LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- அலை ஒசை

முதல் பாகம் - பூகம்பம்-மோட்டார் விபத்து

 

மாசி மாதத்து மனோரம்மியமான மாலை நேரத்தில் ராஜம்பேட்டையை நெருங்கிச்சென்ற சாலையில் இரட்டை மாடு பூட்டிய பெட்டி வண்டி ஒன்று ஜாம் ஜாம் என்றுபோய்க்கொண்டிருந்தது. காளையின் கழுத்தில் கட்டியிருந்த பெரிய சதங்கை மணிகள் கலீர்கலீர் என்று சப்தித்தன. வண்டியும் வண்டி மாடுகளும் வண்டிக்காரன் கட்டிய முண்டாசும் அந்த வண்டி பட்டாமணியம் கிட்டாவய்யரின் வண்டியென்பதை உலகமறியத் தெரிவித்தன. வண்டிக்குள்ளே கிட்டாவய்யரின் மூத்த புதல்வன் சூரியநாராயணன் பெட்டி படுக்கை சகிதமாக வீற்றிருந்தான். அவனுடைய உள்ளம், தன்னுடைய அருமைத் தங்கை லலிதாவைப் பற்றியும்அவளைப் பார்ப்பதற்காகப் பட்டினத்திலிருந்து வரப் போகிற மேதாவி எப்படியிருப்பான் என்பது பற்றியும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. காரணமில்லாமலே அந்த மேதாவியின் பேரில் சூரியாவுக்குச் சிறிது கோபமும் உண்டாகியிருந்தது. "மகா பெரிய மனிதன் இவன்! பெண்ணைப் பார்க்க வருவதாம்! பிடித்திருக்கிறது - இல்லை என்று தீர்ப்புச் சொல்வதாம்! சுத்த வெட்கக்கேடு!" என்ற எண்ணம் தோன்றி அவன் மனத்தை உறுத்தியது. முந்தா நாள் இரவுதாமோதரம்பிள்ளை வீட்டு மச்சின் பேரில் நடந்த சம்பாஷணையும் இடை இடையே அவனுக்குநினைவு வந்து கொண் டிருந்தது. 
 
     ராஜம்பேட்டை இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும்பொருட்டுச் சூரியா வண்டி முகப்பில் வைத்திருந்த பெட்டி படுக்கையின் மேலாக எட்டிப்பார்த்தான். சமீபத்தில் ஒரு மைல் கல் தென்பட்டது. அதில் பெரிய கறுப்பு எழுத்தில் 3 என்றுஎழுதியிருந்தது. "இன்னும் மூன்று கல் இருக்கிறது. இருட்டுவதற்கு முன் போய் விடலாமா, முருகா!" என்று சூரியா கேட்டான். "நல்லாப் போய்விடலாம்! நீங்கள் மட்டும் 'மாட்டை விரட்டாதே' என்று சும்மாச் சும்மாச் சொல்லியிரா விட்டால் இத்தனை நேரம் போய்ச்சேர்ந்திருப்போம்! அம்மாகூட, 'சாயங்காலம் காப்பி சாப்பிடச் சின்னய்யாவை வீட்டுக்குஅழைத்து வந்துவிடு' என்று சொல்லியிருந்தாங்க!" என்றான் வண்டிக்கார முருகன். இப்படி அவன்சொல்லிக் கொண்டிருக்கும் போது, முன்னால் சுமார் அரை பர்லாங்கு தூரத்தில் ஒரு கட்டை வண்டி போய்க்கொண்டிருப்பதைச் சூரியா கவனித்தான். அந்த வண்டிக்குள்ளே யாரோ பெண் பிள்ளைகள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. அந்த வண்டியும் ராஜம்பேட்டைக்குத்தானே போக வேண்டும்? வண்டிக்குள் இருப்பவர்கள் யாராயிருக்கும்?-என்று சூரியா சிந்தித்துக் கொண்டிருந்தபோதே பின்னால் 'பாம் பாம்' என்று முழங்கிக் கொண்டுஒரு மோட்டார் வண்டி வந்தது. 
 
