இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும்.இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் மட்டுமே
இருக்கிறது.இங்குள்ளலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக
சொல்கிறார்கள். ஒருவருடைய ஆயுள்காலத்தில் கேதுதசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த தசை காலத்தில் இந்தக் கோயிலுக்குச் செல்வது மிக மிக
சிறப்பானது. விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் ஆரோக்கியத்துடன் சிறந்த வருமானத்தை தரவும் கைலாசநாதரிடம் வேண்டிக் கொள்ளலாம்.
கோரிக்கை நிறைவேறினால், சுவாமி, அம்பாளுக்கு விளைபொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கால்நடைகள் நோய் நொடியின்றி இருக்க
நந்திகேசுவரருக்கு பிரதோஷத்தன்று திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர்.காளஹஸ்தி கோயில் கோபுரம்
சேதமடைந்த நாள் அன்று ராஜபதி கோயில் கும்பாபிஷேகத்துக்கான முதல்கால பூஜை துவங்கியது. இதனால் ராஜபதியை தென் காளஹஸ்தி என்று
அழைக்கின்றனர்.
இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும். இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் மட்டுமே இருக்கிறது. இங்குள்ளலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள். ஒருவருடைய ஆயுள்காலத்தில் கேதுதசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த தசை காலத்தில் இந்தக் கோயிலுக்குச் செல்வது மிக மிக சிறப்பானது.
விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் ஆரோக்கியத்துடன் சிறந்த வருமானத்தை தரவும் கைலாசநாதரிடம் வேண்டிக் கொள்ளலாம். கோரிக்கை நிறைவேறினால், சுவாமி, அம்பாளுக்கு விளைபொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கால்நடைகள் நோய் நொடியின்றி இருக்க நந்திகேசுவரருக்கு பிரதோஷத்தன்று திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
காளஹஸ்தி கோயில் கோபுரம் சேதமடைந்த நாள் அன்று ராஜபதி கோயில் கும்பாபிஷேகத்துக்கான முதல்கால பூஜை துவங்கியது. இதனால் ராஜபதியை தென் காளஹஸ்தி என்று அழைக்கின்றனர். |