இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும்.இங்கு விநாயகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சிவலிங்கம், நடராஜர், சிவகாமி, தட்சிணாமூர்த்தி,
வள்ளி தெய்வானையுடன் முருகன் முதலான தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.பொதிகை மலையில் தவம் செய்து வந்த அகத்திய முனிவரின், முதல் சீடரான
உரோமச முனிவர், பிறவாவரம் பெற தன் குருவிடம் யோசனை கேட்டார். நான் உருவாக்கிய தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை தண்ணீரில் விடு. இவை
எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ, அவ்விடத்தில் சிவலிங்க பூஜை செய். நீ வழிபடும் சிவலிங்கம் கைலாசநாதர் என்று பெயர் பெறும். இதைச் செய்தால்
பிறவா நிலை அடையலாம், என்றார். உரோமச முனிவரும் அவ்வாறே செய்ய எட்டாவது மலர் ராஜபதியில் ஒதுங்கியது. அங்கு சிவலிங்கத்தை வைத்து
பூஜித்தார். மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இப்பகுதியில் இருந்ததால், இவ்வூர் ராஜபதி எனப்பட்டது. இந்த லிங்கம் அமைக்கப்பட்டிருந்த
இடத்தில் ஒரு கோயிலும் இருந்தது. 416 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் வெள்ளப் பெருக்கில் மூழ்கி அழிந்தது. தற்போது சிவனடியார்களின்
முயற்சியால் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.
இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும். இங்கு விநாயகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சிவலிங்கம், நடராஜர், சிவகாமி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன் முதலான தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். பொதிகை மலையில் தவம் செய்து வந்த அகத்திய முனிவரின், முதல் சீடரான உரோமச முனிவர், பிறவாவரம் பெற தன் குருவிடம் யோசனை கேட்டார்.
நான் உருவாக்கிய தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை தண்ணீரில் விடு. இவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ, அவ்விடத்தில் சிவலிங்க பூஜை செய். நீ வழிபடும் சிவலிங்கம் கைலாசநாதர் என்று பெயர் பெறும். இதைச் செய்தால் பிறவா நிலை அடையலாம், என்றார். உரோமச முனிவரும் அவ்வாறே செய்ய எட்டாவது மலர் ராஜபதியில் ஒதுங்கியது. அங்கு சிவலிங்கத்தை வைத்து பூஜித்தார்.
மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இப்பகுதியில் இருந்ததால், இவ்வூர் ராஜபதி எனப்பட்டது. இந்த லிங்கம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு கோயிலும் இருந்தது. 416 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் வெள்ளப் பெருக்கில் மூழ்கி அழிந்தது. தற்போது சிவனடியார்களின் முயற்சியால் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. |