     "பாருங்க, சின்னய்யா! மோட்டார் வண்டியிலே ஏறி விட்டாலே தலை கிறுங்கிப்போவுது! இவன் வந்துட்டா, மற்ற வண்டியெல்லாம் உடனே ஒதுங்கிக்கொள்ள வேணுமாம்!  மோட்டார் வண்டிக்கு என்று தனியாக ரோடு போட்டுக் கொள் கிறதுதானே!" என்று புகார்சொல்லிக்கொண்டே முருகன் வண்டியைக் கொஞ்சம் சாலை ஓரத்தில் ஒதுக்கினான்.மோட்டார் வண்டி அவர்களைத் தாண்டி ஒரு பெரிய புழுதிப் படலத்தை வாரித் தூவிவிட்டு மேலேசென்றது. அது போன உடன் முருகன், "சின்னய்யாகூடப் படிச்சுப் பெரிய உத்தியோகத்துக்கு வந்து மோட்டார்கார் வாங்க வேணும்!" என்றான். "அப்போது, மோட்டார் காரர்களைப் பற்றி நீ இப்போது திட்டியது போலத்தானே பத்துப்பேர் என்னையும் திட்டுவார்கள்!" என்றான் சூரியா. இதற்குள் எதிரே கொஞ்ச தூரத்தில் நடந்த சம்பவம் அவர்களுடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளிவைத்தது. 
 
      பெட்டி வண்டியைத் தாண்டிச் சென்ற மோட்டார், கட்டை வண்டியையும் சாலை ஓரமாகஒதுங்கச் செய்வதற்காகப் 'பாம்' 'பாம்' என்று முழங்கியது. கட்டை வண்டிக்காரன் இடது புறத்தில்ஒதுக்குவதற்குப் பதிலாக, வலது பக்கத்தில் ஒதுங்க முயன்றான். கட்டை வண்டியை வலப்பக்கமாகக் கடக்க முயன்ற மோட்டார் அது முடியாதென்று தெரிந்து அதி வேகமாக ஒருதிரும்புத் திரும்பி இடப்பக்கம் தாண்டிச் சென்றது. போகும்போது வண்டி மாட்டின்மீதுஉராய்ந்து விடும் போல அவ்வளவு நெருக்கமாகச் சென்றபடியால் வண்டி மாடுகள் மிரண்டுசாலையோரத்துப் பள்ளத்தில் இறங்கி விட்டன. அப்படி இறங்கியதில் மாடுகளை மூக்கணையுடன் பிணைத்திருந்த கயிறுகள் கழன்றன. வண்டிக்காரன் காபரா அடைந்து கீழே குதித்தான். வண்டியின் மூக்கணை மேலே போயிற்று. வண்டியின் பின் தட்டுக் கீழே வந்துதரையைத் தொட்டது. வண்டிக்குள்ளிருந் தவர்கள் சறுக்குமரத்திலிருந்து வழுக்கி விழுகிறவர்களைப்போல உருண்டுவந்து வெளியே தரையில் விழுந்தார்கள். அவர்கள் மேலேசாமான்கள் உருண்டு விழுந்தன. 
 
     இத்தகைய கட்டைவண்டி விபத்தை உண்டாக்கிய மோட்டார்வண்டி அதை மறைப்பதற்கு ஒரு பெரிய புழுதித் திரையையும் உண்டாக்கிவிட்டு மறுகணமே தூரத்தில் மறைந்து போய்விட்டது. புழுதி மறைந்தபடியால் மேற்படி விபத்தைப்பற்றி நடந்ததைக்காட்டிலும் அதிகமாகச் சூரியா மிகைப்படுத்தி எண்ணிக் கொண்டான். "முருகா! ஓட்டு! ஓட்டு! வண்டி குடையடித்து விட்டது போலிருக்கிறதே! சீக்கிரம் ஓட்டு!" என்று பதறிக்கொண்டே கூறினான். முருகனும் வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு போய்ச் சம்பவம் நடந்த இடத்து க்குச் சமீபத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். "சின்னய்யா! நம்ம அத்தை அம்மாபோல இருக்கிறதே! பம்பாய் அம்மாவும் அவங்க பொண்ணுங்கூட இருக்காங்களே! சாமி ஆண்டவனே!ஒருத்தருக்கும் ஒண்ணும் இல்லாமல் இருக்க வேண்டும்!" என்று வண்டிக்காரன் சொன்னதுஒன்றும் சூரியாவின் காதில் விழவில்லை. வண்டியிலிருந்து அவன் பளிச்சென்று குதித்துக்குடையடித்த வண்டியை நெருங்கி ஓட்டமாக ஓடினான். 
 
