LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-79

 

4.079.குறைந்த திருநேரிசை 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
764 மானங் காப்ப தாகித்
தையலார்வலையுதம ளாழ்ந்து
அம்மானையமுதன் றன்னை
யாதியையந்த மாய
செம்மான வொளிகொண்மேனிச்
சிந்தையு ளொன்றி நின்ற
எம்மானைநினைய மாட்டே
னென்செய்வான்றோன்றினேனே.
4.079.1
மகளிருக்கு அவமானம் உண்டாகாதவாறு காக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அவர்களுடைய கண்வலையிற்பட்டு, அதனால்,தலைவனாய் அமுதம் போன்று இனியனாய், எல்லாவற்றுக்கும் ஆதியும் அந்தமும் தானாக உள்ளவனாய், செம்மேனி அம்மானாய், அடியேனுடைய உள்ளத்தில் நிலைபெற்றிருக்கும் எம்முடைய தலைவனை விருப்புற்று நினையமாட்டேன். யாது செய்வதற்காக இவ்வுலகிற் பிறப்பெடுத்துள்ளேன் நான்?
765 மக்களே மணந்த தார
மவ்வயிற் றவரை யோம்பும்
சிக்குளே யழுந்தி யீசன்
றிறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி
யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப
வென்செய்வான் றோன்றி னேனே.
4.079.2
மனைவி, மக்கள், அவர்களுடைய மக்கள் ஆகியவர்களைப் பாதுகாக்கும் பாசப்பிணைப்பான வாழ்க்கைச் சிக்கலுக்குள் அழுந்தி எம்பெருமான் பற்றிய செய்திகளில ஈடுபடாது, தவம் என்பதனை உணராது, நீர்க்குமிழி போலத் தோன்றிமறையும் பயனற்ற இவ்வுடம்பைப்பாதுகாப்பதற்கே முயல்கின்றேன். யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
766 கூழையே னாக மாட்டேன்
கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலு
மிறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணி னல்ல
மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு
மென்செய்வான் றோன்றி னேனே.
4.079.3
கொடிய வினையின் பயனாகிய குழியில் விழுந்து எம்பெருமான் திருவடிக்கண் அன்பினால் குழையும் இயல்பு இல்லாதேனாய், ஏழிசையால் இறைவன் பெருமையைப் பாடமாட்டாதேனாய், இளைய ஒளி பொருந்திய கண்களை உடைய நல்ல பெண்களுக்கும் பொலிவு இல்லாதேனாய் அறிவற்றேனாய்க் காலத்தைக் கழித்தவனாயினேன். என்ன செயல் செய்வதற்காக இவ்வுலகில்பிறப்பெடுத்தேன் நான்?
767 முன்னையென் வினையி னாலே
மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகிப்
பிதற்றுவன் பேதை யேனான்
என்னுளே மன்னி நின்ற
சீர்மைய தாயினானை
என்னுளே நினைய மாட்டே
னென்செய்வான் றோன்றி னேனே.
4.079.4
முற்பிறப்பில் செய்த என் வினைப்பயனாலே பெருமானை நினைக்க இயலாத அடியேன் உலகியலிலே ஈடுபட்டு இவ்வுலக இன்பங்களையே மேம்பட்டனவாகப் பிதற்றிக் கொண்டிருப்பேனானேன். அறிவில்லாத அடியேன் என் உள்ளத்தினுள்ளே நிலை பெற்றிருத்தலை தமது சிறப்பியல்பாக உள்ள பெருமானை என்னுள் வைத்துத் தியானிக்க மாட்டாதேனாகின்றேன். வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் தோன்றினேன் நான்?
768 கறையணி கண்டன் றன்னைக்
காமரங் கற்று மில்லேன்
பிறைநுதற் பேதை மாதர்
பெய்வளை யார்க்கு மல்லேன்
மறைநவி னாவி னானை
மன்னிநின் றிறைஞ்சி நாளும்
இறையேயு மேத்த மாட்டே
னென்செய்வான் றோன்றி னேனே.
4.079.5
நீலகண்டனை வசப்படுத்த இசைத்துறைகளைக் கற்றேனும் அல்லேன். பிறைபோன்ற நெற்றியை உடைய வளையலை அணிந்த பேதைமைக் குணத்தை உடைய மகளிரை வசப்படுத்தும் திறத்தேனும் அல்லேன். வேதங்களை ஓதும் நாவினை உடைய எம்பெருமானை நிலையாக நின்று ஒருநாளும் சிறிதளவும் போற்ற மாட்டாதேனாகிறேன். வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான்?
769 வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற
வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே
னென்செய்வான் றோன்றி னேனே.
4.079.6
ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்துநீத்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தௌவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?
திருச்சிற்றம்பலம்

 

4.079.குறைந்த திருநேரிசை 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

 

764 மானங் காப்ப தாகித்

தையலார்வலையுதம ளாழ்ந்து

அம்மானையமுதன் றன்னை

யாதியையந்த மாய

செம்மான வொளிகொண்மேனிச்

சிந்தையு ளொன்றி நின்ற

எம்மானைநினைய மாட்டே

னென்செய்வான்றோன்றினேனே.

