LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-96

 

4.096.திருவீழிமிழலை 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீழியழகர். 
தேவியார் - சுந்தரகுசாம்பிகை. 
923 வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி
யோடயலே
தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந் திருக்கொன்றை
சென்னிவைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர்
மிழலையுளீர்
நான்சட்ட வும்மை மறக்கினு மென்னைக்
குறிக்கொண்மினே. 
4.096.1
வானத்திலே நிலவொளி ஒழுக ஒழுக நின்று ஒளிவிடும் பிறையோடு அதன் அருகில் தேன் ஒழுகஒழுக நின்று, அழகு செய்யும் கொன்றை மலரைச் சென்னியில் அணிந்தவரே! பெண்மானின் பார்வை போன்ற மருண்ட நோக்கினை உடைய பார்வதியின் கணவரீர்! பளிங்குமணி போன்ற தௌந்த நீரை உடைய வீழிமிழலையில் உள்ள செம்மையீர்! அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைத் தொண்டனாக மனத்துக் கொள்ளுங்கள்.
924 அந்தமு மாதியு மாகிநின் றீர்அண்ட
மெண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின் றீர்பசு
வேற்றுகந்தீர்
வெந்தழ லோம்பு மிழலையுள் ளீர்என்னைத்
தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினு மென்னைக்
குறிக்கொண்மினே. 
4.096.2
ஆதியும் அந்தமுமாக உள்ளவரே! உலகங்களின் எட்டுத்திசைகளிலும் பற்றினையும் பற்று நீக்கத்தையும் உயிரினங்கள் இடையே பரப்புகின்றவரே! காளையை இவர்தலை விரும்புகின்றவரே! விரும்பத்தக்க முத்தீயை அந்தணர் பாதுகாக்கும் மிழலை நகரில் உள்ளவரே! அடியேனைக் கூற்றுவன் தென் திசையில் செலுத்தும் போது அடியேன் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும்.
925 அலைக்கின்ற நீர்நிலங் காற்றன லம்பர
மாகிநின்றீர்
கலைக்கன்று சேருங் கரத்தீர் கலைப்பொரு
ளாகிநின்றீர்
விலக்கின்றி நல்கு மிழலையு ளீர்மெய்யிற்
கையொடுகால்
குலைக்கின்று நும்மை மறக்கினு மென்னைக்
குறிக்கொண்மினே. 
4.096.3
அலைவீசும் நீர் நிலம் காற்று தீ ஆகாயம் என்ற ஐம்பூதங்களாகவும் உள்ளவரே! மான்கன்று பொருந்திய கையை உடையவரே! கலைகளினுடைய உண்மைப் பொருளாக உள்ளவரே! யாரையும் புறக்கணிக்காமல் அருள் வழங்கும் மிழலைப் பெருமானே! வாழ்க்கை இறுதிக் காலத்தில் உடம்பில் கைகளும் கால்களும் செயலிழக்க அடியேன் நும்மை மறந்தாலும் அடியேனை மனத்தில் குறித்துக் கொண்டு காக்கவேண்டும்.
926 தீத்தொழி லான்றலை தீயிலிட் டுச்செய்த
வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை யீர்பிடித்
துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள் ளீர்விக்கி
யஞ்செழுத்தும்
ஓத்தொழிந் தும்மை மறக்கினு மென்னைக்
குறிக்கொண்மினே. 
4.096.4
தீயை ஓம்பும் தக்கனுடைய தலையைத் தீயிலிட்டு அவன் செய்த வேள்வியை அழித்தவரே! பேய்களைத் தன் விருப்பப் படி ஏவல்கொள்ளும் காளியைத் தேவியாகப் பெற்றுள்ளவரே! தம் கையில் முக்கோலாகிய மூங்கிலைச் சுமந்து திரியும் அந்தணர்கள் மிகுந்த மிழலையில் உள்ளவரே! இறுதிக் காலத்தில் விக்கல் எடுப்பதனால் திருவைந்தெழுத்தை ஓதுதலை மறந்து அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொள்மின்.
927 தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் சுற்றியும்
பத்திமையால்
மேற்பட்ட வந்தணர் வீழியு மென்மையும்
வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தே னிறக்க
நமன்றமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினு மென்னைக்
குறிக்கொண்மினே. 
4.096.5
தோள்களில் பொருந்திய பாம்புகளையும் கையில் சூலத்தையும் மகிழ்ந்து அணிந்தும், தொண்டாம் தன்மையால் மேம்பட்ட அந்தணர்கள் வாழும் வீழி நகரையும் அடியேனையும் சிறப்பாக உடையீர்! நெடுங்காலம் உயிர்வாழ்ந்து பின் இறக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இவ்வுலகில் பிறப்பெடுத்த அடியேன் இறக்குந்தருவாயில் இயமனுடைய ஏவலரால் கைப்பற்றப்பட்டு உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின்.
