|
||||||||
நான்காம் திருமுறை-83 |
||||||||
4.083.திருக்கழுமலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
800 படையார் மழுவொன்று பற்றிய கையன்
பதிவினவில்
கடையார் கொடிநெடுமாடங்க ளோங்குங்
கழுமலமாம்
மடைவாய்க் குருகினம்பாளை விரிதொறும்
வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும்
பெரும்பதியே.
4.083.1
படையாக ஒருமழு ஆயுதத்தைக் கையில் ஏந்திய சிவபெருமானுடைய திருத்தலம் யாது என்று வினாவினால், நகர்ப்புறவாயிலில் கொடிகள் உயர்ந்து விளங்கும் நெடும் மாடங்களைக கொண்டு விளங்கும் திருக்கழுமலமே அதுவாம். அப்பதியானது நீர்மடைகளிற் பூம்பாளை விரியுந் தோறும் அவற்றிற் சொரியுந் தேனைப் பெண்வண்டுகள் முன்னதாக உண்ணவிட்டு அவற்றின் கடைவாயிற் சொட்டுந் தேனை ஆண் வண்கள் அருந்திக் கொண்டு பிரியாதிருக்கும் பெரும்பதியுமாம்.
திருச்சிற்றம்பலம்
4.083.திருக்கழுமலம் திருவிருத்தம் திருச்சிற்றம்பலம்
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி.
800 படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவில் கடையார் கொடிநெடுமாடங்க ளோங்குங் கழுமலமாம் மடைவாய்க் குருகினம்பாளை விரிதொறும் வண்டினங்கள் பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் பெரும்பதியே. 4.083.1
படையாக ஒருமழு ஆயுதத்தைக் கையில் ஏந்திய சிவபெருமானுடைய திருத்தலம் யாது என்று வினாவினால், நகர்ப்புறவாயிலில் கொடிகள் உயர்ந்து விளங்கும் நெடும் மாடங்களைக கொண்டு விளங்கும் திருக்கழுமலமே அதுவாம். அப்பதியானது நீர்மடைகளிற் பூம்பாளை விரியுந் தோறும் அவற்றிற் சொரியுந் தேனைப் பெண்வண்டுகள் முன்னதாக உண்ணவிட்டு அவற்றின் கடைவாயிற் சொட்டுந் தேனை ஆண் வண்கள் அருந்திக் கொண்டு பிரியாதிருக்கும் பெரும்பதியுமாம்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|