|
||||||||
நான்காம் திருமுறை-79 |
||||||||
4.079.குறைந்த திருநேரிசை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
764 மானங் காப்ப தாகித்
தையலார்வலையுதம ளாழ்ந்து
அம்மானையமுதன் றன்னை
யாதியையந்த மாய
செம்மான வொளிகொண்மேனிச்
சிந்தையு ளொன்றி நின்ற
எம்மானைநினைய மாட்டே
னென்செய்வான்றோன்றினேனே.
4.079.1
மகளிருக்கு அவமானம் உண்டாகாதவாறு காக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அவர்களுடைய கண்வலையிற்பட்டு, அதனால்,தலைவனாய் அமுதம் போன்று இனியனாய், எல்லாவற்றுக்கும் ஆதியும் அந்தமும் தானாக உள்ளவனாய், செம்மேனி அம்மானாய், அடியேனுடைய உள்ளத்தில் நிலைபெற்றிருக்கும் எம்முடைய தலைவனை விருப்புற்று நினையமாட்டேன். யாது செய்வதற்காக இவ்வுலகிற் பிறப்பெடுத்துள்ளேன் நான்?
765 மக்களே மணந்த தார
மவ்வயிற் றவரை யோம்பும்
சிக்குளே யழுந்தி யீசன்
றிறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி
யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப
வென்செய்வான் றோன்றி னேனே.
4.079.2
மனைவி, மக்கள், அவர்களுடைய மக்கள் ஆகியவர்களைப் பாதுகாக்கும் பாசப்பிணைப்பான வாழ்க்கைச் சிக்கலுக்குள் அழுந்தி எம்பெருமான் பற்றிய செய்திகளில ஈடுபடாது, தவம் என்பதனை உணராது, நீர்க்குமிழி போலத் தோன்றிமறையும் பயனற்ற இவ்வுடம்பைப்பாதுகாப்பதற்கே முயல்கின்றேன். யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
766 கூழையே னாக மாட்டேன்
கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலு
மிறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணி னல்ல
மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு
மென்செய்வான் றோன்றி னேனே.
4.079.3
கொடிய வினையின் பயனாகிய குழியில் விழுந்து எம்பெருமான் திருவடிக்கண் அன்பினால் குழையும் இயல்பு இல்லாதேனாய், ஏழிசையால் இறைவன் பெருமையைப் பாடமாட்டாதேனாய், இளைய ஒளி பொருந்திய கண்களை உடைய நல்ல பெண்களுக்கும் பொலிவு இல்லாதேனாய் அறிவற்றேனாய்க் காலத்தைக் கழித்தவனாயினேன். என்ன செயல் செய்வதற்காக இவ்வுலகில்பிறப்பெடுத்தேன் நான்?
767 முன்னையென் வினையி னாலே
மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகிப்
பிதற்றுவன் பேதை யேனான்
என்னுளே மன்னி நின்ற
சீர்மைய தாயினானை
என்னுளே நினைய மாட்டே
னென்செய்வான் றோன்றி னேனே.
4.079.4
முற்பிறப்பில் செய்த என் வினைப்பயனாலே பெருமானை நினைக்க இயலாத அடியேன் உலகியலிலே ஈடுபட்டு இவ்வுலக இன்பங்களையே மேம்பட்டனவாகப் பிதற்றிக் கொண்டிருப்பேனானேன். அறிவில்லாத அடியேன் என் உள்ளத்தினுள்ளே நிலை பெற்றிருத்தலை தமது சிறப்பியல்பாக உள்ள பெருமானை என்னுள் வைத்துத் தியானிக்க மாட்டாதேனாகின்றேன். வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் தோன்றினேன் நான்?
768 கறையணி கண்டன் றன்னைக்
காமரங் கற்று மில்லேன்
பிறைநுதற் பேதை மாதர்
பெய்வளை யார்க்கு மல்லேன்
மறைநவி னாவி னானை
மன்னிநின் றிறைஞ்சி நாளும்
இறையேயு மேத்த மாட்டே
னென்செய்வான் றோன்றி னேனே.
4.079.5
நீலகண்டனை வசப்படுத்த இசைத்துறைகளைக் கற்றேனும் அல்லேன். பிறைபோன்ற நெற்றியை உடைய வளையலை அணிந்த பேதைமைக் குணத்தை உடைய மகளிரை வசப்படுத்தும் திறத்தேனும் அல்லேன். வேதங்களை ஓதும் நாவினை உடைய எம்பெருமானை நிலையாக நின்று ஒருநாளும் சிறிதளவும் போற்ற மாட்டாதேனாகிறேன். வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான்?
769 வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற
வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே
னென்செய்வான் றோன்றி னேனே.