     குடை சாய்ந்த வண்டியின் பின்புறச் சட்டங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பம்பாய் ராஜம்மாள் உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் மூட்டைகள் சிதறிக் கிடந்தன. ஒருதகரப் பெட்டி இன்னும் வண்டிக்குள்ளேயே இருந்து கொண்டு தானும் கீழே விழலாமாவேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. ராஜம்மாளுக்கு வண்டிச் சட்டத்தைத் தான்விட்டால் அந்தப் பெட்டி தன் தலையில் விழுந்து விடும் என்ற பயம் தோன்றியிருந்தது.ஏற்கெனவே நோயினால் மெலிந்திருந்த அவளுடைய முகம் மேற்படி பயத்தினால் வெருண்டதோற்றம் அளித்தது. ஆனால், அவளுடைய பயத்துக்குக் காரணம் இது மட்டுந்தானா? "அம்மா!அம்மா! இதோ நான் வெள்ளத்தில் முழுகப் போகிறேன். என் மேல் அலை வந்து மோதுகிறது. யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்! இதோ முழுகப் போகிறேன்!" என்று அவளுடைய செல்வக் குமாரி சீதா அலறிக்கொண்டிருந்ததும் ராஜம்மாளின் பீதிக்கு ஒரு காரணமாயிருக்கலாமல்லவா? 
 
     ராஜத்துக்கு நாலைந்து அடி தூரத்தில் தரையில் விழுந்திருந்த இன்னொரு ஸ்திரீ,"ஐயோ! அப்பா!..." என்று முனகிக் கொண்டே மெதுவாக முயன்று எழுந்து உட்கார்ந்தாள்."மோட்டார் சத்தம் கேட்டவுடனேயே 'வண்டியை ஒதுக்கி ஓட்டடா' என்று அடித்துக்கொண்டேன் கேட்டால்தானே?" என்று வண்டிக்காரனுக்கு வாய் நிறைந்த ஆசீர்வாதங்களைச்செய்தாள். பிறகு, "ராஜம்! உனக்குக் காயம் கீயம் ஒன்றும் படவில்லையே!" என்று கவலை நிறைந்த குரலில் கேட்டாள். ஏதோ பயங்கரமான பெரும் விபத்து ஏற்பட்டு விட்டதாக எண்ணிஅலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவந்த சூரியா மேற்கூறிய காட்சியை ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து ஒரு நொடிப் பொழுதில் நிலைமையைத் தெரிந்து கொண்டான். வண்டிக்குச் சற்றுத் தூரத்தில் எழுந்து நிற்க முயன்று கொண்டிருந்த ஸ்திரீ தன்னுடைய மூத்த அத்தை அபயாம்பாள்என்பதையும் தெரிந்து கொண்டான். ஆனால், இதிலெல்லாம் அவனுடைய கவனம் ஒரு நிமிஷத்துக்கு மேல் நிற்கவில்லை. 
 
     சாலையில் ஓரத்தில் இருந்த நீர் ஓடையில் விழுந்து காலையும் கையையும் அடித்துக்கொண்டு, "அம்மா! நான் முழுகப் போகிறேன்!" என்று சத்தமிட்டுக் கொண்டிருந்த இளம்பெண்ணின் மீது அவனுடைய கண்களும் கவனமும் சென்றன. இரண்டே எட்டில் ஓடைக் கரைக்குஓடிச் சென்றான். நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்ணைக் கரையேற்ற வேண்டும் என்றஎண்ணத்தோடேதான். ஓடையில் விழுந்து மேற்கண்டவாறு கூச்சலிட்டுக் கொண்டேகாலினாலும் கையினாலும் தண்ணீரை அடித்து அலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்த இளம்பெண், ஓடைக் கரையில் வந்து வியர்க்க விருவிருக்க நின்ற வாலிபனைப் பார்த்தாள். உடனே கூச்சலிடுவதையும் தண்ணீரைக் காலாலும் கையாலும் அடிப்பதையும் நிறுத்தினாள். ஏதோ, ஓர்ஆபூர்வமான அதிசயக் காட்சியைப் பார்ப்பது போல் சூரியாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள்.அப்படிப் பார்த்தவண்ணம் கலகலவென்று சிரித்தாள். அந்தச் சிரிப்பின் ஒலி செவியில்விழுந்தபொழுது அமுதமுண்ட குயிலின் கீதம் ஆயிரம் பதினாயிரம் வர்ண மலர்களாக மாறிமேலே விழுவது போன்ற உணர்ச்சி சூரியாவுக்கு உண்டாயிற்று. 

