடிநீழலெ ன்னும்
அருளவாய் பெறுத லின்றி
யஞ்சிநானலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே
போதுபோய்ப் புலர்ந்த தன்றே.
4.076.1
அடியேன் மருளுகின்ற மயக்கமும் ஆசையும் உடைய மனத்தை உடையேனாய் அறிவில்லாதேனாய் மயங்கினேன். அஞ்ஞானத்தைப் போக்கும் எம்பெருமானுடைய திருவடி நிழல் என்னும்விரும்பிப் பெறவேண்டிய அருளைப் பெறாமல் பயந்து அஞ்சினேனாக, அத்தகைய அடியேனுக்கு எம் பெருமான் மெய்ப் பொருளிடத்து ஆசையை நல்கிய அளவில் அஞ்ஞான இருட்பொழுது நீங்கி ஞானஒளிபரவும் பகற்பொழுது தோன்றிவிட்டது.
737 மெய்ம்மையா முழவைச் செய்து
விருப்பெனும்வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப்
பொறையெனு நீரைப் பாய்ச்சித்
தம்மையு நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையு ணிற்ப ராகிற்
சிவகதி விளையு மன்றே.
4.076.2
சரியை முதலிய உண்மை வழிகளாகிய உழுதலைச் செய்து, விருப்பம் என்னும் விதையை விதைத்து, பொய்ம்மை ஆகிய களைகளை நீக்கிப் பொறுமை என்னும் நீரைப் பாய்ச்சிச் சிவரூபத்தால் ஆன்மதரிசனமும் சிவ தரிசனத்தால் ஆன்மசித்தியும் பெற்று, திருநீறு சிவவேடங்கள் முதலிய தகுதிகளாகிய வேலியை அமைத்துச் சிவத்தியானமாகிய செந்நெறியில் நிற்பார்களானால் சிவகதி என்ற பயிர் விளையும்.
738 எம்பிரா னென்ற தேகொண்
டென்னுளே புகுந்துநின்றிங்
கெம்பிரா னாட்ட வாடி
யென்னுளே யுழிதர் வேனை
எம்பிரா னென்னைப் பின்னைத்
தன்னுளேசுரக்கு மென்றால்
எம்பிரா னென்னி னல்லா
லென்செய்கேனேழை யேனே.
4.076.3
எம்பெருமான்! என்று அடியேன் அழைத்த ஒன்றனையே அடியேனுடைய தகுதியாகக் கொண்டு என் உள்ளத்தில் புகுந்து நின்று எம்பெருமான் செயற்படுத்தச் செயற்பட்டு, என்னைச் செயற்படுத்தும் தலைவனை எனக்குள்ளேயே தேடித் திரிகின்ற, அடியேன் தன்னை இன்னான் என்று கண்டு கொண்ட பிறகு எம் பெருமான் என்னைத் தன்னுள்ளே மறையச் செய்வான் என்றால் எல்லாம் அவன் செயல் என்று இறைபணி வழுவாது நிற்றலேயன்றி அறிவற்ற அடியேன் வேறு யாது செயற்பாலேன்?
739 காயமே கோயி லாகக்
கடிமன மடிமை யாக
வாய்மையே தூய்மை யாக
மனமணி யிலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா
நிறையநீ ரமைய வாட்டிப்
பூசனை யீச னார்க்குப்
போற்றவிக் காட்டி னோமே.
4.076.4
இந்த உடம்பையே கோயிலாகவும், உலகியலை நீக்கிய மனம் அடிமையாகவும், தூய்மை உடைய மனமே பரம்பொருள் தங்கும் கருவறையாகவும் எம்பெருமான் அருட்சத்தியான மனோன் மணியே அவன் இலிங்க உருவமாகவும் அமைய, அடியேனுடைய அன்பே நெய்யும் பாலுமாக அவ்விலிங்கமூர்த்தியை மனம் நிறைவு பெற அபிடேகித்துப் பூசிக்கும் அப்பெருமானுக்கு எங்கள் வணக்கங்களையே நிவேதனப் பொருள்களாகப் படைத்தோம்.
