LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-78

 

4.078.குறைந்த திருநேரிசை 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
754 வென்றிலேன் புலன்க ளைந்தும்
வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலே னாத லாலே
செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றே
னீசனே னீச னேயோ
இன்றுளே னாளை யில்லே
னென்செய்வான் றோன்றி னேனே.
4.078.1
எல்லோரையும் ஆளும் பெருமானே! அடியேன் ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன். வென்ற சான்றோர்கள் உடைய சூழலிலுஞ் சென்றேன் அல்லேன், ஆதலால் நேர்மையான வழிக்கு அப்பாற்பட்டவனாய், உள்ளூர வருந்துகின்றேன். இன்று உயிருடன் இருக்கும் நான் நாளை உயிருடன் இருப்பேன் என்று உறுதி இல்லை. அங்ஙனம் ஒருபயனும் எய்தாமையின் எதற்காகத் தோன்றினேன் நான்
755 கற்றிலேன் கலைகள் ஞானங்
கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே
யுணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கட்
பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளே னிறைவ னேநா
னென்செய்வான் றோன்றி னேனே.
4.078.2
ஞானக் கலைகளைக் கல்லாத நான் அவற்றைக் கற்றஞானிகளோடு தொடர்பு கொள்ளாததனால் நல்லுணர்வுக்கு அப்பாற்பட்டு விட்டேன். அத்தகைய நல்லறிவு இல்லாத நான் பெரிய நீண்ட கண்களை உடைய மகளிருக்கும் பொலிவு இல்லாதவனாய் உள்ளேன். இறைவனே! நான் எதற்காக இருக்கிறேன்? இம்மை மறுமை வீடுகளுள் எதனையும் தேட இயலாதவனாயினேன். எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
756 மாட்டினேன் மனத்தை முன்னே
மறுமையை யுணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே
முதல்வனே வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று
பற்றதாம் பாவந் தன்னை
ஈட்டினேன் களைய மாட்டே
னென்செய்வான் தோன்றி னேனே.
4.078.3
என் மனத்தை இம்மையில் செலுத்தி, மறுமையை உணராது, வாழ்வின் தொடக்கத்திலேயே இறைவனை வணங்காது, பெருமை இல்லாத நாய் போல நின்று, உலகப் பற்றாகிய பாவத்தைத் தேடி, அதனை நீக்காதவனாய் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
757 கரைக்கடந் தோத மேறுங்
கடல்விட முண்ட கண்டன்
உரைக்கடந் தோது நீர்மை
யுணர்ந்திலே னாத லாலே
அரைக்கிடந் தசையு நாக
மசைப்பனே யின்ப வாழ்க்கைக்
கிரைக்கடைந் துருகு கின்றே
னென்செய்வான் றோன்றி னேனே.
4.078.4
கரையைக் கடந்து வெள்ளம் பெருகும் கடலில் தோன்றிய விடத்தை உண்ட கழுத்தை உடைய சிவபெருமான் சொல்லையும் கடந்த பெருமையை உடையவன். ஆதலின் அவனைப் பற்றிப்பேசும் தன்மை உணராதேன். ஆதலின் இடையில் பாம்பினை இறுகக் கட்டிய அப் பெருமானை நோக்கி, சிற்றின்பம் விளைக்கும் உலக வாழ்விற்கும், பசியைப்போக்கும் உணவிற்கும் அடையத் தகாதாரை அடைந்து நெஞ்சு உருகிப் பொழுது போக்கும் நான் எதற்காகப் பிறப்பெடுத்தேன் என்று கூறி அவன் அருளை வேண்டுகின்றேன்.
758 செம்மைவெண் ணீறு பூசுஞ்
சிவனவன் றேவதேவன்
வெம்மைநோய் வினைகடீர்க்கும்
விகிர்தனுக் கார்வ மெய்தி
அம்மைநின் றடிமை செய்யா
வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
கிம்மைநின் றுருகு கின்றே
னென்செய்வான் றோன்றி னேனே.
4.078.5
