LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-94

 

4.094.திருக்கண்டியூர் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர். 
தேவியார் - மங்கைநாயகியம்மை. 
903 வானவர் தானவர் வைகன் மலர்கொணர்ந்
திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி யாத
தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன் றோடிய
பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட வாணர்
தொழுகின்றதே. 
4.094.1
தேவர்களும் தேவகணத்தவரான வித்தியாதரர்களும் நாள்தோறும் மலர்களைக் கொணர்ந்து சமர்ப்பித்து வணங்க வைகுந்தத்திலும் சத்தியலோகத்திலும் உள்ள திருமாலும் பிரமனும் உள்ளபடி அறிய முடியாத தன்மையுடைய வியாபகப்பொருளாகியவனாய், காளைவாகனனாய், மூலப் பழம்பொருளாய், அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கக் கருதிய அன்று காட்டில் ஓடிய பன்றியை அம்பு எய்த வேடனாய் உள்ள பெருமானுடைய கண்டியூர்த் திருத்தலத்தை உலகில் உள்ள மக்கள் தொழுகின்றார்கள். கண்டியூரைத் தேவர்களும் தானவர்களும் மண்ணவர்களும் தொழுகின்றனர் என்றவாறு.
904 வான மதியமும் வாளர வும்புன
லோடுசடைத்
தான மதுவென வைத்துழல் வான்றழல்
போலுருவன்
கான மறியொன்று கையுடை யான்கண்டி
யூரிருந்த
ஊனமில் வேத முடையனை நாமடி
யுள்குவதே.
4.094.2
வானத்தில் இயங்கவேண்டிய பிறை, ஒளி பொருந்திய பாம்பு கங்கை இவற்றிற்குத் தன் தலையைத் தங்குமிடமாக வழங்கித் திரிபவனாய், தீ நிறத்தினனாய், காட்டில் வாழும் மான்குட்டியைக் கையில் ஏந்தியவனாய்க் கண்டியூரில் இருக்கும், குறைவு ஒன்றும் இல்லாத வேதத்தை உடைய பெருமானை அவன் திருவடிக்கண் நாம் தியானிப்போமாக.
905 பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத்
தான்றலையை
உண்டங் கறுத்தது மூரொடு நாடவை
தானறியும்
கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி
யூரிருந்த
தொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர்
தொழுகின்றதே. 
4.094.3
பிரமன் தலையைப் பண்டு நீக்கிய கையை உடையவனாய், விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இறுத்திய அதனால் நீலகண்டனாய் உயிரினங்களின் அச்சத்தைப் போக்கிய செய்தியை ஊர்களும் நாடுகளும் அறியும். அத்தகைய பெருமான் தொண்டர்கள் தலைவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்க அவனை அங்கே அண்டத்தில் வாழும் சான்றோர்கள் தொழுகின்றார்கள்.
906 முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன்
றானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு
பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி
யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்ட ரில்லைகண் டீரண்ட
வானவரே.
4.094.4
அவன் செய்துமுடிக்க நினைத்தால் வெற்றிகரமாக முடியாத செயல் ஒன்றுமில்லை. எல்லாப் பொருள்களையும் அப்பெருமான் தன்பால் உடையான். கொடியில் தன் உருவம் எழுதப்பட்ட வாகனமாக உடைய காளைமீது இவர்ந்து பார்வதி பாகனாய், அடியார்களுடைய கொடியவினைகளை அடியோடு நீக்குபவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும் அப்பெருமானுடைய திருவடிகளைத் தொண்டர்களே அடைந்தனர். மேலுலகத்தேவர்கள் அடையவில்லை.
907 பற்றியொ ரானை யுரித்தபி ரான்பவ
ளத்திரள்போல்
முற்று மணிந்ததொர் நீறுடை யான்முன்ன
மேகொடுத்த
கற்றங் குடையவன் றானறி யான்கண்டி
யூரிருந்த
குற்றமில் வேத முடையானை யாமண்டர்
கூறுவதே.
4.094.5