928 கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி
காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகலந் தீர்பதி
வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயி லுறக்கத்தி
லும்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினு மென்னைக்
குறிக்கொண்மினே. 
4.096.6
உருத்திராக்கமாலை அணிந்த கழுத்தை உடையவரே! சுடுகாட்டில் எரிந்து புலால் நீங்கிய மண்டையோட்டினை உண்கலமாக உடையவரே! வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே! உணவு உண்ட போதும், உணவின்றிப் பட்டினியாய் இருக்கும் போதும் நோயுற்ற போதும், உறங்கும்போதும், ஐம்பொறிகளால் செயற்படுத்தப்படும் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின்.
929 தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் டீர்தூய
வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீரெழில் வீழி மிழலை
யிருக்கைகொண்டீர்
சீற்றங்கொண் டென்மேற் சிவந்ததொர் பாசத்தால்
வீசியவெம்
கூற்றங்கண் டும்மை மறக்கினு மென்னைக்
குறிக்கொண்மினே. 
4.096.7
இவ்வுலகைப்படைத்த பிரமனுடைய தலை ஒன்றனைக் கொய்தவரே! தூய வெள்ளிய காளையை வானகமாகக் கொண்டவரே! அழகிய வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே! கோபம் கொண்டு என்மேல் சிவந்ததொரு பாசக்கயிற்றை வீசும் கூற்றுவனைக் கண்டு அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின்.
930 சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ் சூடிச்சொக்
கம்பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை யீர்படர்
தீப்பருக
விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலையுள்
ளீர்பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினு மென்னைக்
குறிக்கொண்மினே. 
4.096.8
நீர்ச் சுழிகளை உடைய கங்கையையும் சந்திரனையும் சூடிச் சுத்த நிருத்தம் என்ற ஆடலை நிகழ்த்துபவரே! பிறரால் பழிக்கப்படும் பாம்பினை இடுப்பில் இறுகச் சுற்றியவரே! நெற்றிவிழியிலிருந்து தோன்றிய நெருப்பு காமனது உடலைச் சாம்பலாக்குமாறு செய்தவரே! வீழிமிழலையில் உள்ளவரே! அடியேன் பிறவிக்கடலின் சுழியில் அகப்பட்டு உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின்.
931 பிள்ளையிற் பட்ட பிறைமுடி யீர்மறை
யோத வல்லீர்
வெள்ளையிற் பட்டதொர் நீற்றீர் விரிநீர்
மிழலையுள்ளீர்
நள்ளையிற் பட்டைவர் நக்கரைப் பிக்க
நமன்றமர்தம்
கொள்ளையிற் பட்டு மறக்கினு மென்னைக்
குறிக்கொண்மினே. 
4.096.9
இளைய பிறைச்சந்திரனை முடியில் அணிந்தவரே! வேதம் ஓதவல்லவரே! வெள்ளிய நீற்றை அணிந்தவரே! நீர் விரிந்து பரவிய மிழலையில் இருப்பவரே! ஐம்புலப்பொறிகளின் நடுவில் அகப்பட்டு அவை என்னைக் கண்டு சிரித்து என்னைப் பலகாலும் தேய்க்கும்படி இயமதூதுவருடைய கொள்ளையிடும் செயலில் அகப்பட்டு அடியேன் உம்மை மறப்பினும் அடியேனைக் குறிக்கொண்மின்.
932 கறுக்கொண் டரக்கன் கயிலையைப் பற்றிய
கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி யாற்கூற்றை
நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர் விரிநீர்
மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினு மென்னைக்
குறிக்கொண்மினே. 
4.096.10
மனத்தில் ஆத்திரம் கொண்டு இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பயன்படுத்திய கைகளும் உடம்பும் நெரிக்கப்பட்டு நெறுநெறு என்ற ஒலியோடு அழியும்படி அவனை அழுத்திய திருவடிகளால் கூற்றுவனை அழித்தவரே! நறுமணம் கமழும் கொன்றை மாலையை முடியில் அணிந்தவரே! மிக்க நீர்வளமுடைய மிழலையில் உள்ளவரே! உயிர் போகும் நேரத்தில் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின்.
திருச்சிற்றம்பலம்