4.079.1

 

  மகளிருக்கு அவமானம் உண்டாகாதவாறு காக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அவர்களுடைய கண்வலையிற்பட்டு, அதனால்,தலைவனாய் அமுதம் போன்று இனியனாய், எல்லாவற்றுக்கும் ஆதியும் அந்தமும் தானாக உள்ளவனாய், செம்மேனி அம்மானாய், அடியேனுடைய உள்ளத்தில் நிலைபெற்றிருக்கும் எம்முடைய தலைவனை விருப்புற்று நினையமாட்டேன். யாது செய்வதற்காக இவ்வுலகிற் பிறப்பெடுத்துள்ளேன் நான்?

 

 

765 மக்களே மணந்த தார

மவ்வயிற் றவரை யோம்பும்

சிக்குளே யழுந்தி யீசன்

றிறம்படேன் றவம தோரேன்

கொப்புளே போலத் தோன்றி

யதனுளே மறையக் கண்டும்

இக்களே பரத்தை யோம்ப

வென்செய்வான் றோன்றி னேனே.

4.079.2

 

  மனைவி, மக்கள், அவர்களுடைய மக்கள் ஆகியவர்களைப் பாதுகாக்கும் பாசப்பிணைப்பான வாழ்க்கைச் சிக்கலுக்குள் அழுந்தி எம்பெருமான் பற்றிய செய்திகளில ஈடுபடாது, தவம் என்பதனை உணராது, நீர்க்குமிழி போலத் தோன்றிமறையும் பயனற்ற இவ்வுடம்பைப்பாதுகாப்பதற்கே முயல்கின்றேன். யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?

 

 

766 கூழையே னாக மாட்டேன்

கொடுவினைக் குழியில் வீழ்ந்து

ஏழினின் னிசையி னாலு

மிறைவனை யேத்த மாட்டேன்

மாழையொண் கண்ணி னல்ல

மடந்தைமார் தமக்கும் பொல்லேன்

ஏழையே னாகி நாளு

மென்செய்வான் றோன்றி னேனே.

4.079.3

 

  கொடிய வினையின் பயனாகிய குழியில் விழுந்து எம்பெருமான் திருவடிக்கண் அன்பினால் குழையும் இயல்பு இல்லாதேனாய், ஏழிசையால் இறைவன் பெருமையைப் பாடமாட்டாதேனாய், இளைய ஒளி பொருந்திய கண்களை உடைய நல்ல பெண்களுக்கும் பொலிவு இல்லாதேனாய் அறிவற்றேனாய்க் காலத்தைக் கழித்தவனாயினேன். என்ன செயல் செய்வதற்காக இவ்வுலகில்பிறப்பெடுத்தேன் நான்?

 

 

767 முன்னையென் வினையி னாலே

மூர்த்தியை நினைய மாட்டேன்

பின்னைநான் பித்த னாகிப்

பிதற்றுவன் பேதை யேனான்

என்னுளே மன்னி நின்ற

சீர்மைய தாயினானை

என்னுளே நினைய மாட்டே

னென்செய்வான் றோன்றி னேனே.

4.079.4

 

  முற்பிறப்பில் செய்த என் வினைப்பயனாலே பெருமானை நினைக்க இயலாத அடியேன் உலகியலிலே ஈடுபட்டு இவ்வுலக இன்பங்களையே மேம்பட்டனவாகப் பிதற்றிக் கொண்டிருப்பேனானேன். அறிவில்லாத அடியேன் என் உள்ளத்தினுள்ளே நிலை பெற்றிருத்தலை தமது சிறப்பியல்பாக உள்ள பெருமானை என்னுள் வைத்துத் தியானிக்க மாட்டாதேனாகின்றேன். வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் தோன்றினேன் நான்?

 

 

768 கறையணி கண்டன் றன்னைக்

காமரங் கற்று மில்லேன்

பிறைநுதற் பேதை மாதர்

பெய்வளை யார்க்கு மல்லேன்

மறைநவி னாவி னானை

மன்னிநின் றிறைஞ்சி நாளும்

இறையேயு மேத்த மாட்டே

னென்செய்வான் றோன்றி னேனே.

4.079.5

 

  நீலகண்டனை வசப்படுத்த இசைத்துறைகளைக் கற்றேனும் அல்லேன். பிறைபோன்ற நெற்றியை உடைய வளையலை அணிந்த பேதைமைக் குணத்தை உடைய மகளிரை வசப்படுத்தும் திறத்தேனும் அல்லேன். வேதங்களை ஓதும் நாவினை உடைய எம்பெருமானை நிலையாக நின்று ஒருநாளும் சிறிதளவும் போற்ற மாட்டாதேனாகிறேன். வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான்?

 

 

769 வளைத்துநின் றைவர் கள்வர்

வந்தெனை நடுக்கஞ் செய்யத்

தளைத்துவைத் துலையை யேற்றித்

தழலெரி மடுத்த நீரில்

திளைத்துநின் றாடு கின்ற

வாமைபோற் றெளிவி லாதேன்

இளைத்துநின் றாடு கின்றே

னென்செய்வான் றோன்றி னேனே.

4.079.6

 

  ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்துநீத்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தௌவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.