LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

நீத்தல் விண்ணப்பம்

 

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட 
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் 
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105 
கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய் 
விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின் 
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே 
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106 
காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் 
வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார் 
ஊருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே 
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே. 107 
வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் 
மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று 
ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே 
தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே. 108 
செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள் 
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால் 
உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே 
வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. 109 
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே 
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி 
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே 
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. 110 
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட 
மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று 
மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 
செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே. 111 
தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று 
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ 
ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே 
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே. 112 
இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த 
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு 
ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 
பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே. 113 
பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று 
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி 
ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே 
வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே. 114 
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான்உன்மணி மலர்த்தாள் 
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே 
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 
நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே. 115 
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு 
விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ 
அடும்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கு அரசே 
கடும் தகையேன் உண்ணும் தெள்நீர் அமுதப் பெருங்கடலே. 116 
கடலினுள் நாய் நக்கி அங்கு உன் கருணைக் கடலின் உள்ளம் 
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார் 
உடல் இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 
மடலின் மட்டே மணியே அமுதே என்மது வெள்ளமே. 117 
வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள் பெற்றுத் துன்பத்து இன்றும் 
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார் 
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே. 118 
களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள 
வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம் 
ஒளிவந்த பூம்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே 
அளிவந்த எந்தைபிரான் என்னை ஆளுடை என் அப்பனே. 119 
என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன் 
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே 
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே. 120 
பொருளே தமியேன் புகல் இடமே நின் புகழ் இகழ்வார் 
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் 
அருளே அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே 
இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே. 121 
இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் 
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய் 
அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே 
மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே. 122 
மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள் தீக் கொளுவும் 
விடங்க என்தன்னை விடுதிகண்டாய் என் பிறவியை வேர் 
ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே 
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே. 123 
கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே 
வெம்புகின்றேனை விடுதிகண்டாய் விண்ணர் நண்ணுகில்லா 
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 
அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே. 124 
ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண் 
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத் 
தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து 
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே. 125 
ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் 
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு 
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் 
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே. 126 
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின் 
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் 
மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே 
உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே. 127 
உள்ளவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி 
வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப் 
பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா 
மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128 
எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த 
வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க 
உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் 
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே. 129 
பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த 
வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி 
வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக் 
குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே. 130 
கொழுமணியேர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி 
விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து 
அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் 
கழுமணி யேயினனுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே. 131 
புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே 
விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய் 
கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே 
துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே. 132 
குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம் 
விலங்கலெந் தாய்விட் டிடுதிகண்டாய்பொன்னின் மின்னுகொன்றை 
அலங்கலந் தாமரை மேனியிப் பாவொப்பி லாதவனே 
மலங்களைத் தாற்கழல் வன்தயிரிற்பொரு மத்துறவே. 133 
மத்தறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி 
வித்தறு வேனை விடுதிகண்டாய் வெண்டலையிலைச்சிக் 
கொத்தறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித் 
தத்தறு நீறுட னாரச் செஞ்சாந்தணி சச்சையனே. 134 
சச்சையனே மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம் 
விச்சையனே விட்டிடுதிகண்டாய் வெளியாய் கரியாய் 
பச்சையனே செய்ய மேனியனெ யொண்பட அரவக் 
கச்சையனே கடந்தாய்தடந்தாள அடற்கரியே. 135 
அடற்கரி போல்ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை 
விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்கல்லால் 
தொடற்கரியாய் சுடர் மாமணியே கடு தீச்சுழலக் 
கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே. 136 
கண்டது செய்து கருணைமட்டுப்பரு கிக்களித்து 
மிண்டுகின்றேனை விடுதிகண்டாய் நின் விரைமலர்த்தாள் 
பண்டுதந்தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக் 
கொண்டெனெந் தாய்களை யாய் களையாய குதுகுதுப்பே. 137 
குதுகுதுப்பின்றி றென்குறிப்பேசெய்து நின்குறிப்பில் 
விதுவிதுப் பேனை விடுதிகண்டாய்விரை யார்ந்தினிய 
மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து 
எதிர்வதெப் போது பயில்வி கயிலைப் பரம்பரனே. 138 
பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு 
விரும்பரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின் 
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம் 
பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே. 139 
பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ 
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம் 
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு 
அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே. 140 
அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால் 
விரைசேர் முடியாய் விடுதிகண்டாய் வெண் ணகைக்கருங்கண் 
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா 
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான் வந் தடர்வனவே. 141 
அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம் 
விடர்விட லேனை விடுதிகண்டாய் விரிந் தேயெரியுஞ் 
சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே 
தொடர்வரி யாம் தமியேன் தனி நீக்குந் தனித்துணையே. 142 
தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த 
வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினை யேனுடைய 
மனத்துணை யேஎன்தன் வாழ்முதலே எனக் கெய்ப்பில்வைப்பே 
தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே. 143 
வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு 
மிலைத்தலைந் தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றைக் 
கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும் 
மலைத்தலை வாமலை யாம்மணவாள என் வாழ்முதலே. 144 
முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கைவெந்நீரிற் கடிப் பமூழ்கி 
விதலைச் செய்வேனை விடுதிகண்டாய் விடக் கூன்மிடைந்த 
சிதலைச் செய்காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ 
திதலைச் செய்பூண்முலை மங்கைபங்கா என்சிவகதியே. 145 
கதியடி யேற்குன் கழல்தற்தருளவும் ஊன்கழியா 
விதியடி யேனை விடுதிகண்டாய் வெண்தலைமுழையிற் 
பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க அஞ்சி 
மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே. 146 
மன்னவனே யொன்று மாற்றியாச்சிறியேன் மகிழ்ச்சி 
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேதமெய்ந்நூல் 
சொன்னவனே சொற் கழிந்தவனே கழியாத் தொழும்பர் 
முன்னவனே பின்னும் ஆனவனேயிம் முழுதையுமே. 147 
முழுதயில் வேற்கண்ணியரென்னும் மூரித் தழல்முழுதும் 
விழுதனை யேனை விடுதிகண்டாய் நின்வெறி மலர்த்தாள் 
தொழுதுசெல்வான்நல்தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான் 
பழுதுசெய்வேனை விடேலுடையாய் உண்னைப் பாடுவனே. 148 
பாடிற்றிலேன் பணியேன் மணிநீயொளித் தாய்க்குப்பச்சூன் 
வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியற் தாங்கலறித் 
தேடிற்றிலேன் சிவனெவ்விடத்தான்எவர் கண்டனரென்று 
ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே. 149 
உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய் 
விழைதரு வேனை விடுதிகண்டாய் விடின் வேலைநஞ்சுண் 
மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் 
பழைதரு மாபரனேன்றென் றறைவன் பழிப்பினையே. 150 
பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து 
விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம் 
கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை 
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே. 151 
தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண் 
வீரஎன் தன்னை விடுதிகண்டாய் விடிலென்னைமிக்கார் 
ஆரடி யானென்னின் உத்தரகோச மங்கைக்கரசின் 
சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே. 152 
சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற் கென்று 
விரப்பிப்ப னென்னை விடுதிகண்டாய் விடின் வெங்கரியின் 
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு 
எரிப்பிச்சன் என்னையும்ஆளுடைப் பிச்சனென் றேசுவனே. 153 
ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து 
வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின் 
தேகடை யாயென்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக் 
காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே. 154 