740 வஞ்சகப் புலைய னேனை
வழியறத் தொண்டிற்பூட்டி
அஞ்சலென் றாண்டு கொண்டா
யதுவுநின்பெருமை யன்றே
நெஞ்சகங் கனிய மாட்டே
னின்னையுள் வைக்க மாட்டேன்
நஞ்சிடங் கொண்ட கண்டா
வென்னென நன்மை தானே.
4.076.5
நீலகண்டனே! வஞ்சனையான செயல்களில் ஈடுபட்ட கீழ்மகனாகிய அடியேனைத் தீநெறி கெட நன்னெறியில் ஈடு படுத்தி அஞ்சேல் என்று அடிமை கொண்டாய். அதுவும் உன் பெருமையை வெளிப்படுத்தும் செயலாகும். அடியேனோ உள்ளம் உருகி உன்னை என் உள்ளத்தில் நிலையாக வைக்கமாட்டாதேனாய் உள்ளேன். எனது நன்மை அதாவது நான் பெற்ற நன்மைதான் யாதோ?
741 நாயினுங் கடைப்பட் டேனை
நன்னெறி காட்டி யாண்டாய்
ஆயிர மரவ மார்த்த
வமுதனே யமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே
நிலாவினாய்நிலாவி நிற்க
நோயவை சாரு மாகி
னோக்கிநீயருள்செய் வாயே.
4.076.6
பல பாம்புகளை அணிகலன்களாக அணிந்த, அடியேனுக்கு அமுதம் போன்றவனே! நாயினும் கீழ்ப்பட்ட அடியேனை நல்ல நெறியைக் காண்பித்து அடிமையாகக் கொண்டுள்ளாய். நீயும் அடியேன் உள்ளத்தில் அமுதத்தைப் போல வந்து தங்கிவிட்டாய். நீ அப்படித் தங்கியிருக்கவும் அடியேனுக்குத் துயரங்கள் ஏற்படுமாயின் அடியேனுடைய துயர நிலையை நோக்கி, அது நீங்குமாறு அருள் செய்வாயாக.
742 விள்ளத்தா னொன்று மாட்டேன்
விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை
வாய்மடுத் துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனு
முயிர்ப்புளே வருதி யேனும்
கள்ளத்தே நிற்றி யம்மா
வெங்ஙனங் காணு மாறே.
4.076.7
விருப்பம் என்னும் பற்றுள்ளத்தாலே பாத்திரத்தில் இருக்கும் தேனைப் பருகுவது போல உன்னை வாயிற்புகுத்தி உண்ண இயலாதபடி நீ என் உள்ளத்தினுள்ளே இருக்கின்றாய் என்றாலும் என் மூச்சுக் காற்றினுள்ளே கலந்திருக்கின்றாய் என்றாலும் கண்களுக்குப் புலனாகாதபடி மறைந்திருக்கின்றாய். ஆதலின் உன்னைக்காணும் வழி இன்னது என்று வாய்விட்டுச் சொல்லச் சிறிதும் வல்லேன் அல்லேன்.
743 ஆசைவன் பாச மெய்தி
யங்குற்றே னிங்குற் றேனாய்
ஊசலாட் டுண்டு வாளா
வுழந்துநா னுழிதராமே
தேசனே தேச மூர்த்தீ
திருமறைக் காடு மேய
ஈசனே யுன்றன் பாத
மேத்துமா றருளெம் மானே.
4.076.8
ஆசை என்ற கயிற்றால் கட்டப்பட்டு இயக்கப் படுதலின் மேல் உலக ஆசையால் ஒரு பக்கமும், இவ்வுலக இன்ப நுகர்ச்சி விருப்பினால் வேறொரு புறமுமாகச் சலனப்பட்டு ஒன்றும் உறுதியாகச் செய்ய இயலாதேனாய் வருந்தி நான் சுழலாதபடி, பேரொளி உடையவனும், எல்லா உலகிற்கும் தலைவனும் திருமறைக் காட்டிக் விரும்பி உறைந்து உயிர்களை ஆள்பவனும் ஆகிய உன் திருவடிகளைப் போற்றும் செயலிலேயே அடியேன் ஈடுபடுமாறு அருள் செய்வாயாக.