மாசி மாதத்து மனோரம்மியமான மாலை நேரத்தில் ராஜம்பேட்டையை நெருங்கிச்சென்ற சாலையில் இரட்டை மாடு பூட்டிய பெட்டி வண்டி ஒன்று ஜாம் ஜாம் என்றுபோய்க்கொண்டிருந்தது. காளையின் கழுத்தில் கட்டியிருந்த பெரிய சதங்கை மணிகள் கலீர்கலீர் என்று சப்தித்தன. வண்டியும் வண்டி மாடுகளும் வண்டிக்காரன் கட்டிய முண்டாசும் அந்த வண்டி பட்டாமணியம் கிட்டாவய்யரின் வண்டியென்பதை உலகமறியத் தெரிவித்தன. வண்டிக்குள்ளே கிட்டாவய்யரின் மூத்த புதல்வன் சூரியநாராயணன் பெட்டி படுக்கை சகிதமாக வீற்றிருந்தான். அவனுடைய உள்ளம், தன்னுடைய அருமைத் தங்கை லலிதாவைப் பற்றியும்அவளைப் பார்ப்பதற்காகப் பட்டினத்திலிருந்து வரப் போகிற மேதாவி எப்படியிருப்பான் என்பது பற்றியும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. காரணமில்லாமலே அந்த மேதாவியின் பேரில் சூரியாவுக்குச் சிறிது கோபமும் உண்டாகியிருந்தது. "மகா பெரிய மனிதன் இவன்! பெண்ணைப் பார்க்க வருவதாம்! பிடித்திருக்கிறது - இல்லை என்று தீர்ப்புச் சொல்வதாம்! சுத்த வெட்கக்கேடு!" என்ற எண்ணம் தோன்றி அவன் மனத்தை உறுத்தியது. முந்தா நாள் இரவுதாமோதரம்பிள்ளை வீட்டு மச்சின் பேரில் நடந்த சம்பாஷணையும் இடை இடையே அவனுக்குநினைவு வந்து கொண் டிருந்தது.       ராஜம்பேட்டை இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும்பொருட்டுச் சூரியா வண்டி முகப்பில் வைத்திருந்த பெட்டி படுக்கையின் மேலாக எட்டிப்பார்த்தான். சமீபத்தில் ஒரு மைல் கல் தென்பட்டது. அதில் பெரிய கறுப்பு எழுத்தில் 3 என்றுஎழுதியிருந்தது. "இன்னும் மூன்று கல் இருக்கிறது. இருட்டுவதற்கு முன் போய் விடலாமா, முருகா!" என்று சூரியா கேட்டான். "நல்லாப் போய்விடலாம்! நீங்கள் மட்டும் 'மாட்டை விரட்டாதே' என்று சும்மாச் சும்மாச் சொல்லியிரா விட்டால் இத்தனை நேரம் போய்ச்சேர்ந்திருப்போம்! அம்மாகூட, 'சாயங்காலம் காப்பி சாப்பிடச் சின்னய்யாவை வீட்டுக்குஅழைத்து வந்துவிடு' என்று சொல்லியிருந்தாங்க!" என்றான் வண்டிக்கார முருகன். இப்படி அவன்சொல்லிக் கொண்டிருக்கும் போது, முன்னால் சுமார் அரை பர்லாங்கு தூரத்தில் ஒரு கட்டை வண்டி போய்க்கொண்டிருப்பதைச் சூரியா கவனித்தான். அந்த வண்டிக்குள்ளே யாரோ பெண் பிள்ளைகள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. அந்த வண்டியும் ராஜம்பேட்டைக்குத்தானே போக வேண்டும்? வண்டிக்குள் இருப்பவர்கள் யாராயிருக்கும்?-என்று சூரியா சிந்தித்துக் கொண்டிருந்தபோதே பின்னால் 'பாம் பாம்' என்று முழங்கிக் கொண்டுஒரு மோட்டார் வண்டி வந்தது.       "பாருங்க, சின்னய்யா! மோட்டார் வண்டியிலே ஏறி விட்டாலே தலை கிறுங்கிப்போவுது! இவன் வந்துட்டா, மற்ற வண்டியெல்லாம் உடனே ஒதுங்கிக்கொள்ள வேணுமாம்!  மோட்டார் வண்டிக்கு என்று தனியாக ரோடு போட்டுக் கொள் கிறதுதானே!" என்று புகார்சொல்லிக்கொண்டே முருகன் வண்டியைக் கொஞ்சம் சாலை ஓரத்தில் ஒதுக்கினான்.