LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

தமிழறிஞர் முனைவர் ப. குமார் (1976)

முனைவர் ப. குமார் (1976) … தமிழாய்வுலகில் இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர். செயலாற்றல் மிகுந்த ஒரு ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் தமிழில் முதுகலைப் பட்டம் (2000), ஆய்வியல் நிறைஞர் பட்டம் (2001) முனைவர் பட்டம் (2008) ஆகியவற்றைப் பெற்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். நூலகவியல், வங்கமொழி ஆகியவற்றில் சான்றிதழ் படிப்புகளையும் மேற்கொண்டுள்ளார். சில மாதங்கள் மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தில் பணியாற்றியபிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் 2008 முதல் 2012 வரை சிறப்புநிலை விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் திருவாரூர் தமிழ்நாடு நடுவண் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக இணைந்து, பணியாற்றிவருகிறார். ஆய்வியல் நிறைஞர் படிப்பிற்காக ‘மொழிபெயர்ப்பில் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் ஒரு மிகச் சிறப்பான ஆய்வை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, முனைவர் பட்ட ஆய்விற்காக ‘ இயந்திர மொழிபெயர்ப்பு’ என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டார். இயந்திர மொழிபெயர்ப்பிற்குத் தேவையான அகராதி எவ்வாறு அமையவேண்டும் என்பதே அவரது ஆய்வு. கணினிமொழியியல் நோக்கில் இந்த ஆய்வை அவர் மேற்கொண்டுள்ளார். தற்போது மனித மூளைக்காக உருவாக்கப்பட்டுள்ள அகராதிகள் இயந்திர மொழிபெயர்ப்பிற்குப் போதுமானது இல்லை என்பதை நிறுவி, ஜேம்ஸ் புஸ்ட்ஜோவ்ஸ்கி ( James Pustejovsky) என்ற கணினிமொழியியலாளர் முன்வைத்துள்ள ‘உருவாக்க அகராதி’ (Generative Lexicon) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அகராதி அமைக்கப்படவேண்டும் என்று நிறுவியுள்ளார். மிகக் கடுமையான ஒரு தலைப்பை எடுத்து, வெற்றி கண்டுள்ளார் இவர். இன்றைக்கு மிகத் தேவையான ஒரு ஆய்வாக இது அமைந்துள்ளது. ‘மொழிபெயர்ப்பில் சிக்கல்கள்’ என்ற ஒரு நூலின் ஆசிரியராகவும், ‘பிங்கல நிகண்டு ‘ என்ற நூலின் தொகுப்பாளராகவும், ‘ஆய்வுக்கதிர்’ என்ற ஒரு தொகுப்பிற்குப் பதிப்பாளராகவும் இருந்துள்ளார்.

தேசிய, உலக அளவிலான கருத்தரங்குகளில் பங்கேற்று, பல ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார். மொழிபெயர்ப்பியல், அகராதியியல், தரவுமொழியியல் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்திவருகிறார். ஆய்வுக் கட்டுரைக்கான போட்டிகள் பலவற்றில் பங்கேற்று, பல பரிசுகளைப் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் பல பணிமனைகளையும் கருத்தரங்குகளையும் என்னுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்த உதவியுள்ளார். முதுகலை மாணவர்களுக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் அன்றும் இன்றும் துணையாக இருந்து செயல்படும் ஒரு பேராசிரியர் இவர் என்றால் அது மிகையாது. அவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்!

 

-தெய்வ சுந்தரம் நயினார்

by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.