744 நிறைவிலே னேச மில்லே
னினைவிலேன் வினையின் பாச
மறைவிலே புறப்பட் டேறும்
வகையெனக் கருளெ னெம்மான்
சிறையிலேன் செய்வ தென்னே
திருவடி பரவி யேத்தக்
குறைவிலேன் குற்றந் தீராய்
கொன்றைசேர் சடையி னானே.
4.076.9
கொன்றைப்பூவினைத் தரித்த சடையை உடையவனே! எதிலும் மனநிறைவு இல்லாதேனாய், யாரிடத்தும் உண்மையான அன்பு இல்லேனாய், உன்னை விருப்புற்றுநினைத்தல் இல்லேனாய், இருவினையால் கட்டப்பட்ட சூழலிலே அகப்பட்டுத் தடுமாறும் அடியேன் அதனை விடுத்துப் புறப்பட்டு வெளியேறும் நிலையை என் தலைவனாகிய நீ எனக்கு அருளுவாயாக. இவ்வுடலாகிய இருப்பிடத்தில் இருக்கும் அடியேன் யாது செயற்பாலேன்? உன் திருவடிகளை முன் நின்று போற்றி வழிபடும் திறத்தில் குறைபாடு ஏதும் இல்லேனாம் வகையில் என் குற்றங்களை எல்லாம் போக்கி அருளுவாயாக.
745 நடுவிலாக் காலன் வந்து
நணுகும்போ தறிய வொண்ணா
அடுவன வஞ்சு பூத
மவைதமக் காற்ற லாகேன்
படுவன பலவுங் குற்றம்
பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ
கிளரொளிச் சடையி னீரே.
4.076.10
செந்நிற ஒளி வீசும் சடையை உடைய பெருமானே! நீதி உணர்வு இல்லாத கூற்றுவன் வந்து நெருங்கும்போது உம்மை அறிவதற்கு உடன்படாது என்னைவருத்தும் ஐம்பொறிகளும் என்னை வருத்துவதனைப் பொறுக்க இயலாதேனாய் உயிருக்குத் துணையாக உதவாத இந்த மனித வாழ்விலே பல குற்றங்களும் நிகழ்கின்றமையின் இதனை இகழ்ந்து இப்பிறவிப் பிணியை அடியோடு அழித்தொழிக்க வேண்டி உம் அருளைவேண்டுகின்றேன்.
திருச்சிற்றம்பலம்
4.076.தனித் திருநேரிசை திருநேரிசை திருச்சிற்றம்பலம்
736 மருளவா மனத்த னாகி மயங்கினேன்மதியி லாதேன் இருளவா வறுக்கு மெந்தை யிணையடிநீழலெ ன்னும் அருளவாய் பெறுத லின்றி யஞ்சிநானலமந் தேற்குப் பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே. 4.076.1
அடியேன் மருளுகின்ற மயக்கமும் ஆசையும் உடைய மனத்தை உடையேனாய் அறிவில்லாதேனாய் மயங்கினேன். அஞ்ஞானத்தைப் போக்கும் எம்பெருமானுடைய திருவடி நிழல் என்னும்விரும்பிப் பெறவேண்டிய அருளைப் பெறாமல் பயந்து அஞ்சினேனாக, அத்தகைய அடியேனுக்கு எம் பெருமான் மெய்ப் பொருளிடத்து ஆசையை நல்கிய அளவில் அஞ்ஞான இருட்பொழுது நீங்கி ஞானஒளிபரவும் பகற்பொழுது தோன்றிவிட்டது.
737 மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும்வித்தை வித்திப் பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித் தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச் செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே. 4.076.2
சரியை முதலிய உண்மை வழிகளாகிய உழுதலைச் செய்து, விருப்பம் என்னும் விதையை விதைத்து, பொய்ம்மை ஆகிய களைகளை நீக்கிப் பொறுமை என்னும் நீரைப் பாய்ச்சிச் சிவரூபத்தால் ஆன்மதரிசனமும் சிவ தரிசனத்தால் ஆன்மசித்தியும் பெற்று, திருநீறு சிவவேடங்கள் முதலிய தகுதிகளாகிய வேலியை அமைத்துச் சிவத்தியானமாகிய செந்நெறியில் நிற்பார்களானால் சிவகதி என்ற பயிர் விளையும்.