மோட்டார் வண்டி அவர்களைத் தாண்டி ஒரு பெரிய புழுதிப் படலத்தை வாரித் தூவிவிட்டு மேலேசென்றது. அது போன உடன் முருகன், "சின்னய்யாகூடப் படிச்சுப் பெரிய உத்தியோகத்துக்கு வந்து மோட்டார்கார் வாங்க வேணும்!" என்றான். "அப்போது, மோட்டார் காரர்களைப் பற்றி நீ இப்போது திட்டியது போலத்தானே பத்துப்பேர் என்னையும் திட்டுவார்கள்!" என்றான் சூரியா. இதற்குள் எதிரே கொஞ்ச தூரத்தில் நடந்த சம்பவம் அவர்களுடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளிவைத்தது.        பெட்டி வண்டியைத் தாண்டிச் சென்ற மோட்டார், கட்டை வண்டியையும் சாலை ஓரமாகஒதுங்கச் செய்வதற்காகப் 'பாம்' 'பாம்' என்று முழங்கியது. கட்டை வண்டிக்காரன் இடது புறத்தில்ஒதுக்குவதற்குப் பதிலாக, வலது பக்கத்தில் ஒதுங்க முயன்றான். கட்டை வண்டியை வலப்பக்கமாகக் கடக்க முயன்ற மோட்டார் அது முடியாதென்று தெரிந்து அதி வேகமாக ஒருதிரும்புத் திரும்பி இடப்பக்கம் தாண்டிச் சென்றது. போகும்போது வண்டி மாட்டின்மீதுஉராய்ந்து விடும் போல அவ்வளவு நெருக்கமாகச் சென்றபடியால் வண்டி மாடுகள் மிரண்டுசாலையோரத்துப் பள்ளத்தில் இறங்கி விட்டன. அப்படி இறங்கியதில் மாடுகளை மூக்கணையுடன் பிணைத்திருந்த கயிறுகள் கழன்றன. வண்டிக்காரன் காபரா அடைந்து கீழே குதித்தான். வண்டியின் மூக்கணை மேலே போயிற்று. வண்டியின் பின் தட்டுக் கீழே வந்துதரையைத் தொட்டது. வண்டிக்குள்ளிருந் தவர்கள் சறுக்குமரத்திலிருந்து வழுக்கி விழுகிறவர்களைப்போல உருண்டுவந்து வெளியே தரையில் விழுந்தார்கள். அவர்கள் மேலேசாமான்கள் உருண்டு விழுந்தன.       இத்தகைய கட்டைவண்டி விபத்தை உண்டாக்கிய மோட்டார்வண்டி அதை மறைப்பதற்கு ஒரு பெரிய புழுதித் திரையையும் உண்டாக்கிவிட்டு மறுகணமே தூரத்தில் மறைந்து போய்விட்டது. புழுதி மறைந்தபடியால் மேற்படி விபத்தைப்பற்றி நடந்ததைக்காட்டிலும் அதிகமாகச் சூரியா மிகைப்படுத்தி எண்ணிக் கொண்டான். "முருகா! ஓட்டு! ஓட்டு! வண்டி குடையடித்து விட்டது போலிருக்கிறதே! சீக்கிரம் ஓட்டு!" என்று பதறிக்கொண்டே கூறினான். முருகனும் வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு போய்ச் சம்பவம் நடந்த இடத்து க்குச் சமீபத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். "சின்னய்யா! நம்ம அத்தை அம்மாபோல இருக்கிறதே! பம்பாய் அம்மாவும் அவங்க பொண்ணுங்கூட இருக்காங்களே! சாமி ஆண்டவனே!ஒருத்தருக்கும் ஒண்ணும் இல்லாமல் இருக்க வேண்டும்!" என்று வண்டிக்காரன் சொன்னதுஒன்றும் சூரியாவின் காதில் விழவில்லை. வண்டியிலிருந்து அவன் பளிச்சென்று குதித்துக்குடையடித்த வண்டியை நெருங்கி ஓட்டமாக ஓடினான்.       குடை சாய்ந்த வண்டியின் பின்புறச் சட்டங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பம்பாய் ராஜம்மாள் உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் மூட்டைகள் சிதறிக் கிடந்தன. ஒருதகரப் பெட்டி இன்னும் வண்டிக்குள்ளேயே இருந்து கொண்டு தானும் கீழே விழலாமாவேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. ராஜம்மாளுக்கு வண்டிச் சட்டத்தைத் தான்விட்டால் அந்தப் பெட்டி தன் தலையில் விழுந்து விடும் என்ற பயம் தோன்றியிருந்தது.