LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

ஏன் இப்படி ஆனோம்...?

மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடான சிங்கப்பூர் சாதி,மத, இனம்,மொழி கடந்து சமூக நல்லிணக்கத்துக்கும்,நேர்மைக்கும்,அனைவருக்கும் சமமான சட்டதிட்டத்திற்கும்,ஊழலற்ற நிர்வாகத்திற்கும் உலகில் பெயர் போன நாடாக விளங்குகிறது.

அந்த நாட்டின் அரசியலில் பல முக்கிய துறைகளில் நம் தமிழர்கள்தான் கோலோச்சுகிறார்கள்.இவர்களின் அறிவு,நேர்மை,நிர்வாகத்திறமை ஆகியவை, உலகில் உள்ள எந்த நாட்டினருக்கும் நாம் குறைந்தவர்கள் இல்லை என்பதை அங்கு சென்ற நம் தமிழர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

உதாரணம்;சிங்கப்பூரின் அதிபராக முன்பு இருந்த நாதன் என்ற தமிழர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.
தற்போது சிங்கப்பூரி்ன் முதல் பெண் அதிபராகத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஹலிமா யாகூப் பதவியேற்று பலரது பாராட்டைப் பெறும் வண்ணம் பணியாற்றி வருகிறார்.அது போல் துணை பிரதமராக உள்ள தருமன் சண்முக ரெத்தினம் என்ற தமிழரும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று திகழ்கிறார்.சட்டத்துறை அமைச்சராக சண்மும்,வெளியுறவுத் துறை அமைச்சராக விஜயன் பாலகிருஷ்ணன்,தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக ஈஸ்வரன்,கல்வி,மற்றும் நிதித்துறை இரண்டாவது அமைச்சராக இந்திராணியும் கோலோச்சி வருகிறார்கள்.

சிங்கப்பூர் நாட்டின் 9 நியமன எம்.பி.-களில் ஒருவராக,நாகப்பட்டினம் அருகில் உள்ள திட்டச்சேரி என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்ட,29 வயதே ஆன,முகமது இர்ஷத் என்ற இளைஞனை அந்த அரசாங்கம் இப்பொழுது நியமித்துள்ளது. சிங்கப்பூரின் முதல் இளைய எம்பி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.

சிங்கப்பூர் நாட்டின் அரசியல் அரங்கில் தமிழர்கள் என்றால் மிகவும் மதிக்கப்படுகிறார்கள்.

ஆனால்,தமிழ் நாட்டிலேயே உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஏன் குடிமக்களாகிய நாமும்தான் ஏன் இப்படி ஆனோம்?

by Swathi   on 20 Sep 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர்  சாவித்திரி கண்ணன் ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்
கருத்துகள்
05-Mar-2019 10:41:57 சந்தோஷ் குமார் said : Report Abuse
ஆமாம் இந்தியாவில் மற்றும் தான் இந்தியர்களை எவரும் மதிப்பதில்லை காரணம் திறமை உள்ளவர்கள் எல்லாம் வெளி நாட்டிற்கு சென்றுவிட்டாள் இங்கு கண்டவன் லாம் அரசியல்வாதி ஆகுறான் வெளிநாட்டுல போய் நல்லது பண்ரவங்க ஏன் இங்கே அரசியலை இறங்கக்கூடாது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.