738 எம்பிரா னென்ற தேகொண் டென்னுளே புகுந்துநின்றிங் கெம்பிரா னாட்ட வாடி யென்னுளே யுழிதர் வேனை எம்பிரா னென்னைப் பின்னைத் தன்னுளேசுரக்கு மென்றால் எம்பிரா னென்னி னல்லா லென்செய்கேனேழை யேனே. 4.076.3
எம்பெருமான்! என்று அடியேன் அழைத்த ஒன்றனையே அடியேனுடைய தகுதியாகக் கொண்டு என் உள்ளத்தில் புகுந்து நின்று எம்பெருமான் செயற்படுத்தச் செயற்பட்டு, என்னைச் செயற்படுத்தும் தலைவனை எனக்குள்ளேயே தேடித் திரிகின்ற, அடியேன் தன்னை இன்னான் என்று கண்டு கொண்ட பிறகு எம் பெருமான் என்னைத் தன்னுள்ளே மறையச் செய்வான் என்றால் எல்லாம் அவன் செயல் என்று இறைபணி வழுவாது நிற்றலேயன்றி அறிவற்ற அடியேன் வேறு யாது செயற்பாலேன்?
739 காயமே கோயி லாகக் கடிமன மடிமை யாக வாய்மையே தூய்மை யாக மனமணி யிலிங்க மாக நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய வாட்டிப் பூசனை யீச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே. 4.076.4
இந்த உடம்பையே கோயிலாகவும், உலகியலை நீக்கிய மனம் அடிமையாகவும், தூய்மை உடைய மனமே பரம்பொருள் தங்கும் கருவறையாகவும் எம்பெருமான் அருட்சத்தியான மனோன் மணியே அவன் இலிங்க உருவமாகவும் அமைய, அடியேனுடைய அன்பே நெய்யும் பாலுமாக அவ்விலிங்கமூர்த்தியை மனம் நிறைவு பெற அபிடேகித்துப் பூசிக்கும் அப்பெருமானுக்கு எங்கள் வணக்கங்களையே நிவேதனப் பொருள்களாகப் படைத்தோம்.
740 வஞ்சகப் புலைய னேனை வழியறத் தொண்டிற்பூட்டி அஞ்சலென் றாண்டு கொண்டா யதுவுநின்பெருமை யன்றே நெஞ்சகங் கனிய மாட்டே னின்னையுள் வைக்க மாட்டேன் நஞ்சிடங் கொண்ட கண்டா வென்னென நன்மை தானே. 4.076.5
நீலகண்டனே! வஞ்சனையான செயல்களில் ஈடுபட்ட கீழ்மகனாகிய அடியேனைத் தீநெறி கெட நன்னெறியில் ஈடு படுத்தி அஞ்சேல் என்று அடிமை கொண்டாய். அதுவும் உன் பெருமையை வெளிப்படுத்தும் செயலாகும். அடியேனோ உள்ளம் உருகி உன்னை என் உள்ளத்தில் நிலையாக வைக்கமாட்டாதேனாய் உள்ளேன். எனது நன்மை அதாவது நான் பெற்ற நன்மைதான் யாதோ?
741 நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி யாண்டாய் ஆயிர மரவ மார்த்த வமுதனே யமுத மொத்து நீயுமென் நெஞ்சி னுள்ளே நிலாவினாய்நிலாவி நிற்க நோயவை சாரு மாகி னோக்கிநீயருள்செய் வாயே. 4.076.6
பல பாம்புகளை அணிகலன்களாக அணிந்த, அடியேனுக்கு அமுதம் போன்றவனே! நாயினும் கீழ்ப்பட்ட அடியேனை நல்ல நெறியைக் காண்பித்து அடிமையாகக் கொண்டுள்ளாய். நீயும் அடியேன் உள்ளத்தில் அமுதத்தைப் போல வந்து தங்கிவிட்டாய். நீ அப்படித் தங்கியிருக்கவும் அடியேனுக்குத் துயரங்கள் ஏற்படுமாயின் அடியேனுடைய துயர நிலையை நோக்கி, அது நீங்குமாறு அருள் செய்வாயாக.
