|
||||||||
ஓர் உறவு பூத்த பாட்டு |
||||||||
மிக நீண்ட நாட்கள்
இந்தப் பூமிக்கும் வானுக்கும் இடையில் நிலவுகின்ற
தூரத்தின் அளவுக்கு
உனக்கும் எனக்கும் பிரிவு இருந்தது
நட்பில்லை.
இருந்தாலும் நாம்
புறாக்களைச் சாகடித்தல் கிடையாது.
நாம் நடந்த பாதைகளில்
கிடந்த புழுக்கள்
நசிபட்டுச் செத்ததாய் வரலாறு இல்லை.
நாம் சந்திக்கும் வேளைகளில்
உன் முகத்தில் சந்திரன் உதிக்கவில்லை.
என் முகத்தில்
ரோஜா மலரவில்லை.
அவ்வளவே!
நீயும் நானும்
அண்மையில்தான் இருந்தோம்.
நம் உறவுதான்
நான் முன்னர் சொன்னதைப்போல் பூமிக்கும் வானுக்கும்
இடைப்பட்ட தூரமாய்
நெருங்க முடியாமல் தினசரியும் நீண்டது.
இன்று
தற்செயலாய் நெருங்கிவிட்டோம்.
வானமும் பூமியும் ஒட்டினால்
உலகம் இருக்காது
அதைப்போல
நமக்குள்ளும் இருந்த உறவில்லாத் தன்மை
சிதறியது!
நீ சந்திரனை மட்டுமல்ல
இரவு பூத்த வெள்ளிகளையும் உன் முகத்தில்
சுமந்து கொண்டு சிரித்தாய்!
நான் நமக்குத் தெரியாமல் ஏற்பட்ட
மனிதாபிமானத்தின் பாரிய இணைப்புபற்றி
வியந்தபடி
ரோஜாக்களுக்குப் பாத்திகட்டி நீர்விட்டேன்!
உன் பற்கள் இன்னும் கறள்பிடிக்கவில்லைதான்!
மிக நீண்ட நாட்கள் இந்தப் பூமிக்கும் வானுக்கும் இடையில் நிலவுகின்ற தூரத்தின் அளவுக்கு உனக்கும் எனக்கும் பிரிவு இருந்தது நட்பில்லை.
இருந்தாலும் நாம் புறாக்களைச் சாகடித்தல் கிடையாது. நாம் நடந்த பாதைகளில் கிடந்த புழுக்கள் நசிபட்டுச் செத்ததாய் வரலாறு இல்லை.
நாம் சந்திக்கும் வேளைகளில் உன் முகத்தில் சந்திரன் உதிக்கவில்லை. என் முகத்தில் ரோஜா மலரவில்லை. அவ்வளவே!
நீயும் நானும் அண்மையில்தான் இருந்தோம். நம் உறவுதான் நான் முன்னர் சொன்னதைப்போல் பூமிக்கும் வானுக்கும் இடைப்பட்ட தூரமாய் நெருங்க முடியாமல் தினசரியும் நீண்டது.
இன்று தற்செயலாய் நெருங்கிவிட்டோம். வானமும் பூமியும் ஒட்டினால் உலகம் இருக்காது அதைப்போல நமக்குள்ளும் இருந்த உறவில்லாத் தன்மை சிதறியது!
நீ சந்திரனை மட்டுமல்ல இரவு பூத்த வெள்ளிகளையும் உன் முகத்தில் சுமந்து கொண்டு சிரித்தாய்!
நான் நமக்குத் தெரியாமல் ஏற்பட்ட மனிதாபிமானத்தின் பாரிய இணைப்புபற்றி வியந்தபடி ரோஜாக்களுக்குப் பாத்திகட்டி நீர்விட்டேன்!
உன் பற்கள் இன்னும் கறள்பிடிக்கவில்லைதான்! |
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|