4.079.6
ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்துநீத்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தௌவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
திருச்சிற்றம்பலம்
4.079.குறைந்த திருநேரிசை திருநேரிசை திருச்சிற்றம்பலம்
764 மானங் காப்ப தாகித் தையலார்வலையுதம ளாழ்ந்து அம்மானையமுதன் றன்னை யாதியையந்த மாய செம்மான வொளிகொண்மேனிச் சிந்தையு ளொன்றி நின்ற எம்மானைநினைய மாட்டே னென்செய்வான்றோன்றினேனே. 4.079.1
மகளிருக்கு அவமானம் உண்டாகாதவாறு காக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அவர்களுடைய கண்வலையிற்பட்டு, அதனால்,தலைவனாய் அமுதம் போன்று இனியனாய், எல்லாவற்றுக்கும் ஆதியும் அந்தமும் தானாக உள்ளவனாய், செம்மேனி அம்மானாய், அடியேனுடைய உள்ளத்தில் நிலைபெற்றிருக்கும் எம்முடைய தலைவனை விருப்புற்று நினையமாட்டேன். யாது செய்வதற்காக இவ்வுலகிற் பிறப்பெடுத்துள்ளேன் நான்?
765 மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்பும் சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் றவம தோரேன் கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும் இக்களே பரத்தை யோம்ப வென்செய்வான் றோன்றி னேனே. 4.079.2
மனைவி, மக்கள், அவர்களுடைய மக்கள் ஆகியவர்களைப் பாதுகாக்கும் பாசப்பிணைப்பான வாழ்க்கைச் சிக்கலுக்குள் அழுந்தி எம்பெருமான் பற்றிய செய்திகளில ஈடுபடாது, தவம் என்பதனை உணராது, நீர்க்குமிழி போலத் தோன்றிமறையும் பயனற்ற இவ்வுடம்பைப்பாதுகாப்பதற்கே முயல்கின்றேன். யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
766 கூழையே னாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்து ஏழினின் னிசையி னாலு மிறைவனை யேத்த மாட்டேன் மாழையொண் கண்ணி னல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன் ஏழையே னாகி நாளு மென்செய்வான் றோன்றி னேனே. 4.079.3
கொடிய வினையின் பயனாகிய குழியில் விழுந்து எம்பெருமான் திருவடிக்கண் அன்பினால் குழையும் இயல்பு இல்லாதேனாய், ஏழிசையால் இறைவன் பெருமையைப் பாடமாட்டாதேனாய், இளைய ஒளி பொருந்திய கண்களை உடைய நல்ல பெண்களுக்கும் பொலிவு இல்லாதேனாய் அறிவற்றேனாய்க் காலத்தைக் கழித்தவனாயினேன். என்ன செயல் செய்வதற்காக இவ்வுலகில்பிறப்பெடுத்தேன் நான்?
767 முன்னையென் வினையி னாலே மூர்த்தியை நினைய மாட்டேன் பின்னைநான் பித்த னாகிப் பிதற்றுவன் பேதை யேனான் என்னுளே மன்னி நின்ற சீர்மைய தாயினானை என்னுளே நினைய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே. 4.079.4
முற்பிறப்பில் செய்த என் வினைப்பயனாலே பெருமானை நினைக்க இயலாத அடியேன் உலகியலிலே ஈடுபட்டு இவ்வுலக இன்பங்களையே மேம்பட்டனவாகப் பிதற்றிக் கொண்டிருப்பேனானேன். அறிவில்லாத அடியேன் என் உள்ளத்தினுள்ளே நிலை பெற்றிருத்தலை தமது சிறப்பியல்பாக உள்ள பெருமானை என்னுள் வைத்துத் தியானிக்க மாட்டாதேனாகின்றேன். வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் தோன்றினேன் நான்?
768 கறையணி கண்டன் றன்னைக் காமரங் கற்று மில்லேன் பிறைநுதற் பேதை மாதர் பெய்வளை யார்க்கு மல்லேன் மறைநவி னாவி னானை மன்னிநின் றிறைஞ்சி நாளும் இறையேயு மேத்த மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே. 4.079.5
நீலகண்டனை வசப்படுத்த இசைத்துறைகளைக் கற்றேனும் அல்லேன். பிறைபோன்ற நெற்றியை உடைய வளையலை அணிந்த பேதைமைக் குணத்தை உடைய மகளிரை வசப்படுத்தும் திறத்தேனும் அல்லேன். வேதங்களை ஓதும் நாவினை உடைய எம்பெருமானை நிலையாக நின்று ஒருநாளும் சிறிதளவும் போற்ற மாட்டாதேனாகிறேன். வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான்?
769 வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத் தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில் திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன் இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே. 4.079.6
ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்துநீத்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தௌவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|