LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்

ஓங்கி உலகளந்த தமிழர் - 15 : செய்தாலும் கெடும்; செய்யாவிட்டாலும் கெடும்!

- முனைவர் கி.செம்பியன்

செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்    (466)

(செய்தக்க அல்ல செயக் கெடும் -- அரசன் தன் வினைகளுட் செய்தக்கனவல்லவற்றைச் செய்தலாற் கெடும்; செய்தக்க செய்யாமையானும் கெடும் -- இனி அதனானேயன்றிச் செய்யத்தக்கனவற்றைச் செய்யாமை தன்னானுங் கெடும்
செய்யத்தக்கனவல்லவாவன -- பெரிய முயற்சியினவும், செய்தாற் பயனில்லனவும், அது சிறியதாயினவும், ஐயமாயினவும், பின்றுயர்விளைப்பனவுமெனவிவை, செய்யத்தக்னவாவன. அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்;யாமைகளின் அறிவு ஆண்மை பெருமையென்னும் மூவகையாற்றலுட் பொருள் படையென இருவகைத்தாய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாமாகலான், இரண்டுங் கேட்டிற்கேதுவாயின -- பரிமேலழகர்)

நெற்பயிருக்கு ஒரு நேரத்தில் நீர் நிறுத்தவேண்டும்; ஒரு நேரத்தில் நெற்பயிரைக் காயவிட வேண்டும்!

நீரை நிறுத்துவது நீதியா, காயவிடுவது நீதியா?

எல்லா நேரத்திலும் நீர் உணவாகாது!

எல்லா நேரத்திலும் காய்தலும் நலமாகாது!

செய்யத்தகாதவற்றைச் செய்;தாலும் கெடும்; செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் கெடும்.

கட்டடத்திற்கு இன்றுதான் கான்கிரீட் தளம் இட்டார்கள்; ஆறுமணி நேரம்வரை அதில் தண்ணீர் விழக்கூடாது; உலரவிட வேண்டும்; அதன் பின்பு பாத்தி கட்டிப் பத்து நாட்களுக்குத் தண்ணீர் கட்டவேண்டும்!

தண்ணீர் ஊற்றக்கூடாத நேரத்தில் ஊற்றினால் கெடும்; ஊற்றவேண்டிய நேரத்தில் ஊற்றாவிட்டாலும் கெடும்!

நீரை நிறுத்துவது நீதியா, உலரவிடுவது நீதியா?

மாணவர்கள் விடைத்தாளி;ல் எழுதக்கூடாத பதிலை எழுதினால் மதிப்பெண் இல்லை; எழுதவேண்டியதை எழுதாமல் விட்டாலும் மதிப்பெண் இல்லை;!

எழுதுவது சரியா, எழுதாமல் விடுவது சரியா?

ஆசிரியர்கள் சொல்லக்கூடாத கருத்தைச் சொன்னால் கேடு; சொல்லவேண்டியதைச்; சொல்லாமல் விட்டாலும் கேடு!

நோயாளிக்குப் போடக்கூடாத ஊசியைப் போட்டாலும் சாவான்; போடவேண்டிய ஊசியைப் போடாவிட்டாலும் சாவான்!

போடுவது நீதியா, போடக்கூடாதது நீதியா?

உண்ணக்கூடாததை உண்டாலும் நோய்; உண்ணவேண்டியதை உண்ணாமல் விட்டாலும் நோய்!

காவலர்கள் பிடிக்கவேண்டியவர்களைப் பிடிக்காமல் விட்டாலும் துன்பம்; பிடிக்கக்கூடாதவர்களைப் பிடித்தாலும் துன்பம்!

ஓர் அரசு போடக்கூடாத சட்டத்தைப் போட்டாலும் இன்னல்; போடவேண்டிய சட்டத்தைப் போடாமல் விட்டாலும் இன்னல்!

நீதிபதிகள் கொடுக்கவேண்டிய தண்டனையைக் கொடுக்காவிட்டாலும் தீங்கு; கொடுக்கக்கூடாத தண்டனையைக் கொடுத்தாலும் தீங்கு!

இந்தக் குறள் யாருக்காக?

மன்னருக்கா, உழவருக்கா, மாணவருக்கா, ஆசிரியர்க்கா, பொறியாளர்க்கா, மருத்துவர்க்கா, நோயாளிக்கா, அரசுக்கா, காவலர்க்கா, நீதிபதிக்;கா?

தமிழ்நாட்டார்க்கு மட்டுமா, இந்தியாவிற்கு மட்டுமா, உலகத்தார்க்காகவா?

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

நாங்கள் மட்டும் படிக்கமாட்டோம்!

ஏனெனில்,

நாங்கள் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று முழங்கும் பச்சைத் தமிழர்கள்!

(தொடரும்....)

by Swathi   on 18 May 2016  1 Comments
Tags: திருக்குறள்   ஓங்கி உலகளந்த தமிழர்   Ongi Ulagalantha Thamizhar              
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - திருக்குறள் மேல் அதிகப் பற்றுக்கொண்ட திரு. முருகன் அவர்களுக்கு திருக்குறள் நூலை வழங்கியபோது. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - திருக்குறள் மேல் அதிகப் பற்றுக்கொண்ட திரு. முருகன் அவர்களுக்கு திருக்குறள் நூலை வழங்கியபோது.
கருத்துகள்
26-Aug-2016 11:58:19 ராபர்ட் பெல்லார்மின் said : Report Abuse
நல்ல கருத்துக்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.