|
||||||||
நான்காம் திருமுறை-99 |
||||||||
4.099.திருவையாறு
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
954 அந்திவட் டத்திங்கட் கண்ணிய னையா
றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும்
பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச்
சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய
நம்பனையே.
4.099.1
வட்டமாகச் சடைக்கற்றையிலே தன் ஒளியைச் சிதறி வண்டுகள் ஒலிக்குமாறு சிறிது மலர்ந்த நந்தியாவட்டப் பூக்களோடு கொன்றைப் பூக்களும் கலக்குமாறு அணிந்த, நம்மால் விரும்பப்பெறும் பெருமானாய், மாலையிலே வட்ட வடிவோடு ஒளி வீசும் சந்திரனைப் பிறையாகக் கொண்டு முடிமாலையாக அணிந்து திருவையாற்றை விரும்பி உறைந்து அடியேனுடைய அறிவாகிய வட்டத்திடையே புகுந்து நிலையாக இருக்கும் பெருமானுடைய இருப்பினை அடியேன் பொய்ச்செயல் என்று கூறுவேனோ?
955 பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி
ருக்கவந்தி
நாடகக் கானங்கை முன்செங்க ணேனத்தின்
பின்னடந்த
காடகக் கால்கணங் கைதொழுங் காலெங்
கணாய்நின்றகால்
ஆடகக் காலரி மாறேர வல்லனை
யாற்றனவே.
4.099.2
பாடகம் என்ற மகளிர் கால் அணியை அணிந்த திருவடி, கழல் என்ற ஆடவர் காலணியை அணிந்த திருவடி, சூரியனுடைய கதிர்கள் மறைதற்குரிய மாலையிலே கூத்தாடும் திருவடிகள், பார்வதிக்கு முன்னர் சிவந்த கண்களை உடைய பன்றியின் பின்னே காட்டுப்பகுதியில் நடந்த திருவடிகள், அடியவர் கூட்டங்கள் வழிபடும் திருவடிகள், எமக்குப் பற்றுக்கோடாய் நிற்கும் திருவடிகள், பொன் போன்ற திருவடிகள், அரியாகிய திருமால் திருவடியின் இருப்பைப் பன்றி வடிவெடுத்துப் பூமியை அகழ்ந்து சென்று ஆராயுமாறு பேராற்றலுடையன என்னுமாறு ஐயாற்று எம்பெருமானுடைய திருவடிகள் உள்ளன.
திருச்சிற்றம்பலம்
4.099.திருவையாறு திருவிருத்தம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர். தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
954 அந்திவட் டத்திங்கட் கண்ணிய னையா றமர்ந்துவந்தென் புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே. 4.099.1
வட்டமாகச் சடைக்கற்றையிலே தன் ஒளியைச் சிதறி வண்டுகள் ஒலிக்குமாறு சிறிது மலர்ந்த நந்தியாவட்டப் பூக்களோடு கொன்றைப் பூக்களும் கலக்குமாறு அணிந்த, நம்மால் விரும்பப்பெறும் பெருமானாய், மாலையிலே வட்ட வடிவோடு ஒளி வீசும் சந்திரனைப் பிறையாகக் கொண்டு முடிமாலையாக அணிந்து திருவையாற்றை விரும்பி உறைந்து அடியேனுடைய அறிவாகிய வட்டத்திடையே புகுந்து நிலையாக இருக்கும் பெருமானுடைய இருப்பினை அடியேன் பொய்ச்செயல் என்று கூறுவேனோ?
955 பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி நாடகக் கானங்கை முன்செங்க ணேனத்தின் பின்னடந்த காடகக் கால்கணங் கைதொழுங் காலெங் கணாய்நின்றகால் ஆடகக் காலரி மாறேர வல்லனை யாற்றனவே. 4.099.2
பாடகம் என்ற மகளிர் கால் அணியை அணிந்த திருவடி, கழல் என்ற ஆடவர் காலணியை அணிந்த திருவடி, சூரியனுடைய கதிர்கள் மறைதற்குரிய மாலையிலே கூத்தாடும் திருவடிகள், பார்வதிக்கு முன்னர் சிவந்த கண்களை உடைய பன்றியின் பின்னே காட்டுப்பகுதியில் நடந்த திருவடிகள், அடியவர் கூட்டங்கள் வழிபடும் திருவடிகள், எமக்குப் பற்றுக்கோடாய் நிற்கும் திருவடிகள், பொன் போன்ற திருவடிகள், அரியாகிய திருமால் திருவடியின் இருப்பைப் பன்றி வடிவெடுத்துப் பூமியை அகழ்ந்து சென்று ஆராயுமாறு பேராற்றலுடையன என்னுமாறு ஐயாற்று எம்பெருமானுடைய திருவடிகள் உள்ளன.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|