 

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட 

விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் 

உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 

சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105 

 

கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய் 

விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின் 

உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே 

கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106 

 

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் 

வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார் 

ஊருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே 

வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே. 107 

 

வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் 

மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று 

ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே 

தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே. 108 

 

செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள் 

விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால் 

உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே 

வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. 109 

 

மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே 

வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி 

ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே 

பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. 110 

 

பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட 

மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று 

மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 

செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே. 111 

 

தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று 

வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ 

ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே 

ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே. 112 

 

இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த 

விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு 

ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 

பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே. 113 

 

பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று 

மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி 

ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே 

வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே. 114 

 

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான்உன்மணி மலர்த்தாள் 

வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே 

ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 

நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே. 115 

 

நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு 

விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ 

அடும்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கு அரசே 

கடும் தகையேன் உண்ணும் தெள்நீர் அமுதப் பெருங்கடலே. 116 

 

கடலினுள் நாய் நக்கி அங்கு உன் கருணைக் கடலின் உள்ளம் 

விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார் 

உடல் இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 

மடலின் மட்டே மணியே அமுதே என்மது வெள்ளமே. 117 

 

வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள் பெற்றுத் துன்பத்து இன்றும் 

விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார் 

உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 

கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே. 118 

 

களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள 

வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம் 

ஒளிவந்த பூம்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே 

அளிவந்த எந்தைபிரான் என்னை ஆளுடை என் அப்பனே. 119 

 

என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன் 

மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே 

உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 

அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே. 120 

 

பொருளே தமியேன் புகல் இடமே நின் புகழ் இகழ்வார் 

வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் 

அருளே அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே 

இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே. 121 

 

இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் 

விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய் 

அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே 

மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே. 122 

 

மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள் தீக் கொளுவும் 

விடங்க என்தன்னை விடுதிகண்டாய் என் பிறவியை வேர் 

ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே 

கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே. 123 

 

கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே 

வெம்புகின்றேனை விடுதிகண்டாய் விண்ணர் நண்ணுகில்லா 

உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே 

அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே. 124 

 

ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண் 

டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத் 

தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து 

ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே. 125 

 

ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் 

வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு 

அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் 

பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே. 126 

 

பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின் 

வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் 

மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே 

உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே. 127 

 

உள்ளவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி 

வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப் 

பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா 

மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128 

 

எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த 

வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க 

உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் 

பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே. 129 

 

பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த 

வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி 

வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக் 

குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே. 130 

 

கொழுமணியேர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி 

விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து 

அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் 

கழுமணி யேயினனுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே. 131 

 

புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே 

விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய் 

கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே 

துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே. 132 

 

குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம் 

விலங்கலெந் தாய்விட் டிடுதிகண்டாய்பொன்னின் மின்னுகொன்றை 

அலங்கலந் தாமரை மேனியிப் பாவொப்பி லாதவனே 

மலங்களைத் தாற்கழல் வன்தயிரிற்பொரு மத்துறவே. 133 

 

மத்தறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி 

வித்தறு வேனை விடுதிகண்டாய் வெண்டலையிலைச்சிக் 

கொத்தறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித் 

தத்தறு நீறுட னாரச் செஞ்சாந்தணி சச்சையனே. 134 

 

சச்சையனே மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம் 

விச்சையனே விட்டிடுதிகண்டாய் வெளியாய் கரியாய் 

பச்சையனே செய்ய மேனியனெ யொண்பட அரவக் 

கச்சையனே கடந்தாய்தடந்தாள அடற்கரியே. 135 

 

அடற்கரி போல்ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை 

விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்கல்லால் 

தொடற்கரியாய் சுடர் மாமணியே கடு தீச்சுழலக் 

கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே. 136 

 

கண்டது செய்து கருணைமட்டுப்பரு கிக்களித்து 

மிண்டுகின்றேனை விடுதிகண்டாய் நின் விரைமலர்த்தாள் 

பண்டுதந்தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக் 

கொண்டெனெந் தாய்களை யாய் களையாய குதுகுதுப்பே. 137 

 

குதுகுதுப்பின்றி றென்குறிப்பேசெய்து நின்குறிப்பில் 

விதுவிதுப் பேனை விடுதிகண்டாய்விரை யார்ந்தினிய 

மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து 

எதிர்வதெப் போது பயில்வி கயிலைப் பரம்பரனே. 138 

 

பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு 

விரும்பரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின் 

அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம் 

பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே. 139 

 

பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ 

வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம் 

ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு 

அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே. 140 

 

அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால் 

விரைசேர் முடியாய் விடுதிகண்டாய் வெண் ணகைக்கருங்கண் 

திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா 

வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான் வந் தடர்வனவே. 141 

 

அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம் 

விடர்விட லேனை விடுதிகண்டாய் விரிந் தேயெரியுஞ் 

சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே 

தொடர்வரி யாம் தமியேன் தனி நீக்குந் தனித்துணையே. 142 

 

தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த 

வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினை யேனுடைய 

மனத்துணை யேஎன்தன் வாழ்முதலே எனக் கெய்ப்பில்வைப்பே 

தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே. 143 

 

வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு 

மிலைத்தலைந் தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றைக் 

கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும் 

மலைத்தலை வாமலை யாம்மணவாள என் வாழ்முதலே. 144 

 

முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கைவெந்நீரிற் கடிப் பமூழ்கி 

விதலைச் செய்வேனை விடுதிகண்டாய் விடக் கூன்மிடைந்த 

சிதலைச் செய்காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ 

திதலைச் செய்பூண்முலை மங்கைபங்கா என்சிவகதியே. 145 

 

கதியடி யேற்குன் கழல்தற்தருளவும் ஊன்கழியா 

விதியடி யேனை விடுதிகண்டாய் வெண்தலைமுழையிற் 

பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க அஞ்சி 

மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே. 146 

 

மன்னவனே யொன்று மாற்றியாச்சிறியேன் மகிழ்ச்சி 

மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேதமெய்ந்நூல் 

சொன்னவனே சொற் கழிந்தவனே கழியாத் தொழும்பர் 

முன்னவனே பின்னும் ஆனவனேயிம் முழுதையுமே. 147 

 

முழுதயில் வேற்கண்ணியரென்னும் மூரித் தழல்முழுதும் 

விழுதனை யேனை விடுதிகண்டாய் நின்வெறி மலர்த்தாள் 

தொழுதுசெல்வான்நல்தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான் 

பழுதுசெய்வேனை விடேலுடையாய் உண்னைப் பாடுவனே. 148 

 

பாடிற்றிலேன் பணியேன் மணிநீயொளித் தாய்க்குப்பச்சூன் 

வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியற் தாங்கலறித் 

தேடிற்றிலேன் சிவனெவ்விடத்தான்எவர் கண்டனரென்று 

ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே. 149 

 

உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய் 

விழைதரு வேனை விடுதிகண்டாய் விடின் வேலைநஞ்சுண் 

மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் 

பழைதரு மாபரனேன்றென் றறைவன் பழிப்பினையே. 150 

 

பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து 

விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம் 

கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை 

தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே. 151 

 

தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண் 

வீரஎன் தன்னை விடுதிகண்டாய் விடிலென்னைமிக்கார் 

ஆரடி யானென்னின் உத்தரகோச மங்கைக்கரசின் 

சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே. 152 

 

சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற் கென்று 

விரப்பிப்ப னென்னை விடுதிகண்டாய் விடின் வெங்கரியின் 

உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு 

எரிப்பிச்சன் என்னையும்ஆளுடைப் பிச்சனென் றேசுவனே. 153 

 

ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து 

வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின் 

தேகடை யாயென்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக் 

காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே. 154 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.