செம்மையான மேனியில், திருநீற்றைப் பூசும் சிவபெருமானாகிய, கொடிய வினைகளைப் போக்கும் தேவ தேவன் ஆகிய அந்த விகிர்தன்பால் விருப்புற்று முற்பிறப்பில் அடிமை செய்யாத பயனற்ற வாழ்க்கைச் செயலை நினைத்து, இப்பிறப்பில் உருகுகின்றேன். எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
759 பேச்சொடு பேச்சுக் கெல்லாம்
பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலே னாத லாலே
கொடுமையை விடுமா றோரேன்
நாச்சொலி நாளு மூர்த்தி
நன்மையை யுணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே
யென்செய்வான் றோன்றி னேனே.
4.078.6
பேசும்போதெல்லாம் பிறரைப் புறம் கூறும் செயலை நீங்காதேனாய், கொடுமையை நீக்குமாறு அறியேனாய், சிவபெருமானுடைய பெருமையை நாவினாலே சொல்லி அவன் செய்யும் நன்மையை உணரமாட்டேனாய், இகழ்ச்சிக்கு இடமாகிய இந்த உடம்பில் இன்னும் இருந்து கொண்டுள்ளேன். யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான்?
760 தேசனைத் தேச மாகுந்
திருமாலோர் பங்கன் றன்னைப்
பூசனைப் புனிதன் றன்னைப்
புணரும்புண் டரிகத் தானை
நேசனை நெருப்பன் றன்னை
நிவஞ்சகத் தகன்ற செம்மை
ஈசனை யறிய மாட்டே
னென்செய்வான் றோன்றி னேனே.
4.078.7
ஒளிஉடையவனாய், உலகங்கள் புகழும் திருமாலை ஒரு பாகமாக உடையவனாய், எல்லாராலும் வணங்கப்படுபவனாய், தூயவனாய், அடியாருடைய உள்ளத் தாமரையில் இருப்பவனாய், அன்பனாய், தீயைஏந்தியவனாய், செம்பொருளாய் உள்ள பெருமானை, அறியமுடியாதவனாகின்றேன். எதற்காகப் பிறந்தேன் நான்?
761 விளைக்கின்ற வினையை நோக்கி
வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக
முயல்கிலே னியல வெள்ளம்
திளைக்கின்ற முடியி னான்
தன்றிருவடி பரவ மாட்டா
திளைக்கின்றே னிருமி யூன்றி
யென்செய்வான் றோன்றி னேனே.
4.078.8
இன்ப துன்பப் பயன்களை நல்கும் வினையை நினைத்து மயிர் வெளுத்த பிறகும் முளைத்து வளருகின்ற வினையைப் போக்குதற்கு முயலாது, கங்கை தங்கிய சடையை உடைய சிவபெருமானுடைய திருவடிகளை முன்நின்று வழிபட மாட்டாமல், வீணாக இருமிக்கொண்டு, தடியை ஊன்றி இளைக்கும் நிலையினன் ஆகின்றேன். எதற்காகப் பிறப் பெடுத்தேன் நான்?
762 விளைவறி விலாமை யாலே
வேதனைக் குழியி லாழ்ந்து
களைகணு மில்லே னெந்தாய்
காமரங் கற்று மில்லேன்
தளையவிழ் கோதை நல்லார்
தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லே னெந்தா
யென்செய்வான் றோன்றி னேனே.
4.078.9
எந்தாய்! பின் விளையும் பயனை அறியாமையால் வேதனையாகிய குழியிலே விழுந்து, ஆழ்ந்து பற்றுக்கோடு இல்லாதுஇருக்கின்றேன். உன்னை வசீகரிக்கும் இசையைக் கற்றேனும் அல்லேன். மாலையை அணிந்த பெண்களோடு இன்பமாக வாழ இளையேனும் அல்லேன். அடியேன் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
763 வெட்டன வுடைய னாகி
வீரத்தான்மலையெ டுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச்
சுவைபடக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய
வாதியை யோதி நாளும்
எட்டனை யெட்ட மாட்டே
னென்செய்வான் றோன்றி னேனே.
4.078.10
கடும் போக்கு உடையனாகி, தன் வீரத்தைக் காட்டக் கயிலை மலையைப் பெயர்க்கத் தொடங்கிய தீயவனாகிய இராவணனின்செருக்கை அடக்கி அவன் வாயினின்றும் சுவையாகச் சாம வேதகீதம் கேட்ட அட்டமூர்த்தியாகிய சிவபெருமானுடைய பெருமையைச் சொல்லி அவனை எள்ளளவும் அணுகமாட்டேன். எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
திருச்சிற்றம்பலம்

