LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஒன்பதாம் திருமுறை-5

 

கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா 
கோயில் - மின்னார் உருவம்
195 மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளி கைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்ப லத்துள்
என்னார் அமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே? 1
196 ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டுயர் வார்
மூவா யிரவர் தங்க ளோடு முன் அரங்(கு) ஏறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்று கொலோ. 2
197 முத்தீ யாளர் நான் மறையர் மூவா யிர வர்நின்னோ(டு)
ஒத்தே வாழும் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள்
அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ? 3
198 மானைப் புரையும் மடமென் நோக்கி மாமலை யாளோடும்
ஆனைஞ் சாடும் சென்னி மேலோர் அம்புலி சூடும்அரன்
தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்றுகொலோ? 4
199 களிவான் உலகில் கங்கை நங்கை காதலனே ! அருளென்(று)
ஒளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடியார்க்(கு) அருளும்
தெளிவார் அமுதே ! தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே ! உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ? 5
200 பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச்
சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்(து) ஆடுகின்ற
காரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ? 6
201 இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன் இருபது தோளும்இற
மலைதான் எடுத்த மற்ற வற்கு வாளடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன்(று) எய்த வில்வி செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொன் கையி னானைக் காண்பதும் என்றுகொலோ? 7
202 வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்டதிறல்
செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி யாடும் அணிதில்லை அம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி றையை என்றுகொல் எய்துவதே. 8
203 நெடுயா னோடு நான் முகனும் வானவரும் நெருங்கி
முடியான் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால்தி ரட்டும் அணிதில்லை அம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ? 9
204 சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாழிதன்னைக் 
காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த
ஆரா இன்சொற் கண்டரா தித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்
பேரா வுலகிற் பெருமை யோடும் பேரின்பம் எய்துவரே. 10
திருச்சிற்றம்பலம்

 

கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா 

கோயில் - மின்னார் உருவம்

 

 

195 மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளி கைசூழப்

பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத்

தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்ப லத்துள்

என்னார் அமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே? 1

 

 

196 ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர்

ஆவே படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டுயர் வார்

மூவா யிரவர் தங்க ளோடு முன் அரங்(கு) ஏறிநின்ற

கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்று கொலோ. 2

 

 

197 முத்தீ யாளர் நான் மறையர் மூவா யிர வர்நின்னோ(டு)

ஒத்தே வாழும் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத்

தெத்தே யென்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள்

அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ? 3

 

 

198 மானைப் புரையும் மடமென் நோக்கி மாமலை யாளோடும்

ஆனைஞ் சாடும் சென்னி மேலோர் அம்புலி சூடும்அரன்

தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக்

கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்றுகொலோ? 4

 

 

199 களிவான் உலகில் கங்கை நங்கை காதலனே ! அருளென்(று)

ஒளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடியார்க்(கு) அருளும்

தெளிவார் அமுதே ! தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்

ஒளிவான் சுடரே ! உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ? 5

 

 

200 பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான்

வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச்

சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்(து) ஆடுகின்ற

காரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ? 6

 

 

201 இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன் இருபது தோளும்இற

மலைதான் எடுத்த மற்ற வற்கு வாளடு நாள்கொடுத்தான்

சிலையால் புரமூன்(று) எய்த வில்வி செம்பொனின் அம்பலத்துக்

கலையார் மறிபொன் கையி னானைக் காண்பதும் என்றுகொலோ? 7

 

 

202 வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்டதிறல்

செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்த

அங்கோல் வளையார் பாடி யாடும் அணிதில்லை அம்பலத்துள்

எங்கோன் ஈசன் எம்மி றையை என்றுகொல் எய்துவதே. 8

 

 

203 நெடுயா னோடு நான் முகனும் வானவரும் நெருங்கி

முடியான் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளை

அடியார் அலகி னால்தி ரட்டும் அணிதில்லை அம்பலத்துக்

கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ? 9

 

 

204 சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாழிதன்னைக் 

காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த

ஆரா இன்சொற் கண்டரா தித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்

பேரா வுலகிற் பெருமை யோடும் பேரின்பம் எய்துவரே. 10

 

 

 

திருச்சிற்றம்பலம்

 

by   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.