LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

பெரியாரும்,சிவாஜியும் !

இப்போது எழுதப் போவது காலையில் எழுதிய பதிவின் தொடர்ச்சி! இன்றைக்கு சிவாஜி குறித்த பல சம்பவங்கள் என் நினைவுக்கு வருகின்றன! ஆயினும் அவற்றில் மூன்றை மட்டும் இன்று பதிவிடுகிறேன்.

பெரியார் சமாதியில் நீண்ட நேரம் அமர்ந்து புறப்பட்ட சிவாஜி,பெரியார் திடலில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டார். பெரியாரோடு அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர்..ஆகியோரெல்லாம் இருக்கும் போட்டோக்களையும்,பெரியார் பயன்படுத்திய பொருள்களையும் பார்த்து ரசித்தார்.

ஆசிரியர் வீரமணி அவரை வரவேற்று பேசினார்.
அப்போது சிவாஜி, ஆசிரியர் வீரமணியிடம் ,’’இங்கே பெரியாரோடு இவங்க இருக்கிற படமெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க.. நானும் பெரியாரோடு சேர்ந்து எடுத்த நல்ல படமெல்லாம் இருக்கே..’’என்றார்.

பிறகு விடை பெற்று காரில் ஏறி பயணித்து வருகையில், கட்சி நிர்வாகி ஒருவர், அண்ணே, நாம காந்தியிடத்திற்கு, காமராஜ் இடத்திற்கு எல்லாம் போனோம்.ஆனால்,அங்கெல்லாம் மாலை வைத்து,வணங்கி வந்துட்டோம்.ஏன் நீங்க பெரியார் இடத்துல மட்டும் அப்படி உட்கார்ந்துட்டீங்க...’’என்றார்.

நல்லா கேட்டப்பா கேள்வி! காந்தியும்,காமராஜரும் பெரிய தியாகிங்க.. நாட்டுக்காக பாடுபட்டவங்க வாஸ்த்தவம் தான்! ஆனா,என்னவோ எனக்கு இவங்களவிட பெரியார் மேல பற்று பந்தம்...சொல்லத் தெரியாத ஒரு மரியாதை இருக்குது.

அது எப்படின்னா நான் பத்து,பதினொரு வயசில அண்ணன் ராதா நாடக கம்பெனியில இருக்கும் போதே பெரியார் பெருமைகளை அவர் சொல்லச் சொல்லக் கேட்டு வளந்தவன். அதற்கு பிறகு அண்ணா,மூனாக் கானா இவுகளோட சேர்ந்து நான் நடிச்சு கொடுத்த எத்தனையெத்தனையோ நாடகங்கள் அனைத்துமே பெரியார் கொள்கைகளை பரப்புறதுக்கானது தான்!அப்ப எத்தனை எதிர்ப்புகள்,தொல்லைகள பார்த்திருக்கோம்...அதெல்லாம் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்...!

டேய் ,என்னத்தச் சொல்லி ஒங்களுக்கு வெளங்க வைப்பேன்னு தெரியல..ஆனா ஒன்ன மட்டும் சொல்வேன். பெரியார் மட்டும் இல்லன்னா இந்த கணேசன் இந்தளவுக்கு ஆளாகியிருப்பாங்கிற..?என்று கேள்வி கேட்டு நிறுத்தினார்.

யாரும் பதில் சொல்லவில்லை. என்ன பதில் சொல்வதென்று புரியாமல் மட்டுமல்ல, அவர் என்ன பதில் சொல்வார் என்ற ஆர்வத்தோடும் அவரையே பாரத்தனர்.

சிவாஜியே தொடர்ந்தார். ம்..கூம் .. நூத்துல ஒரு கூத்தாடியா நானும் வாழ்ந்திட்டு கவனிப்பில்லாமப் போயிருப்பேன்...’’என்றார்.இப்படிப் பேசும் போது சிவாஜி குரல் கம்மியது. நா தழுதழுத்தது..!

அப்போது,சிவாஜியின் நம்பிக்கைகுரிய தளபதிகளில் ஒருவராக இருந்த ராஜசேகர்,அண்ணே நீங்க ரொம்ப உணச்சிவசப்படுறீங்க..இப்ப கூட ஆசிரியர் வீரமணி உங்க கிட்ட இதை சொல்லச் சொன்னார்..’’.ரொம்ப உணர்ச்சிவசப்பட்டால் ஒடம்பு சீக்கிரம் கெட்டுப் போயிடும். அரசியல்வாதி ஆவேசப்படுவது போலப் பேச வேண்டுமேயல்லாது நிஜமாவே ஆவேசப்படக் கூடாது, உருக்கமாக பேசலாம்... ஆனால்,அப்படிப் பேசும் போது நம்ப உள்ளத்தை தளர விட்டுடக் கூடாது.’’ என்றார்.
அவருக்கு எம்மேல அக்கறை சொல்றார்.. நமக்கு அது முடியலப்பா..’’என்றார்.

 

-சாவித்திரி கண்ணன்

 
by Swathi   on 07 Oct 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர்  சாவித்திரி கண்ணன் ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்
கருத்துகள்
23-Sep-2020 16:53:24 Apple said : Report Abuse
Super https://amazonnowsales.blogspot.com/2020/09/samsung-galaxy-m30.html
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.