ஜில்லா படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம் நடிகர் விஜய். இந்த படத்தை நீண்டகாலமாக விஜய்யின் மேனேஜராகப் பணிபுரிந்து வரும் பி.டி. செல்வகுமார் தயாரிக்க உள்ளாராம். ஏ.ஆர்.முருகதாஸ் படம் முடிந்த பிறகு இந்த புதிய படத்தின்படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 'தமிழன்' படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது
|