 

4.096.திருவீழிமிழலை 

திருவிருத்தம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - வீழியழகர். 

தேவியார் - சுந்தரகுசாம்பிகை. 

 

 

923 வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி

யோடயலே

தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந் திருக்கொன்றை

சென்னிவைத்தீர்

மான்பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர்

மிழலையுளீர்

நான்சட்ட வும்மை மறக்கினு மென்னைக்

குறிக்கொண்மினே. 

4.096.1

 

  வானத்திலே நிலவொளி ஒழுக ஒழுக நின்று ஒளிவிடும் பிறையோடு அதன் அருகில் தேன் ஒழுகஒழுக நின்று, அழகு செய்யும் கொன்றை மலரைச் சென்னியில் அணிந்தவரே! பெண்மானின் பார்வை போன்ற மருண்ட நோக்கினை உடைய பார்வதியின் கணவரீர்! பளிங்குமணி போன்ற தௌந்த நீரை உடைய வீழிமிழலையில் உள்ள செம்மையீர்! அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைத் தொண்டனாக மனத்துக் கொள்ளுங்கள்.

 

 

924 அந்தமு மாதியு மாகிநின் றீர்அண்ட

மெண்டிசையும்

பந்தமும் வீடும் பரப்புகின் றீர்பசு

வேற்றுகந்தீர்

வெந்தழ லோம்பு மிழலையுள் ளீர்என்னைத்

தென்றிசைக்கே

உந்திடும் போது மறக்கினு மென்னைக்

குறிக்கொண்மினே. 

4.096.2

 

  ஆதியும் அந்தமுமாக உள்ளவரே! உலகங்களின் எட்டுத்திசைகளிலும் பற்றினையும் பற்று நீக்கத்தையும் உயிரினங்கள் இடையே பரப்புகின்றவரே! காளையை இவர்தலை விரும்புகின்றவரே! விரும்பத்தக்க முத்தீயை அந்தணர் பாதுகாக்கும் மிழலை நகரில் உள்ளவரே! அடியேனைக் கூற்றுவன் தென் திசையில் செலுத்தும் போது அடியேன் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும்.

 

 

925 அலைக்கின்ற நீர்நிலங் காற்றன லம்பர

மாகிநின்றீர்

கலைக்கன்று சேருங் கரத்தீர் கலைப்பொரு

ளாகிநின்றீர்

விலக்கின்றி நல்கு மிழலையு ளீர்மெய்யிற்

கையொடுகால்

குலைக்கின்று நும்மை மறக்கினு மென்னைக்

குறிக்கொண்மினே. 

4.096.3

 

  அலைவீசும் நீர் நிலம் காற்று தீ ஆகாயம் என்ற ஐம்பூதங்களாகவும் உள்ளவரே! மான்கன்று பொருந்திய கையை உடையவரே! கலைகளினுடைய உண்மைப் பொருளாக உள்ளவரே! யாரையும் புறக்கணிக்காமல் அருள் வழங்கும் மிழலைப் பெருமானே! வாழ்க்கை இறுதிக் காலத்தில் உடம்பில் கைகளும் கால்களும் செயலிழக்க அடியேன் நும்மை மறந்தாலும் அடியேனை மனத்தில் குறித்துக் கொண்டு காக்கவேண்டும்.

 

 

926 தீத்தொழி லான்றலை தீயிலிட் டுச்செய்த

வேள்விசெற்றீர்

பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை யீர்பிடித்

துத்திரியும்

வேய்த்தொழி லாளர் மிழலையுள் ளீர்விக்கி

யஞ்செழுத்தும்

ஓத்தொழிந் தும்மை மறக்கினு மென்னைக்

குறிக்கொண்மினே. 

4.096.4

 

  தீயை ஓம்பும் தக்கனுடைய தலையைத் தீயிலிட்டு அவன் செய்த வேள்வியை அழித்தவரே! பேய்களைத் தன் விருப்பப் படி ஏவல்கொள்ளும் காளியைத் தேவியாகப் பெற்றுள்ளவரே! தம் கையில் முக்கோலாகிய மூங்கிலைச் சுமந்து திரியும் அந்தணர்கள் மிகுந்த மிழலையில் உள்ளவரே! இறுதிக் காலத்தில் விக்கல் எடுப்பதனால் திருவைந்தெழுத்தை ஓதுதலை மறந்து அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொள்மின்.

 

 

927 தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் சுற்றியும்

பத்திமையால்

மேற்பட்ட வந்தணர் வீழியு மென்மையும்

வேறுடையீர்

நாட்பட்டு வந்து பிறந்தே னிறக்க

நமன்றமர்தம்

கோட்பட்டு நும்மை மறக்கினு மென்னைக்

குறிக்கொண்மினே. 

4.096.5

 

  தோள்களில் பொருந்திய பாம்புகளையும் கையில் சூலத்தையும் மகிழ்ந்து அணிந்தும், தொண்டாம் தன்மையால் மேம்பட்ட அந்தணர்கள் வாழும் வீழி நகரையும் அடியேனையும் சிறப்பாக உடையீர்! நெடுங்காலம் உயிர்வாழ்ந்து பின் இறக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இவ்வுலகில் பிறப்பெடுத்த அடியேன் இறக்குந்தருவாயில் இயமனுடைய ஏவலரால் கைப்பற்றப்பட்டு உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின்.