ஓர் யானையைக் கீழ்ப்படுத்தி அதன் தோலினை உரித்த தலைவனாய், பவளத்திரள் போன்ற மேனி முழுதும் திருநீறு அணிந்தவனாய், கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த கண்ணனாக அவதரித்த திருமாலால் அறியப்படாதவனாய்க் கண்டியூரில் உறைபவனாய், முன்னமே உலகுக்கு வழங்கிய குற்றமற்ற வேதங்களை உடையவனான அப்பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.
908 போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி
வாயரவம்
சேர்ப்பது வானத் திரைகடல் சூழுல
கம்மிதனைக்
காப்பது காரண மாகக் கொண் டான்கண்டி
யூரிருந்த
கூர்ப்புடை யொள்வாண் மழுவனை யாமண்டர்
கூறுவதே.
4.094.6
யானையை உரித்த தோலைப் போர்க்கின்ற பிரானாய், உடம்பில் புள்ளிகளைக் கொண்ட பாம்பினை உடலில் சேர்த்து அணிந்தவனாய், வானளாவிய அலைகளை உடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தைக் காப்பதற்காகக் கூர்மையை உடைய மழுப்படையைக் கொண்ட கண்டியூர்ப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.
909 அட்டது காலனை யாய்ந்தது வேதமா
றங்கமன்று
சுட்டது காமனைக் கண்ணத னாலே
தொடர்ந்தெரியக்
கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி
யூரிருந்த
குட்டமுன் வேதப் படையனை யாமண்டர்
கூறுவதே.
4.094.7
கூற்றுவனை அழித்து, வேதங்கள், ஆறு அங்கங்கள் என்ற இவற்றை ஆராய்ந்து, மன்மதனைக் கண்ணிலிருந்து தோன்றிய தீயினால் சுட்டு, தொடர்ந்து எரிந்து சாம்பலாகுமாறு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய தலைவனாய்க் கண்டியூரில் உறையும் கடல்போன்ற வேதங்களைத் தனக்குப் படையாக உடைய பெருமானையே தேவர்கள் போற்றுகின்றார்கள்.
910 அட்டு மொலிநீ ரணிமதி யும்மல
ரானவெல்லாம்
இட்டுப் பொதியுஞ் சடைமுடி யானிண்டை
மாலையங்கைக்
கட்டு மரவது தானுடை யான்கண்டி
யூரிருந்த
கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர்
கூறுவதே. 
4.094.8
உலகத்தை அழிக்கப் பேரொலியோடு வந்த கங்கையையும் பிறையையும் மலர்களையும் வைத்து உள்ளடக்கிய சடைமுடியை உடையவனாய், இண்டைமாலையையும், கையில் அணிகலனாக அணியும் பாம்பையும் உடையவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும், பறையை ஒத்த உடுக்கையை உடைய கூத்தப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.
911 மாய்ந்தன தீவினை மங்கின நோய்கண்
மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச்
செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரானங்க
மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட்
கொண்டவனே.
4.094.9
மன்மதனை வெகுண்டு அழித்த பிரான், கண்டியூரை உகந்தருளியிருக்கும் பிரான், ஆறு அங்கங்களையும் ஆராய்ந்தபிரான் ஆகிய சிவபெருமான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டுள்ளான். அதனால் தீவினைகள் மறைந்தன; நோய்கள் செயலற்று ஒளிகுறைந்தன; கலங்கி விழுமாறு பாவங்கள் தேய்ந்து விட்டன. தீவினை நோய்கள் பாவம் என்ற இவைகள் இனி நம்மை அழிக்க வலிமை அற்றனவாகிவிட்டன.
912 மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ்
வாசுகியைத்
தண்டி யமரர் கடைந்த கடல்விடங்
கண்டருளி
உண்ட பிரானஞ் சொளித்த பிரானஞ்சி
யோடிநண்ணக்
கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட
வானவனே. 
4.094.10
தம் ஆற்றலால் மிக்குச்சென்று மந்தரமலையைப் பெயர்த்துச் சென்று அதனை மத்தாகக்கொண்டு வாசுகி என்ற பாம்பைக் கடைகயிறாகச் சுற்றித் தேவர்கள் கடைந்த கடலிலிருந்து புறப்பட்ட விடத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சி ஓடிவந்து தன்னை அணுகுமாறு செய்தபிரானாய், அவர்களிடம் அருள்செய்து விடத்தை உண்ட பிரானாய்ப்பின் அது உள்ளே செல்லாதபடி கழுத்தில் அதனை ஒளிவீசுமாறு செய்த பெருமான் கண்டியூரிலுள்ள தேவர்தலைவன் அல்லனோ?
திருச்சிற்றம்பலம்

