LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- சமூகப் பங்களிப்பு

தமிழ்நாடு மேனாள் தேர்தல் ஆணையர் திரு.நரேஷ் குப்தா என்றும் நம் நினைவில் வாழ்வார்.

  • எளிமையான, நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என அறியப்படும் தமிழ்நாடு முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.
  • உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் நரேஷ் குப்தா. கணிதம், காந்திய சிந்தனை ஆகிய படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றார்.
  • தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்றவர் ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தா
  • அரசு காரில் பயணம் செய்வதை தவிர்த்தே வந்தார். சென்னை மின்சார ரயில் வண்டியில் எளிய மக்களோடு எளிய குடிமகனாக பயணம் செய்தார்.
  • தேர்தலில் தொழில்நுட்பத்தை புகுத்தியவர்.
  • தமிழ்நாடு தேர்தல்களில் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தியவர்
  • தமிழ்நாட்டில் உள்துறை செயலாளராகவும், மாநில திட்டக் குழுவின் உறுப்பினராகவும் செயலாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.
  • தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கியவர் என்று போற்றப்படுகிறார் நரேஷ் குப்தா.
  • மக்கள் அனைவரிடம் எளிமையாக பழகும் தன்மை கொண்டவரான இவர், காந்தியவாதியாக அறியப்படுகிறார்.
  • திமுக மற்றும் அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்த நரேஷ் குப்தா, 2 முதலமைச்சர்களுடன் நெருக்கம் பாராட்டாமல் இருந்து வந்தார்.
  • தேர்தல் கட்டுப்பாட்டு காலங்களில் மாவட்ட ஆட்சியர்களையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் பணியிட மாற்றம் செய்யும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர் நரேஷ் குப்தாதான்.
  • வாக்கு சதவீதத்தை எஸ்.எம்.எஸ் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கும் முறையை தொடங்கினார். பதற்றமான வாக்குச்சாவடிகளை அடையாளம் காணும் உத்தியை உருவாக்கினார்.
  • வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவை கண்காணிப்பது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை 2009-ம் ஆண்டே தேர்தலில் புகுத்தினார் நரேஷ் குப்தா.
  • இவர் சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார்.
by Swathi   on 11 Apr 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
முத்துராமலிங்க தேவர் முத்துராமலிங்க தேவர்
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலம் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலம்
தடம் பதித்த இயக்குநர் சேரன் தடம் பதித்த இயக்குநர் சேரன்
புகழ்பெற்ற தமிழ்‌ அறிஞர்‌ ஜி.யு.போப்‌புக்கு அவர் பிறந்த கனடாவின்‌ பிரின்ஸ்‌ எட்வர்ட்‌ தீவில்‌ உள்ள பெடெக்‌ நகரத்தில்‌ சிலை வைக்கிறது கனேடிய தமிழர்‌ பேரவை புகழ்பெற்ற தமிழ்‌ அறிஞர்‌ ஜி.யு.போப்‌புக்கு அவர் பிறந்த கனடாவின்‌ பிரின்ஸ்‌ எட்வர்ட்‌ தீவில்‌ உள்ள பெடெக்‌ நகரத்தில்‌ சிலை வைக்கிறது கனேடிய தமிழர்‌ பேரவை
பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார். பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.