 

4.078.குறைந்த திருநேரிசை 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

 

754 வென்றிலேன் புலன்க ளைந்தும்

வென்றவர் வளாகந் தன்னுள்

சென்றிலே னாத லாலே

செந்நெறி யதற்குஞ் சேயேன்

நின்றுளே துளும்பு கின்றே

னீசனே னீச னேயோ

இன்றுளே னாளை யில்லே

னென்செய்வான் றோன்றி னேனே.

4.078.1

 

  எல்லோரையும் ஆளும் பெருமானே! அடியேன் ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன். வென்ற சான்றோர்கள் உடைய சூழலிலுஞ் சென்றேன் அல்லேன், ஆதலால் நேர்மையான வழிக்கு அப்பாற்பட்டவனாய், உள்ளூர வருந்துகின்றேன். இன்று உயிருடன் இருக்கும் நான் நாளை உயிருடன் இருப்பேன் என்று உறுதி இல்லை. அங்ஙனம் ஒருபயனும் எய்தாமையின் எதற்காகத் தோன்றினேன் நான்

 

 

755 கற்றிலேன் கலைகள் ஞானங்

கற்றவர் தங்க ளோடும்

உற்றிலே னாத லாலே

யுணர்வுக்குஞ் சேய னானேன்

பெற்றிலேன் பெருந்த டங்கட்

பேதைமார் தமக்கும் பொல்லேன்

எற்றுளே னிறைவ னேநா

னென்செய்வான் றோன்றி னேனே.

4.078.2

 

  ஞானக் கலைகளைக் கல்லாத நான் அவற்றைக் கற்றஞானிகளோடு தொடர்பு கொள்ளாததனால் நல்லுணர்வுக்கு அப்பாற்பட்டு விட்டேன். அத்தகைய நல்லறிவு இல்லாத நான் பெரிய நீண்ட கண்களை உடைய மகளிருக்கும் பொலிவு இல்லாதவனாய் உள்ளேன். இறைவனே! நான் எதற்காக இருக்கிறேன்? இம்மை மறுமை வீடுகளுள் எதனையும் தேட இயலாதவனாயினேன். எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?

 

 

756 மாட்டினேன் மனத்தை முன்னே

மறுமையை யுணர மாட்டேன்

மூட்டிநான் முன்னை நாளே

முதல்வனே வணங்க மாட்டேன்

பாட்டினாய் போல நின்று

பற்றதாம் பாவந் தன்னை

ஈட்டினேன் களைய மாட்டே

னென்செய்வான் தோன்றி னேனே.

4.078.3

 

  என் மனத்தை இம்மையில் செலுத்தி, மறுமையை உணராது, வாழ்வின் தொடக்கத்திலேயே இறைவனை வணங்காது, பெருமை இல்லாத நாய் போல நின்று, உலகப் பற்றாகிய பாவத்தைத் தேடி, அதனை நீக்காதவனாய் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?

 

 

757 கரைக்கடந் தோத மேறுங்

கடல்விட முண்ட கண்டன்

உரைக்கடந் தோது நீர்மை

யுணர்ந்திலே னாத லாலே

அரைக்கிடந் தசையு நாக

மசைப்பனே யின்ப வாழ்க்கைக்

கிரைக்கடைந் துருகு கின்றே

னென்செய்வான் றோன்றி னேனே.

4.078.4

 

  கரையைக் கடந்து வெள்ளம் பெருகும் கடலில் தோன்றிய விடத்தை உண்ட கழுத்தை உடைய சிவபெருமான் சொல்லையும் கடந்த பெருமையை உடையவன். ஆதலின் அவனைப் பற்றிப்பேசும் தன்மை உணராதேன். ஆதலின் இடையில் பாம்பினை இறுகக் கட்டிய அப் பெருமானை நோக்கி, சிற்றின்பம் விளைக்கும் உலக வாழ்விற்கும், பசியைப்போக்கும் உணவிற்கும் அடையத் தகாதாரை அடைந்து நெஞ்சு உருகிப் பொழுது போக்கும் நான் எதற்காகப் பிறப்பெடுத்தேன் என்று கூறி அவன் அருளை வேண்டுகின்றேன்.

 

 

758 செம்மைவெண் ணீறு பூசுஞ்

சிவனவன் றேவதேவன்

வெம்மைநோய் வினைகடீர்க்கும்

விகிர்தனுக் கார்வ மெய்தி

அம்மைநின் றடிமை செய்யா

வடிவிலா முடிவில் வாழ்க்கைக்

கிம்மைநின் றுருகு கின்றே

னென்செய்வான் றோன்றி னேனே.

4.078.5

 

  செம்மையான மேனியில், திருநீற்றைப் பூசும் சிவபெருமானாகிய, கொடிய வினைகளைப் போக்கும் தேவ தேவன் ஆகிய அந்த விகிர்தன்பால் விருப்புற்று முற்பிறப்பில் அடிமை செய்யாத பயனற்ற வாழ்க்கைச் செயலை நினைத்து, இப்பிறப்பில் உருகுகின்றேன். எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?