742 விள்ளத்தா னொன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கை யாலே வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத் துண்டி டாமே உள்ளத்தே நிற்றி யேனு முயிர்ப்புளே வருதி யேனும் கள்ளத்தே நிற்றி யம்மா வெங்ஙனங் காணு மாறே. 4.076.7
விருப்பம் என்னும் பற்றுள்ளத்தாலே பாத்திரத்தில் இருக்கும் தேனைப் பருகுவது போல உன்னை வாயிற்புகுத்தி உண்ண இயலாதபடி நீ என் உள்ளத்தினுள்ளே இருக்கின்றாய் என்றாலும் என் மூச்சுக் காற்றினுள்ளே கலந்திருக்கின்றாய் என்றாலும் கண்களுக்குப் புலனாகாதபடி மறைந்திருக்கின்றாய். ஆதலின் உன்னைக்காணும் வழி இன்னது என்று வாய்விட்டுச் சொல்லச் சிறிதும் வல்லேன் அல்லேன்.
743 ஆசைவன் பாச மெய்தி யங்குற்றே னிங்குற் றேனாய் ஊசலாட் டுண்டு வாளா வுழந்துநா னுழிதராமே தேசனே தேச மூர்த்தீ திருமறைக் காடு மேய ஈசனே யுன்றன் பாத மேத்துமா றருளெம் மானே. 4.076.8
ஆசை என்ற கயிற்றால் கட்டப்பட்டு இயக்கப் படுதலின் மேல் உலக ஆசையால் ஒரு பக்கமும், இவ்வுலக இன்ப நுகர்ச்சி விருப்பினால் வேறொரு புறமுமாகச் சலனப்பட்டு ஒன்றும் உறுதியாகச் செய்ய இயலாதேனாய் வருந்தி நான் சுழலாதபடி, பேரொளி உடையவனும், எல்லா உலகிற்கும் தலைவனும் திருமறைக் காட்டிக் விரும்பி உறைந்து உயிர்களை ஆள்பவனும் ஆகிய உன் திருவடிகளைப் போற்றும் செயலிலேயே அடியேன் ஈடுபடுமாறு அருள் செய்வாயாக.
744 நிறைவிலே னேச மில்லே னினைவிலேன் வினையின் பாச மறைவிலே புறப்பட் டேறும் வகையெனக் கருளெ னெம்மான் சிறையிலேன் செய்வ தென்னே திருவடி பரவி யேத்தக் குறைவிலேன் குற்றந் தீராய் கொன்றைசேர் சடையி னானே. 4.076.9
கொன்றைப்பூவினைத் தரித்த சடையை உடையவனே! எதிலும் மனநிறைவு இல்லாதேனாய், யாரிடத்தும் உண்மையான அன்பு இல்லேனாய், உன்னை விருப்புற்றுநினைத்தல் இல்லேனாய், இருவினையால் கட்டப்பட்ட சூழலிலே அகப்பட்டுத் தடுமாறும் அடியேன் அதனை விடுத்துப் புறப்பட்டு வெளியேறும் நிலையை என் தலைவனாகிய நீ எனக்கு அருளுவாயாக. இவ்வுடலாகிய இருப்பிடத்தில் இருக்கும் அடியேன் யாது செயற்பாலேன்? உன் திருவடிகளை முன் நின்று போற்றி வழிபடும் திறத்தில் குறைபாடு ஏதும் இல்லேனாம் வகையில் என் குற்றங்களை எல்லாம் போக்கி அருளுவாயாக.
745 நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய வொண்ணா அடுவன வஞ்சு பூத மவைதமக் காற்ற லாகேன் படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை கெடுவதிப் பிறவி சீசீ கிளரொளிச் சடையி னீரே. 4.076.10
செந்நிற ஒளி வீசும் சடையை உடைய பெருமானே! நீதி உணர்வு இல்லாத கூற்றுவன் வந்து நெருங்கும்போது உம்மை அறிவதற்கு உடன்படாது என்னைவருத்தும் ஐம்பொறிகளும் என்னை வருத்துவதனைப் பொறுக்க இயலாதேனாய் உயிருக்குத் துணையாக உதவாத இந்த மனித வாழ்விலே பல குற்றங்களும் நிகழ்கின்றமையின் இதனை இகழ்ந்து இப்பிறவிப் பிணியை அடியோடு அழித்தொழிக்க வேண்டி உம் அருளைவேண்டுகின்றேன்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|