 

4.094.திருக்கண்டியூர் 

திருவிருத்தம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - வீரட்டேசுவரர். 

தேவியார் - மங்கைநாயகியம்மை. 

 

 

903 வானவர் தானவர் வைகன் மலர்கொணர்ந்

திட்டிறைஞ்சித்

தானவர் மால்பிர மன்னறி யாத

தகைமையினான்

ஆனவ னாதிபு ராணனன் றோடிய

பன்றியெய்த

கானவ னைக்கண்டி யூரண்ட வாணர்

தொழுகின்றதே. 

4.094.1

 

  தேவர்களும் தேவகணத்தவரான வித்தியாதரர்களும் நாள்தோறும் மலர்களைக் கொணர்ந்து சமர்ப்பித்து வணங்க வைகுந்தத்திலும் சத்தியலோகத்திலும் உள்ள திருமாலும் பிரமனும் உள்ளபடி அறிய முடியாத தன்மையுடைய வியாபகப்பொருளாகியவனாய், காளைவாகனனாய், மூலப் பழம்பொருளாய், அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கக் கருதிய அன்று காட்டில் ஓடிய பன்றியை அம்பு எய்த வேடனாய் உள்ள பெருமானுடைய கண்டியூர்த் திருத்தலத்தை உலகில் உள்ள மக்கள் தொழுகின்றார்கள். கண்டியூரைத் தேவர்களும் தானவர்களும் மண்ணவர்களும் தொழுகின்றனர் என்றவாறு.

 

 

904 வான மதியமும் வாளர வும்புன

லோடுசடைத்

தான மதுவென வைத்துழல் வான்றழல்

போலுருவன்

கான மறியொன்று கையுடை யான்கண்டி

யூரிருந்த

ஊனமில் வேத முடையனை நாமடி

யுள்குவதே.

4.094.2

 

  வானத்தில் இயங்கவேண்டிய பிறை, ஒளி பொருந்திய பாம்பு கங்கை இவற்றிற்குத் தன் தலையைத் தங்குமிடமாக வழங்கித் திரிபவனாய், தீ நிறத்தினனாய், காட்டில் வாழும் மான்குட்டியைக் கையில் ஏந்தியவனாய்க் கண்டியூரில் இருக்கும், குறைவு ஒன்றும் இல்லாத வேதத்தை உடைய பெருமானை அவன் திருவடிக்கண் நாம் தியானிப்போமாக.

 

 

905 பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத்

தான்றலையை

உண்டங் கறுத்தது மூரொடு நாடவை

தானறியும்

கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி

யூரிருந்த

தொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர்

தொழுகின்றதே. 

4.094.3

 

  பிரமன் தலையைப் பண்டு நீக்கிய கையை உடையவனாய், விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இறுத்திய அதனால் நீலகண்டனாய் உயிரினங்களின் அச்சத்தைப் போக்கிய செய்தியை ஊர்களும் நாடுகளும் அறியும். அத்தகைய பெருமான் தொண்டர்கள் தலைவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்க அவனை அங்கே அண்டத்தில் வாழும் சான்றோர்கள் தொழுகின்றார்கள்.

 

 

906 முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன்

றானுடையான்

கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு

பாலுடையான்

கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி

யூரிருந்தான்

அடியுமுற் றார்தொண்ட ரில்லைகண் டீரண்ட

வானவரே.

4.094.4

 

  அவன் செய்துமுடிக்க நினைத்தால் வெற்றிகரமாக முடியாத செயல் ஒன்றுமில்லை. எல்லாப் பொருள்களையும் அப்பெருமான் தன்பால் உடையான். கொடியில் தன் உருவம் எழுதப்பட்ட வாகனமாக உடைய காளைமீது இவர்ந்து பார்வதி பாகனாய், அடியார்களுடைய கொடியவினைகளை அடியோடு நீக்குபவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும் அப்பெருமானுடைய திருவடிகளைத் தொண்டர்களே அடைந்தனர். மேலுலகத்தேவர்கள் அடையவில்லை.

 

 

907 பற்றியொ ரானை யுரித்தபி ரான்பவ

ளத்திரள்போல்

முற்று மணிந்ததொர் நீறுடை யான்முன்ன

மேகொடுத்த

கற்றங் குடையவன் றானறி யான்கண்டி

யூரிருந்த

குற்றமில் வேத முடையானை யாமண்டர்

கூறுவதே.

4.094.5

 

  ஓர் யானையைக் கீழ்ப்படுத்தி அதன் தோலினை உரித்த தலைவனாய், பவளத்திரள் போன்ற மேனி முழுதும் திருநீறு அணிந்தவனாய், கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த கண்ணனாக அவதரித்த திருமாலால் அறியப்படாதவனாய்க் கண்டியூரில் உறைபவனாய், முன்னமே உலகுக்கு வழங்கிய குற்றமற்ற வேதங்களை உடையவனான அப்பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.