 

 

928 கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி

காட்டிலிட்ட

பண்டியிற் பட்ட பரிகலந் தீர்பதி

வீழிகொண்டீர்

உண்டியிற் பட்டினி நோயி லுறக்கத்தி

லும்மையைவர்

கொண்டியிற் பட்டு மறக்கினு மென்னைக்

குறிக்கொண்மினே. 

4.096.6

 

  உருத்திராக்கமாலை அணிந்த கழுத்தை உடையவரே! சுடுகாட்டில் எரிந்து புலால் நீங்கிய மண்டையோட்டினை உண்கலமாக உடையவரே! வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே! உணவு உண்ட போதும், உணவின்றிப் பட்டினியாய் இருக்கும் போதும் நோயுற்ற போதும், உறங்கும்போதும், ஐம்பொறிகளால் செயற்படுத்தப்படும் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின்.

 

 

929 தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் டீர்தூய

வெள்ளெருதொன்

றேற்றங்கொண் டீரெழில் வீழி மிழலை

யிருக்கைகொண்டீர்

சீற்றங்கொண் டென்மேற் சிவந்ததொர் பாசத்தால்

வீசியவெம்

கூற்றங்கண் டும்மை மறக்கினு மென்னைக்

குறிக்கொண்மினே. 

4.096.7

 

  இவ்வுலகைப்படைத்த பிரமனுடைய தலை ஒன்றனைக் கொய்தவரே! தூய வெள்ளிய காளையை வானகமாகக் கொண்டவரே! அழகிய வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே! கோபம் கொண்டு என்மேல் சிவந்ததொரு பாசக்கயிற்றை வீசும் கூற்றுவனைக் கண்டு அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின்.

 

 

930 சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ் சூடிச்சொக்

கம்பயின்றீர்

பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை யீர்படர்

தீப்பருக

விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலையுள்

ளீர்பிறவிச்

சுழிப்பட்டு நும்மை மறக்கினு மென்னைக்

குறிக்கொண்மினே. 

4.096.8

 

  நீர்ச் சுழிகளை உடைய கங்கையையும் சந்திரனையும் சூடிச் சுத்த நிருத்தம் என்ற ஆடலை நிகழ்த்துபவரே! பிறரால் பழிக்கப்படும் பாம்பினை இடுப்பில் இறுகச் சுற்றியவரே! நெற்றிவிழியிலிருந்து தோன்றிய நெருப்பு காமனது உடலைச் சாம்பலாக்குமாறு செய்தவரே! வீழிமிழலையில் உள்ளவரே! அடியேன் பிறவிக்கடலின் சுழியில் அகப்பட்டு உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின்.

 

 

931 பிள்ளையிற் பட்ட பிறைமுடி யீர்மறை

யோத வல்லீர்

வெள்ளையிற் பட்டதொர் நீற்றீர் விரிநீர்

மிழலையுள்ளீர்

நள்ளையிற் பட்டைவர் நக்கரைப் பிக்க

நமன்றமர்தம்

கொள்ளையிற் பட்டு மறக்கினு மென்னைக்

குறிக்கொண்மினே. 

4.096.9

 

  இளைய பிறைச்சந்திரனை முடியில் அணிந்தவரே! வேதம் ஓதவல்லவரே! வெள்ளிய நீற்றை அணிந்தவரே! நீர் விரிந்து பரவிய மிழலையில் இருப்பவரே! ஐம்புலப்பொறிகளின் நடுவில் அகப்பட்டு அவை என்னைக் கண்டு சிரித்து என்னைப் பலகாலும் தேய்க்கும்படி இயமதூதுவருடைய கொள்ளையிடும் செயலில் அகப்பட்டு அடியேன் உம்மை மறப்பினும் அடியேனைக் குறிக்கொண்மின்.

 

 

932 கறுக்கொண் டரக்கன் கயிலையைப் பற்றிய

கையுமெய்யும்

நெறுக்கென் றிறச்செற்ற சேவடி யாற்கூற்றை

நீறுசெய்தீர்

வெறிக்கொன்றை மாலை முடியீர் விரிநீர்

மிழலையுள்ளீர்

இறக்கின்று நும்மை மறக்கினு மென்னைக்

குறிக்கொண்மினே. 

4.096.10

 

  மனத்தில் ஆத்திரம் கொண்டு இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பயன்படுத்திய கைகளும் உடம்பும் நெரிக்கப்பட்டு நெறுநெறு என்ற ஒலியோடு அழியும்படி அவனை அழுத்திய திருவடிகளால் கூற்றுவனை அழித்தவரே! நறுமணம் கமழும் கொன்றை மாலையை முடியில் அணிந்தவரே! மிக்க நீர்வளமுடைய மிழலையில் உள்ளவரே! உயிர் போகும் நேரத்தில் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.