ஏற்கெனவே நோயினால் மெலிந்திருந்த அவளுடைய முகம் மேற்படி பயத்தினால் வெருண்டதோற்றம் அளித்தது. ஆனால், அவளுடைய பயத்துக்குக் காரணம் இது மட்டுந்தானா? "அம்மா!அம்மா! இதோ நான் வெள்ளத்தில் முழுகப் போகிறேன். என் மேல் அலை வந்து மோதுகிறது. யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்! இதோ முழுகப் போகிறேன்!" என்று அவளுடைய செல்வக் குமாரி சீதா அலறிக்கொண்டிருந்ததும் ராஜம்மாளின் பீதிக்கு ஒரு காரணமாயிருக்கலாமல்லவா?       ராஜத்துக்கு நாலைந்து அடி தூரத்தில் தரையில் விழுந்திருந்த இன்னொரு ஸ்திரீ,"ஐயோ! அப்பா!..." என்று முனகிக் கொண்டே மெதுவாக முயன்று எழுந்து உட்கார்ந்தாள்."மோட்டார் சத்தம் கேட்டவுடனேயே 'வண்டியை ஒதுக்கி ஓட்டடா' என்று அடித்துக்கொண்டேன் கேட்டால்தானே?" என்று வண்டிக்காரனுக்கு வாய் நிறைந்த ஆசீர்வாதங்களைச்செய்தாள். பிறகு, "ராஜம்! உனக்குக் காயம் கீயம் ஒன்றும் படவில்லையே!" என்று கவலை நிறைந்த குரலில் கேட்டாள். ஏதோ பயங்கரமான பெரும் விபத்து ஏற்பட்டு விட்டதாக எண்ணிஅலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவந்த சூரியா மேற்கூறிய காட்சியை ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து ஒரு நொடிப் பொழுதில் நிலைமையைத் தெரிந்து கொண்டான். வண்டிக்குச் சற்றுத் தூரத்தில் எழுந்து நிற்க முயன்று கொண்டிருந்த ஸ்திரீ தன்னுடைய மூத்த அத்தை அபயாம்பாள்என்பதையும் தெரிந்து கொண்டான். ஆனால், இதிலெல்லாம் அவனுடைய கவனம் ஒரு நிமிஷத்துக்கு மேல் நிற்கவில்லை.       சாலையில் ஓரத்தில் இருந்த நீர் ஓடையில் விழுந்து காலையும் கையையும் அடித்துக்கொண்டு, "அம்மா! நான் முழுகப் போகிறேன்!" என்று சத்தமிட்டுக் கொண்டிருந்த இளம்பெண்ணின் மீது அவனுடைய கண்களும் கவனமும் சென்றன. இரண்டே எட்டில் ஓடைக் கரைக்குஓடிச் சென்றான். நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்ணைக் கரையேற்ற வேண்டும் என்றஎண்ணத்தோடேதான். ஓடையில் விழுந்து மேற்கண்டவாறு கூச்சலிட்டுக் கொண்டேகாலினாலும் கையினாலும் தண்ணீரை அடித்து அலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்த இளம்பெண், ஓடைக் கரையில் வந்து வியர்க்க விருவிருக்க நின்ற வாலிபனைப் பார்த்தாள். உடனே கூச்சலிடுவதையும் தண்ணீரைக் காலாலும் கையாலும் அடிப்பதையும் நிறுத்தினாள். ஏதோ, ஓர்ஆபூர்வமான அதிசயக் காட்சியைப் பார்ப்பது போல் சூரியாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள்.அப்படிப் பார்த்தவண்ணம் கலகலவென்று சிரித்தாள். அந்தச் சிரிப்பின் ஒலி செவியில்விழுந்தபொழுது அமுதமுண்ட குயிலின் கீதம் ஆயிரம் பதினாயிரம் வர்ண மலர்களாக மாறிமேலே விழுவது போன்ற உணர்ச்சி சூரியாவுக்கு உண்டாயிற்று. 

by Swathi   on 19 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.