 

 

908 போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி

வாயரவம்

சேர்ப்பது வானத் திரைகடல் சூழுல

கம்மிதனைக்

காப்பது காரண மாகக் கொண் டான்கண்டி

யூரிருந்த

கூர்ப்புடை யொள்வாண் மழுவனை யாமண்டர்

கூறுவதே.

4.094.6

 

  யானையை உரித்த தோலைப் போர்க்கின்ற பிரானாய், உடம்பில் புள்ளிகளைக் கொண்ட பாம்பினை உடலில் சேர்த்து அணிந்தவனாய், வானளாவிய அலைகளை உடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தைக் காப்பதற்காகக் கூர்மையை உடைய மழுப்படையைக் கொண்ட கண்டியூர்ப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.

 

 

909 அட்டது காலனை யாய்ந்தது வேதமா

றங்கமன்று

சுட்டது காமனைக் கண்ணத னாலே

தொடர்ந்தெரியக்

கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி

யூரிருந்த

குட்டமுன் வேதப் படையனை யாமண்டர்

கூறுவதே.

4.094.7

 

  கூற்றுவனை அழித்து, வேதங்கள், ஆறு அங்கங்கள் என்ற இவற்றை ஆராய்ந்து, மன்மதனைக் கண்ணிலிருந்து தோன்றிய தீயினால் சுட்டு, தொடர்ந்து எரிந்து சாம்பலாகுமாறு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய தலைவனாய்க் கண்டியூரில் உறையும் கடல்போன்ற வேதங்களைத் தனக்குப் படையாக உடைய பெருமானையே தேவர்கள் போற்றுகின்றார்கள்.

 

 

910 அட்டு மொலிநீ ரணிமதி யும்மல

ரானவெல்லாம்

இட்டுப் பொதியுஞ் சடைமுடி யானிண்டை

மாலையங்கைக்

கட்டு மரவது தானுடை யான்கண்டி

யூரிருந்த

கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர்

கூறுவதே. 

4.094.8

 

  உலகத்தை அழிக்கப் பேரொலியோடு வந்த கங்கையையும் பிறையையும் மலர்களையும் வைத்து உள்ளடக்கிய சடைமுடியை உடையவனாய், இண்டைமாலையையும், கையில் அணிகலனாக அணியும் பாம்பையும் உடையவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும், பறையை ஒத்த உடுக்கையை உடைய கூத்தப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள்.

 

 

911 மாய்ந்தன தீவினை மங்கின நோய்கண்

மறுகிவிழத்

தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச்

செற்றநங்கைக்

காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரானங்க

மாறினையும்

ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட்

கொண்டவனே.

4.094.9

 

  மன்மதனை வெகுண்டு அழித்த பிரான், கண்டியூரை உகந்தருளியிருக்கும் பிரான், ஆறு அங்கங்களையும் ஆராய்ந்தபிரான் ஆகிய சிவபெருமான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டுள்ளான். அதனால் தீவினைகள் மறைந்தன; நோய்கள் செயலற்று ஒளிகுறைந்தன; கலங்கி விழுமாறு பாவங்கள் தேய்ந்து விட்டன. தீவினை நோய்கள் பாவம் என்ற இவைகள் இனி நம்மை அழிக்க வலிமை அற்றனவாகிவிட்டன.

 

 

912 மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ்

வாசுகியைத்

தண்டி யமரர் கடைந்த கடல்விடங்

கண்டருளி

உண்ட பிரானஞ் சொளித்த பிரானஞ்சி

யோடிநண்ணக்

கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட

வானவனே. 

4.094.10

 

  தம் ஆற்றலால் மிக்குச்சென்று மந்தரமலையைப் பெயர்த்துச் சென்று அதனை மத்தாகக்கொண்டு வாசுகி என்ற பாம்பைக் கடைகயிறாகச் சுற்றித் தேவர்கள் கடைந்த கடலிலிருந்து புறப்பட்ட விடத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சி ஓடிவந்து தன்னை அணுகுமாறு செய்தபிரானாய், அவர்களிடம் அருள்செய்து விடத்தை உண்ட பிரானாய்ப்பின் அது உள்ளே செல்லாதபடி கழுத்தில் அதனை ஒளிவீசுமாறு செய்த பெருமான் கண்டியூரிலுள்ள தேவர்தலைவன் அல்லனோ?

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.