 

 

759 பேச்சொடு பேச்சுக் கெல்லாம்

பிறர்தமைப் புறமே பேசக்

கூச்சிலே னாத லாலே

கொடுமையை விடுமா றோரேன்

நாச்சொலி நாளு மூர்த்தி

நன்மையை யுணர மாட்டேன்

ஏச்சுளே நின்று மெய்யே

யென்செய்வான் றோன்றி னேனே.

4.078.6

 

  பேசும்போதெல்லாம் பிறரைப் புறம் கூறும் செயலை நீங்காதேனாய், கொடுமையை நீக்குமாறு அறியேனாய், சிவபெருமானுடைய பெருமையை நாவினாலே சொல்லி அவன் செய்யும் நன்மையை உணரமாட்டேனாய், இகழ்ச்சிக்கு இடமாகிய இந்த உடம்பில் இன்னும் இருந்து கொண்டுள்ளேன். யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான்?

 

 

760 தேசனைத் தேச மாகுந்

திருமாலோர் பங்கன் றன்னைப்

பூசனைப் புனிதன் றன்னைப்

புணரும்புண் டரிகத் தானை

நேசனை நெருப்பன் றன்னை

நிவஞ்சகத் தகன்ற செம்மை

ஈசனை யறிய மாட்டே

னென்செய்வான் றோன்றி னேனே.

4.078.7

 

  ஒளிஉடையவனாய், உலகங்கள் புகழும் திருமாலை ஒரு பாகமாக உடையவனாய், எல்லாராலும் வணங்கப்படுபவனாய், தூயவனாய், அடியாருடைய உள்ளத் தாமரையில் இருப்பவனாய், அன்பனாய், தீயைஏந்தியவனாய், செம்பொருளாய் உள்ள பெருமானை, அறியமுடியாதவனாகின்றேன். எதற்காகப் பிறந்தேன் நான்?

 

 

761 விளைக்கின்ற வினையை நோக்கி

வெண்மயிர் விரவி மேலும்

முளைக்கின்ற வினையைப் போக

முயல்கிலே னியல வெள்ளம்

திளைக்கின்ற முடியி னான்

தன்றிருவடி பரவ மாட்டா

திளைக்கின்றே னிருமி யூன்றி

யென்செய்வான் றோன்றி னேனே.

4.078.8

 

  இன்ப துன்பப் பயன்களை நல்கும் வினையை நினைத்து மயிர் வெளுத்த பிறகும் முளைத்து வளருகின்ற வினையைப் போக்குதற்கு முயலாது, கங்கை தங்கிய சடையை உடைய சிவபெருமானுடைய திருவடிகளை முன்நின்று வழிபட மாட்டாமல், வீணாக இருமிக்கொண்டு, தடியை ஊன்றி இளைக்கும் நிலையினன் ஆகின்றேன். எதற்காகப் பிறப் பெடுத்தேன் நான்?

 

 

762 விளைவறி விலாமை யாலே

வேதனைக் குழியி லாழ்ந்து

களைகணு மில்லே னெந்தாய்

காமரங் கற்று மில்லேன்

தளையவிழ் கோதை நல்லார்

தங்களோ டின்ப மெய்த

இளையனு மல்லே னெந்தா

யென்செய்வான் றோன்றி னேனே.

4.078.9

 

  எந்தாய்! பின் விளையும் பயனை அறியாமையால் வேதனையாகிய குழியிலே விழுந்து, ஆழ்ந்து பற்றுக்கோடு இல்லாதுஇருக்கின்றேன். உன்னை வசீகரிக்கும் இசையைக் கற்றேனும் அல்லேன். மாலையை அணிந்த பெண்களோடு இன்பமாக வாழ இளையேனும் அல்லேன். அடியேன் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?

 

 

763 வெட்டன வுடைய னாகி

வீரத்தான்மலையெ டுத்த

துட்டனைத் துட்டுத் தீர்த்துச்

சுவைபடக் கீதங் கேட்ட

அட்டமா மூர்த்தி யாய

வாதியை யோதி நாளும்

எட்டனை யெட்ட மாட்டே

னென்செய்வான் றோன்றி னேனே.

4.078.10

 

  கடும் போக்கு உடையனாகி, தன் வீரத்தைக் காட்டக் கயிலை மலையைப் பெயர்க்கத் தொடங்கிய தீயவனாகிய இராவணனின்செருக்கை அடக்கி அவன் வாயினின்றும் சுவையாகச் சாம வேதகீதம் கேட்ட அட்டமூர்த்தியாகிய சிவபெருமானுடைய பெருமையைச் சொல்லி அவனை எள்ளளவும் அணுகமாட்டேன். எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.