நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில், பிரதமர் மன்மோகன் சிங் தான் முதல் குற்றவாளி என நிலக்கரித்துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக் பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் அனைத்து முடிவுகளும் பிரதமர் தான் எடுத்தார். இதில் என்னை மட்டுமே குற்றவாளியாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. நான் குற்றவாளி என்றால் பிரதமரும் குற்றவாளிதான் என பரேக் கூறியுள்ளார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பாக நேற்று, நிலக்கரி துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் மற்றும் 'ஆதித்ய பிர்லா' குரூப் நிறுவனங்களின் தலைவர், குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் மீது சிபிஐ, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
|